Pages

Tuesday, December 25, 2007

கண்ணகி கோயில் - படங்கள் - 4

படம்-8 - கோட்டத்துக்குள் இருக்கும் சிவன் கோயிலின் கருவறை. இராசராசன் திருப்பணி செய்த போது ஏற்படுத்தப்பட்டது.



படம்-9: சிவன் கோயிலின் வெளிப்புறத் தோற்றம்.



தொடர்புடைய வாசிப்புக்கு:

http://nayanam.blogspot.com/2002/05/2.html
http://nayanam.blogspot.com/2002/05/3.htm
http://nayanam.blogspot.com/2002/05/4.html
http://nayanam.blogspot.com/2002/05/5.html


அன்புடன்
நாக.இளங்கோவன்

கண்ணகி கோயில் - படங்கள் - 3




படம்-6 கண்ணகி சிலை இருக்கும் கருவறை. இங்கே தெரிவதுதான் குட்டுவன் கொண்டு வந்த கல்லில் செய்த படிமத்தின் மீதி. தொடர்புடைய வாசிப்புக்கு
கண்ணகி கோயில் பற்றிய கட்டுரைகளைப் பார்க்கவும்.

நாக.இளங்கோவன்

Sunday, December 23, 2007

கண்ணகி கோயில்

கண்ணகி கோயிலுக்கு கடந்த 2002 ஆம் ஆண்டில் போய்வரக் கூடிய வாய்ப்பு கிட்டியது. அப்பொழுது எழுதின இக்கட்டுரைகளை இப்பொழுது இங்கே மீள்பதிவு செய்திருக்கிறேன். பயணம், கோயில் நிலை, சிலப்பதிகாரம், வழிபாடு, பலரின் கருத்துகள் போன்றவற்றை சுற்றியதாக இவை இருக்கும்.

http://nayanam.blogspot.com/2002/04/1.html
http://nayanam.blogspot.com/2002/05/2.html
http://nayanam.blogspot.com/2002/05/3.htm
http://nayanam.blogspot.com/2002/05/4.html
http://nayanam.blogspot.com/2002/05/5.html
http://nayanam.blogspot.com/2002/05/6.html

http://wikimapia.org/#lat=9.598153&lon=77.222284&z=17&l=0&m=a&v=2
என்ற சுட்டியில் கோயிலின் இடத்தை படத்தில் நன்கு காட்டியிருப்பதும்
பார்க்க வேண்டிய ஒன்று.

அன்புடன்
நாக.இளங்கோவன்

Friday, November 02, 2007

சுப தமிழ்ச்செல்வன் மறைவு - வேதனை

உலகெங்கிலும் வாழும் தமிழர்களால் அறியப்பட்ட
தமிழ்த் தலைவர்களில் சு.ப.தமிழ்ச்செல்வனும் ஒருவர்.
கிட்டு, பாலசிங்கம் போன்றோர்களின் மறைவு ஏற்படுத்திய
அதே வலியையும் சற்று அதிகமான அதிர்ச்சியையும்
உலகவாழ் தமிழ்மக்களுக்கு ஏற்படுத்துகிறது.அவரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இச்செய்தி உண்மையாயிருக்கக் கூடாதென்று இன்னமும் ஏங்குகிறேன்.

"அநுராதபுரத்து வெற்றிகளை
கண்ணிமைக்காது பார்த்தவர்களின்
கண்ணடி பட்டதாலா இவன் குண்டடி பட்டுப் போனான்?"

அன்புடன்
நாக.இளங்கோவன்

Saturday, July 21, 2007

நடிகர் திலகத்திற்கு நினைவாஞ்சலி

இவனைக் கண்டார் சிவனைக் கண்டார்
சிவனைக் காண இவனைக் கண்டார்!
வீரம் கண்டார் வீரம் கொண்டார்
ஈரம் கண்டார் விழிஈரம் கொண்டார்!

வலியனாய் வளவனாய் வள்ளளாய் வசந்தனாய்
எளியனாய் ஏருழவனாய் எழுச்சியாய் எள்ளலாய்
அரசனாய் ஆண்டியாய் அப்பனாய் அறிஞனாய்
வறியனாய் முடவனாய் வண்டமிழில் எல்லாமாய்

ஒப்பும் மிக்கும் உலகில் இல்லா
கூத்தன் அவனே! கூத்தும் அவனே!

நடிப்பு இலக்கணத்தின் நாடகம் முடிய,
நடித்த சிம்மம் நன்னிலம் பிரிந்து
அயரா துழைத்த அயர்வு தீர
இயற்கை அன்னை மடிமீது தலைசாய்க்க,
பார்த்த விழிகள் பார்த்தபடி பனித்திருக்க
கூத்துத் தமிழின் மூத்தமகன் பிரிகின்றான்!

அன்னைத் தமிழுக்கு அணிசெய்த அவள்மகன் வாழியவே!
தன்நிகர் இல்லாத் தமிழ்க் கூத்தன் வாழிய வாழியவே!

கண்கள் நீர்சொரிய கரங்கள் குவித்து
கும்பிட்டுக் கூறுகின்றேன் 'போய்வா' தமிழ் மகனே!

நாளை, கும்பிட்டுக் கூப்பிடுவேன், வருவாயா கலைமகனே!
கூத்துத் தமிழின் மூத்தமகனே,

வரமாட்டாய் நீ!
வாடுகிறேன்!

அன்புடன்
நாக.இளங்கோவன்
22/யூலை/01