Pages

Saturday, December 29, 2012

எனது "தமிழ் அறிதியியல்" சொவ்வறைக்கு அனந்தகிருட்டிணன் விருது!


அன்புடையீர், நேற்று (29/12/12), சிதம்பரம்
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், உத்தமம், அண்ணாமலை பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய 11வது உலகத்தமிழ்
இணைய மாநாட்டில், "An Introduction to Thamizh Informatics and Thamizh Intelligence" என்ற கட்டுரையொடு, "தமிழ் அறிதியியல்" அடிப்படையிலான எனது சொவ்வறையைப்(software) பரத்தீடு செய்யும் வாய்ப்பு அமைந்தது.

நிகழ்ச்சியின் நிறைவு விழாவில், இன்ப அதிர்ச்சியாக
இக்கட்டுரையொடு கூடிய சொவ்வறைக்கு பேரா.மு.அனந்தகிருட்டிணன்
விருது அளித்து உத்தமம் அமைப்பு பாராட்டியது பேரா.பொன்னவைக்கோ விருதளித்துப் பாராட்டினார்.

உத்தமம் அமைப்பிற்கு எனது அன்பார்ந்த நன்றிகள்.
http://www.ti2012.infitt.org/


அன்புடன்
நாக.இளங்கோவன்
30/12/12 சிதம்பரம்

No comments: