Pages

Sunday, May 06, 2007

பாவேந்தர் பாரதிதாசன் வாரம், விழா, அர்ரியாத் - 2007

04/மே/2007 ஆம் நாள் அர்ரியாத்தில் நினைவில் நிற்கும் நாள்.
புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் புகழ் போற்றும் விழா இந்நகரில் அமைந்தது. அர்ரியாத் தமிழ்ச்சங்கம் சார்ந்த எழுத்துக்கூட மடற்குழுவில் பாரதிதாசன் வாரமாக அவர் நினைவுகள் கூரப்பட்டுப் பின்னர் மே 4 ஆம் நாள், அரேபியாவிற்கான இந்தியத் தூதரும், புதுச்சேரியின் முன்னாள் முதல்வரும் ஆன, மதிப்பிற்குரிய திரு எம்.ஓ.எச். பரூக் மரக்காயர் அவர்களின் தலைமையில் பாரதிதாசன் விழாவாக நடந்தது. அவரோடு புதுவை மாநிலத்தின் கல்வி மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சரான திரு.சாசகான் அவர்கள் கலந்து கொண்டது சிறப்பினைக் கூட்டியது.

கூட்டத்தின் முக்கிய நிகழ்ச்சியாக பாவேந்தரின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செய்தார் மேதகு தூதுவர் அவர்கள். குறிப்பாக சவுதி அரேபிய நாட்டில் நிகழ்ந்த முதல் பாரதிதாசன் விழா இது.

நடைபெற்ற கருத்தாடல்கள் மிகச் சுவையானவை. இந்தியத் தூதர் அவர்கள் புதுவையில் பாவேந்தருக்குச் செய்யப் பட்ட சிறப்புகள் பற்றி நிறைய கூறினார்.

மேதகு தூதுவர் பரூக் மரக்காயர் அவர்கள் பாவேந்தரின் பல பாடல்களைப் பாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். பேரா.மாசிலாமணி, திரு.வெற்றிவேல், திருமதி மலர்ச்செல்வி, திரு.இம்தியாசு, திரு.சயாவுதீன், திரு.மொய்தீன் மற்றும் பலர் இந்தக் கலந்தாடலை மிகப் பயனுள்ளதாக ஆக்கினர்.

அரேபிய மண்ணில் அரேபிய ஆடவர் தொன்ம உடையில் மிடுக்காக வருவது போல, தமிழ் விழாவிற்கு அதே பெருமிதத்தோடு நண்பர்கள் நமது தொன்ம உடையில் வந்தது மிக இனிமையாக இருந்தது பார்ப்பதற்கு.

புதுவை அரசின் தமிழ்த்தாய் வாழ்த்தாக பாவேந்தரின்
"வாழ்வினில் செம்மை..." என்று தொடங்கும் பாடலை சட்டப்படுத்தியிருக்கிறது
என்ற செய்தியை இந்தியத்தூதர் சொன்னது அனைவருக்கும் அறிதலாக
இருந்தது. (கீழே அந்தப் பாடல் தகுதரத்தில் ஒட்டப்பட்டிருக்கிறது).

¾Á¢ú
Å¡úŢɢø ¦ºõ¨Á¨Âî ¦ºöÀÅû ¿£§Â!
Á¡ñÒ¸û ¿£§Â ±ý ¾Á¢úò ¾¡§Â!
Å£úÅ¡¨Ã ţơР¸¡ôÀÅû ¿£§Â
Å£ÃÉ¢ý Å£ÃÓõ, ¦ÅüÈ¢Ôõ ¿£§Â!
¾¡úó¾¢Î ¿¢¨Ä¢ɢø ¯¨É Å¢Îô§À§É¡?
¾Á¢Æý±ó ¿¡Ùõ ¾¨ÄÌÉ¢ §Å§É¡?
Ýúó¾¢ýÀõ ¿ø¸¢Îõ ¨Àó¾Á¢ú «ýÉ¡ö
§¾¡ýÚ¼ø ¿£¯Â¢÷ ¿¡ýÁÈô §À§É¡?
¦ºó¾Á¢§Æ! ¯Â¢§Ã! ¿Ú󧾧É!
¦ºÂÄ¢¨É ã¨É ¯Éì¸Ç¢ò§¾§É!
¨¿ó¾¡ ¦ÂÉ¢ø¨¿óÐ §À¡Ì¦Áý Å¡ú×
¿ýÉ¢¨Ä ¯É즸ɢø ±ÉìÌó ¾¡§É!
Óó¾¢Â ¿¡Ç¢É¢ø «È¢×õ þÄ¡Ð
¦Á¡öò¾¿ý ÁÉ¢¾Ã¡õ ÒÐôÒÉø Á£Ð
¦ºó¾¡Á¨Ãì ¸¡Î âò¾Ð §À¡§Ä
¦ºÆ¢ò¾±ý ¾Á¢§Æ ´Ç¢§Â Å¡Æ¢!
----------


தனிப்பட்ட முறையில், இணைய மடற்குழுக்களான தமிழ்.நெட், தமிழ்-உலகம் என்ற குழுக்களில் பல பாவேந்தர் பாரதிதாசன் வார விழாக்களை நடத்திப் பங்கு பெற்ற எனக்கு இம்முறை எழுத்துக்கூடம் என்ற அர்ரியாத்தின் மடற்குழுவில் முதன்முதலாக பாரதிதாசன் புகழ் போற்றுதலில் பங்கு கொண்டதும், அதன் பின்னர் பாவேந்தர் பிறந்த மாநிலத்தின் மூத்த அரசியலாளராகவும், முன்னாள் முதலமைச்சராகவும், நடுவண் அரசில் அமைச்சராகவும் இருந்த, தற்போது அரேபியாவிற்கான இந்தியத் தூதுவராகவும் இருக்கும் மாண்புமிகு திரு. எம்.ஓ.எச்.பரூக் மரக்காயர் அவர்களின் தலைமையில், புதுவை மாநில அமைச்சர் திரு.சாசகான் அவர்களின் சிறப்பு பங்கேற்றலோடு நடந்த பாவேந்தர் கூட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்பு இவ்வருடம் எனக்குக் கிடைத்தது மகிழ்ச்சியை அளித்தது.

இவற்றை விட மேலாக, தலைமை உள்ளிட்ட கூட்டத்தில் பங்கேற்ற அனைவரிடமும் பாவேந்தர் என்ற சொல்லிடம் காட்டிய அன்பும் உற்சாகமும் கண்டு உள்ளூர உவகை அடைந்தேன். திரளாக வந்திருந்த அனைவருக்கும் தமிழ்ப் புத்தணர்வைக் கொடுத்தார் பாவேந்தர் என்று சொன்னால் மிகையாகாது. நமது அன்புக்குரிய மலேசியக் கவிஞர் கரு.திருவரசு அவர்கள் எப்பொழுதும் எழுதும் , 'வெல்லத் தமிழினி வெல்லும்' என்ற சொற்றொடர் இந்தக் கூட்டத்தில் மிகப் பொருத்தமாக நினைவு கூரப்பட்டது.

மேதகு இந்தியத் தூதுவர் அவர்கள்,

1) பாரதியார் மற்றும் பாரதிதாசன் நூல்கள் அனைத்தையும், சவுதி அரேபியாவில் உள்ள பல வேறு நகரங்களில் உள்ள தமிழ்ச் சங்கங்களுக்குப் புதுவை அரசின் சார்பாக தந்தளித்து இவர்கள் புகழ் பரவச் செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளை புதுவையின் கல்வியமைச்சர் ஏற்றுக் கொண்டு ஆவன செய்வதாக உறுதியளித்துள்ளார்.

2) புதுசை அரசு, பாவேந்தரின் குடும்ப விளக்கு என்ற காவியத்தினை நாடகமாக ஆக்கியிருக்கிறது என்ற தகவலைச் சொல்லி அதன் படிகளையும் இங்குள்ளத் தமிழ்ச் சங்கங்களுக்கு அனுப்பிட ஆவன செய்யவேண்டும் என்ற அவரின் கோரிக்கையையும் கல்வியமைச்சர் ஏற்றுக் கொண்டுள்ளார் என்பது மகிழ்ச்சியான ஒன்று.

குறிப்பாக, இந்திய/தமிழகக் குடும்பக் கலை மற்றும் பண்பாட்டைத் தேட, ஆய முனையும் அரேபிய ஆய்வாளர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும் என்பது மகிழ்ச்சியான விதயம்.

3) பாரதிதாசன் விழா தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் இங்கே நடைபெற வேண்டும் என்ற அவரின் அறிவுரை அனைவராலும் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளப் பட்டது.

மேலும், தமிழ் விழா என்றாலே, தமிழில் தங்கு தடையின்றிப் பேச முடியவில்லையே என்ற ஏக்கம் நிலையாக எங்கும் ஒலிப்பதைக் கண்டு வருகிறோம். அதனை இந்தக் கூட்டத்திலும் என்னால் உணர முடிந்தது. இது ஏறத்தாழ ஒரே இராகத்தோடு கூடிய புலம்பலாக தமிழ்ப்புலங்கள் எங்கனும் கேட்பதை என்னால் உணர முடிந்தது. இந்தப் புலம்பல் பாவேந்தர் காலத்தில் இருந்தே இன்னும் தீராமல் இருக்கிறதே என்று எண்ணி உள்ளூரவும், வெளிப்பட்டும் நகைக்க மட்டுமே முடிகிறது.

அந்த வகையில், அர்ரியாத் தமிழ்ச் சங்கத்தினர் ஆற்றல் கூடம் என்ற அமைப்பையும் தங்களது இதர அமைப்புகளோடு சேர்த்து தமிழ் வளம் கூட்ட ஆரம்பித்திருப்பது ஆறுதலைத் தருகிறது. இது பாவேந்தரின் சொல்லான "எங்கள் தமிழ் உயர்வென்று சொல்லிச் சொல்லிக் காலம் பல கழித்தோம்; குறை களைந்தோமில்லை" என்பதனை மேற்கோளாகக் கொண்டு குறை களைய வளம் கூட்ட எடுத்த நடவடிக்கை அது.

இந்தக் கூட்டத்திலும் எனக்கு பங்குபெற வாய்ப்புக் கிட்டியது. தமிழ் பேசுவதில் தமிழர்களுக்கு இருக்கிற இன்றைய இடர்களைப் பேசியதுடன் அது களையவும் முனைப்பெடுத்தனர்.

தனித்தமிழ்ச் சொல்வளமும், அதனைச் சொல்லும் வளமும் வளரவேண்டியதன் தேவையையும் விரைவையும் திரு.பாலமுகுந்தன் அவர்களும், திரு.இம்தியாசு அவர்களும் திரு.இராசா அவர்களும் வலியுறுத்திப் பேசினதைக் கேட்டு வாய்பிளந்து அமர்ந்திருந்தேன்.

அதனை அடைவதற்கான அணுகுமுறையைப் பேராசிரியர் மாசிலாமணி அவர்கள் மிக அருமையாகவும் கச்சிதமாகவும் வரையறுத்து விளக்கினார். மகிழ்ந்து போனேன்.

ஆற்றல் கூடம் அமைத்ததில் திரு.மு.வெற்றிவேல், பேரா.மாசிலா ஆகியோர் மிகவும் பாராட்டுதற்குரியவர்கள்.

பாவேந்தர் பாரதிதாசன் விழா சிறப்புற நடைபெற ஆர்வத்துடன் உழைத்த அர்ரியாத்தின் தமிழ்ச்சங்கத்தின் கலை இலக்கியக் குழுத் தலைவரான திரு.மு.வெற்றிவேல், சங்கத்தின் தலைவர் திரு.சயாவுதீன், சங்கச் செயலர் திரு.இரா.சுவாமிநாதன், எழுத்துக் கூட ஒருங்கிணைப்பாளர் திரு.கே.வி.இராசா ஆகியோர் மிகவும் பாராட்டுக்குரியவர்கள்.

தமிழ்நாட்டில் இலக்கியக் கூட்டங்களில்
இவ்வளவு பாரதிதாசன் விழாவிற்கு எவ்வளவு பேர் திரளுவார்களோ
அதைவிட அதிகமாகவே இருந்ததாக எனக்கு உணர்வு.

இது ஒரு இனிய சித்திரை மாதம்!

அன்புடன்
நாக.இளங்கோவன்
6 மே 2007

1 comment:

Vassan said...

மனநிறைவு தரும் தகவல். நன்றி நண்பர் இளங்கோவன்.