Pages

Thursday, February 07, 2013

பக்சனுக்குப் பின் நிற்கின்றாய் கண்ணா!... குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா!

Sri Lankan President Mahinda Rajapaksa and his wife Shiranthi Rajapaksa offer prayers at the ‘Dhwaja Sthambam’ inside the Sri Venkateswara temple complex at Tirumala on Saturday.



குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

தமிழர்க்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
தமிழர்க்குத் தெரியாமல் நின்றாலும் எமக்கு
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

பக்சனுக்குப் பின் நிற்கின்றாய் கண்ணா
கண்ணா, பக்சனுக்குப் பின் நிற்கின்றாய் கண்ணா - உன்னை
பொளத்த காடையர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறை ஒன்றும் எமக்கில்லை கண்ணா

குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
தமிழ் எங்கும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
தமிழ் ஈழம்  இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

சிங்களத்தில் இறங்கி பௌத்தரொடு நிறைந்து
நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா
தமிழ் எங்கும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா


அன்புடன்
நாக.இளங்கோவன்






1 comment:

செல்வா said...

அருமை இளங்கோவன்!
மிக வருத்தம் தரும் செய்தி என்றாலும்
உண்மை நிலையைக் கூறியிருக்கின்றீர்கள்!