Pages

Wednesday, February 24, 1999

சிலம்பு மடல் 7

சிலம்பு மடல் - 7: தலைக்கோலி மாதவி!
புகார்:
அரங்கேற்றுக்காதை:

ஆடலுக்குத் தயார் செய்யப்பட்ட அரங்கத்தினுள் மாதவி தன் வலக்காலை முதலில் வைத்து
வருகிறதாக சிலம்பு சொல்கிறது.

"இயல்பினின் வழாஅ இருக்கை முறைமையின்
குயிலுவ மாக்கள் நெறிப்பட நிற்ப
வலக்கால் முன்மிதித்து ஏறி அரங்கத்து
வலத்தூண் சேர்தல் வழக்குஎனப் பொருந்தி"

அரசர் உள்ளிட்ட அனைவரும் அவரவர் தகுதிக்கேற்ப அளிக்கப்பட்டிருந்த/ஒதுக்கப்பட்டிருந்த
இடத்தில் அமர்ந்திருக்க இசைக்கருவியாளர் (குயிலுவமாக்கள்) முறைப்படி நிற்க மாதவி
தன்வலக்காலை முன்வைத்து மேடையேறி வலத்தூண் அருகில் சென்று நிற்கிறாள்.

இசைக்கு இலக்கணம், ஆடும் அரங்கத்திற்கு ஒரு தரம் மற்றும் முறை, இவையெல்லாம் இருக்கையிலே ந
஡ட்டியமாடப் போகிறவர் நடந்து செல்வதற்கும் ஒரு முறை (வலக்கால் முன்வைத்து) இருப்பது தவறில்லை;
ஆயினும் சிந்தித்துப் பார்க்குங்கால் தொன்று தொட்டு தமிழ் மண்ணில் வாழும் 'வலது காலை எடுத்து ந
வத்து வா, வா' என்ற மூடநம்பிக்கையாக இருக்குமோ என்றும் எண்ண வாய்ப்பிருக்கிறது.

இடத்தூண் சேரவேண்டிய ஆடி முதிர்ந்த மகளிர்க்கும் இந்நெறி பொருந்தும்; அதாவது வலக்கால்
முன்வைத்தேறி இடத்தூண் சேர்தல்;

"இந்நெறி வகையால் இடத்தூண் சேர்ந்த தொல்நெறி இயற்கைத் தோரிய மகளிரும்"

ஆகமொத்தம் மேடையில் ஏறினால் வலக்காலை வைத்து ஏறுதல் என்ற பழக்கம் தொன்று தொட்டு இருந்
திருக்கிறது.
(பிறந்தவுடன் மனிதனுக்கு நம் மண்ணில் போதிக்கப்படும் சில பழக்க வழக்கங்களில் வலக்கை,
இடக்கை உபயோகங்கள் மிக முக்கியமானவை. இடக்கையால் யாரிடமாவது எதையா
வது வாங்குவது அல்லது கொடுப்பது பெரும் அவமதிப்புகளில் ஒன்றாக இன்றைக்கும் கருத
ப்பட்டு வருகிறது. பிறந்தவுடனேயே கைகளுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கப் பட்டுவிடு
கிறது!)

ஆடுகிறாள் மாதவி! அரசன் மகிழ்ந்துவிட்டான்! ஆயிரத்தெட்டுக் கழஞ்சு பொன்னும் பரிசாய்
பெற்றுவிட்டாள் மாதவி!; தலைக்கோலி என்ற பட்டத்தோடு சேர்த்து!

"தலைக்கோல் எய்தித் தலைஅரங்கு ஏறி
விதிமுறைக் கொள்கையின் ஆயிரத்து எண்கழஞ்சு
ஒருமுறை யாகப் பெற்றனள்"

மாதவியின் தாய், கூனி என்பவள் மூலமாக "ஆயிரத்தெட்டு கழஞ்சு பொன்னை விலை கொடுத்து வா
ங்குபவர் மாதவியை மணக்கலாம்" என்று அறிவிக்கிறாள்! எங்கு என்றால், பணம் படைத்த இளைஞர்
வரும் வீதியில்!

"மாலை வாங்குநர் சாலும்நம் கொடிக்குஎன
மான்அமர் நோக்கிஓர் கூனிகைக் கொடுத்து
நகர நம்பியர் திரிதரு மறுகில்
பகர்வனர் போல்வதோர் பான்மையின் நிறுத்த
மாமலர் நெடுங்கண் மாதவி மாலை
கோவலன் வாங்கிக் கூனி தன்னொடு
மணமனை புக்கு மாதவி தன்னொடு"

பல நற்குணங்களைக் கொண்ட மாதவி ஒருவேளை பன்னிரண்டு வயதில்லாமல் மேலும் அதிக வயதினள
஡க இருந்திருந்தால் தான் வியாபாரம் செய்யப்பட்டதிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொ
ண்டிருப்பாளோ !?

அந்த அறிவிப்பைக் கேட்ட கோவலன் அம்மாலையை வாங்கி மாதவியொடு, கண்ணகியை மறந்து காத
ல்வாழ்க்கையின் இரண்டாவது பகுதியை ஆரம்பிக்கிறான்!

அக்காலக்கட்டத்தில் தலைவன் தலைவியைப் பிரிவதற்கு சொல்லப்பட்ட/ஏற்கப்பட்டக் காரணங்
களில் 'பரத்தையைச் சேர தலைவியைப் பிரிதல்' என்ற காரணமும் உண்டு. பொருளதிகாரத்தில்
இச்செய்தி விளக்கமாகக் காணப்படுகிறது.

ஆணுக்கொரு நீதி பெண்ணுக்கொரு நீதி என்று இருந்த காலத்தில் இருந்து நாம் இன்று வெகுதூரம் முன்
னேறியிருக்கிறோம். ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒழுக்கத்தைப் போற்றும் நிலைக்கு வளர்ந்துள்ளோம்.

அன்புடன்
நாக.இளங்கோவன்
24-பிப்ரவரி-1999

No comments: