Pages

Wednesday, February 24, 1999

சிலம்பு மடல் 6

சிலம்பு மடல் - 6 நாட்டிய அரங்கம்!
புகார்:
அரங்கேற்றுக்காதை:

சிறப்புடைய நாட்டியக் குழுவுடன், மாதவி நாட்டியமாடப் போகும் ஆடல் அரங்கத்தின் அமைப்பிற்கும்
இன்றைய அரங்கத்தின் அமைப்புக்களுக்கும் வேறுபாடு எதுவும் இல்லை என்றுசொல்லலாம். சாதாரண ந
஡டக மேடை போன்றே அமைக்கப் பட்டிருக்கிறது.

ஆயினும், இளங்கோவடிகள் இதை எடுத்துக் கூறியிருக்கும் விதம் மிக அருமை. கலை நூலாசிரியர் கூறி
யுள்ள இயல்புகளிலிருந்து வேறுபடாமல், ஏற்ற ஒரு இடத்தை அரங்கம் அமைக்கத் தேர்ந்தெடுத்து, புண்
ணிய மலைகளில் (பொதிய) ஓங்கி வளர்ந்த ஒரு கணுவுக்கும் மற்றொரு கணுவுக்கும் இடையே ஒருசாண்
நீளம்
கொண்ட மூங்கில்களைக் கொணர்ந்து, அரங்கம் அளக்கும் அளவுகோல் செய்யப்பட்டிருக்கிறது

"எண்ணிய நூலோர் இயல்பினின் வழாஅது
மண்ணகம் ஒருவழி வகுத்தனர் கொண்டு
புண்ணிய நெடுவரைப் போகிய நெடுங்கழைக்
கண்ணிடை ஒருசாண் வளர்ந்தது கொண்டு"

அந்த அளவுகோலானது நன்கு வளர்ந்த சராசரி மனிதனின் பெருவிரலில் இருபத்திநான்கு அளவுகள் ந
ணளம் கொண்டது.

"நூல்நெறி மரபின் அரங்கம் அளக்கும்
கோல்அளவு இருபத்து நால்விரல் ஆக",

பெருவிரலின் நீளம் மூன்று அங்குலம் என்று கொண்டால், அளவுகோலின் நீளம் ஆறு அடி ஆகிறது.
அந்தக் கோலால் அளந்து 42 அடி அகலம் (எழுகோல்), 48அடி நீளம்(எண்கோல்), ஆடும் அரங்கத்தின்
அடிப்பலகை தரையிலிருந்து 6 அடி உயரத்தில் இருக்க, அதற்கும் உத்தரப் பலகைக்கும் இடைவெளி 24
அடி ஆக,
நாட்டிய மேடை அமைக்கப் பட்டிருக்கிறது.

"எழுகோல் அகலத்து எண்கோல் நீளத்து
ஒருகோல் உயரத்து உறுப்பினது ஆகி
உத்தரப் பலகையொடு அரங்கின் பலகை
வைத்த இடைநிலம் நாற்கோல் ஆக"

உள்ளே வெளியே செல்ல இரண்டு வாயில்களுடனும், அனைவரும் வணங்குமாறு பூதங்களை எழுதி ஧
மல்நிலத்தில் அமைத் திருக்கின்றனர். அதோடு அரங்கத்தைத் தாங்கிநிற்கும் தூண்களின் நிழல் அரங்கி
லும், அவையிலும் விழாதவாறு நிலைவிளக்குகள் அமைக்கப் பட்டிருக்கின்றன.

நாடக மேடையில் இன்று காண்பது போலவே திரைகள் அமைக்கப் பட்டிருக்கின்றன. மேடையின் ஒ
ருபக்கமிருந்து மறுபக்கம் செல்லுமாறு அமைக்கப்பட்ட ஒருமுகத்திரை ( எழினி = திரை), இரண்டு பக்க
மிருந்தும் நடுவை நோக்கி வருமாறு அமைக்கப்பட்ட இருமுகத்திரை, மேலிருந்து கீழ்வரும் கரந்துவரல்த்
திரை என்ற இம்மூவகைத் திரையும் ஆங்கு அமைக்கப் பட்டிருந்தது.

"ஏற்ற வாயில் இரண்டுடன் பொலியத்
தோற்றிய அரங்கில் தொழுதனர் ஏத்தப்
பூதரை எழுதி மேல்நிலை வைத்துத்
தூண்நிழல் புறப்பட மாண்விளக்கு எடுத்தாங்கு
ஒருமுக எழினியும் பொருமுக எழினியும்
கரந்துவரல் எழினியும், புரிந்துடன் வகுத்தாங்கு"

அரங்கம் அமைக்கப் பட்டது என்பதைச் சொல்ல, இடத்தேர்வு, மரம் எடுக்கப்பட்ட இடம், அளவுகோல்
செய்யப்படும்முறை நீள அகல அளவுகள், பொருத்தப்பட்ட இதர அமைப்புகள் இவைகளுடன் விளக்கியி
ருப்பது எதிர்கால சந்ததியினரை மனதில் கொண்டு எந்நாளும் விளங்குமாறு அமைத்திருப்பது, கவிஞர்க
ள், புலவர்கள் அல்லது வரலாற்றை எழுத்தில் அமைப்போர் போன்றவர்களுக்கு "காலத்தில் சிதையாத"
எழுத்துக்களை எப்படி எழுதவேண்டும் என்பதற்கு ஒரு பாடமாக அமைகிறது என்று சொன்னால் அது
மிகையாகாது.

அன்புடன்
நாக.இளங்கோவன்
24-பிப்ரவரி-1999

No comments: