Pages

Saturday, January 23, 1999

சிலம்பு மடல் 2

சிலம்பு மடல் - 2: கோவல கண்ணகி மணம்
புகார்:
மங்கல வாழ்த்துப் பாடல்:

முரசுகள் ஒலித்தன; மத்தளங்கள் அதிர்ந்தன; சங்குகள் முழங்கின; அரசன் உலாச் சென்றது போல
வெண்குடைகள் எழுந்தன; மங்கல நாண் ஊரை வலம் வந்தது.

முரசியம்பின முருடுஅதிர்ந்தன முறைஎழுந்தன
பணிலம் வெண்குடை அரசெழுந்ததொர்
படியெழுந்தன, அகலுள்மங்கல் அணிஎழுந்தது;

திருமண மண்டபம்;

உச்சியிலிருந்து (சென்னி) கீழாகத் தொங்கவிடப் பட்ட மாலைகளால் அலங்கரிக்கப் பட்டிருந்த மண்ட
பத்தை வயிர மணித் தூண்கள் தாங்கிக் கொண்டிருந்தன.

அம்மண்டபத்தில், முத்துப் (நித்திலம்) பந்தலில்(பந்தர்) மேற்கட்டியாக(விதானம்) நீலப்பட்டு கட்ட
ப்பட்டிருந்தது. அப்பந்தலிலே, அருந்ததி(சாலி) போன்ற கற்புடைய கண்ணகிக்கும், கோவலனுக்கும் வ
஡ன் தவழ் நிலா உரோகினியைச் சேர்கின்ற நல்ல வேளையிலே, முதிய பார்ப்பனர் ஒருவர் மறைவழிச்
சடங்குகளைச் செய்து திருமணத்தை நடத்திவைக்கும் காட்சியைக் காண்கின்ற கண்கள் செய்த தவம் எ
த்துனையோ ?

மாலைதாழ் சென்னி வயிரமணித் தூணகத்து
நீல விதானத்து நித்திலப் பூம் பந்தர்க்கீழ்
வானூர் மதியம் சகடுஅணைய வானத்துச்
சாலி ஒருமீன் தகையாளைக், கோவலன்,
மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்
தீவலம் செய்வது காண்பார்கள் நோன்புஎன்னை ?

மணம் இப்படி முடிய, வாழ்த்துகின்ற மங்கையர்தாம் எத்துனைபேர்; நறுமணப் பொருள்களுடன் சிலர் (வி
ரையினர்), மலர்களுடன் சிலர், அழகிய புனைவால் ஒளிவீசும் மேனியராய்ச் சிலர் (விளங்கு மேனியர்), ப
஡ராட்டுமொழிகளுடன் சிலர் (உரையினர்), பாடிக்கொண்டு சிலர், ஓரக்கண் நாணப் பார்வையுடன் சிலர் (ஒ
சிந்த நோக்கினர்), சந்தனம் தெளித்துச் சிலர், நறுமணப் புகையுடன் சிலர், அசையும் மாலைகளை ஏந்திச்
சிலர், அண்ணாந்துயர்ந்த முலைகளைக் கொண்ட ஆரணங்குகள் சிலர், (ஏந்திள முலையினர்), நறுமணப்
பொடியுடன் (இடித்த சுண்ணம்) சிலர், விளக்குகளைச் சுமந்தபடி சிலர், அணிகலன் சுமந்த சிலர், முளைந
ன்கு விடுத்த முளைப்பாலிகையைச் சுமந்தவர் சிலர், (இன்றும் ஊர்களில் முளைப்பாரி என்று சொல்லப்
படுவது) என்று இப்படி பல மங்கையர் சூழ்ந்து "தீமை இல்லாமலும்/செய்யாமலும், இணைபிரியாமலும்" வ
஡ழ்க என்று வாழ்த்தி, பள்ளியறைப் படுக்கையில் இருத்தினர்: (மங்கல நல் அமளி )

விரையினர், மலரினர், விளங்கு மேனியர்,
உரையினர், பாட்டினர், ஒசிந்த நோக்கினர்,
சாந்தினர், புகையினர், தயங்கு கோதையர்,
ஏந்து இள முலையினர், இடித்த சுண்ணத்தர்,
விளக்கினர், கலத்தினர், விரிந்த பாலிகை
முளைக்குட நிரையினர், முகிழ்த்த மூரலர்
போதொடு, விரிகூந்தல் பொலன்நறுங் கொடி
அன்னார்,

காதலற் பிரியாமல் கவவுக்கை ஞெகிழாமல்
தீதுஅறுக எனஏத்திச், சின்மலர் கொடுதூவி,
அங்கண் உலகின் அருந்ததி அன்னாளை
மங்கல நல்அமளி ஏற்றினார்:

திருமண நிகழ்ச்சியில் இசைக்கப் படும் கருவிகளில் ஒன்றாக சங்கும் இருந்திருக்கிறது; தற்போது அக்க
ருவி உபயோகப் படுத்தப்படுகிறதா என்று தெரியவில்லை.

கோவலனுக்கும் கண்ணகிக்கும் நடைபெற்ற திருமணம் பெரும்பான்மையாக உள்ள இன்றைய வழக்கப்
படியே நடந்திருக்கிறது;

முது பார்ப்பனர் மறைவழிகாட்ட, தீ வலம் வந்தாலும், 'தேவர்கள் மலர் மாரி பொழிந்தனர்', 'பூதகணங்கள்
வாழ்த்தின' போன்ற, சில இலக்கியங்களில் பொதுவாகக் காணப்படும் கதைகள் சிலம்பின் அடிகளில் கா
ணப்பட வில்லை.

கோவலன் மற்றும் கண்ணகி சமண சமயத்தைத் தழுவியவர்களாகக் காணப்படுகையில், அவர்தம் திரும
ணத்தை மாமுது பார்ப்பனர் ஒருவர் நடத்தி வைப்பது சமண சமயத்திலும் சடங்குகள் செய்து வைக்கும்
சமண பார்ப்பனர் இருந்திருக்கூடும் என்று எண்ணச் செய்கிறது.

பொருளதிகார இலக்கணத்தில் மண வாழ்வை எட்டு வகையாகப் பிரிக்கிறார்கள்.

பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், காந்தருவம், அசுரம், இராக்கதம்,பைசாசம் என்பன அவை.
இவற்றுள் அசுரம், இராக்கதம், பைசாசம் முதலியவற்றைக் கைக்கிளை யென்கிறார்கள் ( ஒருதலைக்காமம்).

காந்தருவத்தை மட்டுமே ஐந்திணை ஒழுக்கத்தின் பாற்பட்ட திருமணம் என்கின்றனர் இலக்கண ஆசிரியர்
கள். மேலும் இதுவே தமிழரிடையே போற்றத் தக்கதாக விளங்கிய மணமுறையாக கூறப்பட்டிருக்கிறது.

'காந்தருவம்' என்றால் 'ஒத்த தலைவனும் தலைவியும் எதிர்ப்பட்டு கூடுவது, கூடிவாழ்வது'; அதாவது கா
தல் மணம். இந்த எண்வகை மணங்கள் எப்போதும் இருந்து வந்திருக்கையில் எத்தனையோ நூற்றாண்டு
களுக்குப் பின்னர் 'இந்த நூற்றாண்டில்' தந்தைப் பெரியார் ஏற்படுத்திய 'சுயமரியாதை' / சீர்திருத்தத் தி
ருமணத்தை ஒன்பதாவது மணவகையாய்க் கொள்தல் சரிதானே!

சீர்திருத்தத் திருமணம் ஒப்புக் கொள்ளப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருத்தலை நாம் கண்கூடாகக் கண்டு
கொண்டு இருப்பது, சில ஆயிரம் ஆண்டுகளாக நடைபெறாததை நடத்திக் காட்டிய தந்தை பெரியார்
அவர்களின் சாதனை என்பதை ஒப்புக்கொள்ளாமல் இருக்க முடியுமா ?

அன்புடன்
நாக.இளங்கோவன்
23-சனவரி-1999

No comments: