புகார்:
இந்திர விழவூரெடுத்த காதை:
அலைநீராடை மலைமுலையாகத்து
ஆரப்பேரியாற்று மாரிக்கூந்தல்
கண்அகன் பரப்பின் மண்ணக மடந்தை....
நிலமகளுக்கு, அலைமோதும் கடலை ஆடையாக்கி, ஓங்கி உயர்ந்த மலைகளை முலைகளாக்கி, அம்மலை வழிவரும் ஆறுகளை கழுத்தில் அணியும் மாலைகளாக்கி, அம்மலைமுடி மோதும் மேகங்களைக் கூந்தலா
க்கி, நிலமகளை அழகுபார்த்திருக்கும் சிலம்புக் கவிஞனின் கற்பனையில் கரைந்து கொண்டே, பூபாகத்தின் ஒருபகுதியாம் பூம்புகாரின் இரு பகுதிளான மருவூர்ப் பாக்கத்தையும், பட்டினப் பாக்கத்தையும் கவிநதஅடிகளில் விவரிக்கும் ஆசிரியரின் பாங்கை படிப்போர்க்குக் கவிஇன்பத்தை அள்ளி அள்ளி அளிப்ப
தாடு, சொல்லவரும் கருத்தை அணு அணுவாக ஆராய்ந்து அதன் முழுமையை வெளிப்படுத்தும் வழிமுறையை கற்பிப்பதாகவும் இருக்கிறது.
க்கி, நிலமகளை அழகுபார்த்திருக்கும் சிலம்புக் கவிஞனின் கற்பனையில் கரைந்து கொண்டே, பூபாகத்தின் ஒருபகுதியாம் பூம்புகாரின் இரு பகுதிளான மருவூர்ப் பாக்கத்தையும், பட்டினப் பாக்கத்தையும் கவிநதஅடிகளில் விவரிக்கும் ஆசிரியரின் பாங்கை படிப்போர்க்குக் கவிஇன்பத்தை அள்ளி அள்ளி அளிப்ப
தாடு, சொல்லவரும் கருத்தை அணு அணுவாக ஆராய்ந்து அதன் முழுமையை வெளிப்படுத்தும் வழிமுறையை கற்பிப்பதாகவும் இருக்கிறது.
நீளம் அதிகம் எனினும், கவிச்சுவைக்காக, இந்த இரு பகுதிகளிலும் வாழ்ந்த பலதரப்பட்ட மக்களை கவிஞர் விவரிப்பதை படித்தல், மகிழ்தல்!
மருவூர்ப்பாக்கம்.
--------------------
வேயாமாடமும் வியன்கல இருக்கையும்
மான்கண் காலதர் மாளிகை இடங்களும்
கயவாய் மருங்கில் காண்போர்த் தடுக்கும்
பயன்அறவு அறியா யவனர் இருக்கையும்;
கலம்தரு திருவின் புலம்பெயர் மாக்கள்
கலந்துஇருந்து உறையும் இலங்குநீர் வரைப்பும்
வண்ணமும் சுண்ணமும் தண்நறுஞ் சாந்தமும்
பூவும் புகையும் மேவிய விரையும்
பகர்வனர் திரிதரு நகர வீதியும்
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டும் நுண்வினைக் காருகர் இருக்கையும்;
தூசும் துகிரும் ஆரமும் அகிலும்
மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும்
அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா
வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்
பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு
கூலம் குவித்த கூல வீதியும்;
காழியர் கூவியர் கள்நொடை யாட்டியர்
மீன்விலைப் பரதவர் வெள்உப்புப் பகருநர்
பாசவர் வாசவர் பல்நிண விலைஞரோடு
ஓசுநர் செறிந்த ஊன்மலி இருக்கையும்;
கஞ்ச காரரும் செம்புசெய் குநரும்
மரங்கொல் தச்சரும் கருங்கைக் கொல்லரும்
கண்ணுள் வினைஞரும் மண்ஈட் டாளரும்
பொன்செய் கொல்லரும் நன்கலம் தருநரும்
துன்ன காரரும் தோலின் துன்னரும்
கிழியினும் கிடையினும் தொழில்பல பெருக்கிப்
பழுதுஇல் செய்வினைப் பால்கெழு மாக்களும்
குழழினும் யாழினும் குரல்முதல் ஏழும்
வழுஇன்றி இசைத்து வழித்திறம் காட்டும்
அரும்பெறல் மரபின் பெரும்பாண் இருக்கையும்;
சிறுகுறுங் கைவினைப் பிறர்வினை யாளரொடு
மறுஇன்றி விளங்கும் மருவூர்ப் பாக்கமும்; ......
பட்டினப்பாக்கம்:
--------------------
கோவியன் வீதியும் கொடித்தேர் வீதியும்
பீடிகைத் தெருவும் பெருங்குடி வாணிகர்
மாட மறுகும் மறையோர் இருக்கையும்
வீழ்குடி உழவரொடு விளங்கிய கொள்கை
ஆயுள் வேதரும் காலக் கணிதரும்
பால்வகை தெரிந்த பன்முறை இருக்கையும்;
திருமணி குயிற்றுநர் சிறந்த கொள்கையொடு
அணிவளை போழுநர் அகன்பெரு வீதியும்;
சூதர் மாகதர் வேதா ளிகரொடு
நாழிகைக் கணக்கர் நலம்பெறு கண்ணுளர்
காவல் கணிகையர் ஆடல் கூத்தியர்
பூவிலை மடந்தையர் ஏவல் சிலதியர்
பயில்தொழில் குயிலுவர் பன்முறைக் கருவியர்
நகைவே ழம்பரொடு வகைதெரி இருக்கையும்;
கடும்பரி கடவுநர் களிற்றின் பாகர்
நெடுந்தேர் ஊருநர் கடுங்கண் மறவர்
இருந்துபுறம் சுற்றிய பெரும்பாண் இருக்கையும்;
பீடுகெழு சிறப்பின் பெரியோர் மல்கிய
பாடல்சால் சிறப்பின் பட்டினப் பாக்கமும்; ..
மருவூர்ப்பாக்கத்திலே தொழில் செய்வோர், வணிகம் செய்வோர், பிறர் இடு பணிகள் செய்வோர் சேர்ந்து வாழ்ந்ததாகவும்.
(சிறுகுறுங் கைவினைப் பிறர்வினை யாளரொடு
மறுஇன்றி விளங்கும் மருவூர்ப் பாக்கம் )
பட்டினப்பாக்கத்திலே அரசர், அரசுப்பணி செய்வோர், போர்ப்பணி செய்வோர், அவர்களுக்கு சுகம் அளிப்போர் மற்றும் ஏவல் செய்வோர் வாழ்ந்துவந்ததாயும் அறிய முடிகிறது.
(பீடுகெழு சிறப்பின் பெரியோர் மல்கிய
பாடல்சால் சிறப்பின் பட்டினப் பாக்கம்)
அன்புடன்
நாக.இளங்கோவன்
14-சூன்1999
No comments:
Post a Comment