Pages

Friday, December 15, 2000

சிலம்பு மடல் 33

சிலம்பு மடல் - 33
கண்ணகியின் வரமும்! இளங்கோவடிகளின் அறிவுரையும்!

வஞ்சி: வரம்தருகாதை:

வாழ்த்திய கடவுளின் கோயிலை மும்முறை வலம்வந்து முன் நின்றான் சேரன்! அச்சமயம் கோயில்விழாவில் கலந்து கொண்ட, சிறையில் இஆருந்த விடுவிக்கப்பட்ட ஆரியர்களும், அதன் முன்னரே சிறையிருந்து விழாமுன்னிட்டு விடுவிக்கப்பட்ட பிற அரசரும், குடகுநாட்டுக் கொங்கரும், மாளவ நாட்டு மன்னரும், கடல் சூழ்ந்த ஆஇலங்கை அரசனான கயவாகு மன்னனும், 'ஒவ்வொரு வருடமும் சேரன் செய்யும் இந்த அரிய விழாவின் போது எம் நாட்டிலும் யாம் செய்வோம்; எமக்கும் வந்து அருள் செய்வாய்!' என்று வேண்ட, கண்ணகியும் 'அங்கனமே வரம் தந்தேன்' என்று கூற அனைவரும் வீட்டின்பம் பெற்றோர் போலானாராம்! ஈழ நாட்டிலே கண்ணகிக்கு கோயில் எடுத்தான் கயவாகு. இன்றும் இஆருக்கிறது.

"வலமுறை மும்முறை வந்தனன் வணங்கி
உலக மன்னவன் நின்றோன் முன்னர்,
அருஞ்சிறை நீங்கிய ஆரிய மன்னரும்
பெஞ்சிறைக் கோட்டம் பிரிந்த மன்னரும்
குடகக் கொங்கரும் மாளுவ வேந்தரும்
கடல்சூழ் ஆலங்கைக் கயவாகு வேந்தனும்
எம்நாட்டு ஆங்கண் ஆஇமைய வரம்பனின்
நல்நாள் செய்த நாள்அணி வேள்வியில்
வந்துஈக என்றே வணங்கினர் வேண்ட,
'தந்தேன் வரம்' என்று எழுந்தது ஒருகுரல்...."

சேரமன்னனுக்குக் காட்சி, சேரமகளிருக்கு அன்பழைப்பு, ஏனைய பல மன்னர்களுக்கு வரம் அளித்துப் பூரித்துப் போன கண்ணகியார், அவ்வேளை அங்கிருந்த நூலாசிரியர் இளங்கோவடிகளிடமும் பேசினாராம் தேவந்தி என்ற பெண்மணி மேல் தெய்வமாய் ஏறி நின்று! அதை அடிகளார் கூறுகிறார்,

'யானும் (ஆஇளங்கோவடிகளாகிய நானும்) கண்ணகி கோயிலுள் சென்றேன்; என் எதிரே பத்தினித் தெய்வம் தேவந்தி மேல் விளங்கித் தோன்றி, "வஞ்சியிலே, அரண்மனை அத்தாணி மண்டபத்திலே, உன் தந்தையின் அருகிலே அமர்ந்திருந்த உன்னை ஒரு நிமித்திகன் பார்த்து, அரசனாக வீற்றிருக்கும் அழகிய இலக்கணம் உனக்கு உண்டு என்று கூற, உன் அண்ணனான குட்டுவன் மனம் வருத்தமடைய, அம்மனவருத்தம் அவனுக்கு ஒழிய துறவியாய் ஆனாய்; துறவியாய் ஆகி, வீட்டுலக அரசினை ஆளும் மன்னவன் ஆனாய்" என்று என் வரலாற்றினை உரைத்தாள்' என்று.

"யானும் சென்றேன் என்எதிர் எழுந்து
தேவந்தி கைமேல் திகழ்ந்து தோன்றி
வஞ்சி மூதூர் மணிமண் டபத்திடை
நுந்தை தாள்நிழல் இருந்தோய்! நின்னை
அரைசு வீற்றிருக்கும் திருப்பொறி உண்டுஎன்று
உரைசெய் தவன்மேல் உருத்து நோக்கிக்
கொங்குஅவிழ் நறுந்தார்க் கொடித்தேர்த் தானைச்
செங்குட் டுவன்தன்செல்லல் நீங்கப்
பகல்செல் வாயில் படியோர் தம்முன்
அகல்ஆஇடப் பாரம் அகல நீக்கிச்
சிந்தை செல்லாச் சேண்நெடுந் தூரத்து
அந்தம்ஆஇல் ஆஇன்பத்து அரசுஆள் வேந்துஎன்று
என்திறம் உரைத்த ஆஇமையோர் இளங்கொடி...."

கண்ணகியம்மை இஆளங்கோவடிகளாருக்கு தேவந்தி வாயிலாக உரைக்க, நமக்கும் நம்முன்னோருக்கும் பின்னோருக்கும் அழியாச் செல்வத்தை விட்டுப் போன சிலம்பரசர் இளங்கோவடிகளார், நமக்கும் சில அறிவுரைகளையும் விட்டுப் போகிறார்! ஒப்பற்ற அவை நம் பழம் பண்பாடு கூறுகிறது!

'கண்ணகித் தெய்வத்தின் சிறப்பினை விளக்கிய நல்லுரையைத் தெளிவுறக் கேட்ட மேன்மை மிக்க நல்லவர்களே! வளங் கொழிக்கும் ஆபெரிய உலகில் வாழும் மக்களே!'

"தன்திறம் உரைத்த தகைசால் நல்மொழி
தெரிவுறக் கேட்ட திருத்தகு நல்லீர்!"

பிறர்க்குக் கவலையும் துன்பமும் செய்யாது நீங்குங்கள்;
தெய்வம் உண்டென உணருங்கள்;
பொய்பேசாதீர்கள்! புறங்கூறாதீர்கள்!
ஊன் உண்ணாதீர்கள்; கொலைசெய்யாதீர்கள்;
தானமிடுங்கள் தவம் செய்யுங்கள்;
செய்நன்றி என்றும் மறவாதீர்கள்;
தீயோர் நட்பை விலக்குங்கள்;
பொய்ச்சாட்சி சொல்லாதீர்கள்!
நல்லோர் அவை நாடுங்கள்;
தீயோர் அவை தப்பிப் பிழையுங்கள்!
பிறர் மனை விரும்பாதீர்கள்.
துன்பப்படும் உயிர்களுக்கு உதவி செய்யுங்கள்!
இல்லறம் விரும்புங்கள்; பாவம் புரியாதீர்!
கள், களவு, காமம், பொய், பயனில சொல்தல் ஒழியுங்கள்.

இளமையும், செல்வமும், உடலும் நிலையற்றவை! உள்ளநாள் குறையாது; உங்களை வந்து சேரக்கடவன சேராது நீங்கா! அறம் செய்யுங்கள்!!

"பரிவும் ஆடுக்கணும் பாங்குற நீங்குமின்;
தெய்வம் தெளிமின்; தெளிந்தோர்ப் பேணுமின்;
பொய்உரை அஞ்சுமின்; புறஞ்சொல் போற்றுமின்;
ஊன்ஊண் துறமின்; உயிர்க் கொலை நீங்குமின்;
தானம் செய்ம்மின்; தவம்பல தாங்குமின்;
செய்ந்நன்றி கொல்லன்மின்; தீநட்பு ஆகழ்மின்;
பொய்க்கரி போகன்மின்; பொருள்மொழி நீங்கன்மின்;
அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்;
பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர்மின்;
பிறர்மனை அஞ்சுமின்; பிழைஉயிர் ஓம்புமின்;
அறமனை காமின்; அல்லவை கடிமின்;
கள்ளும் களவும் காமமும் பொய்யும்
வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின்;
ஆளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா;
உளநாள் வரையாது; ஒல்லுவது ஒழியாது;
செல்லும் தேயத்து உறுதுணை தேடுமின்
மல்லல்மா ஞாலத்து வாழ்வீர் ஈங்குஎன்."

திருத்தகு நல்லீர் என்று நம்மை விளித்து நமக்கு நல்லுரைகள் கூறி, காப்பியத்தை நிறைவு செய்கிறார் இளங்கோவடிகள். என்னே ஒரு கடமை யுணர்வு!!

புறத்துறை வழி நின்று போர்த்துறைகளை செய்து முடித்து கங்கை கடந்து சென்று வென்று வந்த வேந்தன் செங்குட்டுவன் சிறப்பு கூறும் வஞ்சிக்காண்டம் நிறைவுற்றது.

"புறத்துறை மருங்கின் அறத்தொடு பொருந்திய
மறத்துறை முடித்த வாய்வாள் தானையொடு
பொங்குஆரும் பரப்பின் கடல்பிறக்கு ஓட்டிக்
கங்கை பேர்யாற் றுக்கரை போகிய
செங்குட் டுவனொடு ஒருபரிசு நோக்கிக்
கிடந்த வஞ்சிக் காண்டம்முற் றிற்று."

வஞ்சிக் காண்டம் மட்டும் நிறைவுறவில்லை! நம் நெஞ்சில் என்றும் நீங்காது வாழும் கண்ணகி, கோவலன், மாதவி, பாண்டியன், பாண்டிமாதேவி, சேரன் செங்குட்டுவன், புகார், மதுரை, வஞ்சி என்று பல சிறப்பினைப் படிக்கத் தந்த இந்த சிலம்புக் காப்பியமும் நிறைவு பெறுகிறது.

'தமிழ் மரபாலே கண்ணாடியில் உயர்ந்த பெரிய மலையைக் காட்டுவார் போலக் கருத்துகளைத் தோற்றுவித்து, மணிமேகலை என்னும் காப்பியத்தில் உரைக்கப்படும் பொருளுடன் தொடர்புடையதாகிய சிலப்பதிகாரக் காப்பியம் முற்றுப் பெற்றது'
என்று சிலம்பின் நூல் கட்டுரை உரைக்கும்போது நம் நெஞ்சம் நெகிழ்கிறது. நம் நெஞ்சை அள்ளிக் கொண்ட இந்த சிலப்பதிகாரம் நிறைவடைகிறது.

"......தெரிவுறு வகையால் செந்தமிழ் ஆயற்கையில்
ஆடிநல் நிழலின் நீடுஆருங் குன்றம்
காட்டு வார்போல் கருத்து வெளிப் படுத்து
மணிமே கலைமேல் உரைப்பொருள் முற்றிய
சிலப்பதிகாரம் முற்றும்."

நிறைவு பெறும்போது இந்த காப்பியத்தை இன்னும் எத்தனை தடவை படித்தாலும் நான் அள்ளிக் கொள்ள ஆயிரமாயிரம் கருத்துக்கள் புதையலாய் கொட்டிக் கிடக்கின்றன! எத்தனை முறை படித்தாலும் என்னை அள்ளிச் செல்லும் இந்த காப்பிய மடல்களை நிறைவு செய்யும்போது என் உணர்வுகள் சற்றே அசைகின்றன.

சிலம்பு மடல்கள் முற்றும்.

அன்புடன்
நாக.இளங்கோவன்
15-திசம்பர்-2000

No comments: