சிலம்பு மடல் - 4 மாதவி!
புகார்:
அரங்கேற்றுக் காதை:
"பிறப்பிற் குன்றாப் பெருந்தோள் மடந்தை
தாதுஅவிழ் புரிகுழல் மாதவி தன்னை,
ஆடலும் பாடலும் அழகும் என்றுஇக்
கூறிய மூன்றில் ஒன்றுகுறை படாமல்
ஏழாண்டு இயற்றிஓர் ஈராறு ஆண்டில்
சூழ்கழல் மன்னற்குக் காட்டல் வேண்டி, ..... "
அவளுக்கும் வயது பன்னிரண்டு!
ஆம்; மாதவி உலகத்துக்குக் காட்டப்பட்டதும் அவளின் பன்னிரண்டாவது வயதில்;
சுருண்ட கூந்தலில் சூடிய பூக்கள்,அழகிய தோளில் அலைந்து விளையாடும், இந்தப் பன்னிரண்டு வயதுந
டய மாதவி தன் அய்ந்தாம் அகவையில் நாட்டியம் பயிலத்துவங்கி ஏழாண்டுகள் அதைப் பிழையின்றிக்
கற்றுக் கொண்டிருக்கிறாள்! பிறப்பினில் எந்த குறைபாடும் இல்லாதவள்; அழகில் குறைவில்லா இவள்,
ஆடலிலும் பாடலிலும் சிறந்தவள்.
அரம்பையர்; அதாவது நாட்டியத்தைத் தொழிலாகக் கொண்ட, நாட்டியக் கலையில் ஒப்பில்லாச் சிறப்புப்
பெற்ற உருப்பசி என்ற மரபில் பிறந்தவள் மாதவி;
கண்ணகி பன்னிரண்டாவது வயதில் மணந்து கொண்டாள்!
மாதவியோ பன்னிரண்டாவது வயதில் வேலைக்குச் செல்ல ஆரம்பிக்கிறாள்! அதாவது தன் நாட்டியத் தொழிலை ஆரம்பிக்கிறாள்!
வீரக்கழல் அணிந்த சோழ மன்னனின் முன்னே, முதன் முதலில், தான் கற்ற வித்தையை கடை விரிக்கிறாள்! தன் நாட்டியத்தை அரங்கம் ஏற்ற வருகிறாள்!
அன்புடன்
நாக.இளங்கோவன்
07-பிப்ரவரி-1999
No comments:
Post a Comment