சிவாசிகணேசனின் நடிப்பை ஆசாரி சாதிக்கு
மட்டும் பிடிக்கும், ஊரில் உள்ள வேறு யாருக்கும்
பிடிக்காது (நல்ல ஊருப்பா அது :-) ),
ம.கோ.இரா வின் "பைப்பு" "பம்பு" வசனங்களில்
உள்ள ஆழ்ந்த பொருள்கள்,
அப்புறம் ஒரு மட்டமான படக்காட்சியை
மேற்கோள் காட்டி 'மர்லின் பிராண்டோவாக்கும்'
என்று கலாய்க்கும் சிந்தனைக்களச் சிற்பிகள்
அதே பாணியில் நடிகை சரோசாதேவியை
அங்கத விமர்சனம் செய்தால் எப்படி இருக்கும்
என்று எண்ணிப் பார்த்தேன். புல்லரிக்கவே
செய்கின்றது.
பழைய காலத்திலேயே இருந்தால் எப்படி?
தற்கால புதிய நமீதா, பழைய சகீலா போன்றோரை அங்கத
விமர்சனம் செய்யக்கூடாதா என்ற ஆதங்கமும்
நமக்கு இல்லாமல் இல்லை ;-)
அப்படிச் செய்தால், சிவாசி, ம.கோ.இரா
விமர்சனங்களுக்காக சுவரொட்டி அளவுக்குப்
போயிருக்கும் இதழ் போன்ற பொறுப்புள்ள
அனைத்து தமிழ்நாட்டுப் பண்பாட்டுத்
தளங்களும், பூரண கும்ப மரியாதையோடு அங்கத
விமர்சனங்களை போட்டி போட்டுக் கொண்டு
நிச்சயம் வெளியிட்டுத் தமிழ் சேவை செய்வார்கள்.
வரலாறு இதையெல்லாம் செய்யும் என்ற திடமான
நம்பிக்கையுடன்,
நாக.இளங்கோவன்
Showing posts with label கலை. Show all posts
Showing posts with label கலை. Show all posts
Wednesday, February 20, 2008
சிவாசியின் நடிப்பு மிகை நடிப்பா?
வரலாற்றில் இடம் பிடித்து விட்டதாகக் கருதிக் கொள்பவர்கள்
வரலாற்றை அங்கதம் செய்து இடம் பிடித்து விட முடியுமா என்று தெரியவில்லை.
அங்கதங்கள் அடிப்படை அறிவை மறைக்காமல்
இருந்து விட்டால் மனிதன் அங்கதமாகாமல்
தப்பி விடலாம்.
சிவாசிகணேசன் பற்றிய பலரின் பாமர
விமர்சனங்கள் முற்போக்கு என்ற மூடியைப்
போட்டு வரும்போதும் உண்மைகள்
ஒழிந்து போய்விடுவதில்லை.
ஒரு எழுத்தாளரைப் பற்றிப் படம் எடுக்க
வேண்டுமானால், அவர் கக்கத்தைக் காட்டிக்
கொண்டு, நெஞ்சு வரை பூவேட்டியைக்
(பூப்போட்ட வேட்டி) கட்டிக் கொண்டு,
மேசையைப் பார்ப்பதும் மேலே பார்ப்பதுமாய்
ஒரு மூனு மணிநேரம் உட்கார்ந்திருப்பதையே
படமா எடுத்துக் காண்பித்தால் அதுதான்
இயல்பான நடிப்பு என்று கொஞ்சுவார்கள் போலிருக்கிறது
விமர்சனக் காரர்கள் :-))
கடந்த சூலை மாதம் சிவாசியின் நடிப்பு பற்றி ஒரு
மடற்குழுவில் செய்த உரையாட்டு கீழே.
----------------------------------------------------------
திருமால் பெருமை என்று ஒரு படம்.
அந்தப் படத்தில் குறுநில அரசனாக ஒரு வேடம்.
அதில் அவர் ஒரு காட்சியில் நடந்து போன
அழகு கண்டு கட்டபொம்மன், இராசராச சோழன்
ோன்ற படங்களை
எல்லாம் தூக்கி சாப்பிட்டுவிட்டதை உணர்ந்தேன்.
எனது இளவயதில் "என்னடி மீனாட்சி...சொன்னது
என்னாச்சு" என்ற பாடலுக்குக் கமல் ஆடிய ஆட்டமும்,
சகலகலாவல்லவனில் அவர் ஆடிய ஆட்டமும் என்னையும்
ஈர்த்திருந்தன. ஆனால் கொஞ்சகாலத்திலேயே அது மிகை என்று பட்டது,
சலங்கை ஒலியை இரசித்த பிறகு என்னால்
மற்றவற்றை இரசிக்க முடியவில்லை. அவை மிகையாகத்
தோன்றுகின்றன.
அதற்கும் சற்று முந்திய சோலே படத்தில்
அமிதாப்பின் சில நடன அசைவுகள்
என்னக் கவர்ந்ததுண்டு.
ஆயினும் சகலகலாவல்லவன் நடனத்தை, என்னை
விட வயதில் முதிர்ந்தவர்கள் இன்றைக்கும் இரசிப்பதையும் பார்த்திருக்கிறேன்.
ஆகையால் வயதும் இதில் காரணமல்ல என்று
தோன்றுகிறது,
அந்தக் காலத்தில் அப்படித் தேவைப்பட்டது
என்றும் பொத்தாம் பொதுவிலும்
என்னால் சொல்லி விடமுடியவில்லை.
பாட்சா, தளபதி இரசினிகாந்த் என்னைக் கவர்ந்த
அளவிற்கு பரட்டை இரசினியோ பில்லா
இரசினியோ கவர்ந்ததில்லை.
ஆனால் பாட்சா இரசினியிலும் சரி பரட்டை
இரசினியிலும் சரி மிகையான நடிப்பு என்பது நிறையவே இருக்கும்.
நாயகன் கமலும், ஆளவந்தான் கமலும்
அப்படியே. படையப்பாவும், நீலாம்பரியும் காலை முகத்திற்கு
நேரே தூக்கித் தூக்கிக் காண்பித்தது மிகை என்ற வகையிலேயே
சொல்லப்படக் கூடிய ஒன்று,
(அது ஒரு கலாச்சாரக் கேடு என்பது வெறு விதயம்)
எப்படியிருப்பினும் அந்த மிகையான நடிப்பு
(சிவாசி, கமல், இரசினி) என்பது
அந்தந்தக் கலைக்கால கட்டத்தில் ஒரு தாக்கத்தை
ஏற்படுத்தியே இருக்கிறது,
என்னைப் பொறுத்த வரையில் சிவாசியின் கன்ன
அசைவும், இரசினியின் துடிப்பும்,
கமலின் நளினமும் நடிப்பின் மிகையானவையாகத்
தெரியவில்லை.
ஆனால், இந்த மிகை என்பதன் பொருள் மிகை
என்பது அல்ல என்று உணர்கிறேன்.
இரசினி படம் எடுக்க வேண்டுமானால் அதற்கு
ஒரு சில தன்மைகள் மட்டுமே
வைத்து எடுப்பார்கள். இது நாமறிந்த உண்மை.
ஏன் இரசினியை வைத்து அழகி அல்லது தவமாய் தவமிருந்து போன்ற
படங்கள் எடுக்கப் படுவதில்லை?
ஏனெனில் அது அவருக்கு அவ்வளவாகப்
பொருந்தாது என்ற ஒரு படிமத்தை
ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
அதே போலத்தான் சிவாசி கணேசனுக்குப்
பொருந்தாத பல குப்பைப் படங்களை
அதுவும் 70களின் பிற்பகுதியில் இருந்து எடுத்து
அவரின் பெயரை சற்றுக் கெடுத்து விட்டார்கள்.
அதை விட மூத்த வயதில் முதல்மரியாதை படத்தின் சிறப்பை
அவரின் திறமைக்கு நான் சான்றாகச் சொல்வேன். தேவர் மகனையும் கூட,
ஏன் தாவணிக் கனவுகளையும் எண்ணிப் பார்த்தால்
அவையும் பின்னாளைய சிறந்த படம் நடிகர் திலகத்திற்கு என்று சொல்லலாம்,
ஆகவே, மிகை நடிப்பு என்ற எண்ணம்
"பொருந்தா நடிப்பினால்" வந்தது,
சிவாசிக்கு மட்டுமல்ல ஏனைய நடிகர்களுக்கும்
இந்தப் பொருந்தா நடிப்பு உண்டு.
அது பொருந்தாத பொழுதெல்லாம் அது
overacting என்று சொல்லப்படுவதாக
நான் கருதுகிறேன்.
அந்த வகையில் சிவாசிக்கு மிகையான நடிப்பு
ஒரு சரவல் இல்லை. ஆனால்
பொருந்தா நடிப்பு அமைந்தது என்று சொல்லலாம்.
ம.கோ.இரா ஏழைகளைக் கட்டிப் பிடித்தது
முதற்கொண்டு பல விதயங்களில்
அவரின் மிகை என்று சொல்லப் படுகின்ற
நடிப்பைக் காணலாம்.
உச்சமாக நான் கருதுவது என்னவென்றால் ஒரு
படத்தில் பதுமினியின் நடனத்தோடு போட்டி நடனம் ஆடி,
அந்தப் போட்டியில் அவர் வெல்வார். மன்னாதி மன்னன் என்ற படம்.
நான் அந்த நடனப் போட்டிக் காட்சியை பார்த்து
இளவயதிலெயே கதிகலங்கிப் போயிருக்கிறேன்.
நாட்டியப் பேரொளி ஒரு சிறந்த கலைமாமணி.
அவரால் தமிழகத்தில் பரதம் மேலும் தழைத்தது
என்று சொல்லலாம்.
ஆணானப்பட்ட நடிகர் திலகமே நாயனத்தைக்
கையில் வைத்துக் கொண்டு தில்லானாவுக்கு
வாசித்து அப்படியே அமர்ந்து
கொண்டார். அந்தப் புகழ் பெற்ற
போட்டியில் வெற்றி இருவருக்குமே. அது மிகப்
பொருந்திய நடிப்பு,
இயல்பான கலையை இருவருக்கும் தக்கவாறு
பொருத்திக் கொண்டதால்
அது அவ்வளவு சிறப்புப் பெற்றது.
ஆனால், இந்த மா.கோ.இரா அவருடனே
போட்டி நடனம் ஆடி, அதில் வெற்றி வேறு பெறுவார். அதைப்
பார்க்கும் போதெல்லாம் பதுமினிக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் விட்டு
விடுவதை வழக்கமாக வைத்திருக்கிறேன் :-)
பதுமினியின் 13 நடனங்கள் கொண்ட நெருவட்டு
கிடைத்தது. அற்புதமான தரவுகள் கொண்ட தொகுப்பு அது.
சொக்கவைக்கும் நடனங்களில்
மா.கோ.இரா மற்றும் பதுமினியின் போட்டி நடனமும் ஒன்று.
என்னைப் பொறுத்தவரை அதுவும் மிகையான
நடிப்பு என்று சொல்வதை விட
பொருந்தா நடிப்பு என்று சொல்லலாம். இதே
போல இன்னும் ஒரு பத்துப் படத்தில்
அவர் ஆடியிருந்தால் ம.கோ.இரா கதி
என்னவாகியிருக்கும் என்று சொல்ல முடியாது :)
எத்தனையோ அரச வேடப் படத்தில் ம.கோ.இரா
நடித்திருந்தும், பிறர் நடித்திருந்தும்
தமிழகத்தில் அரசன் என்றால் நினைவில் வருவது
எல்லாமே சிவாசியின் நடிப்பே.
அதில் மிகை யிருந்தால் அந்த மிகையே அவரின் சிறப்பு.
இன்னொரு கோணத்தில் பார்த்தோமானால்,
1975க்கு முன் , பின் என்று படங்களைப்
பார்க்கலாம். பழைய படங்களுக்கும் புதிய படங்களுக்கும்
உள்ள வேறுபாடுகள் மிகக் கூர்ந்து
கவனிக்கப் படவேண்டியன.
செறிவான பாடல், அளவான இசை, வலுவான
உரையாடல், அரங்க அமைப்பு,
நெறியாளல், ஒலி/ஒளி அமைப்பு என்ற
எல்லாவற்றிலும் கலைஞர்களின் "மிகையான"
ஆழ்ந்த சிந்தனை மற்றும் கலையுணர்வு
பங்களிப்பாக இருக்கும். அதாவது முதிர்ந்த
கலைஞர்களின் செவ்விய கூட்டாகப் படம்
வெளிவரும். அம்மாதிரியாக வந்த படங்களும்
காட்சிகளும்தான் அழியாமல் இருக்கின்றன.
இங்கே நான் "மிகையான" என்று சொல்வது
"வலுவான" என்ற பொருளில்.
பராசக்தியின் உரையாட்டிற்கு இன்றைய நடிகர்கள்
எத்தனை பேரால் நடித்து விட முடியும்?
கெளரவம் படத்திலே சிவாசியின் தான்மைக்குப்
(ego) பொருத்தமாக உரையாடல்
எழுத எத்தனை பேரால் முடியும் என்று எனக்குத்
தெரியவில்லை.
பதுமினிக்குப் பிறகு, வைசெயந்திமாலாவிற்குப்
பிறகு தமிழில் எத்தனையோ
படங்கள் பரதத்தோடு வந்துவிட்டன சலங்கை ஒலி
உட்பட. ஆயினும், பதுமினியே இன்றைக்கும் நாட்டியப் பேரொளியாக
இருக்கிறார்.
மன்னவன் வந்தானடி பாடலைப் பார்க்கும்போது
ஒவ்வொரு மெல்லிய விதயத்திலும்
பதுமினியின் நடனத்தையும் தாண்டி, காட்சி
அமைப்பு, இசை, நடனம், நெறியாளல்,
ஒளிஓவியம், நடன அரங்கு, நடிப்பு, கதை, சூழல்,
பாடல், பாடலின் சந்தம், பாடலின் செறிவு
என்று ஒவ்வொன்றும் போட்டி போட்டுக்
கொள்ளும்.
அப்படியான சிறந்த கலைஞர்கள்.
எல்லாத்துறையிலும் சிறந்த கலைஞர்கள் ஒன்று
சேர்ந்து தரும் அந்த மிகையான(வலுவான)
கலைக்கூட்டை நடிப்பில் காட்டும்போது சில
விதயங்கள் சிலபேருக்கு சற்று மிகையாகத்
தோன்றக்கூடும்.
ஆனால், அவை மிகையல்ல! உண்மையில் வலு!
அது ஒரு சவால்.
உரையாடல், சூழல், கதை, இசை, பாடல் போன்ற
பல கலைஞர்களின் சிறந்த ஆற்றலுக்கு
ஒருங்கே ஈடு கொடுக்க வேண்டியிருந்தது
சிவாசிக்கும் அவர் கால மற்ற நடிகர்களுக்கும்.
அந்தச் சூழல் இன்று இல்லை. கலை,
கலைஞர்களின் ஆற்றலின் சங்கமம்
என்பதற்கு ஈடு கொடுக்க நடிப்பைத் தவிர
மற்றவை பெருத்துவிட்டன.
மீண்டும் சொல்கிறேன் - அன்று இருந்த நடிப்புக்
கலைஞர்கள் யாவருமே, கலையிலும் திறனிலும்
உயர்ந்திருந்தனர். நடிப்போடு கூடிய பிற
கலைஞர்களின் உயர்ந்த திறனுக்கு ஈடு கொடுக்க
வேண்டிய கட்டாயம் நடிக நடிகையருக்கு
இருந்தது.
இன்றைக்கு திரையில் நடிப்பிற்கு
அவசியம் இல்லாமலே போய்விட்டது.
ஆனால் அன்று இருந்தது.
அன்புடன்
நாக.இளங்கோவன்
22/யூலை/2007
வரலாற்றை அங்கதம் செய்து இடம் பிடித்து விட முடியுமா என்று தெரியவில்லை.
அங்கதங்கள் அடிப்படை அறிவை மறைக்காமல்
இருந்து விட்டால் மனிதன் அங்கதமாகாமல்
தப்பி விடலாம்.
சிவாசிகணேசன் பற்றிய பலரின் பாமர
விமர்சனங்கள் முற்போக்கு என்ற மூடியைப்
போட்டு வரும்போதும் உண்மைகள்
ஒழிந்து போய்விடுவதில்லை.
ஒரு எழுத்தாளரைப் பற்றிப் படம் எடுக்க
வேண்டுமானால், அவர் கக்கத்தைக் காட்டிக்
கொண்டு, நெஞ்சு வரை பூவேட்டியைக்
(பூப்போட்ட வேட்டி) கட்டிக் கொண்டு,
மேசையைப் பார்ப்பதும் மேலே பார்ப்பதுமாய்
ஒரு மூனு மணிநேரம் உட்கார்ந்திருப்பதையே
படமா எடுத்துக் காண்பித்தால் அதுதான்
இயல்பான நடிப்பு என்று கொஞ்சுவார்கள் போலிருக்கிறது
விமர்சனக் காரர்கள் :-))
கடந்த சூலை மாதம் சிவாசியின் நடிப்பு பற்றி ஒரு
மடற்குழுவில் செய்த உரையாட்டு கீழே.
----------------------------------------------------------
திருமால் பெருமை என்று ஒரு படம்.
அந்தப் படத்தில் குறுநில அரசனாக ஒரு வேடம்.
அதில் அவர் ஒரு காட்சியில் நடந்து போன
அழகு கண்டு கட்டபொம்மன், இராசராச சோழன்
ோன்ற படங்களை
எல்லாம் தூக்கி சாப்பிட்டுவிட்டதை உணர்ந்தேன்.
எனது இளவயதில் "என்னடி மீனாட்சி...சொன்னது
என்னாச்சு" என்ற பாடலுக்குக் கமல் ஆடிய ஆட்டமும்,
சகலகலாவல்லவனில் அவர் ஆடிய ஆட்டமும் என்னையும்
ஈர்த்திருந்தன. ஆனால் கொஞ்சகாலத்திலேயே அது மிகை என்று பட்டது,
சலங்கை ஒலியை இரசித்த பிறகு என்னால்
மற்றவற்றை இரசிக்க முடியவில்லை. அவை மிகையாகத்
தோன்றுகின்றன.
அதற்கும் சற்று முந்திய சோலே படத்தில்
அமிதாப்பின் சில நடன அசைவுகள்
என்னக் கவர்ந்ததுண்டு.
ஆயினும் சகலகலாவல்லவன் நடனத்தை, என்னை
விட வயதில் முதிர்ந்தவர்கள் இன்றைக்கும் இரசிப்பதையும் பார்த்திருக்கிறேன்.
ஆகையால் வயதும் இதில் காரணமல்ல என்று
தோன்றுகிறது,
அந்தக் காலத்தில் அப்படித் தேவைப்பட்டது
என்றும் பொத்தாம் பொதுவிலும்
என்னால் சொல்லி விடமுடியவில்லை.
பாட்சா, தளபதி இரசினிகாந்த் என்னைக் கவர்ந்த
அளவிற்கு பரட்டை இரசினியோ பில்லா
இரசினியோ கவர்ந்ததில்லை.
ஆனால் பாட்சா இரசினியிலும் சரி பரட்டை
இரசினியிலும் சரி மிகையான நடிப்பு என்பது நிறையவே இருக்கும்.
நாயகன் கமலும், ஆளவந்தான் கமலும்
அப்படியே. படையப்பாவும், நீலாம்பரியும் காலை முகத்திற்கு
நேரே தூக்கித் தூக்கிக் காண்பித்தது மிகை என்ற வகையிலேயே
சொல்லப்படக் கூடிய ஒன்று,
(அது ஒரு கலாச்சாரக் கேடு என்பது வெறு விதயம்)
எப்படியிருப்பினும் அந்த மிகையான நடிப்பு
(சிவாசி, கமல், இரசினி) என்பது
அந்தந்தக் கலைக்கால கட்டத்தில் ஒரு தாக்கத்தை
ஏற்படுத்தியே இருக்கிறது,
என்னைப் பொறுத்த வரையில் சிவாசியின் கன்ன
அசைவும், இரசினியின் துடிப்பும்,
கமலின் நளினமும் நடிப்பின் மிகையானவையாகத்
தெரியவில்லை.
ஆனால், இந்த மிகை என்பதன் பொருள் மிகை
என்பது அல்ல என்று உணர்கிறேன்.
இரசினி படம் எடுக்க வேண்டுமானால் அதற்கு
ஒரு சில தன்மைகள் மட்டுமே
வைத்து எடுப்பார்கள். இது நாமறிந்த உண்மை.
ஏன் இரசினியை வைத்து அழகி அல்லது தவமாய் தவமிருந்து போன்ற
படங்கள் எடுக்கப் படுவதில்லை?
ஏனெனில் அது அவருக்கு அவ்வளவாகப்
பொருந்தாது என்ற ஒரு படிமத்தை
ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
அதே போலத்தான் சிவாசி கணேசனுக்குப்
பொருந்தாத பல குப்பைப் படங்களை
அதுவும் 70களின் பிற்பகுதியில் இருந்து எடுத்து
அவரின் பெயரை சற்றுக் கெடுத்து விட்டார்கள்.
அதை விட மூத்த வயதில் முதல்மரியாதை படத்தின் சிறப்பை
அவரின் திறமைக்கு நான் சான்றாகச் சொல்வேன். தேவர் மகனையும் கூட,
ஏன் தாவணிக் கனவுகளையும் எண்ணிப் பார்த்தால்
அவையும் பின்னாளைய சிறந்த படம் நடிகர் திலகத்திற்கு என்று சொல்லலாம்,
ஆகவே, மிகை நடிப்பு என்ற எண்ணம்
"பொருந்தா நடிப்பினால்" வந்தது,
சிவாசிக்கு மட்டுமல்ல ஏனைய நடிகர்களுக்கும்
இந்தப் பொருந்தா நடிப்பு உண்டு.
அது பொருந்தாத பொழுதெல்லாம் அது
overacting என்று சொல்லப்படுவதாக
நான் கருதுகிறேன்.
அந்த வகையில் சிவாசிக்கு மிகையான நடிப்பு
ஒரு சரவல் இல்லை. ஆனால்
பொருந்தா நடிப்பு அமைந்தது என்று சொல்லலாம்.
ம.கோ.இரா ஏழைகளைக் கட்டிப் பிடித்தது
முதற்கொண்டு பல விதயங்களில்
அவரின் மிகை என்று சொல்லப் படுகின்ற
நடிப்பைக் காணலாம்.
உச்சமாக நான் கருதுவது என்னவென்றால் ஒரு
படத்தில் பதுமினியின் நடனத்தோடு போட்டி நடனம் ஆடி,
அந்தப் போட்டியில் அவர் வெல்வார். மன்னாதி மன்னன் என்ற படம்.
நான் அந்த நடனப் போட்டிக் காட்சியை பார்த்து
இளவயதிலெயே கதிகலங்கிப் போயிருக்கிறேன்.
நாட்டியப் பேரொளி ஒரு சிறந்த கலைமாமணி.
அவரால் தமிழகத்தில் பரதம் மேலும் தழைத்தது
என்று சொல்லலாம்.
ஆணானப்பட்ட நடிகர் திலகமே நாயனத்தைக்
கையில் வைத்துக் கொண்டு தில்லானாவுக்கு
வாசித்து அப்படியே அமர்ந்து
கொண்டார். அந்தப் புகழ் பெற்ற
போட்டியில் வெற்றி இருவருக்குமே. அது மிகப்
பொருந்திய நடிப்பு,
இயல்பான கலையை இருவருக்கும் தக்கவாறு
பொருத்திக் கொண்டதால்
அது அவ்வளவு சிறப்புப் பெற்றது.
ஆனால், இந்த மா.கோ.இரா அவருடனே
போட்டி நடனம் ஆடி, அதில் வெற்றி வேறு பெறுவார். அதைப்
பார்க்கும் போதெல்லாம் பதுமினிக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் விட்டு
விடுவதை வழக்கமாக வைத்திருக்கிறேன் :-)
பதுமினியின் 13 நடனங்கள் கொண்ட நெருவட்டு
கிடைத்தது. அற்புதமான தரவுகள் கொண்ட தொகுப்பு அது.
சொக்கவைக்கும் நடனங்களில்
மா.கோ.இரா மற்றும் பதுமினியின் போட்டி நடனமும் ஒன்று.
என்னைப் பொறுத்தவரை அதுவும் மிகையான
நடிப்பு என்று சொல்வதை விட
பொருந்தா நடிப்பு என்று சொல்லலாம். இதே
போல இன்னும் ஒரு பத்துப் படத்தில்
அவர் ஆடியிருந்தால் ம.கோ.இரா கதி
என்னவாகியிருக்கும் என்று சொல்ல முடியாது :)
எத்தனையோ அரச வேடப் படத்தில் ம.கோ.இரா
நடித்திருந்தும், பிறர் நடித்திருந்தும்
தமிழகத்தில் அரசன் என்றால் நினைவில் வருவது
எல்லாமே சிவாசியின் நடிப்பே.
அதில் மிகை யிருந்தால் அந்த மிகையே அவரின் சிறப்பு.
இன்னொரு கோணத்தில் பார்த்தோமானால்,
1975க்கு முன் , பின் என்று படங்களைப்
பார்க்கலாம். பழைய படங்களுக்கும் புதிய படங்களுக்கும்
உள்ள வேறுபாடுகள் மிகக் கூர்ந்து
கவனிக்கப் படவேண்டியன.
செறிவான பாடல், அளவான இசை, வலுவான
உரையாடல், அரங்க அமைப்பு,
நெறியாளல், ஒலி/ஒளி அமைப்பு என்ற
எல்லாவற்றிலும் கலைஞர்களின் "மிகையான"
ஆழ்ந்த சிந்தனை மற்றும் கலையுணர்வு
பங்களிப்பாக இருக்கும். அதாவது முதிர்ந்த
கலைஞர்களின் செவ்விய கூட்டாகப் படம்
வெளிவரும். அம்மாதிரியாக வந்த படங்களும்
காட்சிகளும்தான் அழியாமல் இருக்கின்றன.
இங்கே நான் "மிகையான" என்று சொல்வது
"வலுவான" என்ற பொருளில்.
பராசக்தியின் உரையாட்டிற்கு இன்றைய நடிகர்கள்
எத்தனை பேரால் நடித்து விட முடியும்?
கெளரவம் படத்திலே சிவாசியின் தான்மைக்குப்
(ego) பொருத்தமாக உரையாடல்
எழுத எத்தனை பேரால் முடியும் என்று எனக்குத்
தெரியவில்லை.
பதுமினிக்குப் பிறகு, வைசெயந்திமாலாவிற்குப்
பிறகு தமிழில் எத்தனையோ
படங்கள் பரதத்தோடு வந்துவிட்டன சலங்கை ஒலி
உட்பட. ஆயினும், பதுமினியே இன்றைக்கும் நாட்டியப் பேரொளியாக
இருக்கிறார்.
மன்னவன் வந்தானடி பாடலைப் பார்க்கும்போது
ஒவ்வொரு மெல்லிய விதயத்திலும்
பதுமினியின் நடனத்தையும் தாண்டி, காட்சி
அமைப்பு, இசை, நடனம், நெறியாளல்,
ஒளிஓவியம், நடன அரங்கு, நடிப்பு, கதை, சூழல்,
பாடல், பாடலின் சந்தம், பாடலின் செறிவு
என்று ஒவ்வொன்றும் போட்டி போட்டுக்
கொள்ளும்.
அப்படியான சிறந்த கலைஞர்கள்.
எல்லாத்துறையிலும் சிறந்த கலைஞர்கள் ஒன்று
சேர்ந்து தரும் அந்த மிகையான(வலுவான)
கலைக்கூட்டை நடிப்பில் காட்டும்போது சில
விதயங்கள் சிலபேருக்கு சற்று மிகையாகத்
தோன்றக்கூடும்.
ஆனால், அவை மிகையல்ல! உண்மையில் வலு!
அது ஒரு சவால்.
உரையாடல், சூழல், கதை, இசை, பாடல் போன்ற
பல கலைஞர்களின் சிறந்த ஆற்றலுக்கு
ஒருங்கே ஈடு கொடுக்க வேண்டியிருந்தது
சிவாசிக்கும் அவர் கால மற்ற நடிகர்களுக்கும்.
அந்தச் சூழல் இன்று இல்லை. கலை,
கலைஞர்களின் ஆற்றலின் சங்கமம்
என்பதற்கு ஈடு கொடுக்க நடிப்பைத் தவிர
மற்றவை பெருத்துவிட்டன.
மீண்டும் சொல்கிறேன் - அன்று இருந்த நடிப்புக்
கலைஞர்கள் யாவருமே, கலையிலும் திறனிலும்
உயர்ந்திருந்தனர். நடிப்போடு கூடிய பிற
கலைஞர்களின் உயர்ந்த திறனுக்கு ஈடு கொடுக்க
வேண்டிய கட்டாயம் நடிக நடிகையருக்கு
இருந்தது.
இன்றைக்கு திரையில் நடிப்பிற்கு
அவசியம் இல்லாமலே போய்விட்டது.
ஆனால் அன்று இருந்தது.
அன்புடன்
நாக.இளங்கோவன்
22/யூலை/2007
Sunday, November 12, 2006
இளையராசாவின் ஆன்மீகமும், பெரியார் பட இசையும்!
இளையராசாவின் ஆன்மீகமும், பெரியார் பட இசையும்!
இசைஞானி இளையராசா, பெரியார் பற்றிய திரைப்படத்திற்கு இசை அமைக்க
மறுத்தது, அவர் சொன்ன காரணத்தினால் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
அதிக விவரங்களை நண்பர் சிவபாலன் அவர்களின் பதிவில் காணலாம்.
http://sivabalanblog.blogspot.com/2006/11/blog-post_09.html
1) தொழில்வாரியாக அவருக்கு இசையமைக்கவும் மறுக்கவும் முழு உரிமை உண்டு.
2) அதை அனைவரும் ஒப்புக் கொள்ளும் அதேவேளையில், ஒரு தனி மனிதனாக,
தனது சிந்தனைகளின் அடிப்படையில் அதனை அவர் மறுக்கவும் உரிமை உண்டு என்பதனையும்
ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஏனெனில் தந்தை பெரியாரும் தனிமனித உரிமைக்காக
போராடியவர். இளையராசாவின் கருத்தை ஏற்காவிடில் அது பெரியார் கருத்தியல்களைச் சரியாக
உணரவில்லையோ என்று எண்ணம் வரக்கூடும்.
3) தமிழ் ஏடுகளில் வந்துள்ள செய்திகளைப் பார்க்கும் போது, இளையராசா தனது மறுப்பை
இன்னும் கொஞ்சம் பக்குவமாக சொல்லியிருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது.
ஆயினும் அவர் சொல்ல வந்ததை மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறார். பெரியாரும்
தனக்குத் தோன்றுவதை பட்டென்று சொல்லக் கூடியவர். ஆதலால் இளையராசா சொன்னதை
மிகப் பிழையாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.
4) இளையராசா தனது கருத்தினை உள்ள சுத்தியோடு சொல்லியிருக்கிறார் என்றே கருதமுடிகிறது.
காழ்ப்புடன் சொன்னதாகத் தெரியவில்லை. ஆழமாக ஆன்மீக இலக்கியங்களைப் படிக்கும் போது,
சில பல கருத்துத் தெளிவுகள் ஏற்பட்டிருக்கக்கூடும் அவருக்கு. அந்தவகையில் அவர் அண்மையில் இசைத்த
திருவாசகப் (ஓரோ இசையில்) பதிகங்களில் ஒரு பதிகம் அச்சப் பத்து. அதனை ஆழ்ந்து படித்தவர்கள்
இளையராசாவின் கருத்தையும் அவர் பக்க ஞாயத்தையும் ஒத்துக் கொள்வர். (அதனை எழுதினால் விரியும்)
படித்ததோடு அல்லாமல் அதன்பால் நிற்க முனைகிறார் இளையராசா என்றுதான் எண்ணவேண்டியிருக்கிறது.
5) பெரியார் ஒரு மாபெரும் சக்தி. இளையராசாவின் இசை மறுப்பினால் பெரியாரின் புகழ் கடுகளவும்
குறையாது. அதேபோல, இளையராசாவின் ஆன்ம சுத்தியையும் பாராட்டத்தான் வேண்டும்.
பெரியார் படத்தில் அவரின் பலதரப்பட்ட பணிகளையும் 3 மணிநேரத்தில் காட்டிவிடப்போகிறார்கள்.
அவரின் கடவுள் மறுப்புக் கொள்கையைப் பற்றிய உரையாடல்கள் அல்லது காட்சி அமைப்புகள் இருக்கும்.
அதற்கும் இளையராசா பின்னணி இசையோ அல்லது பாடல் இசையோ செய்ய வேண்டியிருக்கும்.
நெற்றியில் நீறு பூசி விடுவதை மட்டுமே ஆன்மீகத் தகுதியாகக் கொண்ட நிலையில் உள்ளவராக அல்லாமல்
ஆழமான கருத்தியல்களை உணர்ந்தவராக இளையராசா தெரிவதால், அந்தச் சூழல்களுக்கு இசையமைக்க
அவர் மனம் ஒப்பவில்லை போலும். இந்த இடத்தில் என்னை இளையராசா கவரத்தான் செய்கிறார்.
6) பாரதிய சனதாக் கட்சிக்காரர் என்றாலே ஏதோ ஆன்மீகத்துக்கு குத்தகைக்காரர் போன்ற
மிதப்பில் இல.கணேசன் வெளியிட்டுள்ள கருத்து அருத்தம் பொதிந்ததாகத் தெரிகிறது. அதில்
பெரியாரை இழிவு படுத்தும் தொனி தெரிகிறது. பாரதியாரைப் பெருமைப் படுத்தியதாக
அவர் சொல்வதில் விசமத்தனம் மறைந்துள்ளதாகப் படுகிறது. பா.ச.க+இரா.சு.ச காரர்களுக்கும்
ஆன்மீகம் என்பதற்கும் இடைவெளி மிக அதிகம்.
இளையராசாவின் கருத்தியல் நிலை இல.கணேசனின் சிந்தனைக்கு எட்டாததாகவே எனக்குப் படுகிறது.
எனவே இல.கணேசனின் கருத்துக்கள் வளரக்கூடாதவை.
7) தந்தை பெரியார் இந்த நாட்டிற்கு ஆற்றியிருக்கும் தொண்டுகளைக் கருத்தில் கொண்டு
தமிழ் மக்கள் சற்று உணர்ச்சி வசப்படுதல் கண்கூடு. ஆயினும், பெரியார் எவ்வளவு முக்கியமோ
அவ்வளவு முக்கியம் இளையராசாவின் தனி மனித உரிமை என்பதும், அதிலும் ஒரு அழகான
ஞாயம் இருக்கிறது என்பதும். இதனை உணந்து கொண்டு இவ்விதயத்தைப்
பெரிதாக்காமல் இருக்க வேண்டும். இல்லாவிடில் இது ஒரு தரமற்ற வாதத்திற்கே இட்டுச் செல்லும்.
கடவுள் என்ற பெயரில் எல்லா நிலைகளிலும் விரவிக் கிடந்த (இப்போதும் நிறைய கிடக்கும்)
அட்டூழியங்களை வெறுத்து கடவுளே கருப்பு சட்டையைப் போட்டுக் கொண்டு வந்திருப்பார் என்று
எண்ணக் கூடிய கால கட்டத்தில் பெரியார் ஆற்றிய பணி காலத்தால் அழிக்க முடியாதது.
அதற்கு யாராலும் கறை ஏற்ற முடியாது. இன்றைக்கு இளையராசாவால் இவ்வளவு துணிவாக
ஒரு கருத்தைக் கூற முடிகிறதென்றால் அதற்குப் பெரியாரின் பணிகளும் ஒரு சிறிய பங்கேனும்
வகிக்கும். ஆகவே பெரியாரை மதிக்கிறோம் என்றால் இளையராசாவின் நிலைப்பாட்டையும்
மதிக்க வேண்டும்.
தனிப்பட்ட முறையில் இளையராசாவின் இந்த நிலைப்பாட்டை என்னால் வெகுவாகப் புரிந்து கொள்ள
முடிகிறது. அவரைப் பாராட்டவும் முடிகிறது. அதனை அவ்வளவு எளிதில் சொற்களால் எழுதி விடமுடியாது.
இது பெரியாரை இழிவுபடுத்துவது இல்லை. அவர் செய்த பணிகளுக்கு குறை சேர்ப்பதும் இல்லை.
அன்புடன்
நாக.இளங்கோவன்
இசைஞானி இளையராசா, பெரியார் பற்றிய திரைப்படத்திற்கு இசை அமைக்க
மறுத்தது, அவர் சொன்ன காரணத்தினால் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
அதிக விவரங்களை நண்பர் சிவபாலன் அவர்களின் பதிவில் காணலாம்.
http://sivabalanblog.blogspot.com/2006/11/blog-post_09.html
1) தொழில்வாரியாக அவருக்கு இசையமைக்கவும் மறுக்கவும் முழு உரிமை உண்டு.
2) அதை அனைவரும் ஒப்புக் கொள்ளும் அதேவேளையில், ஒரு தனி மனிதனாக,
தனது சிந்தனைகளின் அடிப்படையில் அதனை அவர் மறுக்கவும் உரிமை உண்டு என்பதனையும்
ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஏனெனில் தந்தை பெரியாரும் தனிமனித உரிமைக்காக
போராடியவர். இளையராசாவின் கருத்தை ஏற்காவிடில் அது பெரியார் கருத்தியல்களைச் சரியாக
உணரவில்லையோ என்று எண்ணம் வரக்கூடும்.
3) தமிழ் ஏடுகளில் வந்துள்ள செய்திகளைப் பார்க்கும் போது, இளையராசா தனது மறுப்பை
இன்னும் கொஞ்சம் பக்குவமாக சொல்லியிருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது.
ஆயினும் அவர் சொல்ல வந்ததை மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறார். பெரியாரும்
தனக்குத் தோன்றுவதை பட்டென்று சொல்லக் கூடியவர். ஆதலால் இளையராசா சொன்னதை
மிகப் பிழையாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.
4) இளையராசா தனது கருத்தினை உள்ள சுத்தியோடு சொல்லியிருக்கிறார் என்றே கருதமுடிகிறது.
காழ்ப்புடன் சொன்னதாகத் தெரியவில்லை. ஆழமாக ஆன்மீக இலக்கியங்களைப் படிக்கும் போது,
சில பல கருத்துத் தெளிவுகள் ஏற்பட்டிருக்கக்கூடும் அவருக்கு. அந்தவகையில் அவர் அண்மையில் இசைத்த
திருவாசகப் (ஓரோ இசையில்) பதிகங்களில் ஒரு பதிகம் அச்சப் பத்து. அதனை ஆழ்ந்து படித்தவர்கள்
இளையராசாவின் கருத்தையும் அவர் பக்க ஞாயத்தையும் ஒத்துக் கொள்வர். (அதனை எழுதினால் விரியும்)
படித்ததோடு அல்லாமல் அதன்பால் நிற்க முனைகிறார் இளையராசா என்றுதான் எண்ணவேண்டியிருக்கிறது.
5) பெரியார் ஒரு மாபெரும் சக்தி. இளையராசாவின் இசை மறுப்பினால் பெரியாரின் புகழ் கடுகளவும்
குறையாது. அதேபோல, இளையராசாவின் ஆன்ம சுத்தியையும் பாராட்டத்தான் வேண்டும்.
பெரியார் படத்தில் அவரின் பலதரப்பட்ட பணிகளையும் 3 மணிநேரத்தில் காட்டிவிடப்போகிறார்கள்.
அவரின் கடவுள் மறுப்புக் கொள்கையைப் பற்றிய உரையாடல்கள் அல்லது காட்சி அமைப்புகள் இருக்கும்.
அதற்கும் இளையராசா பின்னணி இசையோ அல்லது பாடல் இசையோ செய்ய வேண்டியிருக்கும்.
நெற்றியில் நீறு பூசி விடுவதை மட்டுமே ஆன்மீகத் தகுதியாகக் கொண்ட நிலையில் உள்ளவராக அல்லாமல்
ஆழமான கருத்தியல்களை உணர்ந்தவராக இளையராசா தெரிவதால், அந்தச் சூழல்களுக்கு இசையமைக்க
அவர் மனம் ஒப்பவில்லை போலும். இந்த இடத்தில் என்னை இளையராசா கவரத்தான் செய்கிறார்.
6) பாரதிய சனதாக் கட்சிக்காரர் என்றாலே ஏதோ ஆன்மீகத்துக்கு குத்தகைக்காரர் போன்ற
மிதப்பில் இல.கணேசன் வெளியிட்டுள்ள கருத்து அருத்தம் பொதிந்ததாகத் தெரிகிறது. அதில்
பெரியாரை இழிவு படுத்தும் தொனி தெரிகிறது. பாரதியாரைப் பெருமைப் படுத்தியதாக
அவர் சொல்வதில் விசமத்தனம் மறைந்துள்ளதாகப் படுகிறது. பா.ச.க+இரா.சு.ச காரர்களுக்கும்
ஆன்மீகம் என்பதற்கும் இடைவெளி மிக அதிகம்.
இளையராசாவின் கருத்தியல் நிலை இல.கணேசனின் சிந்தனைக்கு எட்டாததாகவே எனக்குப் படுகிறது.
எனவே இல.கணேசனின் கருத்துக்கள் வளரக்கூடாதவை.
7) தந்தை பெரியார் இந்த நாட்டிற்கு ஆற்றியிருக்கும் தொண்டுகளைக் கருத்தில் கொண்டு
தமிழ் மக்கள் சற்று உணர்ச்சி வசப்படுதல் கண்கூடு. ஆயினும், பெரியார் எவ்வளவு முக்கியமோ
அவ்வளவு முக்கியம் இளையராசாவின் தனி மனித உரிமை என்பதும், அதிலும் ஒரு அழகான
ஞாயம் இருக்கிறது என்பதும். இதனை உணந்து கொண்டு இவ்விதயத்தைப்
பெரிதாக்காமல் இருக்க வேண்டும். இல்லாவிடில் இது ஒரு தரமற்ற வாதத்திற்கே இட்டுச் செல்லும்.
கடவுள் என்ற பெயரில் எல்லா நிலைகளிலும் விரவிக் கிடந்த (இப்போதும் நிறைய கிடக்கும்)
அட்டூழியங்களை வெறுத்து கடவுளே கருப்பு சட்டையைப் போட்டுக் கொண்டு வந்திருப்பார் என்று
எண்ணக் கூடிய கால கட்டத்தில் பெரியார் ஆற்றிய பணி காலத்தால் அழிக்க முடியாதது.
அதற்கு யாராலும் கறை ஏற்ற முடியாது. இன்றைக்கு இளையராசாவால் இவ்வளவு துணிவாக
ஒரு கருத்தைக் கூற முடிகிறதென்றால் அதற்குப் பெரியாரின் பணிகளும் ஒரு சிறிய பங்கேனும்
வகிக்கும். ஆகவே பெரியாரை மதிக்கிறோம் என்றால் இளையராசாவின் நிலைப்பாட்டையும்
மதிக்க வேண்டும்.
தனிப்பட்ட முறையில் இளையராசாவின் இந்த நிலைப்பாட்டை என்னால் வெகுவாகப் புரிந்து கொள்ள
முடிகிறது. அவரைப் பாராட்டவும் முடிகிறது. அதனை அவ்வளவு எளிதில் சொற்களால் எழுதி விடமுடியாது.
இது பெரியாரை இழிவுபடுத்துவது இல்லை. அவர் செய்த பணிகளுக்கு குறை சேர்ப்பதும் இல்லை.
அன்புடன்
நாக.இளங்கோவன்
Subscribe to:
Posts (Atom)