அறிஞர் அண்ணா பாடும் பரணிக்குத்
தனி நடையும் அழகும் உண்டு.
"பேராசைப் பெருந்தகையே போற்றி !
பேச நா இரண்டுடையாய் போற்றி !
பயங்கொள்ளிப் பரமா போற்றி !
படுமோசம் புரிவாய் போற்றி !
சிண்டு முடிந்திடுவாய் போற்றி !
சிரித்திடும் நரியே போற்றி !
தந்திர மூர்த்தியே போற்றி !
தாசர் தம் தலைவா போற்றி !
வஞ்சகவேந்தே போற்றி !
வன்கணநாதா போற்றி ! "
ஆரியத்திற்கு இப்படி அருச்சனை செய்து தனது
ஆரியமாயை நூலைத் துவக்கி அண்ணா
அந்த நாளைய குமுகக் கோளாறுகளையும்,
அந்தக் கோளாறுகளின் பிடியில் கிடந்து,
தமிழர்களைக் காலகாலமாய் அழித்து வரும்
காங்கிரசாரையும் பார்த்து இப்படிக் குரல்
எழுப்பினார்.
அந்த வரிகளை எழுதிய அண்ணாவுக்கு இருந்த
உணர்வும்,அதைப் படித்த திராவிடத் தளபதிகளுக்கு
இருந்த உணர்வும், பொதுமக்களுக்கு
இருந்த உணர்வுகளும் வெவ்வேறானவை.
அண்ணாவுக்கு "நமது குமுகத்தின் கேடுகளுக்குக்
காரணமான ஆரியத்தை, இப்படிக் கண்டித்து
விழிப்புணர்வு அளிப்பது காலத்தின் தேவை" என்ற
எண்ணம் இருந்தது.
அப்பாவித் தமிழ்மக்களோ "அப்படியா? அண்ணா
ஏதோ சொல்றாரே, ஓகோ இப்படியெல்லாம் இருக்கிறதா?
சரி - இந்தத் திராவிடப் பாசறை நம்மைக் காப்பாற்றிக்
கரை சேர்க்கப் போகிறது போல!" என்ற எண்ணம் இருந்தது.
பொதுமக்களிலே, சாதீய, கிழாரியக் காரர்களுக்கு,
அதாவது ஆரியம் கொடுத்த சாதியத்திற்கு
அணைவாக இருந்த அத்தனை சாதியாளர்களுக்கும்,
அச்சாதீயம் உருவாக்கின கிழார்களுக்கும் எரிச்சல் இருந்தது.
இதை நன்கு புரிந்து கொண்ட திராவிடத் தளபதிகள்
அல்லது மாயாண்டிகள் அல்லது அடிப்பொடிகள் ஒரே
கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்தனர்.
ஒன்று, பெரியார் சொல்வது போல சாதியை
அறவே ஒழித்து விட்டால் அரசியல் பிழைப்புக்
கடினமாகிவிடும் என்பதால், அண்ணாவின்
ஆரியமாயையைத் தூக்கிப் பிடித்து அதில்
கூறப்பட்டிருக்கும் உட்கருத்துக்களையும்
பெரியாரின் பல்வேறு போர்க் குரல்களையும்
ஒருமித்து பார்ப்பன சாதியின்
மேல் மட்டும் குவித்துவிட்டு,
தமிழ்நாட்டில் இன்னும் சாதீய
வெறிக் கலவரம் செய்யும் சாதீயத்திற்குத்
தந்திரமாக அரணாக இருந்து விட்டனர். சாதீயத்
தீ அணையாமல் பார்த்துக் கொண்டனர்.
இப்படிச் செய்ததால் திராவிடம் என்ற பெயரை
எந்த இடத்தில் ஒட்ட வைத்தாலும் அங்கே
சாதியோடு சேர்ந்த அரசியல் ஒன்று வளர்ந்து
விடுவதை இன்றும் காணமுடிகிறது.
இரண்டு, அப்படி அரசியல் பிழைப்பைத் தக்க
வைத்து விட்டதால், வருமானத்தை அதிகப்
படுத்தவும் பரவலாக்கவும் வழி வேண்டும் அல்லவா?
அதற்கும் அண்ணாவின் ஆரியமாயை என்னும்
அமுதசுரபியைப் பயன்படுத்தினர்? என்னை?
ஆரியமாயை என்ற பார்ப்பனியத்தை,
பார்ப்பனர் பக்கம் மட்டுமே தொடர்ந்து திருப்பி
விட்டுக் கொண்டே இருந்தால்
தமிழர்கள் அதே மயக்கத்தில்
திராவிட மாயாண்டிகளின்
அடிப்படைத் தவறுகளைக் கண்டும்
காணாமல் இருந்து விடுவார்கள் என்று
மாயாண்டிகள் உறுதியாக நம்பினர்;
அதை நடைமுறைப் படுத்தவும் செய்தனர்.
தமிழ்நாடெங்கும், தமிழ், மேடைப்
பேச்சுக்கு மட்டும் உதவும் பொருளானது.
திராவிட மாயாண்டிகளின்
தமிழ்த் தொண்டால் பள்ளிக் கூடத்தை விட்டு
தமிழ் மாயமானது, தமிழர்கள் மயக்கத்தில்
இருந்த போதுதான்.
தமிழகத்தில் ஏறத்தாழ 7 பேருக்கு ஒருவர்
பெருங்குடியர். திராவிடவாதிகள் தாசுமாக்கு
வாதிகள் என்று அண்மையில் ஒரு அறிஞர்
கூறியிருந்தார். மிகப் பொருத்தமான சொல் அது.
பெருந்தனக்காரர்களின் சேவகர்களாக இந்தத்
தாசுமாக்குவாதிகள் ஆகிப்போனதில்
"ஊரில் உழவும் இல்லை,
வெளியில் தமிழும் இல்லை!
ஆற்றில் நீரும் இல்லை;
அதனடியில் மணலும் இல்லை!!"
இப்படிப் பலவற்றைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
கூர்ந்து பார்த்தால், ஆரியத்தால் அடிபட்டுக் கிடந்த
மக்களை அதே ஆரியத்தைக் காட்டிக் காட்டி
அச்சத்தில் வைத்துக் கொண்டே திராவிட மாயாண்டிகள்
கட்சி வேறுபாடின்றி ஒழுக்கக் கேட்டின் உச்சத்திலும்
ஊழலின் சிகரத்திலும் திளைத்திருப்பது புரியும்.
ஊழலை மட்டும் எடுத்துக் கொண்டால்,
சிறு குவியலில் இருந்து பெரிய மலைவரை
இந்த ஆரியமாயை திராவிட மாயாண்டிகளுக்கு
எடுத்துத் தந்திருக்கிறது.
எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அந்தக் கட்சிக்கு
வளைந்து கொடுத்துப் பணம் பண்ணும் வித்தையை
தனது முகன்மைத் தொழிலாக ஆக்கிக் கொண்டு
தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும்
பெருஞ்சொத்துக்களை ஏற்படுத்திக் கொண்டனர்
தி.கவின் தளபதிகள்ள்.
தமிழர்களை நிமிர்ந்து நிற்கச் சொன்ன பெரியாரின்
கட்சிக்குத் தலைவராக வந்த வீரமணி வெறும்
5 இலக்க உரூவாய் நன்கொடைக்கு
செயலலிதாவிடம் கூனிக் குறுகிக் குழைந்து
மடிந்து வளைந்து வாழ்ந்தது யாருக்கும் மறக்கவில்லை.
அண்ணாவின் மறைவிற்குப் பின்னர் ஆரியமாயை
வர்த்தகத்தைத் தொடர்ந்த கருணாநிதியின் தி.மு.க
சிக்காத ஊழல்கள் இல்லை. எம்சியார் அவர் மேல்
54 வழக்குகள் போட்டார். அண்ணா உருவாக்கிய
தி.மு.கழகமே இரண்டாக உடைந்தது
காசு சங்கதியில்தான்.
பூச்சி மருந்து அடிப்பதில் ஊழல், சருக்கரை ஊழல்
என்று ஊழல் கணக்குகள் நாறின. வீராணம் குழாய்
ஊழல், சென்னை மாநகராட்சி மசுடரு உரோல் ஊழல்
போன்ற மிகவும் புகழ் பெற்ற ஊழல்கள் தி.மு.கவின்
கணக்கில். கருணாநிதி அதை ஒப்புக் கொண்டு
"ஏதோ கொஞ்சம் புறங்கையை
நக்கினோம் - அவ்வளவுதான்"
என்று சொல்லி ஊழலைப் பின்னாளில்
ஒப்புக் கொண்டார்.
வந்தார் எம்சியார்; இவரின் ஊழல் அலாதியானது.
அந்தக் காலத்தில் கருணாநிதி ஊழல் பண்ணினால்
அவர் மட்டும் சாப்பிடுவார் - ஆனால் எம்சியார்
பண்ணினால் அவரும் சாப்பிட்டு ஊருக்கும்
கொடுப்பார் என்பர். அப்படிச் செய்தே வள்ளல் என்ற
பெயரும் வாங்கினார் எம்சியார். இவர் கணக்கில்
பல்பொடி ஊழல், சத்துணவு ஊழல், பல்கேரிய கப்பல்
பேர ஊழல் போன்றவை மிகப் பெருவலம் ஆனவை.
பின்னர் வாராது வந்த தமிழ் அன்னை செயலலிதாவின்
ஆட்சி. தினம் தினம் நகைக்கடைகளின் ஊர்வலங்கள்;
தேர்தலின் வாக்குகளுக்காகக் கொடுக்கப்படும் இலஞ்சப்
பணம் இவர் காலத்தில்தான் அதிகரிக்கப் பட்டது.
வித விதமான ஊழல் குற்றச்சாட்டுகளுக்குச்
சொந்தக்காரர். தொட்டதையெல்லாம் தனது
பொன்னாக்கும் வித்தை இந்த அம்மையார்
தமிழ்நாட்டுக்குத் தந்த கொடை.
தமிழ்நாட்டில் இருக்கும் காலி இடங்களை எல்லாம்
கண்டு கொள்ளும் வித்தையை தமிழ்நாட்டுக்குக்
காட்டியவர் இவர் என்று சொன்னால் மிகையன்று.
டான்சி, பிளசெண்ட் தங்கல், வெளிநாட்டுப் பணம்,
சுடுகாடு என்று வகை வகையான ஊழல்கள்.
70களின் ஊழல்கள் 1கோடி, 2 கோடி முதல்
100 கோடிகள் அளவு வரை இருந்தன.
அப்பொழுதுதான் அண்ணாவின் ஆரியமாயை
வரும்படி செய்து கொடுக்கத் தொடங்கியது.
எம்சியார் காலத்தைய கப்பல் பேர ஊழல்
உள்ளிட்டப் பல ஊழல்களும்
அன்றைய ஊழல் அளவும் பல நூறு
கோடிகளுக்குச் சென்றன. ஆனந்த விகடன்,
மந்திரிமார்களை முகமூடிக்
கொள்ளையர் என்று வருணித்தது
நினைவிருக்கலாம். எம்சியார் காலத்தில்,
தானும் உண்டு பிறரும் வாழனும் என்று
நினைத்ததால் ஊழலின் அளவும் உயர்ந்து பரந்து வந்தது.
தொடங்கி வைக்கப் பட்ட ஆரியமாயைத்
தாக்கங்கள் பரந்து விரிந்து பலருக்கும் பலனளித்த
காலம் எம்சியார் காலம்.
பங்குச் சந்தை மதிப்பு போல ஆரியமாயையை
முறிக்கக் கிளம்பிய திராவிட மாயாண்டிகள்
அடித்த கொள்ளைகளின் அளவு ஆயிரம் கோடி
உரூவாய்களாக உயர்ந்தது அப்போது.
திருச்செந்தூர் முருகனின் வேலைக் கூட பிடுங்கிக் கொண்டு
ஓடிவிட்டனர். கடந்த 40+ ஆண்டுக்கால திராவிட
ஆட்சிகளில் கோவில்கள் நலிந்தன. அங்கிருந்து சிலைகளும்
வேல்களும் குறிப்பாக மரகதலிங்கங்கள் சிலைகள் எல்லாம்
காணாமல் போவது தொடர்கதை. ஏறத்தாழ எல்லா கோவில்
நிலங்களும் ஏப்பம் விடப்பட்டாயிற்று. ஏரி குளங்கள் திராவிடத்
தளபதிகளைப் பெற்றவர்களின் பேட்டைகளாயிற்று.
செயா காலத்தைய ஊழல்கள், திராவிட மாயாண்டிகள்
ஏற்படுத்தியிருந்த ஊழல் அடிக்கட்டமைப்பை மேலும்
மேலும் வலுப்படுத்தி வருமானங்களின் அளவை
சில ஆயிரங் கோடிகளாக ஆக்கி விட்டது.
இப்படி அண்ணா ஆக்கிய ஆரியமாயை,
பங்குச் சந்தையிலே சில பொருள்கள் என்றைக்கும்
ஏறுமுகமாக இருப்பது போல ஏறிக் கொண்டே போய்
பணமாகக் காய்ச்சிக் கொட்டுகிறது.
அதன் அண்மைய உச்சம்தான் நடுவண் அரசில்
பங்கு கொள்ளச் சென்ற தி.மு.கவின் ஆ.இராசா
செய்ததாகச் சொல்லப்படும் 66 ஆயிரம் கோடி ஊழல்.
திராவிடத் தளபதிகளின் மேலே சொல்லப் பட்ட
ஊழல்களில் எல்லாம் உயர்ந்த ஊழல் இசுபெக்ட்டுரம் ஊழல்.
இந்தியத் துணைக்கண்ட வரலாற்றிலேயே
முதன்முறையாகச் செய்யப்பட்ட ஆகப் பெரிய ஊழல்
இசுபெக்ட்டுரம் ஊழல்; அதன் தொகை 66000 கோடிகள்;
அதைச் செய்ததாகச் சொல்லப்படும் கட்சி தி.மு.க.
அண்ணாவின் ஆரியமாயையை தமிழரிடம் காட்டி
எங்களை விட்டால் ஆரியம் வந்து விடும் என்று
தமிழர்களை அச்சப்படுத்தியே கொள்ளை அடித்த
சூக்குமம் தாசுமாக்குவாதிகளையேச் சாரும்.
இதன் விளைவு வீரம் மானம்
சூடு சொரனை மொழி இனம் என்ற அத்தனை
உணர்வுகளையும் தமிழர்கள் இழந்து நிற்பதுதான்.
இதன் தாக்கம் நெடுங்காலத்திற்கு நிற்கும்.
ஆரியமாயையில் இருந்து விடுபட்ட தமிழர்கள் இந்த
திராவிட மாயாண்டிகளிடம் இருந்து விடுபட முடியாது.
காரணம் திராவிடக் கட்சிகளின் சந்தை மதிப்பு
(Market Capitalization) இன்றைக்குப் பல
இலக்கம் கோடிகள்.
ஆகவே, அண்ணாவின் ஆரியமாயை நூலின் மதிப்பு
1970களில் சில கோடிகளாக ஆகி, சில நூறு, சில ஆயிரங்கள்
என்று வளர்க்கப் பட்டு இன்றைக்கு அறுபத்து ஆயிரம்
கோடிகளாக வளர்ந்து நிற்கிறது.
மீண்டும் அண்ணாவின் அந்தப் பரணியை படித்துப் பாருங்கள்.
"பேராசைப் பெருந்தகையே போற்றி !
பேச நா இரண்டுடையாய் போற்றி !
பயங்கொள்ளி பரமா போற்றி !
படுமோசம் புரிவாய் போற்றி !
சிண்டு முடிந்திடுவாய் போற்றி !
சிரித்திடும் நரியே போற்றி !"
அவர் சொன்னது ஆரியத்திற்கு மட்டும்தானா?
அல்லது அவரின் வாரிசுகளுக்கும் சேர்த்துத்தானா
என்பது விளங்கும். ஆரியத்தின் விழுதுகள் என்று
சொல்லப்படும் இந்துராமும் சோவும் சு,சாமியும்
தமிழர்க்கு இழைத்த தீங்குகளில் எந்தத் தீங்கைத்
திராவிட மாயாண்டிகள்
தமிழர்க்கு இழைக்கவில்லை? என்பதும் புரியும்.
அன்புடன்
நாக.இளங்கோவன்
Sunday, November 01, 2009
அண்ணாவின் ஆரியமாயையின் இன்றைய மதிப்பு 66,000 கோடிகள்!
Labels:
அரசியல்,
காங்கிரசு,
தமிழ்,
தமிழ் தேசியம்,
தி.மு.க
Thursday, May 28, 2009
ஈழப்போராட்டத்தைக் கொச்சைப்படுத்தாதீர்கள் அறவோர்களே!
தமிழீழத்தில் இருந்த தமிழரசாங்கம் இன்று
வன்முறையாலும் சூழ்ச்சியாலும்
வீழத்தப்பட்டுள்ளது. 1948 முதல் தமிழீழமக்கள்
போராடி, உழைத்துப் பெற்ற தங்கள் நிலத்தை
மாபெரும் கூட்டணி எதிரிகளிடம் இழந்துள்ளனர்.
தம்மினும் பல மடங்கு பலம் கொண்ட
பகைவர்களிடம் தம் நாட்டை இழந்துள்ளனர்.
வரலாற்றுக்கு முந்திய காலத்தில் இருந்து, முழுவதும் தமிழ்
நிலமாக இருந்த ஈழ நாட்டில், சிங்கள வந்தேறிகள்
நாவலந்தீவின் நயவஞ்சகர் உதவியோடு மெல்ல மெல்ல
தமிழினத்தைத் துடைத்து அழித்து ஒன்றுமில்லாமல்
ஆக்குகின்ற முயற்சியில் பல நூறாண்டுகளாக வெற்றிகளைப்
பெற்று வருகிறார்கள். அதன் தொடர்ச்சியான அழிப்புகள்தான்
நாம் இன்று கண்முன் கண்டு கலங்கிக் கிடப்பது.
இராசபக்சே பறனையில் இருந்து இறங்கி மண்ணை
முத்தமிட்டான் என்று சொல்கிறார்கள். அது என்ன அவன் தாய்
மண்ணா? தமிழனிடம் இருந்து பிடுங்கிய மண்தானே?
கி.மு 500களில் கூட்டம் கூட்டமாய் வந்து மெல்ல மெல்ல
நயவஞ்சகத்தால் தமிழனிடம் இருந்து பிடுங்கிய நிலத்தை
நக்கியிருக்கிறான் இராசபக்சே; முத்தமிடவில்லை.
இராசபக்சே மண்ணை நக்கிய உடனே ஆர்ப்பரித்துக்
கொண்டாடி மகிழ்கின்றது சிங்களக் கூட்டமும்
அதற்குத் துணைபோன கூட்டமும்.
அவர்கள்தான் பகைவர்கள் என்றால்
இன்னொரு சாரார் "அதுக்குதான்
அப்பவே சொன்னேன் ஆயுதமேந்தியது
தப்பு" என்று சொல்லால்
அடிக்க ஆரம்பிக்கிறார்கள்.
இலங்கை நிலத்திலே இருந்தது தமிழர்கள்
மட்டுமே. இடையிலே சிங்களக் குடியேற்றத்தால்
அங்கே இரு இனங்கள் ஏற்பட்டு
இரு நாடுகள் பன்னெடுங்காலமாகவும்
இருந்திருக்கின்றன. கடந்த 500 ஆண்டுகளில்
போர்த்துக்கீசியரிடம் 100+ ஆண்டுகளும்
தச்சுக்காரர்களிடம் 100+ ஆண்டுகளும்
வெள்ளையர்களிடம் 130+ ஆண்டுகளும்
சிங்களரிடம் 60+ ஆண்டுகளும் ஈழத்தமிழ் மண்
அடிமைப் பட்டுக் கிடந்திருக்கிறது.
இந்த 500 ஆண்டுகளில் தமிழர்கள் அங்கே
இழந்திருப்பவை கணக்கிடமுடியாதவை.
போர்த்துக்கீசியன் ஆண்டபோதும்
வெள்ளையன், தச்சுக்காரன் ஆண்டபோதும்
கூட அவர்கள் தமிழ் மண்ணின் வளங்களைக்
கொள்ளை கொண்டார்களே ஒழிய தமிழ்
இனத்தை முற்று முழுதாக கொன்றொழிப்பது
அவர்கள் எண்ணமாக இல்லை.
வெள்ளைக்காரன் தமிழீழ நாட்டையும்
சிங்கள நாட்டோடு ஒட்டி
சிங்களனுக்கு நாட்டாமை கொடுத்த
பின்னர் சிங்களம் முற்று முழுதாக
தமிழின அழிப்பைச் செய்தது. அதை எதிர்த்தத்
தமிழ் மக்கள் எல்லாம் இரக்கமின்றி
கொல்லப் பட்டனர். அவர்களின்
உடைமைகள் எல்லாம் பறிக்கப் பட்டு
அவர்கள் உழும் நிலங்களும்
வாழ்வாதாரங்களும் சிங்களக்
குடியேற்றத்திற்குக் கொடுக்கப் பட்டன.
இதனை யாரேனும் மறுக்க முடியுமா?
1956லே சிங்களருக்கே சிங்களம் என்ற
சட்டமும் ஆக்கப்பட்டது.
சிங்களரின் எண்ணங்களைப் புரிந்து
கொள்ளவே தமிழர்களுக்கு
நாளாகியது. ஏறத்தாழ 1948 முதல் 1977 வரை
சிங்கள அரசாங்கத்திடம்
உண்ணாநோன்பு, பேரணி, மறியல்
என்று போராடிப் பார்த்த மக்களுக்குக்
கிடைத்தது எல்லாமே படுகொலைகளும்,
கலவரங்களும், கற்பழிப்புகளும்தான்.
05-06-1956க்கும் 19-12-2000க்கும்
இடையேயான 44 ஆண்டுகளில்
மொத்தம் 115 இனக்கலவரங்களையும்,
தமிழ்ப் படுகொலைகளையும்
சிங்கள அரசாங்கம் முன்நின்று நடத்தியிருக்கிறது.
இனக்கலவரங்களை நடத்திவிட்டு சிங்கள அரசாங்கமும்
சிங்களத் தலைவர்களும் என்ன சொன்னார்கள்?
"ஏய் உங்களை உதைக்கிறதும் நாங்கதான் -
போனாபோகுதுன்னு விடுறதும் நாங்கதான்.
இந்தியாவையாக் கூப்பிடுறீங்க? அதன்
படைகள் இங்கு வந்து சேர 14 மணி நேரம் ஆகும்.
ஆனா எங்களுக்கு 14 நிமிடங்கள் போதும்
உங்கள் அனைவரின் குருதியையும்
மண்ணில் கொட்ட" என்று காமினி திசநாயக்கா என்ற
சிங்கள மூத்த அமைச்சர் சொன்னான்.
இனக்கலவரங்களின் உச்சம் என்று
சொல்லப்படுகின்ற 1983
கலவரத்தை வெற்றிகரமாக முடித்து விட்டு,
பல ஆயிரம் தமிழர்களை
புலம் பெயர வைத்து விட்டு,
அரச தலைவர் செயவர்த்தனா
கொண்டாடி மகிழ்ந்தான். என்ன சொல்லி?
"யாழ்ப்பாணத்துக்காரங்க இதைப் பற்றி
என்ன சொல்றாங்க என்பதைப் பற்றி எனக்குக்
கவலை இல்லை. அவர்களைப் பற்றியோ
அவர்களின் உயிர்களைப் பற்றியோ அவர்களின்
கருத்துக்கள் அல்லது தேவைகளைப் பற்றியோ
எங்களால் சிந்திக்க முடியாது. வடக்கே
தமிழர்களை நாங்கள் எவ்வளவு நெருக்குகிறோமோ
அவ்வளவுக்கவ்வளவு தெற்கே எமது சிங்கள மக்கள்
மகிழ்வடைகிறார்கள்.
உண்மையில் தமிழர்களைப் பட்டினி
போட்டால் எமது சிங்கள மக்கள்
மிகவும் மகிழ்ச்சியடைகிறார்கள்."
இப்படி எந்த ஒரு நாட்டின் அரச தலைவராவது
சொல்லியிருக்கிறார்களா? சொல்லி விட முடியுமா?
"தமிழர்கள் சிறுபான்மையினர். சிங்களவர்
என்ற மரத்தை அண்டி, நத்தி கொடியாய் தமிழர்கள்
ஒட்டி எமது தயவில் வாழ்ந்து
கொள்ளலாமே தவிர வேறு எந்த உரிமையும்
அவர்களுக்கு இல்லை
"
என்று சொன்னவர் இன்னொரு அரச தலைவர் விசெயதுங்கன்.
எல்லா மக்களுக்கும் ஆன அரசாங்கம்
என்றால் தமிழர்களை அழிக்க அவ்வரசாங்கமே
கலவரங்கள் ஏற்படுத்தினால்
எங்கே இருக்கிறது அறம்?
தம் சொந்த நாட்டு மக்கள் என்று
சிங்கள அரசர்கள் எண்ணாமல்
இப்படிப் பேசினால் எங்கேயிருக்கிறது அறம்?
சொந்த நாட்டு மக்களைப் படுகொலை செய்யவும்
தமிழர்களைக் கற்பழித்து சிங்களமயமாக்கவும்,
காவல்துறையையும் அரணவத்தையும் அனுப்புகின்ற
அரசாங்கம் செய்வது அறநெறியா?
60 ஆண்டுகாலமாக அவர்களைச் சம உரிமை குடிமக்களாக
நடத்தாமல், அவர்களின் அந்தக் கோரிக்கையைப் பற்றிச்
சிறிதும் கவலைப்படாமல், அவர்கள் எந்த வழியில்
கிளர்ந்தெழுந்தாலும் அடக்கி அழித்து வைப்பதை
மட்டுமே செய்து உலகத்தை ஏமாற்றி வரும் சிங்கள அரசு
எந்தவகையில் நம்பிக்கை தருகிறது?
1948ல் தொடங்கி, தம்மைக் காப்பாற்றிக் கொள்ள
தமிழ் மக்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து
1977ல் தான் தனி நாடாவதைத் தவிர வேறு எதுவும்
வழியில்லை என்று சனநாயக முறையில்
முடிவு செய்துதான் தம்மைக் காத்துக் கொள்ளும்
அறப்போரைத் துவங்கினார்கள்.
அந்த அறப்போர் மெல்ல வலுவடைந்து, அதற்கு
இடையூறாகத் தோன்றிய கருணையர்கள், கைக்கூலிகள்
பலரிடமும் இருந்து அறப்போரைக் காப்பாற்றி நேர்மையான
ஒரு தலைமையின் கீழ் தமிழீழ அரசு அமைந்து
ஆட்சி செய்து வந்தது.
எந்த நாட்டிற்கும் அரணவம் உண்டு. அதுபோல்தான்
தமிழீழத்திற்கென்று அரணவம் ஏற்படுத்தப் பட்டது.
அதற்குப் பெயர்தான் விடுதலைப்புலிகள்.
அந்த அரணவம்தான் ஈழத்தமிழர்களுக்குக்
காவலாக இருந்தது.
எல்லா அரணமும் துப்பாக்கிதான்
வைத்திருக்கின்றன. பீரங்கிதான் வைத்திருக்கின்றன.
தமிழீழ அரணமும் அதைத்தான் வைத்திருந்தது.
தனித் தமிழீழச் சித்தாந்தம் 1977ல் தந்தை செல்வா
உருவாக்கியதன் பின்னர், தமிழீழத் தனி நாட்டிற்குத்
தேவையான பொருளியல், கொள்கைகள், அரணம்
என்று ஒவ்வொன்றும் மிக இயல்பாக உருவாக ஆரம்பித்தது.
அதை முழுமை செய்ததும் நிறைவாகச் செய்ததும்
விடுதலைப்புலிகள் அமைப்பினர். அவர்கள்
ஏற்படுத்திய அரணமே தமிழீழ அரணமாக
நிலைத்தது.
புதிதாக, வளர்ச்சியில் இருக்கின்ற ஒரு போராட்டக்
குமுகத்தில் சிற்சில பிழைகளோ தவறுகளோ
நடப்பது இயல்பு. (கோடி கோடியாகக்
கொட்டி செய்யப்படுகிற சொவ்வறைகளில்
(software) சில பிழைகள்
வருவது போலத்தான் அதுவும்.)
அறம் தவறாத அந்த அரணத்தின்
காவலில் தமிழர்கள் சுகித்திருக்க முடிந்தவேளையில்
அதுபொறாத பகைவர்கள்
ஒன்று கூடி அதனை நாசமாக்கி
விட்டிருக்கின்றனர்.
என்ன அறம் தவறியது தமிழீழ அரணம்?
(அதாவது புலிகள்)
சிங்கள அரசு சட்டத்தையும் நீதியையும்
சிங்களருக்கு மட்டும் என்று ஆக்கிவிட
தமிழ் மக்களுக்கு சட்டமும் நீதியையும்
வழங்கியது தமிழீழ அரணம்!
அது எந்த வகையில் அறம் மீறியதாகும்.
சிங்கள அரசு தமிழர்களுக்குப் பகையானதால்
அதற்குப் பதிலாக வந்த தமிழ் அரசான
புலிகள் அரசு சிங்கள அரசுக்குச் செலுத்த
வேண்டிய வரிகளை தமிழ் அரசுக்கே
செலுத்தப் பணித்தது. அது எந்த வகையில்
அறம் மீறியதாகும்?
சிங்களவர் தமிழ் நிலங்களைக்
கைப்பற்றிக் குடியேற்றம் செய்தனர்.
ஆனால் தமிழீழ அரசு தமிழர் பகுதிகளை
மட்டும் வரையறுத்ததே தவிர,
சிங்களர் இடங்களைப்
போய் கைப்பற்றவில்லை.
பல ஆயிரம் பெண்களை சிங்கள
அரணம் கற்பழித்ததுபோல
தமிழரணம் என்றும் அந்தப்
பஞ்ச மா பாதகங்களைச் செய்ததில்லை.
உலக வரலாற்றிலேயே இல்லாத
அளவுக்குப் பெண்மைக்கு முன்னணி வழங்கிய
ஒரே அரசு தமிழீழ அரசுதான். சாதிச்
சழக்குகளை எல்லாம் குறிப்பிடத்
தகுந்த அளவு களைந்து நன்னெறி ஊட்டியது
புலிகளின் அரசுதான்.
நேர்மையையும் திறனையும் ஈகையையும்
தன்மானத்தையும் மட்டுமே முதலாக
வைத்து புலிகள் கட்டியதுதான்
அந்தத் தமிழீழ அரசும் அதன் அரணமும்.
தமிழீழச் சித்தாந்தத்திற்கு முழுவடிவம் கொடுத்து
அகக்காவலுக்கு சட்டமும் நீதியையும் இட்டு,
புறக்காவலுக்கு அரணத்தை நிற்க
வைத்தவர்கள்தான் புலிகள்.
எந்த நாட்டிலும் குற்றங்கள், தேச துரோகங்கள்
என்றெல்லாம் உண்டு. அதற்கான தண்டனையை
அந்த நாடுகளின் சட்டம் அளித்துக் கொண்டுதான்
இருக்கும். அது போலத்தான்
தமிழீழ அரசிற்குள் நடந்த குற்றங்களுக்குத்
தக்க தண்டனை அளிக்கப் பட்டிருக்கிறது.
போர் நெறியில் நீங்கி சிங்களனும்
அவனின் துணைவர்களும் நச்சு குண்டுகளை
வீசியதைப் போல தமிழரணம் என்றும்
நெறியில் நீங்கியதில்லை.
இரு வேறு நாடுகளாக இருந்த இலங்கை பூமியில்
ஒரு தமிழீழ நாட்டைத் தமிழர் ஆண்டனர்.
அந்த நாட்டைத் தமிழர்கள் மீண்டும் சிங்களரிடம்
இழந்துள்ளனர்.
ஏனென்றால் அவர்களுக்கு ஆதரவாக
யாரும் இல்லை. சொந்த இனமும்
தனது தாழ்வு மனப்பான்மையில்
அவர்களைக் கொல்வதற்கே துணைபோயிற்று.
அவர்கள் நடத்தியது ஆயுதப் போராட்டமல்ல.
அரசமைத்து அதற்குக் காவலாக ஆயுதத்தை வைத்தனர்.
அது அரச கடன்.
அவர்கள் செய்தது பயங்கரவாதமல்ல. சிங்களப்
பயங்கரவாதத்தில் இருந்து தமிழர்களைக் காத்தனர்.
வளர்ந்து உருவாகி வருகின்ற வேளைகளில் அவர்கள்
சின்னச் சின்னத் தவறுகளை இழைத்திருக்கலாம்.
யார் தவறில்லாமல் எல்லாவற்றையும் செய்தது
என்று எண்ணிப்பார்த்தால் அவர்களின் பிழைகள்
தெரியாது. அப்படி அவர்கள் பிழை செய்திருந்தால்
நாடு விட்டு துரத்தப்பட்டும் இத்தனைத் தமிழ் மக்கள்
ஆதரவாய் இருக்கமாட்டார்கள்.
சொந்த மக்கள் ஆதரவில்லாமல் அணைப்பில்லாமல்
எந்த அரசும் இயக்கமும் நீடிக்க முடியாது.
நீடித்த வரலாறு இல்லை. தமிழ்மக்களிடம்
உயர்ந்த மதிப்பை ஏற்படுத்திய விடுதலைப் புலிகள்
அதனை அறம் செய்துதான் பெற்றிருக்க முடியும்.
தமிழமக்களுக்கு அரணாக இருந்துதான்
அவர்களின் அன்பைப் பெற்றிருக்க முடியும்.
அதனைப் பிழையென்று பேசினால்,
அது அவர்களின் போராட்டத்தைக்
கொச்சைப் படுத்தியதாகும்.
கொல்ல வந்த பசுவைக் கொல்வது
பாவமில்லை என்பார்கள்.
அதுபோலத்தான் கொல்ல வந்த
சிங்கள விலங்குகளை தடுத்து நிறுத்திய
அரண் விடுதலைப்புலிகள் ஆவர்.
அவர்கள் தடுத்து நிறுத்திப் போராடியதை
தீவிரவாதம் பயங்கரவாதம் என்றால்
அது சிங்களப் பரிவுகாட்டும் பேச்சு
என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.
சொந்த மக்களுக்கு நல்லறம் செய்த
தந்தை செல்வாவின் போராட்டமும்
அதனைத் தொடர்ந்து நல்லறம் செய்த
மேதகு பிரபாகரன் அவர்களின்
போராட்டமும் சிறந்த அறப்போராட்டத்துக்குக்
காட்டுகள். அவர்களுக்கு மேலும் வலுவூட்டி
சிங்களப் பகையிடம் இருந்து தமிழர்களைக்
காத்தது புலிகள் என்ற ஒழுக்கமிகுந்த அரணம்.
சொந்த மக்களுக்கு அறஞ்செய்யும் தனியரசு
மீண்டும் தமிழீழமாக அமையவேண்டும்.
அதைக்காக்கும் அரணம் மீண்டும் தோன்றவேண்டும்.
அது இல்லையேல் இது இல்லை.
இது இல்லையேல் அது இல்லை.
அதாவது மக்களின் அன்பைப் பெற்ற
அறம் செய்யும் அரசாக புலிகள் இல்லாதிருந்தால்
இத்தனை வலுவான அரணத்தைக் கட்டியிருக்க
முடியாது. இத்தனை வலுவான அரணம்
கட்டப் பட்டிருக்காவிட்டால் மக்களைக்
காத்து அவர்களின் அன்பைப் பெற்றிருக்க முடியாது.
தமிழர்களின் போராட்டத்தை அமைத்துக் கொடுத்தவன்
சிங்களன்தான். அது அற்புதமாகப் பரிணமித்து ஒரு
நாடாக ஆகியது. இன்றைய கால கட்டத்திலும்
தமிழ் மக்களுக்குப் போராட்ட உத்தியையும்
பலத்தையும் கொடுக்கப் போகிறவன் சிங்களன்தான்.
அறநெறி பிறழ்ந்த அந்தச் சிங்களன்தான்
தமிழர்களின் போராட்டக் களத்தை
ஏற்படுத்தப் போகிறவன்.
1948லேயே தமிழர்களுக்கு அளிக்கப்
படவேண்டிய உரிமைகளை
அவன் அளித்திருந்தான் என்றால்
தனிநாடு என்ற போரே வந்திருக்காது.
இன்றைக்கும் அதைச் செய்ய மறுக்கும் சிங்களன்
இவ்வளவு மக்களைக் கொன்று விட்டு
அதைச் செய்தாலும் அவனால் இருபுறத்தையும்
பேண முடியாது. ஏனென்றால்
அவன் செய்தது பெரும்பான்மை என்ற
ஆணவத்தில் அமர்ந்து கொண்டு சிறுபான்மையினரை
இகழ்ந்து செய்த வதம்.
அந்த வதத்தில் இருந்து தம் இனத்தைக்
காக்க கிளர்ந்தெழுந்து ஈகம் செய்த
போராளிகளையும் அவர்களின் போராட்டத்தையும்
வெறும் "மறப்போர்" என்று சொன்னால் அது அறமல்ல.
அவர்களின் மறம் அறத்தைக் காத்தது.
அது அறத்தையும் மறத்தையும் ஒருங்கே கொண்ட தவம்!
தமிழீழ விடுதலைப் போர் என்பது ஒரு தவம்!
விசுவாமித்திரனின் தவவேள்விக்கும் காவலிருக்க ஒரு
அரணம் தேவையிருந்தது. தவ வேள்வி செய்யும் போது
அவரைச் சுற்றி ஆயுதமேந்திய இராமனும் இலக்குவனும்
எதற்கிருந்தார்கள் என்று எண்ணிப் பார்க்கவேணும்!
வீடுபேறு வேண்டி நின்ற முனிவனின்
தவவேள்விக்கும் காவலாக மறம் தேவைப்பட்டது.
அப்படித்தான் தமிழ்மக்களின்
விடுதலை வேள்விக்குக் காவலாக
இருந்தது புலிகளின் அரணம்.
அதை ஆயுதமேந்திய தவறு
என்பது அறிந்தோ அறியாமலோ
கொச்சைப்படுத்தும் செயலன்றி
வேறில்லை. அதுவும் இன்று அவர்கள்
தளர்வுற்று இருக்கையில்
சொல்வது நாகரிகமற்றதாகவே கருதப்படும்.
அதனால் அறம் சரி மறம் தவறு
என்று இன்று பேசுவது மிகத்
தவறு. அறமும் மறமும் ஒன்றுக்கொன்று துணையானவை.
அது இயல்பாக ஈழத்தில் பரிணமித்தது.
தமிழருக்குச் சொந்த இனம் கூட துரோகம்
செய்ததால் அந்த அற்புதக் கோட்டை தகர்ந்து
போய் இருக்கிறது.
சொந்த நாடு என்ற பெயரில் சிங்களன்
தனது பெரும்பான்மை என்ற ஆணவத்தில் தமது
சொந்த நாட்டுச் சிறுபான்மை மக்களைத் திட்டமிட்டு
அழித்த வெங்கோலுக்கு எதிராக அறம் செய்துதான்
எதிர்ப்பேன் என்று ஈழமக்கள் முடிவாக இருந்திருந்தார்கள்
என்றால் அதிகபக்கம் கோயில்களில் அன்னதானம்
மட்டுமே செய்திருக்க முடியும். அதுவும் கொஞ்ச நாளைக்கு.
அன்புடன்
நாக.இளங்கோவன்
வன்முறையாலும் சூழ்ச்சியாலும்
வீழத்தப்பட்டுள்ளது. 1948 முதல் தமிழீழமக்கள்
போராடி, உழைத்துப் பெற்ற தங்கள் நிலத்தை
மாபெரும் கூட்டணி எதிரிகளிடம் இழந்துள்ளனர்.
தம்மினும் பல மடங்கு பலம் கொண்ட
பகைவர்களிடம் தம் நாட்டை இழந்துள்ளனர்.
வரலாற்றுக்கு முந்திய காலத்தில் இருந்து, முழுவதும் தமிழ்
நிலமாக இருந்த ஈழ நாட்டில், சிங்கள வந்தேறிகள்
நாவலந்தீவின் நயவஞ்சகர் உதவியோடு மெல்ல மெல்ல
தமிழினத்தைத் துடைத்து அழித்து ஒன்றுமில்லாமல்
ஆக்குகின்ற முயற்சியில் பல நூறாண்டுகளாக வெற்றிகளைப்
பெற்று வருகிறார்கள். அதன் தொடர்ச்சியான அழிப்புகள்தான்
நாம் இன்று கண்முன் கண்டு கலங்கிக் கிடப்பது.
இராசபக்சே பறனையில் இருந்து இறங்கி மண்ணை
முத்தமிட்டான் என்று சொல்கிறார்கள். அது என்ன அவன் தாய்
மண்ணா? தமிழனிடம் இருந்து பிடுங்கிய மண்தானே?
கி.மு 500களில் கூட்டம் கூட்டமாய் வந்து மெல்ல மெல்ல
நயவஞ்சகத்தால் தமிழனிடம் இருந்து பிடுங்கிய நிலத்தை
நக்கியிருக்கிறான் இராசபக்சே; முத்தமிடவில்லை.
இராசபக்சே மண்ணை நக்கிய உடனே ஆர்ப்பரித்துக்
கொண்டாடி மகிழ்கின்றது சிங்களக் கூட்டமும்
அதற்குத் துணைபோன கூட்டமும்.
அவர்கள்தான் பகைவர்கள் என்றால்
இன்னொரு சாரார் "அதுக்குதான்
அப்பவே சொன்னேன் ஆயுதமேந்தியது
தப்பு" என்று சொல்லால்
அடிக்க ஆரம்பிக்கிறார்கள்.
இலங்கை நிலத்திலே இருந்தது தமிழர்கள்
மட்டுமே. இடையிலே சிங்களக் குடியேற்றத்தால்
அங்கே இரு இனங்கள் ஏற்பட்டு
இரு நாடுகள் பன்னெடுங்காலமாகவும்
இருந்திருக்கின்றன. கடந்த 500 ஆண்டுகளில்
போர்த்துக்கீசியரிடம் 100+ ஆண்டுகளும்
தச்சுக்காரர்களிடம் 100+ ஆண்டுகளும்
வெள்ளையர்களிடம் 130+ ஆண்டுகளும்
சிங்களரிடம் 60+ ஆண்டுகளும் ஈழத்தமிழ் மண்
அடிமைப் பட்டுக் கிடந்திருக்கிறது.
இந்த 500 ஆண்டுகளில் தமிழர்கள் அங்கே
இழந்திருப்பவை கணக்கிடமுடியாதவை.
போர்த்துக்கீசியன் ஆண்டபோதும்
வெள்ளையன், தச்சுக்காரன் ஆண்டபோதும்
கூட அவர்கள் தமிழ் மண்ணின் வளங்களைக்
கொள்ளை கொண்டார்களே ஒழிய தமிழ்
இனத்தை முற்று முழுதாக கொன்றொழிப்பது
அவர்கள் எண்ணமாக இல்லை.
வெள்ளைக்காரன் தமிழீழ நாட்டையும்
சிங்கள நாட்டோடு ஒட்டி
சிங்களனுக்கு நாட்டாமை கொடுத்த
பின்னர் சிங்களம் முற்று முழுதாக
தமிழின அழிப்பைச் செய்தது. அதை எதிர்த்தத்
தமிழ் மக்கள் எல்லாம் இரக்கமின்றி
கொல்லப் பட்டனர். அவர்களின்
உடைமைகள் எல்லாம் பறிக்கப் பட்டு
அவர்கள் உழும் நிலங்களும்
வாழ்வாதாரங்களும் சிங்களக்
குடியேற்றத்திற்குக் கொடுக்கப் பட்டன.
இதனை யாரேனும் மறுக்க முடியுமா?
1956லே சிங்களருக்கே சிங்களம் என்ற
சட்டமும் ஆக்கப்பட்டது.
சிங்களரின் எண்ணங்களைப் புரிந்து
கொள்ளவே தமிழர்களுக்கு
நாளாகியது. ஏறத்தாழ 1948 முதல் 1977 வரை
சிங்கள அரசாங்கத்திடம்
உண்ணாநோன்பு, பேரணி, மறியல்
என்று போராடிப் பார்த்த மக்களுக்குக்
கிடைத்தது எல்லாமே படுகொலைகளும்,
கலவரங்களும், கற்பழிப்புகளும்தான்.
05-06-1956க்கும் 19-12-2000க்கும்
இடையேயான 44 ஆண்டுகளில்
மொத்தம் 115 இனக்கலவரங்களையும்,
தமிழ்ப் படுகொலைகளையும்
சிங்கள அரசாங்கம் முன்நின்று நடத்தியிருக்கிறது.
இனக்கலவரங்களை நடத்திவிட்டு சிங்கள அரசாங்கமும்
சிங்களத் தலைவர்களும் என்ன சொன்னார்கள்?
"ஏய் உங்களை உதைக்கிறதும் நாங்கதான் -
போனாபோகுதுன்னு விடுறதும் நாங்கதான்.
இந்தியாவையாக் கூப்பிடுறீங்க? அதன்
படைகள் இங்கு வந்து சேர 14 மணி நேரம் ஆகும்.
ஆனா எங்களுக்கு 14 நிமிடங்கள் போதும்
உங்கள் அனைவரின் குருதியையும்
மண்ணில் கொட்ட" என்று காமினி திசநாயக்கா என்ற
சிங்கள மூத்த அமைச்சர் சொன்னான்.
இனக்கலவரங்களின் உச்சம் என்று
சொல்லப்படுகின்ற 1983
கலவரத்தை வெற்றிகரமாக முடித்து விட்டு,
பல ஆயிரம் தமிழர்களை
புலம் பெயர வைத்து விட்டு,
அரச தலைவர் செயவர்த்தனா
கொண்டாடி மகிழ்ந்தான். என்ன சொல்லி?
"யாழ்ப்பாணத்துக்காரங்க இதைப் பற்றி
என்ன சொல்றாங்க என்பதைப் பற்றி எனக்குக்
கவலை இல்லை. அவர்களைப் பற்றியோ
அவர்களின் உயிர்களைப் பற்றியோ அவர்களின்
கருத்துக்கள் அல்லது தேவைகளைப் பற்றியோ
எங்களால் சிந்திக்க முடியாது. வடக்கே
தமிழர்களை நாங்கள் எவ்வளவு நெருக்குகிறோமோ
அவ்வளவுக்கவ்வளவு தெற்கே எமது சிங்கள மக்கள்
மகிழ்வடைகிறார்கள்.
உண்மையில் தமிழர்களைப் பட்டினி
போட்டால் எமது சிங்கள மக்கள்
மிகவும் மகிழ்ச்சியடைகிறார்கள்."
இப்படி எந்த ஒரு நாட்டின் அரச தலைவராவது
சொல்லியிருக்கிறார்களா? சொல்லி விட முடியுமா?
"தமிழர்கள் சிறுபான்மையினர். சிங்களவர்
என்ற மரத்தை அண்டி, நத்தி கொடியாய் தமிழர்கள்
ஒட்டி எமது தயவில் வாழ்ந்து
கொள்ளலாமே தவிர வேறு எந்த உரிமையும்
அவர்களுக்கு இல்லை
"
என்று சொன்னவர் இன்னொரு அரச தலைவர் விசெயதுங்கன்.
எல்லா மக்களுக்கும் ஆன அரசாங்கம்
என்றால் தமிழர்களை அழிக்க அவ்வரசாங்கமே
கலவரங்கள் ஏற்படுத்தினால்
எங்கே இருக்கிறது அறம்?
தம் சொந்த நாட்டு மக்கள் என்று
சிங்கள அரசர்கள் எண்ணாமல்
இப்படிப் பேசினால் எங்கேயிருக்கிறது அறம்?
சொந்த நாட்டு மக்களைப் படுகொலை செய்யவும்
தமிழர்களைக் கற்பழித்து சிங்களமயமாக்கவும்,
காவல்துறையையும் அரணவத்தையும் அனுப்புகின்ற
அரசாங்கம் செய்வது அறநெறியா?
60 ஆண்டுகாலமாக அவர்களைச் சம உரிமை குடிமக்களாக
நடத்தாமல், அவர்களின் அந்தக் கோரிக்கையைப் பற்றிச்
சிறிதும் கவலைப்படாமல், அவர்கள் எந்த வழியில்
கிளர்ந்தெழுந்தாலும் அடக்கி அழித்து வைப்பதை
மட்டுமே செய்து உலகத்தை ஏமாற்றி வரும் சிங்கள அரசு
எந்தவகையில் நம்பிக்கை தருகிறது?
1948ல் தொடங்கி, தம்மைக் காப்பாற்றிக் கொள்ள
தமிழ் மக்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து
1977ல் தான் தனி நாடாவதைத் தவிர வேறு எதுவும்
வழியில்லை என்று சனநாயக முறையில்
முடிவு செய்துதான் தம்மைக் காத்துக் கொள்ளும்
அறப்போரைத் துவங்கினார்கள்.
அந்த அறப்போர் மெல்ல வலுவடைந்து, அதற்கு
இடையூறாகத் தோன்றிய கருணையர்கள், கைக்கூலிகள்
பலரிடமும் இருந்து அறப்போரைக் காப்பாற்றி நேர்மையான
ஒரு தலைமையின் கீழ் தமிழீழ அரசு அமைந்து
ஆட்சி செய்து வந்தது.
எந்த நாட்டிற்கும் அரணவம் உண்டு. அதுபோல்தான்
தமிழீழத்திற்கென்று அரணவம் ஏற்படுத்தப் பட்டது.
அதற்குப் பெயர்தான் விடுதலைப்புலிகள்.
அந்த அரணவம்தான் ஈழத்தமிழர்களுக்குக்
காவலாக இருந்தது.
எல்லா அரணமும் துப்பாக்கிதான்
வைத்திருக்கின்றன. பீரங்கிதான் வைத்திருக்கின்றன.
தமிழீழ அரணமும் அதைத்தான் வைத்திருந்தது.
தனித் தமிழீழச் சித்தாந்தம் 1977ல் தந்தை செல்வா
உருவாக்கியதன் பின்னர், தமிழீழத் தனி நாட்டிற்குத்
தேவையான பொருளியல், கொள்கைகள், அரணம்
என்று ஒவ்வொன்றும் மிக இயல்பாக உருவாக ஆரம்பித்தது.
அதை முழுமை செய்ததும் நிறைவாகச் செய்ததும்
விடுதலைப்புலிகள் அமைப்பினர். அவர்கள்
ஏற்படுத்திய அரணமே தமிழீழ அரணமாக
நிலைத்தது.
புதிதாக, வளர்ச்சியில் இருக்கின்ற ஒரு போராட்டக்
குமுகத்தில் சிற்சில பிழைகளோ தவறுகளோ
நடப்பது இயல்பு. (கோடி கோடியாகக்
கொட்டி செய்யப்படுகிற சொவ்வறைகளில்
(software) சில பிழைகள்
வருவது போலத்தான் அதுவும்.)
அறம் தவறாத அந்த அரணத்தின்
காவலில் தமிழர்கள் சுகித்திருக்க முடிந்தவேளையில்
அதுபொறாத பகைவர்கள்
ஒன்று கூடி அதனை நாசமாக்கி
விட்டிருக்கின்றனர்.
என்ன அறம் தவறியது தமிழீழ அரணம்?
(அதாவது புலிகள்)
சிங்கள அரசு சட்டத்தையும் நீதியையும்
சிங்களருக்கு மட்டும் என்று ஆக்கிவிட
தமிழ் மக்களுக்கு சட்டமும் நீதியையும்
வழங்கியது தமிழீழ அரணம்!
அது எந்த வகையில் அறம் மீறியதாகும்.
சிங்கள அரசு தமிழர்களுக்குப் பகையானதால்
அதற்குப் பதிலாக வந்த தமிழ் அரசான
புலிகள் அரசு சிங்கள அரசுக்குச் செலுத்த
வேண்டிய வரிகளை தமிழ் அரசுக்கே
செலுத்தப் பணித்தது. அது எந்த வகையில்
அறம் மீறியதாகும்?
சிங்களவர் தமிழ் நிலங்களைக்
கைப்பற்றிக் குடியேற்றம் செய்தனர்.
ஆனால் தமிழீழ அரசு தமிழர் பகுதிகளை
மட்டும் வரையறுத்ததே தவிர,
சிங்களர் இடங்களைப்
போய் கைப்பற்றவில்லை.
பல ஆயிரம் பெண்களை சிங்கள
அரணம் கற்பழித்ததுபோல
தமிழரணம் என்றும் அந்தப்
பஞ்ச மா பாதகங்களைச் செய்ததில்லை.
உலக வரலாற்றிலேயே இல்லாத
அளவுக்குப் பெண்மைக்கு முன்னணி வழங்கிய
ஒரே அரசு தமிழீழ அரசுதான். சாதிச்
சழக்குகளை எல்லாம் குறிப்பிடத்
தகுந்த அளவு களைந்து நன்னெறி ஊட்டியது
புலிகளின் அரசுதான்.
நேர்மையையும் திறனையும் ஈகையையும்
தன்மானத்தையும் மட்டுமே முதலாக
வைத்து புலிகள் கட்டியதுதான்
அந்தத் தமிழீழ அரசும் அதன் அரணமும்.
தமிழீழச் சித்தாந்தத்திற்கு முழுவடிவம் கொடுத்து
அகக்காவலுக்கு சட்டமும் நீதியையும் இட்டு,
புறக்காவலுக்கு அரணத்தை நிற்க
வைத்தவர்கள்தான் புலிகள்.
எந்த நாட்டிலும் குற்றங்கள், தேச துரோகங்கள்
என்றெல்லாம் உண்டு. அதற்கான தண்டனையை
அந்த நாடுகளின் சட்டம் அளித்துக் கொண்டுதான்
இருக்கும். அது போலத்தான்
தமிழீழ அரசிற்குள் நடந்த குற்றங்களுக்குத்
தக்க தண்டனை அளிக்கப் பட்டிருக்கிறது.
போர் நெறியில் நீங்கி சிங்களனும்
அவனின் துணைவர்களும் நச்சு குண்டுகளை
வீசியதைப் போல தமிழரணம் என்றும்
நெறியில் நீங்கியதில்லை.
இரு வேறு நாடுகளாக இருந்த இலங்கை பூமியில்
ஒரு தமிழீழ நாட்டைத் தமிழர் ஆண்டனர்.
அந்த நாட்டைத் தமிழர்கள் மீண்டும் சிங்களரிடம்
இழந்துள்ளனர்.
ஏனென்றால் அவர்களுக்கு ஆதரவாக
யாரும் இல்லை. சொந்த இனமும்
தனது தாழ்வு மனப்பான்மையில்
அவர்களைக் கொல்வதற்கே துணைபோயிற்று.
அவர்கள் நடத்தியது ஆயுதப் போராட்டமல்ல.
அரசமைத்து அதற்குக் காவலாக ஆயுதத்தை வைத்தனர்.
அது அரச கடன்.
அவர்கள் செய்தது பயங்கரவாதமல்ல. சிங்களப்
பயங்கரவாதத்தில் இருந்து தமிழர்களைக் காத்தனர்.
வளர்ந்து உருவாகி வருகின்ற வேளைகளில் அவர்கள்
சின்னச் சின்னத் தவறுகளை இழைத்திருக்கலாம்.
யார் தவறில்லாமல் எல்லாவற்றையும் செய்தது
என்று எண்ணிப்பார்த்தால் அவர்களின் பிழைகள்
தெரியாது. அப்படி அவர்கள் பிழை செய்திருந்தால்
நாடு விட்டு துரத்தப்பட்டும் இத்தனைத் தமிழ் மக்கள்
ஆதரவாய் இருக்கமாட்டார்கள்.
சொந்த மக்கள் ஆதரவில்லாமல் அணைப்பில்லாமல்
எந்த அரசும் இயக்கமும் நீடிக்க முடியாது.
நீடித்த வரலாறு இல்லை. தமிழ்மக்களிடம்
உயர்ந்த மதிப்பை ஏற்படுத்திய விடுதலைப் புலிகள்
அதனை அறம் செய்துதான் பெற்றிருக்க முடியும்.
தமிழமக்களுக்கு அரணாக இருந்துதான்
அவர்களின் அன்பைப் பெற்றிருக்க முடியும்.
அதனைப் பிழையென்று பேசினால்,
அது அவர்களின் போராட்டத்தைக்
கொச்சைப் படுத்தியதாகும்.
கொல்ல வந்த பசுவைக் கொல்வது
பாவமில்லை என்பார்கள்.
அதுபோலத்தான் கொல்ல வந்த
சிங்கள விலங்குகளை தடுத்து நிறுத்திய
அரண் விடுதலைப்புலிகள் ஆவர்.
அவர்கள் தடுத்து நிறுத்திப் போராடியதை
தீவிரவாதம் பயங்கரவாதம் என்றால்
அது சிங்களப் பரிவுகாட்டும் பேச்சு
என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.
சொந்த மக்களுக்கு நல்லறம் செய்த
தந்தை செல்வாவின் போராட்டமும்
அதனைத் தொடர்ந்து நல்லறம் செய்த
மேதகு பிரபாகரன் அவர்களின்
போராட்டமும் சிறந்த அறப்போராட்டத்துக்குக்
காட்டுகள். அவர்களுக்கு மேலும் வலுவூட்டி
சிங்களப் பகையிடம் இருந்து தமிழர்களைக்
காத்தது புலிகள் என்ற ஒழுக்கமிகுந்த அரணம்.
சொந்த மக்களுக்கு அறஞ்செய்யும் தனியரசு
மீண்டும் தமிழீழமாக அமையவேண்டும்.
அதைக்காக்கும் அரணம் மீண்டும் தோன்றவேண்டும்.
அது இல்லையேல் இது இல்லை.
இது இல்லையேல் அது இல்லை.
அதாவது மக்களின் அன்பைப் பெற்ற
அறம் செய்யும் அரசாக புலிகள் இல்லாதிருந்தால்
இத்தனை வலுவான அரணத்தைக் கட்டியிருக்க
முடியாது. இத்தனை வலுவான அரணம்
கட்டப் பட்டிருக்காவிட்டால் மக்களைக்
காத்து அவர்களின் அன்பைப் பெற்றிருக்க முடியாது.
தமிழர்களின் போராட்டத்தை அமைத்துக் கொடுத்தவன்
சிங்களன்தான். அது அற்புதமாகப் பரிணமித்து ஒரு
நாடாக ஆகியது. இன்றைய கால கட்டத்திலும்
தமிழ் மக்களுக்குப் போராட்ட உத்தியையும்
பலத்தையும் கொடுக்கப் போகிறவன் சிங்களன்தான்.
அறநெறி பிறழ்ந்த அந்தச் சிங்களன்தான்
தமிழர்களின் போராட்டக் களத்தை
ஏற்படுத்தப் போகிறவன்.
1948லேயே தமிழர்களுக்கு அளிக்கப்
படவேண்டிய உரிமைகளை
அவன் அளித்திருந்தான் என்றால்
தனிநாடு என்ற போரே வந்திருக்காது.
இன்றைக்கும் அதைச் செய்ய மறுக்கும் சிங்களன்
இவ்வளவு மக்களைக் கொன்று விட்டு
அதைச் செய்தாலும் அவனால் இருபுறத்தையும்
பேண முடியாது. ஏனென்றால்
அவன் செய்தது பெரும்பான்மை என்ற
ஆணவத்தில் அமர்ந்து கொண்டு சிறுபான்மையினரை
இகழ்ந்து செய்த வதம்.
அந்த வதத்தில் இருந்து தம் இனத்தைக்
காக்க கிளர்ந்தெழுந்து ஈகம் செய்த
போராளிகளையும் அவர்களின் போராட்டத்தையும்
வெறும் "மறப்போர்" என்று சொன்னால் அது அறமல்ல.
அவர்களின் மறம் அறத்தைக் காத்தது.
அது அறத்தையும் மறத்தையும் ஒருங்கே கொண்ட தவம்!
தமிழீழ விடுதலைப் போர் என்பது ஒரு தவம்!
விசுவாமித்திரனின் தவவேள்விக்கும் காவலிருக்க ஒரு
அரணம் தேவையிருந்தது. தவ வேள்வி செய்யும் போது
அவரைச் சுற்றி ஆயுதமேந்திய இராமனும் இலக்குவனும்
எதற்கிருந்தார்கள் என்று எண்ணிப் பார்க்கவேணும்!
வீடுபேறு வேண்டி நின்ற முனிவனின்
தவவேள்விக்கும் காவலாக மறம் தேவைப்பட்டது.
அப்படித்தான் தமிழ்மக்களின்
விடுதலை வேள்விக்குக் காவலாக
இருந்தது புலிகளின் அரணம்.
அதை ஆயுதமேந்திய தவறு
என்பது அறிந்தோ அறியாமலோ
கொச்சைப்படுத்தும் செயலன்றி
வேறில்லை. அதுவும் இன்று அவர்கள்
தளர்வுற்று இருக்கையில்
சொல்வது நாகரிகமற்றதாகவே கருதப்படும்.
அதனால் அறம் சரி மறம் தவறு
என்று இன்று பேசுவது மிகத்
தவறு. அறமும் மறமும் ஒன்றுக்கொன்று துணையானவை.
அது இயல்பாக ஈழத்தில் பரிணமித்தது.
தமிழருக்குச் சொந்த இனம் கூட துரோகம்
செய்ததால் அந்த அற்புதக் கோட்டை தகர்ந்து
போய் இருக்கிறது.
சொந்த நாடு என்ற பெயரில் சிங்களன்
தனது பெரும்பான்மை என்ற ஆணவத்தில் தமது
சொந்த நாட்டுச் சிறுபான்மை மக்களைத் திட்டமிட்டு
அழித்த வெங்கோலுக்கு எதிராக அறம் செய்துதான்
எதிர்ப்பேன் என்று ஈழமக்கள் முடிவாக இருந்திருந்தார்கள்
என்றால் அதிகபக்கம் கோயில்களில் அன்னதானம்
மட்டுமே செய்திருக்க முடியும். அதுவும் கொஞ்ச நாளைக்கு.
அன்புடன்
நாக.இளங்கோவன்
Labels:
அரசியல்,
குமுகம்,
தமிழகம்-ஈழம்,
தமிழ்
Saturday, May 16, 2009
தமிழினம் அறுந்து/தோற்றுப்போன தேர்தல் - 2009
"எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே" என்ற கண்ணதாசனின்
வரியோடு, "அவன் தறுதலையானது
கழகங்களின் ஆட்சியிலே" என்ற வரியை
சேர்த்துக் கொண்டு படித்தால் தேர்தல்-2009 பற்றி
தன்மானம் இன்னும் கொஞ்சம் உள்ள
தமிழ்நாட்டார்க்கு மனத்துயர் வாராது.
இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டில் மூன்று கட்சிகள்
வெற்றி பெற்றுள்ளன.
தமிழினத்தைப் படுகொலை செய்த காங்கிரசு வெற்றி
பெற்றுள்ளது. போனமுறை 10 இடங்கள். இந்த முறை 9 இடங்கள்.
ஆகவே அவர்கள் தோற்றார்கள், காங்கிரசுக்குத்
தமிழ்மக்கள் பாடம் புகட்டினார்கள் என்றெல்லாம்
யாராவது சொன்னால் நான் நகைப்பேன்.
தமிழினத்தை அழித்த காங்கிரசுக்குத் துணை போன
திமுக 18 இடங்களில் வென்றுள்ளது. போனமுறை
16 இடங்கள்.
"துரோகம் பழகு; நக்கிப் பிழை" என்றே இது தமிழ்நாட்டுக்
குமுகத்திற்குப் போதிக்கிறது.
தமிழ், தமிழினம் என்றாலே கேலியும் நக்கலுமாக
ஆக்கியதில் பெரிய பங்கு வகித்த இன்னொரு
திராவிடக் கட்சியான அ.தி.மு.கவிற்கு
9 இடங்கள் கிடைத்துள்ளன. போனமுறை
சுழித்துப் போன அ.தி.மு.கவிற்கு
இம்முறை 9 இடங்கள் கிடைத்திருக்கின்றன.
காங்கிரசையும் திமுகவையும் தண்டிக்க எண்ணி
வேறு எங்கே போய் போட்டுத் தொலைவது என்று
பரிதவித்து நின்றவர்களின் கருணை இந்தத்
திடீர்த் தமிழாம்பிகைக்குக் கிடைத்த வாக்குகளைச்
சற்றுக் கூட்டியிருக்க வாய்ப்பிருக்கிறது.
தமிழ் உணர்வாளர்கள் காங்கிரசை எதிர்த்து செய்த
பரப்புரைகள் வலுவானவை என்ற போதிலும்,
தமிழ்நாட்டின் போக்கை எண்ணும்போது,
அவர்களின் பரப்புரைகளால், இளங்கோவன்,
தங்கபாலு, மணிசங்கர ஐயர் ஆகியோர் தோற்றார்கள்
என்று யாராவது எண்ணிக் கொண்டு தமிழின உணர்வு
தமிழ்நாட்டில் இருக்கிறது என்று சொன்னால்
நம்புவதற்கு என்னால் முடியவில்லை.
ஈவிகேயெசு இளங்கோவனும், தங்கபாலுவும்
திமுக கூட்டணிக்கு இடர்கள். தங்கபாலு போயசு தோட்டச்
சேவகர். பெரியார் பேரன் இளங்கோவனுக்கு
தடித்த நாக்கு. ஆகவே அவர்களைத்
தி.மு.க திட்டமிட்டு தோற்கடித்திருக்கலாம்
என்று சொன்னால் நான் ஓரளவு நம்புவேன்.
இதற்காக மக்கள் முட்டாள்கள், அவர்களிடம் இனவுணர்வு
இல்லை என்று சொல்லும் பித்துக்குளி வகையில் நானில்லை.
மேற்சொன்ன மூன்று கட்சிகளும்
கடந்த 50 ஆண்டுகளாக தமிழ் மக்களை
மூன்றே மூன்று குடும்பங்களின் தன்னலத்துக்குள்
அடக்கி வைத்து விட்டன என்று சொன்னால் மிகையல்ல.
செயலலிதாவும், கருணாநிதியும் செய்த தன்னல
அரசியல் தமிழ்நாட்டாரின் அறியாமையை வளர்த்து
விட்டதையும், இன உணர்வு என்பதே அறவே
அழித்து விட்டதையும் எடுத்துச் சொல்வதாகத்தான்
இந்தத் தேர்தல் முடிவுகள் இருக்கின்றன.
இன்றைக்குப் பா.ம.க ஆக இருக்கட்டும்,
தே.மு.தி.க ஆக இருக்கட்டும், ஏன்
பா.ச.க, பொதுவுடைமைகள் என்று
எந்தக் கட்சியாக இருக்கட்டும், அவைகள்
எல்லாம் கருணாநிதியும் செயலலிதாவும்
செய்து வந்திருக்கின்ற அழுக்கு அரசியலையே
பின்பற்றுவதை எங்கனும் காண முடியும்.
இன்று பா.ம.க தோற்றுப் போனதற்கு தன்னல அரசியல்
என்று உறுதியாகச் சொல்லலாம். அதே நேரத்தில்
தி.மு.க, அ.தி.மு.க என்ற இரு கட்சிகளும்
காங்கிரசு, பா.ச.க, சனதா என்று மூன்று கட்சிகளோடு
மாறி மாறி கூட்டணி வைத்துக் கொண்டவர்கள்தான்.
தி.மு.கவும் அ.தி.மு.கவும் தில்லி மோகத்தில்
மாறி மாறித் தமிழர்களைக் காட்டிக் கொடுத்ததன்
விளைவுதான் நேற்று முளைத்த கார்த்திக், சரத்குமார்
கட்சிகள் முதல் பா.ம.க, தேமுதிக என்று அனைவரும்
"தேசியக் கட்சியோடுதான் கூட்டணி வைப்போம்" என்று
அறிக்கை விட்டுக் கொண்டிருந்தது.
"எப்படியாவது வடக்கை நக்கிப் பிழைக்கும்
பண்பாட்டை" வளர்த்த இரண்டு கழகங்களின்
அடியொற்றியே இன்றைக்கு
எல்லாக் கட்சிகளும் இருக்கின்றன.
ஆகவே பா.ம.கவின் தோல்வியை
நான் வரவேற்கும் அதே நேரத்தில்
தமிழ்நாட்டின் இரண்டு கழகங்களும்,
காங்கிரசும் எந்த வகையிலும்
உயர்ந்தவர்கள் அல்ல.
பா.ம.கவின் தன்னலத்தால் அது இன்று தோற்றது
என்றால், "இதே நிலை" பா.ம.கவை விட
பல மடங்கு தன்னல அரசியல் செய்யும்
கழகங்களுக்கும் வரும் என்றுதானே பொருள்?.
பா.ம.கவாவது சொல்லிக் கொள்ளுமாறு
தனது தொலைக்காட்சியில் தமிழை வைத்திருக்கிறது.
ஆனால், தி.மு.க, அதிமுக, காங்கிரசு கட்சிகளின்
தொலைக்காட்சியில் தமிழைத் தேடித் தேடிக்
களைத்துப் போனவர்கள்தான் தமிழ்நாட்டு மக்கள்.
ஆகவே தமிழ்நாட்டில் கிடைத்த தேர்தல்
முடிவுகளுக்கும் இனவுணர்வுக்கும் எவ்விதத்
தொடர்பும் இல்லை. ஏனென்றால் இங்கே
இனவுணர்வு ஏற்பட்டு விடாதபடி, தமிழுணர்வு
ஏற்பட்டு விடாதபடி காங்கிரசை நடுவமாக வைத்து
இரண்டு கழகங்களும் பிடாரிகளாகக் காவல்
இருக்கின்றன பல ஆண்டுகளாய்.
தமிழ் உணர்வு என்றால், ஏதோ ஒரு
கூட்டம் போட்டு சங்க இலக்கியத்தில்
ஓரிரு வரிகளையோ அல்லது
"அண்ணனும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்" என்ற ஒற்றை வரியையோ
காகம் போலக் கரைவதுதான் தமிழுணர்வு.
இன உணர்வு என்றால், கோயில் வாசலில்
இருக்கும் பிச்சைக்காரனுக்கு ஐந்து பைசா
பத்துப் பைசா பிச்சை போடும்
பெருவள்ளல் மனநிலையில்
"ஈழத்தமிழன்" பற்றி இரண்டு வார்த்தைகள்
பேசிவிடுவது மட்டுமே தமிழ்நாட்டில்
இன உணர்வு. இவை இரண்டுமே
பிழைப்பு அரசியல்.
இதைத் தவிர சீமான், பாரதிராசா, நெடுமாறன், மணி
போன்ற விரல் விட்டு எண்ணக் கூடிய சிலரிடம்
இருக்கும் தன்மான உணர்வும் தமிழன் என்ற
உணர்வும் இலம்பாடிக் கடலில் கரைத்த பெருங்காயம்தான்
என்று தெளிவு படுத்துவதே இந்தத் தேர்தல்.
இந்தத் தேர்தலின் குற்றவாளிகள் மக்களல்ல.
அவர்கள் அறியாமையில் மூழ்கடிக்கப்பட்டவர்கள்.
இவர்களால் இனி எழவே முடியாது
, வெந்ததைத் தின்று விதி வந்தால் சாகும்
இவர்களைக் காப்பாற்ற
இவர்களுக்குத் தன்மானமும் இன உணர்வும் வர
வாய்ப்பே கிடைக்காமல் செய்ய கழகங்களும்,
காங்கிரசும் அவர்களை அண்டியோர்களும்
ஆயிரமாயிரமாய் இருக்கிறார்கள்.
தமிழினம் என்ற தொன்மை தமிழ்நாட்டில்
2009 தேர்தலோடு அறுந்து போனது.
600, 700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழினம் என்ற
தொன்மை செத்து மலையாளம் ஆனதைப்
போல தமிழ்நாட்டைத் தமிழ் என்ற பெயரை வைத்தே
அழித்து நாசமாக்கி விட்ட கழகங்கள் ஒழியும் நாளே
தமிழ் நாட்டில் தமிழும் உணர்வும் மீளும் காலமாக இருக்கும்.
தமிழ்நாட்டுக் கூட்டணிக் கட்சியின் தேர்தல்
வெற்றியை ஒப்பிட வேண்டுமானால்
18 ஆம் நூற்றாண்டில் "வெள்ளைக்கார-எட்டப்பன் கூட்டணி"
பெற்ற வெற்றியைத்தான் ஒப்பிட வேண்டும்.
இந்த 2009 தேர்தலிலும் "வெள்ளைக்கார-எட்டப்பன்"
கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது.
1800களில் எட்டப்பன் கட்டபொம்மனைக்
காட்டிக் கொடுத்ததற்காக அவனுக்குக் கிடைத்தது
இரண்டு அதிகப் படியான ஊர்கள்.
இன்று திமுகவிற்குக் கிடைத்துள்ளதும்
இரண்டு அதிகப் படியான தொகுதிகளில் வெற்றி.
(போன தேர்தலில் 16, இம்முறை 18).
புராணத்தில் கூட துரோகிகளுக்குத்தான்
நாடும் அரசும் கிடைத்துள்ளன. வாலியைக் காட்டிக்
கொடுத்து சுக்ரீவன் அரசனானான்.
இராவணனைக் காட்டிக் கொடுத்து வீடணன் ஆட்சி செய்தான்.
"கட்டபொம்முவைக் காட்டிக் கொடுத்து எட்டப்பனும்
தொண்டமானும் தமது ஆட்சியை *நிலை நிறுத்திக்* கொண்டார்கள்."
சொல்லப்போனால், தொண்டமான் குடும்ப வாரிசான
சாருபாலா தொண்டமான் இன்றைக்கும் திருச்சி மாநகராட்சியின்
நாயகராகவே இருக்கிறார் என்பது அரசியலில் துரோகிகளுக்கும்
வெற்றிகள் கிடைக்கும்; அவர்களின் கொடி வழியும் இருக்கும்
என்பதற்குக் காட்டாகக் கொள்ளலாம்.
ஆகவே இந்தக் கால கட்டமும் ஒரு "வரலாற்றுக் கால கட்டம்".
தன்மானமும், இனவுணர்வும் அற்ற ஒரு கால கட்டம்.
தமிழ் மொழி வியாபாரப் பொருளாகவும் கேலிப் பொருளாகவும்
ஆகிப் போயிருக்கிற கால கட்டம்.
தமிழ்நாடும் மலைநாடு போல திரிந்து போயிருக்கிறதை
அறிவிக்கிற கால கட்டம்.
ஊனிலும் உயிரிலும் கலந்து கிடந்த தமிழ் தற்போது
தமிழன் ...மன்னிக்கவும், தமிழ்நாட்டார் நாவில் மட்டும்
வாழ்கின்ற கால கட்டம்.
தமிழ் தமிழ்நாட்டாரின் நாவை விட்டு நீங்கியும் நீங்காமலும்
இருக்கிற கால கட்டம்.
கூன்போட்டுக் கிடந்த தமிழ்க் கூட்டம் நிமிர்ந்து
நின்றும், நிமிர்ந்து நடந்தும், மீண்டும் வடக்கின்
வெள்ளைக் கால்களை வேண்டி ஓடும் கால கட்டம்.
அடிமையாய் வாழ்ந்த தமிழ்க் கூட்டம் இன்று
ஆண்டையாய் மாறிவிட்ட கால கட்டம். அதற்காக
அடிநத்தவும் ஆரம்பித்து விட்ட கால கட்டம்.
இதில் இருந்து தமிழ்நாடு சில தலைமுறைகளுக்கு
மீளவே மீளாது என்பது கசப்பான உண்மை.
இப்படியான உண்மைகள் தமிழ்நாட்டார்க்கும்
தி.க உள்ளிட்ட மூன்று கழகக் குஞ்சுகளுக்கும்
கசக்கும்.
ஓராண்டு முன்பு வரை கூட ஈழத்தமிழர்கள் என்ற
உணர்வும் பாசமும் தமிழ்நாட்டில் இருந்தது. ஆனால்
திமுகவின் பரப்புரைகளும், 'நீ செத்தாலும் பரவாயில்லை
என்னை ஆள விடு' என்ற நிலைப்பாடும் இன்றைக்கு
ஈழத்தமிழன், இந்தியத் தமிழன் என்ற பிரிவினையை
மனத்தளவில் தமிழ்நாட்டில் விதைத்து விட்டது.
சோவும் இராமும் பல காலம் செய்த வேலைகளை
திமுக சில மாதங்களிலே செய்து முடித்து விட்டது.
இதனை நம்ப மறுக்கிற தமிழ்நாட்டாரைப் பற்றி
எனக்குக் கவலை இல்லை. ஏனெனில் இவர்கள்
இதனை நம்பியும் ஒன்றும் ஆகப் போவதில்லை.
இதனை நம்ப மறுக்கும் ஈழத் தமிழர்கள்,
இந்தத் தமிழ்நாட்டையும், இந்த மண்ணில்
ஒரு காலத்தில் இருந்த தமிழ் உணர்வையும்
கருத்தில் கொண்டு, இன்னும் அதை நம்பிக் கொண்டு
இருப்பார்களேயானால், தமிழ்நாட்டின் இந்தியாவையும்
மதித்து "இன உறவு கொள்ள" எண்ணுவார்களேயானால்
அவர்களுக்கு அது தொடர் ஏமாற்றங்களையே
தரும் என்ற வேதனையான உண்மையை
வெளிப்படையாகச் சொன்ன தேர்தலே
இந்தப் பாராளுமன்றத் தேர்தல்.
ஆகவே எங்கோ ஓரிருவர் முழங்கும்
தமிழ் வசனங்களைக் கேட்டு தமிழ்நாட்டாரை
நம்பும் தவறை ஈழத்தமிழர்கள் இனிமேல்
செய்ய மாட்டார்கள் என்பதனை
அழுத்தந் திருத்தமாகச் சொல்லும் தேர்தலே
இந்தப் பாராளு மன்றத் தேர்தல் முடிவுகள்.
அன்புடன்
நாக.இளங்கோவன்
16/5/09
மண்ணில் பிறக்கையிலே" என்ற கண்ணதாசனின்
வரியோடு, "அவன் தறுதலையானது
கழகங்களின் ஆட்சியிலே" என்ற வரியை
சேர்த்துக் கொண்டு படித்தால் தேர்தல்-2009 பற்றி
தன்மானம் இன்னும் கொஞ்சம் உள்ள
தமிழ்நாட்டார்க்கு மனத்துயர் வாராது.
இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டில் மூன்று கட்சிகள்
வெற்றி பெற்றுள்ளன.
தமிழினத்தைப் படுகொலை செய்த காங்கிரசு வெற்றி
பெற்றுள்ளது. போனமுறை 10 இடங்கள். இந்த முறை 9 இடங்கள்.
ஆகவே அவர்கள் தோற்றார்கள், காங்கிரசுக்குத்
தமிழ்மக்கள் பாடம் புகட்டினார்கள் என்றெல்லாம்
யாராவது சொன்னால் நான் நகைப்பேன்.
தமிழினத்தை அழித்த காங்கிரசுக்குத் துணை போன
திமுக 18 இடங்களில் வென்றுள்ளது. போனமுறை
16 இடங்கள்.
"துரோகம் பழகு; நக்கிப் பிழை" என்றே இது தமிழ்நாட்டுக்
குமுகத்திற்குப் போதிக்கிறது.
தமிழ், தமிழினம் என்றாலே கேலியும் நக்கலுமாக
ஆக்கியதில் பெரிய பங்கு வகித்த இன்னொரு
திராவிடக் கட்சியான அ.தி.மு.கவிற்கு
9 இடங்கள் கிடைத்துள்ளன. போனமுறை
சுழித்துப் போன அ.தி.மு.கவிற்கு
இம்முறை 9 இடங்கள் கிடைத்திருக்கின்றன.
காங்கிரசையும் திமுகவையும் தண்டிக்க எண்ணி
வேறு எங்கே போய் போட்டுத் தொலைவது என்று
பரிதவித்து நின்றவர்களின் கருணை இந்தத்
திடீர்த் தமிழாம்பிகைக்குக் கிடைத்த வாக்குகளைச்
சற்றுக் கூட்டியிருக்க வாய்ப்பிருக்கிறது.
தமிழ் உணர்வாளர்கள் காங்கிரசை எதிர்த்து செய்த
பரப்புரைகள் வலுவானவை என்ற போதிலும்,
தமிழ்நாட்டின் போக்கை எண்ணும்போது,
அவர்களின் பரப்புரைகளால், இளங்கோவன்,
தங்கபாலு, மணிசங்கர ஐயர் ஆகியோர் தோற்றார்கள்
என்று யாராவது எண்ணிக் கொண்டு தமிழின உணர்வு
தமிழ்நாட்டில் இருக்கிறது என்று சொன்னால்
நம்புவதற்கு என்னால் முடியவில்லை.
ஈவிகேயெசு இளங்கோவனும், தங்கபாலுவும்
திமுக கூட்டணிக்கு இடர்கள். தங்கபாலு போயசு தோட்டச்
சேவகர். பெரியார் பேரன் இளங்கோவனுக்கு
தடித்த நாக்கு. ஆகவே அவர்களைத்
தி.மு.க திட்டமிட்டு தோற்கடித்திருக்கலாம்
என்று சொன்னால் நான் ஓரளவு நம்புவேன்.
இதற்காக மக்கள் முட்டாள்கள், அவர்களிடம் இனவுணர்வு
இல்லை என்று சொல்லும் பித்துக்குளி வகையில் நானில்லை.
மேற்சொன்ன மூன்று கட்சிகளும்
கடந்த 50 ஆண்டுகளாக தமிழ் மக்களை
மூன்றே மூன்று குடும்பங்களின் தன்னலத்துக்குள்
அடக்கி வைத்து விட்டன என்று சொன்னால் மிகையல்ல.
செயலலிதாவும், கருணாநிதியும் செய்த தன்னல
அரசியல் தமிழ்நாட்டாரின் அறியாமையை வளர்த்து
விட்டதையும், இன உணர்வு என்பதே அறவே
அழித்து விட்டதையும் எடுத்துச் சொல்வதாகத்தான்
இந்தத் தேர்தல் முடிவுகள் இருக்கின்றன.
இன்றைக்குப் பா.ம.க ஆக இருக்கட்டும்,
தே.மு.தி.க ஆக இருக்கட்டும், ஏன்
பா.ச.க, பொதுவுடைமைகள் என்று
எந்தக் கட்சியாக இருக்கட்டும், அவைகள்
எல்லாம் கருணாநிதியும் செயலலிதாவும்
செய்து வந்திருக்கின்ற அழுக்கு அரசியலையே
பின்பற்றுவதை எங்கனும் காண முடியும்.
இன்று பா.ம.க தோற்றுப் போனதற்கு தன்னல அரசியல்
என்று உறுதியாகச் சொல்லலாம். அதே நேரத்தில்
தி.மு.க, அ.தி.மு.க என்ற இரு கட்சிகளும்
காங்கிரசு, பா.ச.க, சனதா என்று மூன்று கட்சிகளோடு
மாறி மாறி கூட்டணி வைத்துக் கொண்டவர்கள்தான்.
தி.மு.கவும் அ.தி.மு.கவும் தில்லி மோகத்தில்
மாறி மாறித் தமிழர்களைக் காட்டிக் கொடுத்ததன்
விளைவுதான் நேற்று முளைத்த கார்த்திக், சரத்குமார்
கட்சிகள் முதல் பா.ம.க, தேமுதிக என்று அனைவரும்
"தேசியக் கட்சியோடுதான் கூட்டணி வைப்போம்" என்று
அறிக்கை விட்டுக் கொண்டிருந்தது.
"எப்படியாவது வடக்கை நக்கிப் பிழைக்கும்
பண்பாட்டை" வளர்த்த இரண்டு கழகங்களின்
அடியொற்றியே இன்றைக்கு
எல்லாக் கட்சிகளும் இருக்கின்றன.
ஆகவே பா.ம.கவின் தோல்வியை
நான் வரவேற்கும் அதே நேரத்தில்
தமிழ்நாட்டின் இரண்டு கழகங்களும்,
காங்கிரசும் எந்த வகையிலும்
உயர்ந்தவர்கள் அல்ல.
பா.ம.கவின் தன்னலத்தால் அது இன்று தோற்றது
என்றால், "இதே நிலை" பா.ம.கவை விட
பல மடங்கு தன்னல அரசியல் செய்யும்
கழகங்களுக்கும் வரும் என்றுதானே பொருள்?.
பா.ம.கவாவது சொல்லிக் கொள்ளுமாறு
தனது தொலைக்காட்சியில் தமிழை வைத்திருக்கிறது.
ஆனால், தி.மு.க, அதிமுக, காங்கிரசு கட்சிகளின்
தொலைக்காட்சியில் தமிழைத் தேடித் தேடிக்
களைத்துப் போனவர்கள்தான் தமிழ்நாட்டு மக்கள்.
ஆகவே தமிழ்நாட்டில் கிடைத்த தேர்தல்
முடிவுகளுக்கும் இனவுணர்வுக்கும் எவ்விதத்
தொடர்பும் இல்லை. ஏனென்றால் இங்கே
இனவுணர்வு ஏற்பட்டு விடாதபடி, தமிழுணர்வு
ஏற்பட்டு விடாதபடி காங்கிரசை நடுவமாக வைத்து
இரண்டு கழகங்களும் பிடாரிகளாகக் காவல்
இருக்கின்றன பல ஆண்டுகளாய்.
தமிழ் உணர்வு என்றால், ஏதோ ஒரு
கூட்டம் போட்டு சங்க இலக்கியத்தில்
ஓரிரு வரிகளையோ அல்லது
"அண்ணனும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்" என்ற ஒற்றை வரியையோ
காகம் போலக் கரைவதுதான் தமிழுணர்வு.
இன உணர்வு என்றால், கோயில் வாசலில்
இருக்கும் பிச்சைக்காரனுக்கு ஐந்து பைசா
பத்துப் பைசா பிச்சை போடும்
பெருவள்ளல் மனநிலையில்
"ஈழத்தமிழன்" பற்றி இரண்டு வார்த்தைகள்
பேசிவிடுவது மட்டுமே தமிழ்நாட்டில்
இன உணர்வு. இவை இரண்டுமே
பிழைப்பு அரசியல்.
இதைத் தவிர சீமான், பாரதிராசா, நெடுமாறன், மணி
போன்ற விரல் விட்டு எண்ணக் கூடிய சிலரிடம்
இருக்கும் தன்மான உணர்வும் தமிழன் என்ற
உணர்வும் இலம்பாடிக் கடலில் கரைத்த பெருங்காயம்தான்
என்று தெளிவு படுத்துவதே இந்தத் தேர்தல்.
இந்தத் தேர்தலின் குற்றவாளிகள் மக்களல்ல.
அவர்கள் அறியாமையில் மூழ்கடிக்கப்பட்டவர்கள்.
இவர்களால் இனி எழவே முடியாது
, வெந்ததைத் தின்று விதி வந்தால் சாகும்
இவர்களைக் காப்பாற்ற
இவர்களுக்குத் தன்மானமும் இன உணர்வும் வர
வாய்ப்பே கிடைக்காமல் செய்ய கழகங்களும்,
காங்கிரசும் அவர்களை அண்டியோர்களும்
ஆயிரமாயிரமாய் இருக்கிறார்கள்.
தமிழினம் என்ற தொன்மை தமிழ்நாட்டில்
2009 தேர்தலோடு அறுந்து போனது.
600, 700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழினம் என்ற
தொன்மை செத்து மலையாளம் ஆனதைப்
போல தமிழ்நாட்டைத் தமிழ் என்ற பெயரை வைத்தே
அழித்து நாசமாக்கி விட்ட கழகங்கள் ஒழியும் நாளே
தமிழ் நாட்டில் தமிழும் உணர்வும் மீளும் காலமாக இருக்கும்.
தமிழ்நாட்டுக் கூட்டணிக் கட்சியின் தேர்தல்
வெற்றியை ஒப்பிட வேண்டுமானால்
18 ஆம் நூற்றாண்டில் "வெள்ளைக்கார-எட்டப்பன் கூட்டணி"
பெற்ற வெற்றியைத்தான் ஒப்பிட வேண்டும்.
இந்த 2009 தேர்தலிலும் "வெள்ளைக்கார-எட்டப்பன்"
கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது.
1800களில் எட்டப்பன் கட்டபொம்மனைக்
காட்டிக் கொடுத்ததற்காக அவனுக்குக் கிடைத்தது
இரண்டு அதிகப் படியான ஊர்கள்.
இன்று திமுகவிற்குக் கிடைத்துள்ளதும்
இரண்டு அதிகப் படியான தொகுதிகளில் வெற்றி.
(போன தேர்தலில் 16, இம்முறை 18).
புராணத்தில் கூட துரோகிகளுக்குத்தான்
நாடும் அரசும் கிடைத்துள்ளன. வாலியைக் காட்டிக்
கொடுத்து சுக்ரீவன் அரசனானான்.
இராவணனைக் காட்டிக் கொடுத்து வீடணன் ஆட்சி செய்தான்.
"கட்டபொம்முவைக் காட்டிக் கொடுத்து எட்டப்பனும்
தொண்டமானும் தமது ஆட்சியை *நிலை நிறுத்திக்* கொண்டார்கள்."
சொல்லப்போனால், தொண்டமான் குடும்ப வாரிசான
சாருபாலா தொண்டமான் இன்றைக்கும் திருச்சி மாநகராட்சியின்
நாயகராகவே இருக்கிறார் என்பது அரசியலில் துரோகிகளுக்கும்
வெற்றிகள் கிடைக்கும்; அவர்களின் கொடி வழியும் இருக்கும்
என்பதற்குக் காட்டாகக் கொள்ளலாம்.
ஆகவே இந்தக் கால கட்டமும் ஒரு "வரலாற்றுக் கால கட்டம்".
தன்மானமும், இனவுணர்வும் அற்ற ஒரு கால கட்டம்.
தமிழ் மொழி வியாபாரப் பொருளாகவும் கேலிப் பொருளாகவும்
ஆகிப் போயிருக்கிற கால கட்டம்.
தமிழ்நாடும் மலைநாடு போல திரிந்து போயிருக்கிறதை
அறிவிக்கிற கால கட்டம்.
ஊனிலும் உயிரிலும் கலந்து கிடந்த தமிழ் தற்போது
தமிழன் ...மன்னிக்கவும், தமிழ்நாட்டார் நாவில் மட்டும்
வாழ்கின்ற கால கட்டம்.
தமிழ் தமிழ்நாட்டாரின் நாவை விட்டு நீங்கியும் நீங்காமலும்
இருக்கிற கால கட்டம்.
கூன்போட்டுக் கிடந்த தமிழ்க் கூட்டம் நிமிர்ந்து
நின்றும், நிமிர்ந்து நடந்தும், மீண்டும் வடக்கின்
வெள்ளைக் கால்களை வேண்டி ஓடும் கால கட்டம்.
அடிமையாய் வாழ்ந்த தமிழ்க் கூட்டம் இன்று
ஆண்டையாய் மாறிவிட்ட கால கட்டம். அதற்காக
அடிநத்தவும் ஆரம்பித்து விட்ட கால கட்டம்.
இதில் இருந்து தமிழ்நாடு சில தலைமுறைகளுக்கு
மீளவே மீளாது என்பது கசப்பான உண்மை.
இப்படியான உண்மைகள் தமிழ்நாட்டார்க்கும்
தி.க உள்ளிட்ட மூன்று கழகக் குஞ்சுகளுக்கும்
கசக்கும்.
ஓராண்டு முன்பு வரை கூட ஈழத்தமிழர்கள் என்ற
உணர்வும் பாசமும் தமிழ்நாட்டில் இருந்தது. ஆனால்
திமுகவின் பரப்புரைகளும், 'நீ செத்தாலும் பரவாயில்லை
என்னை ஆள விடு' என்ற நிலைப்பாடும் இன்றைக்கு
ஈழத்தமிழன், இந்தியத் தமிழன் என்ற பிரிவினையை
மனத்தளவில் தமிழ்நாட்டில் விதைத்து விட்டது.
சோவும் இராமும் பல காலம் செய்த வேலைகளை
திமுக சில மாதங்களிலே செய்து முடித்து விட்டது.
இதனை நம்ப மறுக்கிற தமிழ்நாட்டாரைப் பற்றி
எனக்குக் கவலை இல்லை. ஏனெனில் இவர்கள்
இதனை நம்பியும் ஒன்றும் ஆகப் போவதில்லை.
இதனை நம்ப மறுக்கும் ஈழத் தமிழர்கள்,
இந்தத் தமிழ்நாட்டையும், இந்த மண்ணில்
ஒரு காலத்தில் இருந்த தமிழ் உணர்வையும்
கருத்தில் கொண்டு, இன்னும் அதை நம்பிக் கொண்டு
இருப்பார்களேயானால், தமிழ்நாட்டின் இந்தியாவையும்
மதித்து "இன உறவு கொள்ள" எண்ணுவார்களேயானால்
அவர்களுக்கு அது தொடர் ஏமாற்றங்களையே
தரும் என்ற வேதனையான உண்மையை
வெளிப்படையாகச் சொன்ன தேர்தலே
இந்தப் பாராளுமன்றத் தேர்தல்.
ஆகவே எங்கோ ஓரிருவர் முழங்கும்
தமிழ் வசனங்களைக் கேட்டு தமிழ்நாட்டாரை
நம்பும் தவறை ஈழத்தமிழர்கள் இனிமேல்
செய்ய மாட்டார்கள் என்பதனை
அழுத்தந் திருத்தமாகச் சொல்லும் தேர்தலே
இந்தப் பாராளு மன்றத் தேர்தல் முடிவுகள்.
அன்புடன்
நாக.இளங்கோவன்
16/5/09
Labels:
அரசியல்,
இலம்பாடிகள்,
தமிழகம்-ஈழம்,
தேர்தல்
Monday, April 20, 2009
பாரதிதாசன் வாரம் - 2009
என்றும் இல்லா சோகம் எமை வாட்டுகின்ற இந்த காலத்தில்
மெளனமாய் பாரதிதாசனுக்கு அவரின் நினைவு நாளில்
எம் வீரவணக்கம்.
அன்று ஆரியம் நாவலந்தீவில் தமிழைச் சுருக்கியது;
தொடர்ச்சியாக இன்று அதோடு திராவிடமும்
கூட்டு வைத்து ஈழத்தில் ஆரியத் திருப்பணி
ஆற்றுகிறது.
கொத்துக் கொத்தாய் செத்தழிந்த
எம் தமிழர்க்கு மெளன அஞ்சலிகள்.
அவர்களைக் கொன்றழித்த
கொலைகாரக் கூட்டணிமேல்
மண்மாரி பொழியட்டும்!
கொலைகளை ஞாயப்படுத்துங் கூட்டமெலாம்
நாகெட்டு குலங்கெட்டு சீர்கெட்டுச் சிறிதாய்ப் போகட்டும்!
பேச்சற்று மொழியற்று குரலற்றுக் குறுகிப்
போனோம் இன்று!
...நாக.இளங்கோவன்
Labels:
தமிழகம்-ஈழம்,
தமிழ்,
பாரதிதாசன்
Friday, April 03, 2009
தி.மு.க, காங்கிரசின் இந்திய தேசிய துரோகம்!
தனித் தமிழ்நாடு கோரிக்கையை அறிஞர் அண்ணா
தலைமையில் இருந்த தி.மு.க கைவிட்ட போது,
அதன் கரணியாக அண்ணா சொன்னது: "சீனா காரன்
இந்துமாக்கடலில் தனது ஆதிக்கத்தை
நிலைநாட்ட வருகிறான். அதற்குத் தமிழ்நாட்டை
தளமாக்கப் பார்க்கிறான்.
அப்படி ஆகிவிட்டால் தமிழர்களின் கதி
அதோகதியாகிவிடும்; ஆகையால் அதற்கு
இடம் கொடுக்கக் கூடாது என்று தி.மு.க
தனித் தமிழ்நாட்டுக் கோரிக்கையை கைவிடுகிறது".
தனித்தமிழ் நாடாக்கினால் சீனா காரன்
தலைமையில் இருந்த தி.மு.க கைவிட்ட போது,
அதன் கரணியாக அண்ணா சொன்னது: "சீனா காரன்
இந்துமாக்கடலில் தனது ஆதிக்கத்தை
நிலைநாட்ட வருகிறான். அதற்குத் தமிழ்நாட்டை
தளமாக்கப் பார்க்கிறான்.
அப்படி ஆகிவிட்டால் தமிழர்களின் கதி
அதோகதியாகிவிடும்; ஆகையால் அதற்கு
இடம் கொடுக்கக் கூடாது என்று தி.மு.க
தனித் தமிழ்நாட்டுக் கோரிக்கையை கைவிடுகிறது".
தனித்தமிழ் நாடாக்கினால் சீனா காரன்
வந்துவிடுவானோ என்று பயந்து சீனாவினும்
இந்தியாவே பரவாயில்லை
என்று அந்த முடிவெடுத்ததாக நாம் கருதும்படியே
தி.மு.கவின் அந்த அறிக்கை இருக்கிறது.
அதேபோழ்து, வடக்கே சவகர்லால்
நேரு தலைமையிலான பேராய அரசு பிரிவினை
வாதம் நாட்டிற்குப் புறம்பு என்ற
சட்டம் இயற்றிக் கொண்டிருந்தது.
அதுமட்டுமல்ல, நேரு தலைமையில்
என்று அந்த முடிவெடுத்ததாக நாம் கருதும்படியே
தி.மு.கவின் அந்த அறிக்கை இருக்கிறது.
அதேபோழ்து, வடக்கே சவகர்லால்
நேரு தலைமையிலான பேராய அரசு பிரிவினை
வாதம் நாட்டிற்குப் புறம்பு என்ற
சட்டம் இயற்றிக் கொண்டிருந்தது.
அதுமட்டுமல்ல, நேரு தலைமையில்
1962ல் சீனப்போரில் இந்தியா தோல்வியடைந்து
நிலத்தினையும் இழந்திருந்தது.
(பேராய காலத்தில்தான் இந்திய நிலம் இந்தியாவை
விட்டுப் போனது)
வடக்கே, வடகிழக்கே இந்திய நிலத்தைப் பிடித்துத் தன்
ஆதிக்கத்தை நிலைநாட்டிய சீனாவுக்கு இந்தியா
பயந்து போரில் தோற்றுப் பின்வாங்கியது. இன்றும்
அருணாச்சலப் பிரதேசம் எங்களுடையது என்று
சீனா மருட்டிக் கொண்டே இருக்கிறது.
அதே நேரத்தில், வடக்கே நேருவும் பேராயக் கட்சியும்
சீனாகாரனுக்குப் பயந்தது போல, தெற்கே அண்ணாவும்
தி.மு.கவும் சீனாகாரனுக்குப் பயந்தனர். அண்ணாவின்
அறிக்கையும், கருணாநிதியின் நெஞ்சுக்கு நீதி நூலும்
நமக்குக் காட்டுவது இதுதான்.
இன்றைக்குச் சிங்களம், "தமிழர்களை அழிப்பதற்கு
இந்தியாவின் உறவு எமக்குத் தேவை; ஆனால் எமது
வாழ்நாள் உறவும் நட்பும் சீனாவோடுதான்" என்று
மிக வெளிப்படையாக சொல்லிக் கொண்டிருக்கிறது.
பெளத்த மதச் சார்பிலும் இந்திய எதிர்ப்பிலும் இரண்டும்
ஒன்றுக்கொன்று இணைந்திருக்கின்றன.
1962/3 களில் தி.மு.கவும் அண்ணாவும்,
பேராயமும் நேருவும் இந்துமாக்கடலில் சீனாவின்
ஆதிக்கம் வந்துவிடக் கூடாது என்று இந்திய தேச
நலனிற்காக செயல் பட்டனர்கள் என்று சொன்னால்,
இன்றைக்குச் சிங்களத்தைத் தளமாக வைத்து
இந்துமாக்கடலில் ஆதிக்கம் செய்ய
(பேராய காலத்தில்தான் இந்திய நிலம் இந்தியாவை
விட்டுப் போனது)
வடக்கே, வடகிழக்கே இந்திய நிலத்தைப் பிடித்துத் தன்
ஆதிக்கத்தை நிலைநாட்டிய சீனாவுக்கு இந்தியா
பயந்து போரில் தோற்றுப் பின்வாங்கியது. இன்றும்
அருணாச்சலப் பிரதேசம் எங்களுடையது என்று
சீனா மருட்டிக் கொண்டே இருக்கிறது.
அதே நேரத்தில், வடக்கே நேருவும் பேராயக் கட்சியும்
சீனாகாரனுக்குப் பயந்தது போல, தெற்கே அண்ணாவும்
தி.மு.கவும் சீனாகாரனுக்குப் பயந்தனர். அண்ணாவின்
அறிக்கையும், கருணாநிதியின் நெஞ்சுக்கு நீதி நூலும்
நமக்குக் காட்டுவது இதுதான்.
இன்றைக்குச் சிங்களம், "தமிழர்களை அழிப்பதற்கு
இந்தியாவின் உறவு எமக்குத் தேவை; ஆனால் எமது
வாழ்நாள் உறவும் நட்பும் சீனாவோடுதான்" என்று
மிக வெளிப்படையாக சொல்லிக் கொண்டிருக்கிறது.
பெளத்த மதச் சார்பிலும் இந்திய எதிர்ப்பிலும் இரண்டும்
ஒன்றுக்கொன்று இணைந்திருக்கின்றன.
1962/3 களில் தி.மு.கவும் அண்ணாவும்,
பேராயமும் நேருவும் இந்துமாக்கடலில் சீனாவின்
ஆதிக்கம் வந்துவிடக் கூடாது என்று இந்திய தேச
நலனிற்காக செயல் பட்டனர்கள் என்று சொன்னால்,
இன்றைக்குச் சிங்களத்தைத் தளமாக வைத்து
இந்துமாக்கடலில் ஆதிக்கம் செய்ய
சீனா வந்துவிட்ட போது ஏன் தி.மு.கவும்,
அ.தி.மு.கவும், பேராயமும் தமிழினத்தை
அழித்து சிங்களத்தைக் காக்க முனைகின்றனர்?
தமிழீழத்தில் இருக்கும் தமிழர் சிங்களத்தை
எதிர்க்கிறார்கள். அப்படியென்றால் சிங்களத்தை
ஆதரிக்கும் சீனமும் எதிர்க்கப் படுகிறது.
ஆனால், தமிழ்நாட்டின் தி.மு.க கருணாநிதியும்
அ.தி.மு.க செயலலிதாவும், பேராய சோனியாவும்
சிங்களைத்தையும் அதன் ஆதரவான சீனாவையும்
ஆதரிப்பது தேசக் கேடு அல்லவா?
இவர்களோடு அணிவகுத்து அ.தி.மு.கவின்
செயலலிதா சிங்கள இரத்தின இராம், சோ
போன்றவர்களும் சீனாவையும்
சிங்களத்தையும் ஆதரிப்பது ஏன்?
இந்துமாக்கடலில் சிங்கள-சீனா வல்லாண்மை செய்ய
நினைக்கையில்அதற்கு எதிர்ப்பான தமிழரை
அழிக்க நினைப்பது ஏன்?
நாளைக்குத் தமிழன் ஈழத்தில் அழிக்கப் பட்டுவிட்டால்,
சீனா பாக்கித்தான் ஆகியவற்றின் முழு ஆதரவில்
சிங்களம் செயற்படுவேன் என்கிறது.
மிக வெளிப்படையாகவே
சிங்களத் தலைவர்கள் சொல்கிறார்கள்.
அப்படி சீனா பாக்கித்தான்
கூடி இந்தியாவிற்கு இடர் செய்தால்
அதனால் பாதிக்கப் படப்
போவது உடனடியாக இலங்கைக்கு
அண்டை நிலமான தமிழ்நாடுதானே?
அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டை ஒரு காசுமீர்,
ஆப்கான் போன்ற வாதைகளுக்கு
உள்ளாக்குவதாகவே சோனியா,
கருணாநிதி, செயலலிதா, சீன-சிங்கள
இரத்தினங்களின் அரசியல் செயல்பாடுகள்
அமைந்திருக்கின்றன.
எந்த வெளிநாட்டுச் சக்திகளுக்கும்
அடி பணியாமல் போராடும் தமிழர்களால்
இந்தியாவுக்கு ஆபத்து வருமா...?
அல்லது சிங்களம்-சீனம்-பாக் என்ற
பல பகை நாடுகளின் தளமாகிய
இலங்கையால் இந்தியாவுக்கு
ஆபத்து வருமா...?
இந்தக் கூட்டணியில் உள்ள சீனத்தாலும்,
பாக்கித்தானாலும் ஏற்கனவே பல இடர்கள்
இந்திய நாட்டிற்கு இருக்கின்றன.
இது போதாதென்று சிங்களத்தாலும்
இந்தியாவிற்குத் தீங்கை வாங்கிக் கொடுத்து
அதனால் தமிழ்நாட்டிற்கு
பேராபத்துகளை உருவாக்குதல்
தேசக்கேடல்லவா?
1962ல் சீனனைக் கண்டு அஞ்சிய தி.மு.க
16 கல் தொலைவில் உள்ள இலங்கையில்
சீனனைக் கால் ஊன்றுவது பற்றிக் கவலை
கொள்ளாதது ஏன்?
1962ல் சீனனிடம் தோற்ற பேராயம்
இன்று சீன ஆதரவு சிங்களத்தை
வளர்ப்பது ஏன்?
தமிழ்நாட்டு மக்கள் தமிழீழத்தைப் பற்றி
சிந்திப்பதினும் தம்மைப் பற்றி சிந்தித்து
பேராயம், தி.மு.க, அ.தி.மு.க
ஆகியோரின் இந்திய தேசத்துரோக
அரசியலைக் கண்டு அவர்களை தமிழக
அரசியல் களத்தில் இருந்து
முற்று முழுதாக அகற்ற வேண்டும்.
சோனியாவின் இரத்த வெறிக்கும்
செயலலிதாவின் இனவெறிக்கும்
கருணாநிதியின் தன்னல வெறிக்கும்
இந்தியாவும் தமிழ்நாடும் பாதிக்கப்
பட்டுவிடக்கூடாது.
அன்புடன்
நாக.இளங்கோவன்
அழித்து சிங்களத்தைக் காக்க முனைகின்றனர்?
தமிழீழத்தில் இருக்கும் தமிழர் சிங்களத்தை
எதிர்க்கிறார்கள். அப்படியென்றால் சிங்களத்தை
ஆதரிக்கும் சீனமும் எதிர்க்கப் படுகிறது.
ஆனால், தமிழ்நாட்டின் தி.மு.க கருணாநிதியும்
அ.தி.மு.க செயலலிதாவும், பேராய சோனியாவும்
சிங்களைத்தையும் அதன் ஆதரவான சீனாவையும்
ஆதரிப்பது தேசக் கேடு அல்லவா?
இவர்களோடு அணிவகுத்து அ.தி.மு.கவின்
செயலலிதா சிங்கள இரத்தின இராம், சோ
போன்றவர்களும் சீனாவையும்
சிங்களத்தையும் ஆதரிப்பது ஏன்?
இந்துமாக்கடலில் சிங்கள-சீனா வல்லாண்மை செய்ய
நினைக்கையில்அதற்கு எதிர்ப்பான தமிழரை
அழிக்க நினைப்பது ஏன்?
நாளைக்குத் தமிழன் ஈழத்தில் அழிக்கப் பட்டுவிட்டால்,
சீனா பாக்கித்தான் ஆகியவற்றின் முழு ஆதரவில்
சிங்களம் செயற்படுவேன் என்கிறது.
மிக வெளிப்படையாகவே
சிங்களத் தலைவர்கள் சொல்கிறார்கள்.
அப்படி சீனா பாக்கித்தான்
கூடி இந்தியாவிற்கு இடர் செய்தால்
அதனால் பாதிக்கப் படப்
போவது உடனடியாக இலங்கைக்கு
அண்டை நிலமான தமிழ்நாடுதானே?
அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டை ஒரு காசுமீர்,
ஆப்கான் போன்ற வாதைகளுக்கு
உள்ளாக்குவதாகவே சோனியா,
கருணாநிதி, செயலலிதா, சீன-சிங்கள
இரத்தினங்களின் அரசியல் செயல்பாடுகள்
அமைந்திருக்கின்றன.
எந்த வெளிநாட்டுச் சக்திகளுக்கும்
அடி பணியாமல் போராடும் தமிழர்களால்
இந்தியாவுக்கு ஆபத்து வருமா...?
அல்லது சிங்களம்-சீனம்-பாக் என்ற
பல பகை நாடுகளின் தளமாகிய
இலங்கையால் இந்தியாவுக்கு
ஆபத்து வருமா...?
இந்தக் கூட்டணியில் உள்ள சீனத்தாலும்,
பாக்கித்தானாலும் ஏற்கனவே பல இடர்கள்
இந்திய நாட்டிற்கு இருக்கின்றன.
இது போதாதென்று சிங்களத்தாலும்
இந்தியாவிற்குத் தீங்கை வாங்கிக் கொடுத்து
அதனால் தமிழ்நாட்டிற்கு
பேராபத்துகளை உருவாக்குதல்
தேசக்கேடல்லவா?
1962ல் சீனனைக் கண்டு அஞ்சிய தி.மு.க
16 கல் தொலைவில் உள்ள இலங்கையில்
சீனனைக் கால் ஊன்றுவது பற்றிக் கவலை
கொள்ளாதது ஏன்?
1962ல் சீனனிடம் தோற்ற பேராயம்
இன்று சீன ஆதரவு சிங்களத்தை
வளர்ப்பது ஏன்?
தமிழ்நாட்டு மக்கள் தமிழீழத்தைப் பற்றி
சிந்திப்பதினும் தம்மைப் பற்றி சிந்தித்து
பேராயம், தி.மு.க, அ.தி.மு.க
ஆகியோரின் இந்திய தேசத்துரோக
அரசியலைக் கண்டு அவர்களை தமிழக
அரசியல் களத்தில் இருந்து
முற்று முழுதாக அகற்ற வேண்டும்.
சோனியாவின் இரத்த வெறிக்கும்
செயலலிதாவின் இனவெறிக்கும்
கருணாநிதியின் தன்னல வெறிக்கும்
இந்தியாவும் தமிழ்நாடும் பாதிக்கப்
பட்டுவிடக்கூடாது.
அன்புடன்
நாக.இளங்கோவன்
Labels:
அரசியல்,
காங்கிரசு,
தமிழகம்-ஈழம்,
தி.மு.க
Friday, March 27, 2009
தமிழ் இலம்பாடிகள்!
ஈழத்தமிழர்கள் இன்றைக்கு உலகிலே
படுகின்ற துயர் ஒட்டு மொத்த தமிழினத்தை
அதிர்வுக்கு உள்ளாக்கியிருக்கிறது. குறிப்பாக
இந்தியாவில் வாழ்கின்ற தமிழர்களை பெரும்
சிந்தனைக்கு உள்ளாக்கியிருக்கிறது. தமிழீழம்
என்ற நிலையைத் தாண்டி இந்திய வாழ்
தமிழர்களின் எதிர்காலத்தைக் கவலைக்குள்ளாக்கி
இருக்கிறது.
தமிழ் மொழி, இனம், வாழ்வியல், உரிமை
என்ற எல்லாமே இன்று கேலிக்கும்
தாழ்வுக்கும் உள்ளாகியிருக்கின்றன.
திட்டமிட்ட தன்னல அரசியல் சதிகளும்,
கூடவே இருந்து குழிபறிக்கும் கூட்டமும்
தமிழ் மக்களை அப்படியே மாயைக்குள்
மூடியிருக்கின்றன. தமிழ்நாட்டு மக்களின்
மானமும் உணர்வும் மயிரினும் சிறிதென
மதிக்கப் படுகின்றன.
தமிழர்களின் மானத்தையும் உணர்வையும்
தமிழர்களே முன்னின்று களையும் ஒரு
அவல நிலை தமிழகத்தைப் பற்றியிருக்கின்றது.
தமிழீழத்தில் கொட்டுகின்ற ஒவ்வொரு
துளிக் குருதியும் தமிழ் நாட்டுத் தமிழனுக்கு
ஒவ்வொரு பாடத்தைச் சொல்லித் தருகிறது.
இழந்து போன மதியைக் கூர்ப்பாக்குகிறது.
தமிழ்நாட்டில் விளைந்திருக்கிற கேடுகளைக் களைய
நீண்டகாலச் சிந்தனைகளையும் சித்தாந்தங்களையும்
விதைத்து "தமிழை" மீள உருவாக்குவதே இன்றைக்கு
நாம் முன்னெடுக்க வேண்டிய தேவையாகும்.
அவசர கோலத்தில் உடனடியாகச் செய்ய நினைக்கும்
எதுவும் பயன் தராது.
தமிழ் இனத்தின் உயிர் வாதை என்கின்ற
உச்ச கட்ட வாதையின் போது தமிழ் என்ற
சொல்லைச் சுற்றி நிற்கின்ற மொழி, அரசியல்,
சாதி, மதம், கல்வி, பொருளியல் என்ற
எந்தக் கூறுகளும் உதவிக் கரங்களை
நீட்டவில்லை. தமிழ்நாட்டில் தீயாடிச்
செத்து விழுந்த 12 பேர்களின் கையறு
தனி மனித நிலையைக் கடந்து
நிறுவனப் படுத்தப்பட்ட யாரின்
பங்களிப்பும் மனசாட்சியோடும் நேர்மையாகவும்
இருக்கவில்லை.
அதேபோல இவர்களெல்லாம் தமிழர்களா? என்றால் -
ஆம் என்ற விடையைத் தவிர வேறெதுவும் இல்லை.
எந்தச் சாதியையும் குறிப்பிட்டுச் சொல்லி
இவர்கள் ஆதரவாக இருந்தார்கள் என்று
எப்படிச் சொல்ல முடியவில்லையோ
அப்படியே இன்னார் எதிர்த்தார்கள்
என்றும் சொல்ல முடியவில்லை.
எந்த மதத்தையும் குறிப்பிட்டு ஆதரவாக
இருந்தார்கள் அல்லது எதிர்த்தார்கள்
என்று சொல்ல முடியவில்லை.
ஒரு சாதாரண இல்லறச் சண்டையையும்
பெரிது படுத்தி எழுதியோ, நீள்தொடர்களாகப்
படமெடுத்தும் காசு சம்பாதிக்கும்
எழுத்தாளர்களும் மிடையகாரரும்
நாணமின்றி ஒரு இனப்படுகொலைக்கு
மெளன சாட்சியாக மட்டுமே இருந்திருக்கிறார்கள்.
ஆகவே தமிழ்நாட்டுக் குமுகத்தின்
பல கோணங்களும் பரிமாணங்களும்
ஆய்வுக்கு உட்படுத்தப் பட வேண்டியிருக்கிறது.
அதிலே துவக்கமாக ஒரு அடிப்படையான
விதயத்தில் தமிழ் மக்களுக்குச் சரியான தெளிவு வரவேண்டும்.
அணிமைய ஈழத்துயர் நமக்குக் காட்டிய செய்தி என்ன?
"தமிழர்களில் ஒரு பகுதியினர் சொந்த இனம்
அழிவதன்பால் வேதனைப்பட்டார்கள்;
பிறிதொரு பகுதியினர் கவலை கொள்ளாமலும்
மகிழ்ச்சியாகவும் இருந்தார்கள்".
இந்தச் செய்தி உண்மைதானே!
சாட்சிகளை அரசியல் கட்சிகளின்
அறிக்கைகளில் காணலாம். வலைப்பதிவுகளில்
காணலாம். தமிழினம் செத்து விழுவதை
கூட்டமாக மகிழ்ந்து கொண்டாடிய
ஒரு மடற்குழுவில் காணலாம்.
கவலை கொள்ளாமலும் மகிழ்ச்சியாகவும்
இருந்தவர்கள் தமிழ்நாட்டு மக்கள்தானே!
அவர்கள் என்ன ஒரே சாதியைச்
சேர்ந்தவர்களா? அல்லது எல்லாமே ஆரியர்களா?
அல்லது வேறெப்படி என்று யோசித்தால்
நமக்குக் கிடைக்கும் விடை என்ன?
ஈழத்துயரைக் கைகொட்டிச் சிரித்து
மகிழ்ந்தவர்களை மட்டும்தானா
நாம் கண்டு வருந்துகிறோம்?
இல்லை - உண்ணிப்பாகப் பார்த்தால்
ஈழத்துயரை சுவைத்தவர்களிடம்
ஒரு ஒற்றுமை இருக்கும். அவர்கள்
அடாது தொடர்ந்து தமிழ் மொழியைத்
தாழ்த்தி வருவார்கள். கோயிலில் தமிழ்
நுழைவதைத் தடுப்பவர்களாக இருப்பார்கள்.
இழந்து போன தமிழ்ச் சொற்களை
மீட்பவர்களைக் கூட எள்ளி நகையாடுவார்கள்.
தமிழ் முன்னோர்களை இழிவாகப் பேசுவார்கள்.
தமிழ், தமிழ் மக்கள் என்று எந்தக் கூறை
எடுத்துக் கொண்டாலும் அதற்கு இடராகப் படர்வார்கள்.
இவர்கள் யார்?
தமிழினத்தையும் முகவரியையும்
அழிக்கத் துடிக்கும் இவர்கள் யார்?
தமிழ் மொழி, பண்பாடு என்று
பேச முனையும் அப்பாவித் தமிழ் மக்களையும்
மூளைச்சலவை செய்து விடும் இவர்கள் யார்?
தமிழ் மக்களைப் பொய்யான பாதைக்குத்
திசை திருப்பி விடும் இவர்கள் யார்?
தமிழ்நாட்டைத் தவிர, தமிழீழத்தைத் தவிர,
தமிழ் மொழியைத் தவிர தமிழ் இனத்தைத்
தவிர உலகில் உள்ள எல்லாமே உயர்வாகக்
கொள்ளும் இவர்கள் யார்?
தமிழ்நாட்டின் தெருக்களில், நீர்க்குழாயடிகளில்
இன்ன பிற இடங்களில் பெண்கள் போடுகின்ற
சண்டைகளில் பயன்படுத்துகின்ற சொல்லாயுதங்களில்
முக்கியமும் தொன்மையும் ஆனவை மூன்று.
தேவடியாள், தட்டுவாணி, இலம்பாடி என்பன அவை.
இவற்றிற்கு முன்னொட்டு, பின்னொட்டு, ஓசை,
வழக்கு மாற்றங்கள் இடத்திற்கு இடம்
வேறுபடும். தேவடியாள் என்ற சொல்லும்
தட்டுவாணி என்ற சொல்லும் ஒற்றுமையும்
வேற்றுமையும் கொண்டவை.
அதனைப் பற்றித் தனியே பார்ப்போம்.
இந்த இலம்பாடி என்ற சொல் மற்ற
இரண்டு சொற்களைப் போல
ஒரு கொடுஞ்சொல் என்று மட்டுமே நான்
பலநாளும் எண்ணியதுண்டு.
பல காலம் கழித்துதான் அது என்ன
என்ற விடை கிடைத்தது.
இலம்பாடு என்ற சொல் வினையைக் குறித்தது.
இலம்பாடி என்பது ஆளைக் குறித்தது.
இலம் + பாடி = இலம்பாடி. இலம் என்றால்
இல்லை, இல்லாமை, சிறுமை என்ற
பொருள்களைக் கொண்டது.
எதுவுமே இல்லை, எதுவுமே எமதில்லை
என்று பாடிப் பிழைப்பதே இலம்பாடித் தொழில்.
இலம்பாடுதல் என்பது இழிவாகக் கருதப்பட்டது
தமிழ்க் குமுகத்தில். சிலப்பதிகாரத்தில் கோவலன்
கண்ணகியிடம், "வேறு யாரிடமும்
போய் பொருள் இலம் பாடினால்
அது இழிவுடையுது; எனக்கு
அது நாணத்தைத் தரும்" என்று
சொல்லவேதான் கண்ணகி
தனது சிலம்பொன்றைக் கழட்டித் தருகிறாள்.
கோவலனின் பல சிறப்புகளில் அவன்
தன்மானமும் ஒன்று.
"இலம்பாடு நாணுத் தரும் எனக்கு" என்ன-
நலம் கேழ் முறுவல் நகை முகம் காட்டி,
'சிலம்பு உள; கொண்ம்' என-'சேயிழை! கேள்; இச்
சிலம்பு முதல் ஆக, சென்ற கலனோடு
உலந்த பொருள் ஈட்டுதல் உற்றேன்,
- சிலப்பதிகாரம் - கனாத்திறம் உரைத்த காதை
மேலோட்டமாகப் பார்த்தால் இஃது இல்லாத
நிலையில் பொருள் தேடும் செயலாகத்
தோன்றி - இலம்பாடினால் என்ன என்று
தோன்றும். இரப்பதுதானே என்று தோன்றும்.
ஆனால் இரத்தல் வேறு. இலம்பாடுதல் வேறு.
இரத்தல் என்பது ஒன்றும் இல்லாத நிலையில்
ஒரு வேளை சோற்றுக்குப் பிச்சை எடுப்பது.
இலம்பாடுதல் என்பது எந்த உழைப்பும்
செய்யாமல், இலம்பாடுதலையே
தொழிலாகக் கொள்வது.
"இல்லை எம்மிடம்,
உம்மதே உயர்ந்தது" (- இலம்பாடிகானம்-1)
என்று பிறரை நயந்து, பல்லைக் காண்பித்து
நத்தி வாழ்வது. தமது பிழைப்பிற்காக
தேவடியாள்த்தனம் என்றல்ல தட்டுவாணித்தனம்
என்றல்ல; எதை வேண்டுமானாலும் செய்து
பிழைப்பதுதான் இலம்பாடித்தனம்.
பொருள் இருந்தாலும் பொருள் இல்லையாயாயினும்
"இல்லோம் இல்லோம்
உம்போல் இல்லோம்
எம்மோடு நில்லோம்" (- இலம்பாடிகானம்-2)
என்று சொல்லி எல்லாருக்கும் நல்லவர்
போல் நடித்து யாருடனும் எதற்கும் கூட்டு
வைத்து எல்லாரையும் ஏமாற்றிப் பிழைக்கும்
பிழைப்பே இலம்பாடிப் பிழைப்பு. தமிழைப் பழித்துப்
பிறவற்றை உயர்த்தி வாழ்வது போல.
தேவடியாள் என்பவள் இறைவன் பெயரால்
ஏமாற்றிய ஆதிக்க சக்திகளுக்கு மட்டும் உடல்
தந்து பிழைப்பு நடத்துபவள். தட்டுவாணி (விலைமகள்)
என்பவள் யார் காசு கொடுத்தாலும் அவருக்கு உடல் தருபவள்.
தேவடியாளுக்கு நிறுவனப் படுத்தப் பட்ட
உறுதியான சந்தை உண்டு. தட்டுவாணிக்குத்
தன் தொழிலைச் சந்தைப் படுத்த வேண்டிய
அவசியமும் உண்டு. இருவருமே பெண்கள்தான்.
ஆனால் இலம்பாடிக்குப் பால் இல்லை.
ஆணாக, பெண்ணாக, குழுவாகப் பரந்து
கிடப்பார்கள். இவர்களின் புழுங்கிய பிழைப்புக்கு
எல்லா மொழியும் எல்லா இனமும் சந்தையாகும்.
எங்கெல்லாம் எப்படியெல்லாம் "இலம்"
பாடிப் பிழைக்க முடியுமோ அப்படிப்
பிழைப்பார்கள். கூடவே எதாவது
ஒரு சாமியைக் கும்பிட்டுக் கொள்வார்கள்.
தேவைப்படும்போது எல்லாச் சாமியையும்
கும்பிட்டுக் கொள்வார்கள். தன்மானத்துடன்
வாழ்பவர்கள் இவர்களுக்குப் பகைவர்கள்.
பண்பாடும் தொன்மையும் இவர்களுக்கு நஞ்சு.
தளராதவரைத் தளரவைப்பதும்,
தளர்ந்தவுடன் தள்ளிப் போவதும்,
தாழ்ந்தாரைத் தாழ்த்தாலும்,
உயர்பவர்களையும் உயர்ந்தவைகளையும்
ஒட்டிக் கொள்வதும் இவர்களது வாழ்க்கை முறை.
தமிழர்கள் என்று சொல்வார்கள் - ஆனால்
"இல்லோம் இல்லோம்
இந்தி மொழி இல்லோம்
தள்ளோம் தள்ளோம்
இந்தி மொழி தள்ளோம்" (-இலம்பாடி கானம்-3)
என்பது இவர்களின் புகழ் பெற்ற பாட்டு.
தமிழ் எங்கள் தாய்மொழி என்பார்கள் - ஆனால்
"இல்லோம் இல்லோம்
தமிழில் இறைவன் இல்லோம் -
கல்லோம் கல்லோம்
பள்ளியில் தமிழ் கல்லோம்" (-இலம்பாடி கானம்-4)
என்பது இவர்களின் தொன்மையான பாட்டு.
தமிழ் எங்கள் உயிர் மூச்சு என்பார்கள் - ஆனால்
முடை நாறும் மொழிக் கலப்பே
உயர்வு என்று பேசுவார்கள்.
தமிழ் எமக்கு அமுது என்பார்கள் - ஆனால்
ஆங்கிலம் உள்ளிட்ட வேற்று மொழிகளோடு
முதிர்ச்சியற்ற ஒப்பீடு செய்து
தமிழை எவ்வளவு கேவலமாகவும்
இழிவாகவும் பேச முடியுமோ
அவ்வளவையும் செய்வார்கள்.
தமிழர்கள் உலகம் முழுதும் இருப்பது
பெருமை என்பார்கள்; போகின்ற இடத்திலே
பிறநாட்டுத் தாய்மொழி
உணர்வைப் பாராட்டுவார்கள் - ஆனால்
தமிழரின் தாய்மொழி உணர்வைக்
கேலி செய்வார்கள்.
செருமனி போனேன் கொரியா போனேன்
என்பார்கள்; செருமனியரும் கொரியரும்
தாய்மொழி பேசினால் கண்ணை
விரித்து வியந்து மகிழ்வார்கள்.
ஆனால் தமிழர்கள் தாய்மொழியில் பேசினால்
மொழிவெறி என்பார்கள். தமிழ்த் தூய்மை
என்று பேசிவிட்டாலோ காதைப்
பொத்திக் கொள்வார்கள்.
ஈழத்தமிழர் கண்டு வியந்து நிற்கிறேன்;
எனக்கு எத்தனையோ ஈழத்தமிழர் நண்பர்கள் உண்டு.
அவர்கள் வெல்ல வேண்டும் என்பார்கள்;
ஆனால் அதே ஆள் இந்தப் பக்கம் திரும்பி...
"தூ.. இவர்கள் எவ்வளவு முட்டாள்கள்,
இப்படிக் காசு செலவு பண்ணி போராடுகிறார்களே;
அதற்குப் பதில் கடலைத் தூர்த்துத்
தமக்கென்று ஒரு நாடு கட்டிக் கொண்டால் என்ன?
தமிழன் எப்பொழுதுமே முட்டாள்கள்"
என்று தனது அடிநத்திகளோடு பிரச்சாரம்
செய்வார்கள். ஈழத்தமிழர்களுக்கு
இதெல்லாம் புரியவும் புரியாது;
அவர்களையே நல்லவர்களாக எண்ணிப்
பட்டமும் கொடுப்பார்கள்.
ஒரு பக்கம் ஈழத்தமிழர் வாழ்க என்பார்கள்!
இன்னொரு பக்கம் "கலிங்கத்துப் பரணியிலே
எவ்வளவு பிணங்களைப் பார்த்தீர்கள்?
இப்பொழுது தமிழ்ப் பிணங்களைப் பாருங்கள்!"
என்று நையாண்டி செய்த சூழல் இணையத்தில்
பலருக்கும் மனதை விட்டு மாறவில்லை.
(அரசியல் வரலாறு இலக்கியம் அறிந்தோர் இதனை ஓர்ந்து
பார்த்துக் கொண்டு மேலும் புரிந்து கொள்ளுங்கள். இது எவ்வளவு
நாசகார மனம் என்பது உங்களுக்குப் புரியும்.
தமிழினத்தைச் சுற்றி இருக்கிற சதியின் வலியும் புரியும்).
தனி இலம்பாடிகள் இப்படியென்றால்,
இலம்பாடிக் கூட்டம்
எப்படி உருவாகிறது என்றும்
அறிய வேண்டும். ஒரு
எடுத்துக்காட்டைக் கூறுவேன்:
ஒரு பாடிப் பிழைக்கும் இலம்பாடி
ஒரு நாட்டுக்குப் போகிறது.
அதற்கு அங்கே ஞானம் பொத்துக் கொள்ள,
"தமிழ் மொழியை சனநாயகப் படுத்த வேண்டும்"
என்று சொல்கிறது. அதே நாட்டில்
பிழைத்துக் கொழுத்த இலம்பாடி ஒன்று
அந்தச் சொற்களைக் குதியாட்டம் போட்டு
இழுத்து வந்து இன்னொரு இலம்பாடியிடம்
கொட்டுகிறது இணையத்தில். இந்த
இலம்பாடிகளோடு மேலும் சில
இலம்பாடிகள் சேர்ந்து கொண்டு
"தாய்மொழி தமிழை
சனநாயகப் படுத்துவோம் - முதலில்
கிரந்தப் படுத்துவோம்; அப்படியே
ஆங்கிலப் படுத்துவோம் - மொத்தத்தில்
தமிழை நாசப் படுத்துவோம்!" (-இலம்பாடி கானம்-5)
என்று போட்ட ஆட்டம் காணக்
கண் கொள்ளாத ஒன்று. ஆக, இலம்பாடிக் கூட்டம்,
எங்கெல்லாம் எதெற்கெல்லாம் தமிழ்
பழிக்கப் படுகிறதோ அங்கெல்லாம் கூடி விடும்.
அவர்களுக்கு ஆன போது கூடிக் கொள்வதும்
ஆகாத போது கழட்டிக் கொள்வதும்
இலம்பாடிக் கூட்டத்தின் தனித்தன்மை
என்று அறிவதோடு தமிழுக்கும்
தமிழினத்திற்கும் இழுக்கு சேர்க்கும்
எல்லா இடத்திலும் இந்த இலம்பாடிகள்
நீக்கமற நிறைந்திருப்பார்கள்
என்று அறிய வேண்டும்.
இலம்பாடிகளுக்குச் சாதி, மத,
பொருளாதார, கல்வி, வேறுபாடு என்றெல்லாம்
கிடையாது என்பதனை ஏற்கனவே
சொல்லப் பட்டிருக்கிறது
என்பதை நினைவு படுத்திக் கொள்தல்
அவசியம்.
சனநாயகம் என்றால் என்ன?
தாய்மொழியை எப்படி சனநாயகப் படுத்துவது?
என்பதெல்லாம் படுவாய்க் கேள்விகள்;
(படுவாய் > படவா ~ அதிகப்பிரசங்கி)
அவற்றை அவர்களிடம் கேட்க முடியாது.
கேட்டால் உடனே எல்லா இலம்பாடிகளும்
பிறாண்டி விடும். கேட்க வேண்டும் என்று
எண்ணியவர்களும் இலம்பாடிகளுக்குப்
பயந்து போய்
"தங்கள் தாய்மொழியை சனநாயகப்
படுத்த முனையும் இவர்கள் தங்கள்
தாயையும் சனநாயகப் படுத்துவோம்"
என்றளவிற்குப் போய் விட்டால் என்ன செய்வது?
என்று வாயை மூடிக் கொண்டு விட்டார்கள்.
தமிழருக்குள் ஊடறுத்து நிற்கும்
இத்தன்மையரை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ் இலம் என்று பாடும் தமிழ் இலம்பாடிகளைச்
சரியாக அறிந்து கொள்வதொடு, பாடிகள்
ஒரே தன்மையர் என்றும் தமிழினத்தில்
அவர்களுக்கு நாடு, மொழி, சாதி, மதம்,
பொருளாதாரம், கல்வி என்ற எந்த
வேறுபாடுகளும் இல்லை என்றும்
தெளிவாக அறிதல் வேண்டும்.
தொகுப்பாக தமிழ் இலம்பாடிகள் என்பர்:
- தமிழை எப்பொழுதும் தாழ்த்திப் பேசுவர்.
- தமிழைத் தவிர உலகில் உள்ள எல்லா
மொழிகளையும் உயர்த்திப் பேசுவர்
- தமிழில் எத்தனை எழுத்துக்கள் என்றே
தெரியாது - ஆனால் அதே கேள்வியை
எல்லோரையும் கேட்டு மிரட்டுவர்
- தமிழ் இலக்கண வாடையே இருக்காது;
ஆனால் தொல்காப்பியரையும்
தொல்காப்பியத்தையும் இழிவாகப் பேசுவர்.
- மணிப்பிரவாள எழுத்துக்களையே போற்றிப் புகழுவர்
- தில்லை முதல் எல்லாக் கோயில்களிலும்
வடமொழி மட்டுமே இருக்க வாது செய்வர்.
- தூய தமிழ் என்ற பேச்சைக் கேட்டால்
கூட்டமாகக் கூடி நின்று ஏசுவர்
- தன்னலத்திற்காக தமிழ் இனத்தைக்
காட்டிக் கொடுப்பர்
- தமிழ்ச் சொற்கள் யாரேனும் அறிமுகப்
படுத்தினால் கோபப் படுவர் அதில் பிழையான
தமிழில் பொருந்தாத சொல்லானால் மகிழ்ச்சியடைவர்
- ஈழத்தமிழினம் எப்பொழுது அழியும் என்று காத்துக் கிடப்பர்
- ஆனால் புன்னைகை தவழ பொய் முகம் காட்டுவர்
- தமிழ் மொழிச் சொல்லை வடமொழிச் சொல்
என்றால் உச்சி குளிர்ந்து போவர். ஆனால் தமிழ்
மொழிச் சொல்லை தமிழ் மொழிச் சொல் என்றால்
இவர்கள் "ஆதாரம் ஆயிரம் கேட்பர்".
- நல்ல தமிழ் இலக்கியங்களை யாவையுமே
இவர்கள் நஞ்சு என்பர்.
- பழைய அறிஞர்கள் என்றால் சீரங்கத்துச்
செருப்பும், மயிலாப்பூர் மந்தியும், கும்பகோணத்துக்
குரங்கும்தான் அறிஞர்கள்; திருவாரூர் துரோகியையும்
சேர்த்துக் கொள்வர்.
புதிய அறிஞர்கள் என்றால்
"இலம்பாடிகள் மட்டுமே அறிஞர்கள்"
இது போல இன்னும் எவ்வளவோ
சான்றுகள் உள்ளன. இவை யாவும்
ஒவ்வொரு தமிழனும் அன்றாட வாழ்வில்
துய்த்தவையே. துய்த்தபோதும் இலம்பாடி
மாயையில் அலைக்கழிக்கப் பட்டு
இலம்பாடிவயப் பட்டுப் போகிறார்கள்.
அதற்கு இலம்பாடிகளின் ஆயுதங்களே காரணம்.
தமிழ் இலம்பாடிகளின் ஆயுதங்கள்:
- "நடுவு நிலைமையில் எல்லோரும் எழுதவேண்டும்":
என்று தாம் சார்ந்த நிலையில் எழுதும் திறன்.
படிப்பவரை இந்தச் சொற்கள் குழப்பி விடும்.
தன் மனதில் தோன்றுவது சார்பு நிலையோ
என்று எண்ணி அப்படியே தொய்ந்து போய்விடுவர்.
நாளடைவில் இலம்பாடிமாயை பற்றிவிடும்.
- "கருத்துச் சுதந்திரம்" - இலக்கண இலக்கியத்தையே
படிக்காமல் எந்தப் பொய்யையும் திட்டமிட்டுப்
பிரச்சாரம் செய்வார்கள். அது தவறு என்று
ஆதாரத்தோடு சொல்ல முற்பட்டால் இந்த
ஆயுதத்தை எடுத்துக் கொள்வார்கள். இது
அப்பாவிகளையும் ஆர்வலர்களையும் திசை
திருப்பி விட்டு விடுகிறது. மெல்ல அவர்களும்
இலம்பாடி மாயையில் வீழ்ந்து விடுவர்.
- "தமிழ்ப் பற்று வேண்டும் ஆனால் வெறி கூடாது":
இது ஒரு பயங்கரமான ஆயுதம் மட்டுமல்ல தந்திரம்.
"Happy Tamil New year" என்று புத்தாண்டின் காலையில்
கூவுவார்கள். ஏங்க புத்தாண்டு வாழ்த்து என்று
சொல்லக் கூடாதா என்று பேசினால் நேரடியாக
இந்த ஆயுதத்தை எடுத்து விடுவார்கள்.
தமிழ் விழா ஒன்றில் "Let us sing thamizth thaay vaazhthu"
என்று அழைக்கிறார்கள்.
கேட்டால் பாடச் சொல்வது பற்று.
அதைத் தமிழில் சொல்லச் சொல்வது வெறி
என்று விளக்கம் கொடுக்கிறார்கள்.
இப்படி எளிமையான விதயமும் இவர்களுக்கு
தமிழ் வெறியென்று பட்டு ஆயுதத்தை எடுக்கிறார்கள்.
அவர்களின் அடாவடிக்கு சப்பாணித் தமிழ் அரசுகளும்
அரசியலும் ஆதரவாக இருக்கின்றன.
- "தமிழீழ மக்களுக்காகப் பிரார்த்திக்கிறேன் -
ஆனால் அவர்கள் ஆயுதம் கொண்டு உயிர் கொல்தல்
பாவம் அல்லவா" - என்று புனிதப் பசு போலப்
பேசுவார்கள். தமிழீழ வரலாறு அறியாதவர்கள் இந்த
ஞானஒளியிலேயே இலம்பாடியாகி விடுவார்கள்.
- "வெளிநாட்டு வாழ்வு நிலை" - இது மிகவும்
விவகாரமான உண்மை. பல தமிழ் நாட்டுக்காரர்கள்
வெளிநாட்டையே பார்த்ததில்லை. ஆர்வத்தில்
இவர்கள் இணையத்தில் உள்ள பல இலம்பாடிகளிடம்
சிக்கிக் கொள்கிறார்கள். வெளிநாட்டில் தமிழராக
இருப்போரும் உண்டு. தமிழ் இலம்பாடியாக
இருப்போரும் உண்டு. வெளிநாட்டில் நல்ல
நிலையில் உள்ளோரும் உண்டு.
நக்கித் திரிவோரும் உண்டு.
அந்தச் செண்டு புட்டி மயக்கம் பெருமளவு
போய்விட்ட போதிலும், திண்ணையில்
உட்கார்ந்து கொண்டு
"எனக்கு இலண்டனில் நண்பர் இருக்காக,
ஆசுத்திரேலியாவில் இருக்காக,
அங்க இருக்காக, இங்க இருக்காக" என்று
பேசுவதற்காகவோ, அல்லது ஏதேனும்
தொடர்பு வழிப் பயன் கிடைக்கலாம்
என்பதற்காகவோ வெற்று இலம்பாடிகளைத்
தூக்கிச் சுமக்கிறார்கள்.
இதற்குப் பெருமளவும் வெள்ளை உள்ளமும்,
ஆர்வமும் உணர்ச்சியுமேதான் காரணம்.
அவை இலம்பாடிகளால் திறமாகக்
களவாடப் படுகிறது. அ-னா ஆ-வன்னா
மட்டும் தெரிந்திருந்தாலே இன்றைக்கெல்லாம்
அறிஞர் பட்டம் கிடைத்து விடுகிறது.
ஒரு சில்லரைக் கவிதை எழுதிவிட்டால்
அவர் சான்றோராகவே கருதப் படுகிறார்.
இதில் ஒரு வேடிக்கையும் உண்டு.
ஒரு வெளிநாட்டுத் தமிழ் இலம்பாடியும்
தமிழ் நாட்டுத் தமிழ் இலம்பாடியும்
ஒன்று சேர்ந்து விட்டால் நல்ல கலக்கலாக
இருக்கும். இவர்கள் இரண்டு பேரும்
அடித்துக் கொண்டாலும் மிகச் சுவையாக இருக்கும்.
வெளிநாட்டு இலம்பாடி "இவரைப் பிடித்து வைத்தால்,
சின்னச் சின்ன சில்லரை வேலைகளுக்கு உதவுவார்"
என்று நினைக்கும். தமிழ்நாட்டு இலம்பாடிக்கு
சமயத்தில் இறக்கை முளைப்பது போலக் கனவு வரும்.
- "இறைவனுக்கு மொழியில்லை" - இந்த ஆயுதம்
மிகவும் நுணுக்கமாக, தந்திரிகளால் மட்டும்
கையாளப்படும். எனக்கு எல்லா சாமியும் ஒன்னு;
எல்லா மதமும் ஒன்னு என்று தொடங்கி
பக்திப் பரவசத்தில் மூழ்கவைத்து மெல்ல
அப்படியே சமசுகிருதத்துக்குள் கொண்டு
போய் மாட்டி விட்டு விடுவார்கள்.
மாட்டிக் கொண்டவர்கள் ஏற்கனவே
பக்திப் பரவசத்தில் பேசிய எழுதிய
பேச்செல்லாம் நினைத்துப் பார்த்து
அப்படியே இலம்பாடிக் கூட்டத்தின்
தாளம், சுரம், சதி என்று ஆய்விடுவர்.
- "தீக்கா தீம்கா" - இருப்பவற்றிலேயே
மட்டமான ஆயுதம் இது. மிக மலிவான
இந்த ஆயுதத்தைத் தூக்க முடியாமல்
தூக்கி வீசுவார்கள் இலம்பாடிகள்.
யாராவது தப்பித் தவறி நல்ல
தமிழில் எழுதிவிட்டால், மொழிக் கலப்பின்றி
எழுதி விட்டால் அவர்கள் மேல்
வீசுகின்ற முதல் ஆயுதம் இதுதான்.
நல்லதமிழ் எழுத நினைப்பவர்களை
முதல் சுற்றிலேயே வீழ்த்திவிடக்
கூடிய ஆயுதம் இது.
- "இந்திய இறையாண்மை" - இது மிகக் கனமான
ஆயுதம். பல சிக்கலான ஆழமான அல்லது
உணர்வுப் பூர்வமான தமிழ் மொழி அல்லது தமிழ் நாடு
அல்லது தமிழின விதயம் என்றால் உடனே
இலம்பாடிக் கூட்டம் இந்த ஆயுதத்தை எடுத்து
வீசி விடும். என்னடா இது - "சிங்களன் தமிழனைக்
கொல்றானே" என்று அழுதால் -
"ஏய் தமிழன் சாவுறான் என்று அழுவாதே!
அது இந்திய இறையாண்மைக்கு எதிரானது;
அதைவிட முக்கியம் இலங்கை இறையாண்மை";
பேசாமே காசாவுக்கு அழுவு இல்லாட்டி
ஈராக்குக்கு அழுவு இல்லாட்டி
எங்கேயாவது பூகம்பம் வந்தால்
அந்தப் பக்கந் திரும்பி அழுவு என்பார்கள்.
அமெரிக்க இரட்டைக் கோபுரம் இடிந்து வீழ்ந்த
போது அழுதுத் துடித்த இலம்பாடிகளுக்கு
ஈழப்படுகொலைகள் அழுகையைத் தரவில்லை.
முதன் முதலா இந்த இலம்பாடிக் கூட்டத்தைப்
பார்த்தவர்களுக்கு இது தலையைச் சுற்றுகின்ற விதயம்.
இலம்பாடிமாயையில் வீழ்ந்துவிட்டவர்களுக்கு ஒன்றும்
சலனமிருக்காது. ஆனால் இந்த இலம்பாடிக்
கூட்டத்தைப் பலநாளும் பார்த்து வருபவர்களுக்கு
நன்கு இது புரியும்.
இப்படி இன்னும் நிறைய ஆயுதங்களை
இலம்பாடிகளிடம் காணலாம். அவற்றைப் பயன்படுத்தி
நல்ல தமிழ் மக்களைக் குழப்பிவிட்டு அவர்களையும்
இலம்பாட வைத்து விடுகிறார்கள் என்று சொல்லி நிறைவாக:
"தமிழினத்தில் இரண்டே இரண்டுதான் சாதிகள்
ஒன்று தமிழ்ச்சாதி; பிறிது தமிழ் இலம்பாடிச் சாதி"
"இலம்பாடிச் சாதியிடம் ஒருமித்த இராகம் இருக்கிறது;
தமிழ்ச் சாதி ஒன்றுக் கொன்று முரண்படுகிறது"
தமிழ் தமிழினம் என்று வரும்போது
"இது எனக்கு ஏற்பு - அது பரவாயில்லை -
அது பற்றிக் கவலையில்லை"
என்ற அணுகுமுறையை தமிழ்ச் சாதி
கைவிட்டு தமிழ் இலம்பாடிகளிடம் இருந்து
தமிழையும், இலம்பாடி மாயையில் வீழ்ந்திருக்கிற
தமிழர்களையும் மீட்கவேண்டிய "முழு"
பொறுப்பினை உணரவேண்டும்.
இலம்பாடித்தனம் என்பது பார்ப்பனீயம்தானே
என்று கருதிவிடக் கூடாது. பார்ப்பனீயம் என்பது
இலம்பாடியத்தின் ஒரு உள் பகுதி
அவ்வளவுதான். பார்ப்பனீயத்தைக் கடந்தது
இலம்பாடியம். பார்ப்பனீயத்தின்
எல்லைகளைவிட இலம்பாடியத்தின்
எல்லைகள் மிகப் பெரிது. அணிமைய
ஈழத் துயருக்குக் காரணம்
பார்ப்பனீயம் மட்டும் அல்ல;
இலம்பாடியம்தான் முக்கிய காரணம்!
பார்ப்பனீயம் என்று பேசுவீர்களாயின்,
அது ஒரு சாதிக்கு சொந்தமல்ல என்றாலும்
சாதிக்குள் நுழைய விட்டு விடுகிறது.
அதிலே தமிழ் மக்களும் ஆர்வலர்களும்
அதைத் தாண்டி நடைபெறுகின்ற இலம்பாடியத்தைக்
காணாமல் விட்டு விடுகிறார்கள்.
பார்ப்பனீயம் என்று பேசினால் பெரியார்
திடலைக் காட்டி இலம்பாடிகள் குழப்பி
விடுகிறார்கள். இந்த இலம்பாடியத்தை
விளங்கிக் கொண்டால்தான் எந்த மாற்றும்
சரியாகக் கொணரப்பட முடியும்.
இலம்பாடிகளைச் சமாளிக்கக் கடினமாக
உழைக்க வேண்டியிருக்கிறது.
இலம்பாடியத்தை உணர்ந்து பரப்புதல் வேண்டும்.
இதுவே மாற்றம் வேண்டிகளின் துவக்கம்.
போக வேண்டிய தூரம் நிறைய.
அன்புடன்
நாக.இளங்கோவன்
படுகின்ற துயர் ஒட்டு மொத்த தமிழினத்தை
அதிர்வுக்கு உள்ளாக்கியிருக்கிறது. குறிப்பாக
இந்தியாவில் வாழ்கின்ற தமிழர்களை பெரும்
சிந்தனைக்கு உள்ளாக்கியிருக்கிறது. தமிழீழம்
என்ற நிலையைத் தாண்டி இந்திய வாழ்
தமிழர்களின் எதிர்காலத்தைக் கவலைக்குள்ளாக்கி
இருக்கிறது.
தமிழ் மொழி, இனம், வாழ்வியல், உரிமை
என்ற எல்லாமே இன்று கேலிக்கும்
தாழ்வுக்கும் உள்ளாகியிருக்கின்றன.
திட்டமிட்ட தன்னல அரசியல் சதிகளும்,
கூடவே இருந்து குழிபறிக்கும் கூட்டமும்
தமிழ் மக்களை அப்படியே மாயைக்குள்
மூடியிருக்கின்றன. தமிழ்நாட்டு மக்களின்
மானமும் உணர்வும் மயிரினும் சிறிதென
மதிக்கப் படுகின்றன.
தமிழர்களின் மானத்தையும் உணர்வையும்
தமிழர்களே முன்னின்று களையும் ஒரு
அவல நிலை தமிழகத்தைப் பற்றியிருக்கின்றது.
தமிழீழத்தில் கொட்டுகின்ற ஒவ்வொரு
துளிக் குருதியும் தமிழ் நாட்டுத் தமிழனுக்கு
ஒவ்வொரு பாடத்தைச் சொல்லித் தருகிறது.
இழந்து போன மதியைக் கூர்ப்பாக்குகிறது.
தமிழ்நாட்டில் விளைந்திருக்கிற கேடுகளைக் களைய
நீண்டகாலச் சிந்தனைகளையும் சித்தாந்தங்களையும்
விதைத்து "தமிழை" மீள உருவாக்குவதே இன்றைக்கு
நாம் முன்னெடுக்க வேண்டிய தேவையாகும்.
அவசர கோலத்தில் உடனடியாகச் செய்ய நினைக்கும்
எதுவும் பயன் தராது.
தமிழ் இனத்தின் உயிர் வாதை என்கின்ற
உச்ச கட்ட வாதையின் போது தமிழ் என்ற
சொல்லைச் சுற்றி நிற்கின்ற மொழி, அரசியல்,
சாதி, மதம், கல்வி, பொருளியல் என்ற
எந்தக் கூறுகளும் உதவிக் கரங்களை
நீட்டவில்லை. தமிழ்நாட்டில் தீயாடிச்
செத்து விழுந்த 12 பேர்களின் கையறு
தனி மனித நிலையைக் கடந்து
நிறுவனப் படுத்தப்பட்ட யாரின்
பங்களிப்பும் மனசாட்சியோடும் நேர்மையாகவும்
இருக்கவில்லை.
அதேபோல இவர்களெல்லாம் தமிழர்களா? என்றால் -
ஆம் என்ற விடையைத் தவிர வேறெதுவும் இல்லை.
எந்தச் சாதியையும் குறிப்பிட்டுச் சொல்லி
இவர்கள் ஆதரவாக இருந்தார்கள் என்று
எப்படிச் சொல்ல முடியவில்லையோ
அப்படியே இன்னார் எதிர்த்தார்கள்
என்றும் சொல்ல முடியவில்லை.
எந்த மதத்தையும் குறிப்பிட்டு ஆதரவாக
இருந்தார்கள் அல்லது எதிர்த்தார்கள்
என்று சொல்ல முடியவில்லை.
ஒரு சாதாரண இல்லறச் சண்டையையும்
பெரிது படுத்தி எழுதியோ, நீள்தொடர்களாகப்
படமெடுத்தும் காசு சம்பாதிக்கும்
எழுத்தாளர்களும் மிடையகாரரும்
நாணமின்றி ஒரு இனப்படுகொலைக்கு
மெளன சாட்சியாக மட்டுமே இருந்திருக்கிறார்கள்.
ஆகவே தமிழ்நாட்டுக் குமுகத்தின்
பல கோணங்களும் பரிமாணங்களும்
ஆய்வுக்கு உட்படுத்தப் பட வேண்டியிருக்கிறது.
அதிலே துவக்கமாக ஒரு அடிப்படையான
விதயத்தில் தமிழ் மக்களுக்குச் சரியான தெளிவு வரவேண்டும்.
அணிமைய ஈழத்துயர் நமக்குக் காட்டிய செய்தி என்ன?
"தமிழர்களில் ஒரு பகுதியினர் சொந்த இனம்
அழிவதன்பால் வேதனைப்பட்டார்கள்;
பிறிதொரு பகுதியினர் கவலை கொள்ளாமலும்
மகிழ்ச்சியாகவும் இருந்தார்கள்".
இந்தச் செய்தி உண்மைதானே!
சாட்சிகளை அரசியல் கட்சிகளின்
அறிக்கைகளில் காணலாம். வலைப்பதிவுகளில்
காணலாம். தமிழினம் செத்து விழுவதை
கூட்டமாக மகிழ்ந்து கொண்டாடிய
ஒரு மடற்குழுவில் காணலாம்.
கவலை கொள்ளாமலும் மகிழ்ச்சியாகவும்
இருந்தவர்கள் தமிழ்நாட்டு மக்கள்தானே!
அவர்கள் என்ன ஒரே சாதியைச்
சேர்ந்தவர்களா? அல்லது எல்லாமே ஆரியர்களா?
அல்லது வேறெப்படி என்று யோசித்தால்
நமக்குக் கிடைக்கும் விடை என்ன?
ஈழத்துயரைக் கைகொட்டிச் சிரித்து
மகிழ்ந்தவர்களை மட்டும்தானா
நாம் கண்டு வருந்துகிறோம்?
இல்லை - உண்ணிப்பாகப் பார்த்தால்
ஈழத்துயரை சுவைத்தவர்களிடம்
ஒரு ஒற்றுமை இருக்கும். அவர்கள்
அடாது தொடர்ந்து தமிழ் மொழியைத்
தாழ்த்தி வருவார்கள். கோயிலில் தமிழ்
நுழைவதைத் தடுப்பவர்களாக இருப்பார்கள்.
இழந்து போன தமிழ்ச் சொற்களை
மீட்பவர்களைக் கூட எள்ளி நகையாடுவார்கள்.
தமிழ் முன்னோர்களை இழிவாகப் பேசுவார்கள்.
தமிழ், தமிழ் மக்கள் என்று எந்தக் கூறை
எடுத்துக் கொண்டாலும் அதற்கு இடராகப் படர்வார்கள்.
இவர்கள் யார்?
தமிழினத்தையும் முகவரியையும்
அழிக்கத் துடிக்கும் இவர்கள் யார்?
தமிழ் மொழி, பண்பாடு என்று
பேச முனையும் அப்பாவித் தமிழ் மக்களையும்
மூளைச்சலவை செய்து விடும் இவர்கள் யார்?
தமிழ் மக்களைப் பொய்யான பாதைக்குத்
திசை திருப்பி விடும் இவர்கள் யார்?
தமிழ்நாட்டைத் தவிர, தமிழீழத்தைத் தவிர,
தமிழ் மொழியைத் தவிர தமிழ் இனத்தைத்
தவிர உலகில் உள்ள எல்லாமே உயர்வாகக்
கொள்ளும் இவர்கள் யார்?
தமிழ்நாட்டின் தெருக்களில், நீர்க்குழாயடிகளில்
இன்ன பிற இடங்களில் பெண்கள் போடுகின்ற
சண்டைகளில் பயன்படுத்துகின்ற சொல்லாயுதங்களில்
முக்கியமும் தொன்மையும் ஆனவை மூன்று.
தேவடியாள், தட்டுவாணி, இலம்பாடி என்பன அவை.
இவற்றிற்கு முன்னொட்டு, பின்னொட்டு, ஓசை,
வழக்கு மாற்றங்கள் இடத்திற்கு இடம்
வேறுபடும். தேவடியாள் என்ற சொல்லும்
தட்டுவாணி என்ற சொல்லும் ஒற்றுமையும்
வேற்றுமையும் கொண்டவை.
அதனைப் பற்றித் தனியே பார்ப்போம்.
இந்த இலம்பாடி என்ற சொல் மற்ற
இரண்டு சொற்களைப் போல
ஒரு கொடுஞ்சொல் என்று மட்டுமே நான்
பலநாளும் எண்ணியதுண்டு.
பல காலம் கழித்துதான் அது என்ன
என்ற விடை கிடைத்தது.
இலம்பாடு என்ற சொல் வினையைக் குறித்தது.
இலம்பாடி என்பது ஆளைக் குறித்தது.
இலம் + பாடி = இலம்பாடி. இலம் என்றால்
இல்லை, இல்லாமை, சிறுமை என்ற
பொருள்களைக் கொண்டது.
எதுவுமே இல்லை, எதுவுமே எமதில்லை
என்று பாடிப் பிழைப்பதே இலம்பாடித் தொழில்.
இலம்பாடுதல் என்பது இழிவாகக் கருதப்பட்டது
தமிழ்க் குமுகத்தில். சிலப்பதிகாரத்தில் கோவலன்
கண்ணகியிடம், "வேறு யாரிடமும்
போய் பொருள் இலம் பாடினால்
அது இழிவுடையுது; எனக்கு
அது நாணத்தைத் தரும்" என்று
சொல்லவேதான் கண்ணகி
தனது சிலம்பொன்றைக் கழட்டித் தருகிறாள்.
கோவலனின் பல சிறப்புகளில் அவன்
தன்மானமும் ஒன்று.
"இலம்பாடு நாணுத் தரும் எனக்கு" என்ன-
நலம் கேழ் முறுவல் நகை முகம் காட்டி,
'சிலம்பு உள; கொண்ம்' என-'சேயிழை! கேள்; இச்
சிலம்பு முதல் ஆக, சென்ற கலனோடு
உலந்த பொருள் ஈட்டுதல் உற்றேன்,
- சிலப்பதிகாரம் - கனாத்திறம் உரைத்த காதை
மேலோட்டமாகப் பார்த்தால் இஃது இல்லாத
நிலையில் பொருள் தேடும் செயலாகத்
தோன்றி - இலம்பாடினால் என்ன என்று
தோன்றும். இரப்பதுதானே என்று தோன்றும்.
ஆனால் இரத்தல் வேறு. இலம்பாடுதல் வேறு.
இரத்தல் என்பது ஒன்றும் இல்லாத நிலையில்
ஒரு வேளை சோற்றுக்குப் பிச்சை எடுப்பது.
இலம்பாடுதல் என்பது எந்த உழைப்பும்
செய்யாமல், இலம்பாடுதலையே
தொழிலாகக் கொள்வது.
"இல்லை எம்மிடம்,
உம்மதே உயர்ந்தது" (- இலம்பாடிகானம்-1)
என்று பிறரை நயந்து, பல்லைக் காண்பித்து
நத்தி வாழ்வது. தமது பிழைப்பிற்காக
தேவடியாள்த்தனம் என்றல்ல தட்டுவாணித்தனம்
என்றல்ல; எதை வேண்டுமானாலும் செய்து
பிழைப்பதுதான் இலம்பாடித்தனம்.
பொருள் இருந்தாலும் பொருள் இல்லையாயாயினும்
"இல்லோம் இல்லோம்
உம்போல் இல்லோம்
எம்மோடு நில்லோம்" (- இலம்பாடிகானம்-2)
என்று சொல்லி எல்லாருக்கும் நல்லவர்
போல் நடித்து யாருடனும் எதற்கும் கூட்டு
வைத்து எல்லாரையும் ஏமாற்றிப் பிழைக்கும்
பிழைப்பே இலம்பாடிப் பிழைப்பு. தமிழைப் பழித்துப்
பிறவற்றை உயர்த்தி வாழ்வது போல.
தேவடியாள் என்பவள் இறைவன் பெயரால்
ஏமாற்றிய ஆதிக்க சக்திகளுக்கு மட்டும் உடல்
தந்து பிழைப்பு நடத்துபவள். தட்டுவாணி (விலைமகள்)
என்பவள் யார் காசு கொடுத்தாலும் அவருக்கு உடல் தருபவள்.
தேவடியாளுக்கு நிறுவனப் படுத்தப் பட்ட
உறுதியான சந்தை உண்டு. தட்டுவாணிக்குத்
தன் தொழிலைச் சந்தைப் படுத்த வேண்டிய
அவசியமும் உண்டு. இருவருமே பெண்கள்தான்.
ஆனால் இலம்பாடிக்குப் பால் இல்லை.
ஆணாக, பெண்ணாக, குழுவாகப் பரந்து
கிடப்பார்கள். இவர்களின் புழுங்கிய பிழைப்புக்கு
எல்லா மொழியும் எல்லா இனமும் சந்தையாகும்.
எங்கெல்லாம் எப்படியெல்லாம் "இலம்"
பாடிப் பிழைக்க முடியுமோ அப்படிப்
பிழைப்பார்கள். கூடவே எதாவது
ஒரு சாமியைக் கும்பிட்டுக் கொள்வார்கள்.
தேவைப்படும்போது எல்லாச் சாமியையும்
கும்பிட்டுக் கொள்வார்கள். தன்மானத்துடன்
வாழ்பவர்கள் இவர்களுக்குப் பகைவர்கள்.
பண்பாடும் தொன்மையும் இவர்களுக்கு நஞ்சு.
தளராதவரைத் தளரவைப்பதும்,
தளர்ந்தவுடன் தள்ளிப் போவதும்,
தாழ்ந்தாரைத் தாழ்த்தாலும்,
உயர்பவர்களையும் உயர்ந்தவைகளையும்
ஒட்டிக் கொள்வதும் இவர்களது வாழ்க்கை முறை.
தமிழர்கள் என்று சொல்வார்கள் - ஆனால்
"இல்லோம் இல்லோம்
இந்தி மொழி இல்லோம்
தள்ளோம் தள்ளோம்
இந்தி மொழி தள்ளோம்" (-இலம்பாடி கானம்-3)
என்பது இவர்களின் புகழ் பெற்ற பாட்டு.
தமிழ் எங்கள் தாய்மொழி என்பார்கள் - ஆனால்
"இல்லோம் இல்லோம்
தமிழில் இறைவன் இல்லோம் -
கல்லோம் கல்லோம்
பள்ளியில் தமிழ் கல்லோம்" (-இலம்பாடி கானம்-4)
என்பது இவர்களின் தொன்மையான பாட்டு.
தமிழ் எங்கள் உயிர் மூச்சு என்பார்கள் - ஆனால்
முடை நாறும் மொழிக் கலப்பே
உயர்வு என்று பேசுவார்கள்.
தமிழ் எமக்கு அமுது என்பார்கள் - ஆனால்
ஆங்கிலம் உள்ளிட்ட வேற்று மொழிகளோடு
முதிர்ச்சியற்ற ஒப்பீடு செய்து
தமிழை எவ்வளவு கேவலமாகவும்
இழிவாகவும் பேச முடியுமோ
அவ்வளவையும் செய்வார்கள்.
தமிழர்கள் உலகம் முழுதும் இருப்பது
பெருமை என்பார்கள்; போகின்ற இடத்திலே
பிறநாட்டுத் தாய்மொழி
உணர்வைப் பாராட்டுவார்கள் - ஆனால்
தமிழரின் தாய்மொழி உணர்வைக்
கேலி செய்வார்கள்.
செருமனி போனேன் கொரியா போனேன்
என்பார்கள்; செருமனியரும் கொரியரும்
தாய்மொழி பேசினால் கண்ணை
விரித்து வியந்து மகிழ்வார்கள்.
ஆனால் தமிழர்கள் தாய்மொழியில் பேசினால்
மொழிவெறி என்பார்கள். தமிழ்த் தூய்மை
என்று பேசிவிட்டாலோ காதைப்
பொத்திக் கொள்வார்கள்.
ஈழத்தமிழர் கண்டு வியந்து நிற்கிறேன்;
எனக்கு எத்தனையோ ஈழத்தமிழர் நண்பர்கள் உண்டு.
அவர்கள் வெல்ல வேண்டும் என்பார்கள்;
ஆனால் அதே ஆள் இந்தப் பக்கம் திரும்பி...
"தூ.. இவர்கள் எவ்வளவு முட்டாள்கள்,
இப்படிக் காசு செலவு பண்ணி போராடுகிறார்களே;
அதற்குப் பதில் கடலைத் தூர்த்துத்
தமக்கென்று ஒரு நாடு கட்டிக் கொண்டால் என்ன?
தமிழன் எப்பொழுதுமே முட்டாள்கள்"
என்று தனது அடிநத்திகளோடு பிரச்சாரம்
செய்வார்கள். ஈழத்தமிழர்களுக்கு
இதெல்லாம் புரியவும் புரியாது;
அவர்களையே நல்லவர்களாக எண்ணிப்
பட்டமும் கொடுப்பார்கள்.
ஒரு பக்கம் ஈழத்தமிழர் வாழ்க என்பார்கள்!
இன்னொரு பக்கம் "கலிங்கத்துப் பரணியிலே
எவ்வளவு பிணங்களைப் பார்த்தீர்கள்?
இப்பொழுது தமிழ்ப் பிணங்களைப் பாருங்கள்!"
என்று நையாண்டி செய்த சூழல் இணையத்தில்
பலருக்கும் மனதை விட்டு மாறவில்லை.
(அரசியல் வரலாறு இலக்கியம் அறிந்தோர் இதனை ஓர்ந்து
பார்த்துக் கொண்டு மேலும் புரிந்து கொள்ளுங்கள். இது எவ்வளவு
நாசகார மனம் என்பது உங்களுக்குப் புரியும்.
தமிழினத்தைச் சுற்றி இருக்கிற சதியின் வலியும் புரியும்).
தனி இலம்பாடிகள் இப்படியென்றால்,
இலம்பாடிக் கூட்டம்
எப்படி உருவாகிறது என்றும்
அறிய வேண்டும். ஒரு
எடுத்துக்காட்டைக் கூறுவேன்:
ஒரு பாடிப் பிழைக்கும் இலம்பாடி
ஒரு நாட்டுக்குப் போகிறது.
அதற்கு அங்கே ஞானம் பொத்துக் கொள்ள,
"தமிழ் மொழியை சனநாயகப் படுத்த வேண்டும்"
என்று சொல்கிறது. அதே நாட்டில்
பிழைத்துக் கொழுத்த இலம்பாடி ஒன்று
அந்தச் சொற்களைக் குதியாட்டம் போட்டு
இழுத்து வந்து இன்னொரு இலம்பாடியிடம்
கொட்டுகிறது இணையத்தில். இந்த
இலம்பாடிகளோடு மேலும் சில
இலம்பாடிகள் சேர்ந்து கொண்டு
"தாய்மொழி தமிழை
சனநாயகப் படுத்துவோம் - முதலில்
கிரந்தப் படுத்துவோம்; அப்படியே
ஆங்கிலப் படுத்துவோம் - மொத்தத்தில்
தமிழை நாசப் படுத்துவோம்!" (-இலம்பாடி கானம்-5)
என்று போட்ட ஆட்டம் காணக்
கண் கொள்ளாத ஒன்று. ஆக, இலம்பாடிக் கூட்டம்,
எங்கெல்லாம் எதெற்கெல்லாம் தமிழ்
பழிக்கப் படுகிறதோ அங்கெல்லாம் கூடி விடும்.
அவர்களுக்கு ஆன போது கூடிக் கொள்வதும்
ஆகாத போது கழட்டிக் கொள்வதும்
இலம்பாடிக் கூட்டத்தின் தனித்தன்மை
என்று அறிவதோடு தமிழுக்கும்
தமிழினத்திற்கும் இழுக்கு சேர்க்கும்
எல்லா இடத்திலும் இந்த இலம்பாடிகள்
நீக்கமற நிறைந்திருப்பார்கள்
என்று அறிய வேண்டும்.
இலம்பாடிகளுக்குச் சாதி, மத,
பொருளாதார, கல்வி, வேறுபாடு என்றெல்லாம்
கிடையாது என்பதனை ஏற்கனவே
சொல்லப் பட்டிருக்கிறது
என்பதை நினைவு படுத்திக் கொள்தல்
அவசியம்.
சனநாயகம் என்றால் என்ன?
தாய்மொழியை எப்படி சனநாயகப் படுத்துவது?
என்பதெல்லாம் படுவாய்க் கேள்விகள்;
(படுவாய் > படவா ~ அதிகப்பிரசங்கி)
அவற்றை அவர்களிடம் கேட்க முடியாது.
கேட்டால் உடனே எல்லா இலம்பாடிகளும்
பிறாண்டி விடும். கேட்க வேண்டும் என்று
எண்ணியவர்களும் இலம்பாடிகளுக்குப்
பயந்து போய்
"தங்கள் தாய்மொழியை சனநாயகப்
படுத்த முனையும் இவர்கள் தங்கள்
தாயையும் சனநாயகப் படுத்துவோம்"
என்றளவிற்குப் போய் விட்டால் என்ன செய்வது?
என்று வாயை மூடிக் கொண்டு விட்டார்கள்.
தமிழருக்குள் ஊடறுத்து நிற்கும்
இத்தன்மையரை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ் இலம் என்று பாடும் தமிழ் இலம்பாடிகளைச்
சரியாக அறிந்து கொள்வதொடு, பாடிகள்
ஒரே தன்மையர் என்றும் தமிழினத்தில்
அவர்களுக்கு நாடு, மொழி, சாதி, மதம்,
பொருளாதாரம், கல்வி என்ற எந்த
வேறுபாடுகளும் இல்லை என்றும்
தெளிவாக அறிதல் வேண்டும்.
தொகுப்பாக தமிழ் இலம்பாடிகள் என்பர்:
- தமிழை எப்பொழுதும் தாழ்த்திப் பேசுவர்.
- தமிழைத் தவிர உலகில் உள்ள எல்லா
மொழிகளையும் உயர்த்திப் பேசுவர்
- தமிழில் எத்தனை எழுத்துக்கள் என்றே
தெரியாது - ஆனால் அதே கேள்வியை
எல்லோரையும் கேட்டு மிரட்டுவர்
- தமிழ் இலக்கண வாடையே இருக்காது;
ஆனால் தொல்காப்பியரையும்
தொல்காப்பியத்தையும் இழிவாகப் பேசுவர்.
- மணிப்பிரவாள எழுத்துக்களையே போற்றிப் புகழுவர்
- தில்லை முதல் எல்லாக் கோயில்களிலும்
வடமொழி மட்டுமே இருக்க வாது செய்வர்.
- தூய தமிழ் என்ற பேச்சைக் கேட்டால்
கூட்டமாகக் கூடி நின்று ஏசுவர்
- தன்னலத்திற்காக தமிழ் இனத்தைக்
காட்டிக் கொடுப்பர்
- தமிழ்ச் சொற்கள் யாரேனும் அறிமுகப்
படுத்தினால் கோபப் படுவர் அதில் பிழையான
தமிழில் பொருந்தாத சொல்லானால் மகிழ்ச்சியடைவர்
- ஈழத்தமிழினம் எப்பொழுது அழியும் என்று காத்துக் கிடப்பர்
- ஆனால் புன்னைகை தவழ பொய் முகம் காட்டுவர்
- தமிழ் மொழிச் சொல்லை வடமொழிச் சொல்
என்றால் உச்சி குளிர்ந்து போவர். ஆனால் தமிழ்
மொழிச் சொல்லை தமிழ் மொழிச் சொல் என்றால்
இவர்கள் "ஆதாரம் ஆயிரம் கேட்பர்".
- நல்ல தமிழ் இலக்கியங்களை யாவையுமே
இவர்கள் நஞ்சு என்பர்.
- பழைய அறிஞர்கள் என்றால் சீரங்கத்துச்
செருப்பும், மயிலாப்பூர் மந்தியும், கும்பகோணத்துக்
குரங்கும்தான் அறிஞர்கள்; திருவாரூர் துரோகியையும்
சேர்த்துக் கொள்வர்.
புதிய அறிஞர்கள் என்றால்
"இலம்பாடிகள் மட்டுமே அறிஞர்கள்"
இது போல இன்னும் எவ்வளவோ
சான்றுகள் உள்ளன. இவை யாவும்
ஒவ்வொரு தமிழனும் அன்றாட வாழ்வில்
துய்த்தவையே. துய்த்தபோதும் இலம்பாடி
மாயையில் அலைக்கழிக்கப் பட்டு
இலம்பாடிவயப் பட்டுப் போகிறார்கள்.
அதற்கு இலம்பாடிகளின் ஆயுதங்களே காரணம்.
தமிழ் இலம்பாடிகளின் ஆயுதங்கள்:
- "நடுவு நிலைமையில் எல்லோரும் எழுதவேண்டும்":
என்று தாம் சார்ந்த நிலையில் எழுதும் திறன்.
படிப்பவரை இந்தச் சொற்கள் குழப்பி விடும்.
தன் மனதில் தோன்றுவது சார்பு நிலையோ
என்று எண்ணி அப்படியே தொய்ந்து போய்விடுவர்.
நாளடைவில் இலம்பாடிமாயை பற்றிவிடும்.
- "கருத்துச் சுதந்திரம்" - இலக்கண இலக்கியத்தையே
படிக்காமல் எந்தப் பொய்யையும் திட்டமிட்டுப்
பிரச்சாரம் செய்வார்கள். அது தவறு என்று
ஆதாரத்தோடு சொல்ல முற்பட்டால் இந்த
ஆயுதத்தை எடுத்துக் கொள்வார்கள். இது
அப்பாவிகளையும் ஆர்வலர்களையும் திசை
திருப்பி விட்டு விடுகிறது. மெல்ல அவர்களும்
இலம்பாடி மாயையில் வீழ்ந்து விடுவர்.
- "தமிழ்ப் பற்று வேண்டும் ஆனால் வெறி கூடாது":
இது ஒரு பயங்கரமான ஆயுதம் மட்டுமல்ல தந்திரம்.
"Happy Tamil New year" என்று புத்தாண்டின் காலையில்
கூவுவார்கள். ஏங்க புத்தாண்டு வாழ்த்து என்று
சொல்லக் கூடாதா என்று பேசினால் நேரடியாக
இந்த ஆயுதத்தை எடுத்து விடுவார்கள்.
தமிழ் விழா ஒன்றில் "Let us sing thamizth thaay vaazhthu"
என்று அழைக்கிறார்கள்.
கேட்டால் பாடச் சொல்வது பற்று.
அதைத் தமிழில் சொல்லச் சொல்வது வெறி
என்று விளக்கம் கொடுக்கிறார்கள்.
இப்படி எளிமையான விதயமும் இவர்களுக்கு
தமிழ் வெறியென்று பட்டு ஆயுதத்தை எடுக்கிறார்கள்.
அவர்களின் அடாவடிக்கு சப்பாணித் தமிழ் அரசுகளும்
அரசியலும் ஆதரவாக இருக்கின்றன.
- "தமிழீழ மக்களுக்காகப் பிரார்த்திக்கிறேன் -
ஆனால் அவர்கள் ஆயுதம் கொண்டு உயிர் கொல்தல்
பாவம் அல்லவா" - என்று புனிதப் பசு போலப்
பேசுவார்கள். தமிழீழ வரலாறு அறியாதவர்கள் இந்த
ஞானஒளியிலேயே இலம்பாடியாகி விடுவார்கள்.
- "வெளிநாட்டு வாழ்வு நிலை" - இது மிகவும்
விவகாரமான உண்மை. பல தமிழ் நாட்டுக்காரர்கள்
வெளிநாட்டையே பார்த்ததில்லை. ஆர்வத்தில்
இவர்கள் இணையத்தில் உள்ள பல இலம்பாடிகளிடம்
சிக்கிக் கொள்கிறார்கள். வெளிநாட்டில் தமிழராக
இருப்போரும் உண்டு. தமிழ் இலம்பாடியாக
இருப்போரும் உண்டு. வெளிநாட்டில் நல்ல
நிலையில் உள்ளோரும் உண்டு.
நக்கித் திரிவோரும் உண்டு.
அந்தச் செண்டு புட்டி மயக்கம் பெருமளவு
போய்விட்ட போதிலும், திண்ணையில்
உட்கார்ந்து கொண்டு
"எனக்கு இலண்டனில் நண்பர் இருக்காக,
ஆசுத்திரேலியாவில் இருக்காக,
அங்க இருக்காக, இங்க இருக்காக" என்று
பேசுவதற்காகவோ, அல்லது ஏதேனும்
தொடர்பு வழிப் பயன் கிடைக்கலாம்
என்பதற்காகவோ வெற்று இலம்பாடிகளைத்
தூக்கிச் சுமக்கிறார்கள்.
இதற்குப் பெருமளவும் வெள்ளை உள்ளமும்,
ஆர்வமும் உணர்ச்சியுமேதான் காரணம்.
அவை இலம்பாடிகளால் திறமாகக்
களவாடப் படுகிறது. அ-னா ஆ-வன்னா
மட்டும் தெரிந்திருந்தாலே இன்றைக்கெல்லாம்
அறிஞர் பட்டம் கிடைத்து விடுகிறது.
ஒரு சில்லரைக் கவிதை எழுதிவிட்டால்
அவர் சான்றோராகவே கருதப் படுகிறார்.
இதில் ஒரு வேடிக்கையும் உண்டு.
ஒரு வெளிநாட்டுத் தமிழ் இலம்பாடியும்
தமிழ் நாட்டுத் தமிழ் இலம்பாடியும்
ஒன்று சேர்ந்து விட்டால் நல்ல கலக்கலாக
இருக்கும். இவர்கள் இரண்டு பேரும்
அடித்துக் கொண்டாலும் மிகச் சுவையாக இருக்கும்.
வெளிநாட்டு இலம்பாடி "இவரைப் பிடித்து வைத்தால்,
சின்னச் சின்ன சில்லரை வேலைகளுக்கு உதவுவார்"
என்று நினைக்கும். தமிழ்நாட்டு இலம்பாடிக்கு
சமயத்தில் இறக்கை முளைப்பது போலக் கனவு வரும்.
- "இறைவனுக்கு மொழியில்லை" - இந்த ஆயுதம்
மிகவும் நுணுக்கமாக, தந்திரிகளால் மட்டும்
கையாளப்படும். எனக்கு எல்லா சாமியும் ஒன்னு;
எல்லா மதமும் ஒன்னு என்று தொடங்கி
பக்திப் பரவசத்தில் மூழ்கவைத்து மெல்ல
அப்படியே சமசுகிருதத்துக்குள் கொண்டு
போய் மாட்டி விட்டு விடுவார்கள்.
மாட்டிக் கொண்டவர்கள் ஏற்கனவே
பக்திப் பரவசத்தில் பேசிய எழுதிய
பேச்செல்லாம் நினைத்துப் பார்த்து
அப்படியே இலம்பாடிக் கூட்டத்தின்
தாளம், சுரம், சதி என்று ஆய்விடுவர்.
- "தீக்கா தீம்கா" - இருப்பவற்றிலேயே
மட்டமான ஆயுதம் இது. மிக மலிவான
இந்த ஆயுதத்தைத் தூக்க முடியாமல்
தூக்கி வீசுவார்கள் இலம்பாடிகள்.
யாராவது தப்பித் தவறி நல்ல
தமிழில் எழுதிவிட்டால், மொழிக் கலப்பின்றி
எழுதி விட்டால் அவர்கள் மேல்
வீசுகின்ற முதல் ஆயுதம் இதுதான்.
நல்லதமிழ் எழுத நினைப்பவர்களை
முதல் சுற்றிலேயே வீழ்த்திவிடக்
கூடிய ஆயுதம் இது.
- "இந்திய இறையாண்மை" - இது மிகக் கனமான
ஆயுதம். பல சிக்கலான ஆழமான அல்லது
உணர்வுப் பூர்வமான தமிழ் மொழி அல்லது தமிழ் நாடு
அல்லது தமிழின விதயம் என்றால் உடனே
இலம்பாடிக் கூட்டம் இந்த ஆயுதத்தை எடுத்து
வீசி விடும். என்னடா இது - "சிங்களன் தமிழனைக்
கொல்றானே" என்று அழுதால் -
"ஏய் தமிழன் சாவுறான் என்று அழுவாதே!
அது இந்திய இறையாண்மைக்கு எதிரானது;
அதைவிட முக்கியம் இலங்கை இறையாண்மை";
பேசாமே காசாவுக்கு அழுவு இல்லாட்டி
ஈராக்குக்கு அழுவு இல்லாட்டி
எங்கேயாவது பூகம்பம் வந்தால்
அந்தப் பக்கந் திரும்பி அழுவு என்பார்கள்.
அமெரிக்க இரட்டைக் கோபுரம் இடிந்து வீழ்ந்த
போது அழுதுத் துடித்த இலம்பாடிகளுக்கு
ஈழப்படுகொலைகள் அழுகையைத் தரவில்லை.
முதன் முதலா இந்த இலம்பாடிக் கூட்டத்தைப்
பார்த்தவர்களுக்கு இது தலையைச் சுற்றுகின்ற விதயம்.
இலம்பாடிமாயையில் வீழ்ந்துவிட்டவர்களுக்கு ஒன்றும்
சலனமிருக்காது. ஆனால் இந்த இலம்பாடிக்
கூட்டத்தைப் பலநாளும் பார்த்து வருபவர்களுக்கு
நன்கு இது புரியும்.
இப்படி இன்னும் நிறைய ஆயுதங்களை
இலம்பாடிகளிடம் காணலாம். அவற்றைப் பயன்படுத்தி
நல்ல தமிழ் மக்களைக் குழப்பிவிட்டு அவர்களையும்
இலம்பாட வைத்து விடுகிறார்கள் என்று சொல்லி நிறைவாக:
"தமிழினத்தில் இரண்டே இரண்டுதான் சாதிகள்
ஒன்று தமிழ்ச்சாதி; பிறிது தமிழ் இலம்பாடிச் சாதி"
"இலம்பாடிச் சாதியிடம் ஒருமித்த இராகம் இருக்கிறது;
தமிழ்ச் சாதி ஒன்றுக் கொன்று முரண்படுகிறது"
தமிழ் தமிழினம் என்று வரும்போது
"இது எனக்கு ஏற்பு - அது பரவாயில்லை -
அது பற்றிக் கவலையில்லை"
என்ற அணுகுமுறையை தமிழ்ச் சாதி
கைவிட்டு தமிழ் இலம்பாடிகளிடம் இருந்து
தமிழையும், இலம்பாடி மாயையில் வீழ்ந்திருக்கிற
தமிழர்களையும் மீட்கவேண்டிய "முழு"
பொறுப்பினை உணரவேண்டும்.
இலம்பாடித்தனம் என்பது பார்ப்பனீயம்தானே
என்று கருதிவிடக் கூடாது. பார்ப்பனீயம் என்பது
இலம்பாடியத்தின் ஒரு உள் பகுதி
அவ்வளவுதான். பார்ப்பனீயத்தைக் கடந்தது
இலம்பாடியம். பார்ப்பனீயத்தின்
எல்லைகளைவிட இலம்பாடியத்தின்
எல்லைகள் மிகப் பெரிது. அணிமைய
ஈழத் துயருக்குக் காரணம்
பார்ப்பனீயம் மட்டும் அல்ல;
இலம்பாடியம்தான் முக்கிய காரணம்!
பார்ப்பனீயம் என்று பேசுவீர்களாயின்,
அது ஒரு சாதிக்கு சொந்தமல்ல என்றாலும்
சாதிக்குள் நுழைய விட்டு விடுகிறது.
அதிலே தமிழ் மக்களும் ஆர்வலர்களும்
அதைத் தாண்டி நடைபெறுகின்ற இலம்பாடியத்தைக்
காணாமல் விட்டு விடுகிறார்கள்.
பார்ப்பனீயம் என்று பேசினால் பெரியார்
திடலைக் காட்டி இலம்பாடிகள் குழப்பி
விடுகிறார்கள். இந்த இலம்பாடியத்தை
விளங்கிக் கொண்டால்தான் எந்த மாற்றும்
சரியாகக் கொணரப்பட முடியும்.
இலம்பாடிகளைச் சமாளிக்கக் கடினமாக
உழைக்க வேண்டியிருக்கிறது.
இலம்பாடியத்தை உணர்ந்து பரப்புதல் வேண்டும்.
இதுவே மாற்றம் வேண்டிகளின் துவக்கம்.
போக வேண்டிய தூரம் நிறைய.
அன்புடன்
நாக.இளங்கோவன்
Labels:
இலம்பாடிகள்,
குமுகம்,
சமற்கிருதம்,
சொற்கள்,
தமிழகம்-ஈழம்,
தமிழ்
Thursday, February 19, 2009
நாராயணமூர்த்தி பின்வாங்கல்: தமிழ் இன, இணைய வெற்றி!
இன்போசிசு நாராயண மூர்த்தி
கொலைகாரச் சிங்கள நாட்டுக்கு
உதவ முன்போய் தற்போது
பின்வாங்கியிருக்கிறார்.
இது இந்தியப் பெருவணிகர்கள்
மேலும் மேலும் ஆசைகளை அங்கே
விதைக்காமல் இருப்பதற்கு உதவும்.
"அதுமட்டுமல்லாது, நாராயணமூர்த்தி
போல் பிற துறைகளில் உள்ளோர்
கொலைக்கரங்களோடு கூட்டணி போடுவதைத்
தமிழினத்தார் விழிப்போடு இருந்து
தவிர்க்கச் செய்தற்கும் உதவும். "
முக்கியமாக, தமிழிணைய விண்ணப்ப
முயற்சிக்குக் கிடைத்த முதல் வெற்றி
என்று சொன்னால் மிகையன்று.
தமிழினத்தின் முதல் வெற்றி என்று
இதனைக் கருத்தில் கொண்டு தமிழினம்
திரண்டு நிற்க வேண்டும் என்ற
செய்தியையே இது சொல்கிறது.
மூர்த்தியைப் பின்னெடுக்கச் சொல்லி
விண்ணப்பம் செய்து அந்த விண்ணப்பத்தை
வெற்றியடையச் செய்த நண்பர்
திரு.பெரியண்ணன் சந்திரசேகரன்
(perichandra@yahoo.com) அவர்களை
மனமாரப் பாராட்ட வேண்டும்.
சந்திரரின் அந்த எழுத்துகள்
ஊன்றிக் கவனிக்கப்படவேண்டியவை.
அவர் எழுதிய விண்ணப்பத்தைச்
சுட்டிக் காட்டியே ஆங்கில
செய்தித் தளங்கள் செய்தி
வெளியிட்டிருக்கின்றன.
=========================================================
>> செய்திகளில் இணையக்கோரிக்கையை நேரடியாகவே சான்று சொல்கின்றனர்:>> http://www.mid-day.com/news/2009/feb/180209-murthy-snub-lanka-offer-it.htm>> அதில்:>> ">>>> Amid reports that he had accepted the offer came an online petition>> which urged him to refuse the offer because Sri Lanka is "perpetrating>> extraordinary violence on hundreds of thousands of innocent Tamil>> civilians under the guise of fighting armed liberation fighters in the>> island.">>>>>>>> The petition further urged Murthy to express his "anguish over the>> situation of the Tamil ethnic minority there" and "serve as a role>> model for the Indian IT industry."">>>> இன்னொன்றிலும்:>>>> http://www.ciol.com/News/News-Reports/Murthy-declines-to-become-Sri-Lankas-IT-advisor/18209116240/0/>> ">> Though there were re;ports that Murthy had accepted the invitation, it>> was not received well from some quarters as some people had felt Sri>> Lankan Government is perpetrating violence on thousands of Tamil>> civilians under the guise of fighting armed liberation fighters in the>> island. And they had urged Murthy not to accept the post.">>
===================================================================
ஆகவே, தமிழினத்தின் வெற்றி துவங்கி விட்டது என்று நம்பிக்கை கொள்வோம்.
நல்ல தமிழ் முயற்சிகளுக்கு என்றும் ஆதரவு தரும் தமிழ் இணைய/பதிவு உலகத்தின் வெற்றியும் ஆகும் இது.
திரு.பெரி.சந்திரசேகரன் அவர்கள் எழுதி வென்ற விண்ணப்பம் : http://www.petitiononline.com/infosys/petition.html
அன்புடன்
நாக.இளங்கோவன்
கொலைகாரச் சிங்கள நாட்டுக்கு
உதவ முன்போய் தற்போது
பின்வாங்கியிருக்கிறார்.
இது இந்தியப் பெருவணிகர்கள்
மேலும் மேலும் ஆசைகளை அங்கே
விதைக்காமல் இருப்பதற்கு உதவும்.
"அதுமட்டுமல்லாது, நாராயணமூர்த்தி
போல் பிற துறைகளில் உள்ளோர்
கொலைக்கரங்களோடு கூட்டணி போடுவதைத்
தமிழினத்தார் விழிப்போடு இருந்து
தவிர்க்கச் செய்தற்கும் உதவும். "
முக்கியமாக, தமிழிணைய விண்ணப்ப
முயற்சிக்குக் கிடைத்த முதல் வெற்றி
என்று சொன்னால் மிகையன்று.
தமிழினத்தின் முதல் வெற்றி என்று
இதனைக் கருத்தில் கொண்டு தமிழினம்
திரண்டு நிற்க வேண்டும் என்ற
செய்தியையே இது சொல்கிறது.
மூர்த்தியைப் பின்னெடுக்கச் சொல்லி
விண்ணப்பம் செய்து அந்த விண்ணப்பத்தை
வெற்றியடையச் செய்த நண்பர்
திரு.பெரியண்ணன் சந்திரசேகரன்
(perichandra@yahoo.com) அவர்களை
மனமாரப் பாராட்ட வேண்டும்.
சந்திரரின் அந்த எழுத்துகள்
ஊன்றிக் கவனிக்கப்படவேண்டியவை.
அவர் எழுதிய விண்ணப்பத்தைச்
சுட்டிக் காட்டியே ஆங்கில
செய்தித் தளங்கள் செய்தி
வெளியிட்டிருக்கின்றன.
=========================================================
>> செய்திகளில் இணையக்கோரிக்கையை நேரடியாகவே சான்று சொல்கின்றனர்:>> http://www.mid-day.com/news/2009/feb/180209-murthy-snub-lanka-offer-it.htm>> அதில்:>> ">>>> Amid reports that he had accepted the offer came an online petition>> which urged him to refuse the offer because Sri Lanka is "perpetrating>> extraordinary violence on hundreds of thousands of innocent Tamil>> civilians under the guise of fighting armed liberation fighters in the>> island.">>>>>>>> The petition further urged Murthy to express his "anguish over the>> situation of the Tamil ethnic minority there" and "serve as a role>> model for the Indian IT industry."">>>> இன்னொன்றிலும்:>>>> http://www.ciol.com/News/News-Reports/Murthy-declines-to-become-Sri-Lankas-IT-advisor/18209116240/0/>> ">> Though there were re;ports that Murthy had accepted the invitation, it>> was not received well from some quarters as some people had felt Sri>> Lankan Government is perpetrating violence on thousands of Tamil>> civilians under the guise of fighting armed liberation fighters in the>> island. And they had urged Murthy not to accept the post.">>
===================================================================
ஆகவே, தமிழினத்தின் வெற்றி துவங்கி விட்டது என்று நம்பிக்கை கொள்வோம்.
நல்ல தமிழ் முயற்சிகளுக்கு என்றும் ஆதரவு தரும் தமிழ் இணைய/பதிவு உலகத்தின் வெற்றியும் ஆகும் இது.
திரு.பெரி.சந்திரசேகரன் அவர்கள் எழுதி வென்ற விண்ணப்பம் : http://www.petitiononline.com/infosys/petition.html
அன்புடன்
நாக.இளங்கோவன்
Labels:
அரசியல்,
குமுகம்,
தமிழகம்-ஈழம்
Subscribe to:
Posts (Atom)