Pages

Sunday, January 31, 1999

சிலம்பு மடல் 3

சிலம்பு மடல் - 3: கண்ணகி கோவலன் காதல் வாழ்வு!
புகார்:
மனையறம் படுத்த காதை:

மணம் முடிந்ததும் பள்ளியறையில் இருத்தி வைக்கப் பட்டாள் கண்ணகி!

"கயமலர்க் கண்ணியும் காதல் கொழுநனும்
மயன்விதித் தன்ன மணிக்கால் அமளிமிசை
நெடுநிலை மாடத்து இடைநிலத்து இருந்துழி"

செல்வம் பூத்துக் குலுங்கிய புகாரில், குவளைமலர் போன்ற கண்களையுடைய கண்ணகியும், அவளுடைய
காதற் கணவனும், அடுக்குமாடிகள் கொண்ட வீட்டின் நடுமாடியில் (இடைநிலம்) தேவதச்சனால் ( மயன்,
சிற்பி) செய்யப்பட்ட, மணிகளால் இழைக்கப்பட்ட கால்களைக் கொண்ட கட்டிலின் மீது மகிழ்ந்திருந்தனர்.

இயற்கையின் பரிசாக இவர்களுக்குக் கிடைத்த தென்றலும் தென்றலோடு கலந்த நறுமலர் வாசனையும்
இருவரையும் நிலா முற்றத்திற்குக் கொண்டு செல்கிறது. ஆங்கு பேசிமகிழ்கின்றனர்; கோவலன் கண்ணகி
யைப் பலவாறு பாராட்டுகிறான். அப்பாராட்டு மொழிகளில், மயங்காதப் பெண்மையும் மயங்கிவிடும்!
அவற்றுள் சில;

"மாசுஅறு பொன்னே! வலம்புரி முத்தே!
காசுஅறு விரையே! கரும்பே! தேனே!
அரும்பெறல் பாவாய்! ஆருயிர் மருந்தே!
பெருங்குடி வாணிகன் பெருமட மகளே!
மலையிடைப் பிறவா மணியே என்கோ ?
அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ ?
யாழிடைப் பிறவா இசையே என்கோ ?
தாழிருங் கூந்தல் தையால்! நின்னைஎன்று...."

குற்றமற்ற பொன் போன்று ஒளிர்பவளே! வலம்புரிச் சங்கு ஈன்ற முத்துப் போல் மென்மையானவளே!
குற்றமற்ற மணப் பொருள் போல மணப்பவளே! கரும்பினும் இனிய சுவையானவளே தேன் மொழியாளே!
எனதரிய உயிரை நிலைக்கச் செய்யும் அமுதம் போன்றவளே, பெருமைமிகு வாணிகனின் இளம்மகளே!
உன்னை மலையில் தோன்றா மணியென்பேனா ? கடலில் தோன்றாத அமுதம் என்பேனா ? யாழிலே பி
றவாத இசையென்பேனா ?
என்றும் பாராட்டுகிறான்.

"வேறுபடு திருவின் வீறுபெறக்காண
உரிமைச் சுற்றமொடு ஒருதனி புணர்க்க
யாண்டுசில கழிந்தன இல்பெருங் கிழமையின்!
காண்தகு சிறப்பின் கண்ணகி தனக்குஎன்."

உயர்ந்த பண்புகளைக் கொண்ட கோவலனின் தாயாரால், இல் வாழ்க்கையைக் கண்ணகி, தனியே சிறப்பாக
நடத்துவதைக் காணத் தனிக் குடித்தனம் வைக்கப் பட, இருவரின் வாழ்க்கையும் மிகுந்த இன்பமும் காத
லும் கொண்டதாய் இனிதே சில ஆண்டுகள் கழிகிறது!

அந்த இன்பக்காதல் வாழ்க்கையை நன்கு அனுபவித் திருக்கிறார்கள் கண்ணகியும் கோவலனும். இவர்கள்
இல்லற இன்பத்தை அனுபவித்து எப்படி இன்புற்றிருந்தனர் என்பதை இளங்கோவடிகள் கீழ்க்காணும்
வெண்பாவில் தெரிவிக்கிறார்.

"தூமப் பணிகளொன்றித் தோய்ந்தால் எனஒருவார்
காமர் மனைவியெனக் கைகலந்து-நாமம்
தொலையாத இன்பமெல்லாம் துன்னினார் மண்மேல்
நிலையாமை கண்டவர்போல் நின்று."

மனித வாழ்க்கையில் செல்வம், இளமை, யாக்கை ஆகியவை நில்லாதவை! நிலைக்காதவை! மண்மேல் நி
லையான அந்த நிலையாமையை நன்கு உணர்ந்தவர் போல, இளமை இருக்கும் போதே, இந்த உலகம்
இருக்கும் போதே இளமை இன்பம் முழுவதையும் அனுபவித்து விடவேண்டும் என்ற வேகத்தில், வேட்ந
கயில், கோவலனும் கண்ணகியும் பிணையல் பாம்புகள் எப்படி ஒன்றி காம இன்பம் துய்க்குமோ அப்படி
ஒருவரோடு ஒருவர் பிணைந்து இணைந்து, எல்லையில்லாக் கலவி இன்பத்தினைத் துய்த்து இன்புற்றிருந்த
னர்!

செல்வத்தின் நிலையாமையை உணர்த்த வள்ளுவப் பெருமகனார்,

"அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப வாங்கே செயல்"

என்ற குறள் மூலமாக,

"நில்லா இயல்புடைய செல்வத்தைப் பெற்றால் அதனால் செய்யப் படவேண்டிய அறங்களை அங்கே
அப்பொழுதே செய்துவிடு" என்று சொல்கிறார். காரணம், ஒருவேளை தாமதித்தால் அச் செல்வத்தினால்
ஆகக் கூடிய அறங்கள் நிலையாமையால் ஆகாமல் போகலாம்!

செல்வத்தின் நிலையாமையை வள்ளுவர் உணர்த்தி, அறம் செய்ய அவசரம் வேண்டும், அப்பொழுதே
செய்யப்படல் வேண்டும் என்று கூறுவதைப் போலவே, கண்ணகியும் கோவலனும் இளமையின் நிலையாந
மயை, இவ்வுலகின் நிலையாமையை உணர்ந்தவராக, பெரும் செல்வக் காதலர் இவர், இளமையையும்
அழகையும் ஒருங்கே கொண்டவர், இன்ப வேள்வியில் பிண்ணிப் பிணைந்து காமம் களித்தனர். காலம்
கழித்தனர் இன்பமாக சில ஆண்டுகள்!

அன்புடன்
நாக.இளங்கோவன்
31-சனவரி-1999

No comments: