Pages

Wednesday, April 21, 2010

பாரதிதாசன் வாரம் - 2010

ஏட்டுக்குள் எழுதிவைக்க எத்தனையோ தானிருந்தும் - உன்
பாட்டுப் பரம்பரையே பல்லுடைந்து நிற்குதப்பா!
பல்லுடைந்து நிற்கையிலே பாவேந்த உனைப்பாட - என்
சொல்தளர்ந்து போவதைநான் என்னெவென்று சொல்வேனோ?
சொல்லியழ சொல்லில்லை சொல்லுவதும் ஆருக்கு? - உன்
முல்லைநிகர் முகமதியை முனையளவும் மறக்கவில்லை!
மறந்திட்டேன் நீசுமந்த திரவிடத்தை; நீயிருந்தால் - என்
துறப்பை எப்போதோ செய்திருப்பாய்!; தமிழானேன்!
தமிழிழந்த தமிழாளர் தமிழாகித் தமிழ்வாழ, - உன்
தமிழீழந் தமிழாளும் தமிழ்நாளும் எந்நாளோ?
எந்நாளும் ஏந்திடுவேன் ஏய்ப்பறியா தமிழ்நெஞ்சே, - என்
பொன்னான போராளி, போற்றுகின்றேன் பூதூவி!

அன்புடன்
நாக.இளங்கோவன்
21-04-2010

No comments: