Pages

Friday, December 15, 2006

பாலசிங்கம் அவர்களின் மறைவுக்கு இரங்கல்

பேராசிரியர் முனைவர் அண்டன் பாலசிங்கம் அவர்களின் மறைவு
உலகவாழ் தமிழ் மக்களுக்கு பேரிழப்பாகும்.

உலக அரங்கில் "தமிழ் " என்ற சொல்லுக்கு முகவரியாய்
வாழ்ந்தவர் பாலசிங்கம்.

இவரின் இழப்பு ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்லாது
தமிழகவாழ் தமிழர்களுக்கும் உலக வாழ் தமிழர்களுக்கும்
வேதனையைத் தந்துள்ளது.

தற்காலத் தமிழ் உலக அரங்கில் இருக்கக் கூடிய
பெரும் தலைவர்களில் பாலசிங்கம் அவர்களும் ஒருவர்.

பாலா அண்ணனை இழந்து வாடும் ஈழத்தமிழர்களின்
துயரத்தில் பங்கு கொள்கிறேன்.

அன்னாரின் ஆன்மா சாந்தி பெறவும், தமிழர்களுக்காக
அவர் ஆற்றிய பெரும் பங்களிப்பு ஆல் போல் தழைத்து
தமிழ் மக்களைக் காத்திட வேண்டும் என்று இறைவனை
வேண்டுகிறேன்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

3 comments:

சுதேசன் said...

அண்ணனின் ஆத்மசாந்திக்காக பிரார்த்திப்போம்

Anonymous said...

//உலக அரங்கில் "தமிழ் " என்ற சொல்லுக்கு முகவரியாய்
வாழ்ந்தவர் பாலசிங்கம்.

உண்மையான வரிகள் இவை ... அன்னாருக்கு என் அஞ்சலிகள்.

Anonymous said...

தமிழரை நேசித்தீர்; அதனால், தங்கள்
உடல் வருத்தம் கூட பெரிதாக்காமல்,
சலியா மனம் கொண்டீர். உரிமைகளை சற்றும் விடாமல், மரியாதயுள்ள தீர்வை நாடினீர்,

தமிழனுக்கு உலக அரங்கில் அரணானீர்!

தலை வணங்கும், கதிரவன்.