தென்றல் உலாவத் தென்னை சென்றேன்
தலைக்கனம் மிகுந்து சற்றும் வளையா
நெடுநெடு தென்னை என்னை நோக்க
கொடுகொடு என்றேன் தென்னந் தண்ணீர் !
இந்தாப் பிடிஎடுத் தேக்குடி என்றே
இரண்டு இளங்காய் போட்ட துகேளீர் !
பொன்நிறச் சதையால் போர்த்தியக் காயுள்
பொன்னி நதியில் திருடிய தண்ணீர் !
தாகம் தீர தண்ணீர் பருக
மேகம் மோது தென்னை விலகி
பாதை அருகே பந்தலில் குந்தி
காயைப் பாங்குடன் இருகை ஏந்தி
வாயுடன் காயின் வாயிடம் வைத்து
தானுண்ட நீரைத் தலையில் தந்த
தென்னை போற்றித் தண்ணீர் குடித்தேன் !
தென்னை பார்த்து நன்றி சொன்ன
என்னை ஈர்த்த அந்தப் படமோ
என்சிறு நாய்ந னைத்தத் தடமே;
தென்னை அடியில் ஈரமுக் கோணம் !
சிரித்துக் கொண்டே திரும்பிப் போக
எறிந்தது தென்னை இன்னொரு காயை !
சொன்னது காதில் "சொல்லாதே வெளியில்" !
பொன்னியில் திருடிய தண்ணீர் மறைக்க
என்னிடம் தந்தது சிறுகை யூட்டு !
செந்தமிழ்த் தாய்மண் வளர்ந்ததென் னையதே !
அன்புடன்
நாக.இளங்கோவன்
Thursday, September 21, 2006
Saturday, September 09, 2006
Can I get a LIFT? - poem (Not for Contest)
முல்லைப் பந்தரை முகர்ந்து பார்க்க
முன்மாலை முடிகையில் மெல்ல நுழைந்தால்
முளைப்பாலிகையாய் முல்லை மொட்டுகள்
முகத்தில் எங்கும் முத்தம் பொத்தி
மூன்றுநாழி பொறுத்திடச் சொன்னதுகேள்!
கூர்மொட்டுகள் குத்திய இன்பம் மங்கை
மார்மொட்டுகள் ஒத்திய இன்பம் ஒத்ததுவே!
ஒத்தது கண்டு தத்திய சித்தம்
பித்தது கொண்டு பின்திரும்பி ஓட
மின்னல் கொடியாய் முல்லை நுனிகள்
பின்னால் பிடித்து என்னை இழுத்தே
எட்டிய இடத்தில் ஏறி நின்றே
எங்கும் என்மேல் எழுதிக் கொண்டே
பின்னும் சொன்னது காதின் உள்ளே
இன்னும் இரவு இல்லை என்றே!
இல்லை என்ற சொல்லுக் குள்ளே
தொல்லை அறியாக் கிள்ளை போல்நான்
காதுஏற் கொடியின் கதையினைக் கேட்க
கண்முன் கொடியின் கண்பேசிச் சிரிக்க
தோளில் புரண்ட தொல்கொடி உறவொடு
நாழிகள் ஆவதை நான்மறந்து நிற்க,
கண்டு நகைத்தன கள்ள மீன்கள்!
கண்டு திகைத்தேன் வெள்ளைப் பூக்கள்!
வாசம் நிறைத்த முல்லைப் பூக்களில்
அவிழ முடியா நொள்ளைப் பூக்கள்
அசைந்து கொண்டே அழுது வடிய,
பாதி அவிழ்த்த பருவப் பூக்கள்
மீதி அவிழ்த்திட முனகின முக்கி!
மெல்ல மெல்லப் புரிந்தது எனக்கு
பொறுத்திடச் சொன்ன முல்லை இரகசியம்!
பச்சைக் கொடிக்குப் பனிவா ராமல்
போர்த்திடப் பூத்த புதுமலர் களல்ல!
பாரியின் தேரைப் பறித்தது போலேஎ,
தொத்திக் கொள்ளத் தோள்பி டிக்க,
மொத்தம் அவிழ்த்து முழுதாய்க் காட்டிய,
வெட்கம் இல்லா வெள்ளை மலர்கள்!
சத்தம் செய்யாச் சரச மலர்கள்!
"வள்ளல்" வழங்கி வாரிச் சுருட்டும்
கள்ளம் நிறைந்த கபடப் பூக்களென் !
அன்புடன்
நாக.இளங்கோவன்
அக்டோபர்-97.
(பழைய கவிதைத் தொகுப்பில் இருந்து )
முன்மாலை முடிகையில் மெல்ல நுழைந்தால்
முளைப்பாலிகையாய் முல்லை மொட்டுகள்
முகத்தில் எங்கும் முத்தம் பொத்தி
மூன்றுநாழி பொறுத்திடச் சொன்னதுகேள்!
கூர்மொட்டுகள் குத்திய இன்பம் மங்கை
மார்மொட்டுகள் ஒத்திய இன்பம் ஒத்ததுவே!
ஒத்தது கண்டு தத்திய சித்தம்
பித்தது கொண்டு பின்திரும்பி ஓட
மின்னல் கொடியாய் முல்லை நுனிகள்
பின்னால் பிடித்து என்னை இழுத்தே
எட்டிய இடத்தில் ஏறி நின்றே
எங்கும் என்மேல் எழுதிக் கொண்டே
பின்னும் சொன்னது காதின் உள்ளே
இன்னும் இரவு இல்லை என்றே!
இல்லை என்ற சொல்லுக் குள்ளே
தொல்லை அறியாக் கிள்ளை போல்நான்
காதுஏற் கொடியின் கதையினைக் கேட்க
கண்முன் கொடியின் கண்பேசிச் சிரிக்க
தோளில் புரண்ட தொல்கொடி உறவொடு
நாழிகள் ஆவதை நான்மறந்து நிற்க,
கண்டு நகைத்தன கள்ள மீன்கள்!
கண்டு திகைத்தேன் வெள்ளைப் பூக்கள்!
வாசம் நிறைத்த முல்லைப் பூக்களில்
அவிழ முடியா நொள்ளைப் பூக்கள்
அசைந்து கொண்டே அழுது வடிய,
பாதி அவிழ்த்த பருவப் பூக்கள்
மீதி அவிழ்த்திட முனகின முக்கி!
மெல்ல மெல்லப் புரிந்தது எனக்கு
பொறுத்திடச் சொன்ன முல்லை இரகசியம்!
பச்சைக் கொடிக்குப் பனிவா ராமல்
போர்த்திடப் பூத்த புதுமலர் களல்ல!
பாரியின் தேரைப் பறித்தது போலேஎ,
தொத்திக் கொள்ளத் தோள்பி டிக்க,
மொத்தம் அவிழ்த்து முழுதாய்க் காட்டிய,
வெட்கம் இல்லா வெள்ளை மலர்கள்!
சத்தம் செய்யாச் சரச மலர்கள்!
"வள்ளல்" வழங்கி வாரிச் சுருட்டும்
கள்ளம் நிறைந்த கபடப் பூக்களென் !
அன்புடன்
நாக.இளங்கோவன்
அக்டோபர்-97.
(பழைய கவிதைத் தொகுப்பில் இருந்து )
Monday, August 14, 2006
நெஞ்சு கொதிக்கும் முல்லைப் படுகொலைகள்
முல்லைத்தீவிலே 61 முல்லைப் பூக்களை கருக்கியிருக்கிறான்
சிங்களக் காடையன்!
கேள்வி கேட்க நாதியில்லை உலகில்!
ஆறரைக் கோடி வாழும் தமிழகத்தில்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
சில முணுமுணுப்புகள் - அவ்வளவே!
கும்பகோண விபத்தில் கொத்துக் கொத்தாய் மாண்டு போயின
பள்ளிப் பிள்ளைகள். அதற்காகவே காத்துக் கிடந்தது போல
தமிழர்கள் பொங்கி எழுந்தார்கள் தங்களின் மீசைகளை
முறுக்கிக் கொண்டு!
முறுக்கிய மீசைகளைக் காட்டி, அங்கு சமையல் செய்த சமையல்காரம்மா,
பாடம் நடத்தத் தெரியாத அப்பாவி வாத்தியாரம்மாக்கள், சுடுகாட்டில்
பிணம் எரிக்கிற வெட்டியான் போன்ற வீரதீரர்களையெல்லாம்
பயமுறுத்தி துரத்திக் கொண்டு திரிந்து தங்கள் வீரத்தையும்
சோகத்தையும் காட்டிய அந்தக் கணங்களை யாரும் மறந்திருக்க முடியாது.
அந்தக் கோரச் சாவுகள் விபத்து!
ஆனால், இன்று முல்லைத்தீவில் தமிழ் மகளிரை, பள்ளிச் செல்வங்களை,
16 குண்டுகளை வானில் இருந்து எறிந்து கொன்றிருக்கிறது சிங்களம்.
தமிழ்ப் பெருங்குடிகளுக்கு இன்னும் உரைக்கவேயில்லை!
தங்கள் வீரத்தைக் கவட்டிக்குள் பாதியையும், தோட்டங்களில் பாதியையும்
புதைத்துக் கொண்டு பம்மாத்து செய்கிறார்கள்.
இராசீவ் காந்தி செத்து 15 தெவசங்கள் கொடுத்தாயிற்று!
இன்னுமா உங்களுக்கு ஒப்பாரி அடங்கவில்லை? இன்னுமா தீட்டு
கழியவில்லை? என்று கேட்கத்தான் தோன்றுகிறது.
பழங்கதையையேப் பேசிக் கொண்டிருந்தால், இன்னும் எத்தனை ஆயிரம்
தமிழர்களைப் பலி கொடுக்கப் போகிறது தமிழ் இனம்?
இந்தப் பிள்ளைகள் என்ன தீங்கு செய்தன?
கும்பகோத்துக்கு அழுது மூக்கு சிந்திய முத்தமிழர்களுக்கு,
மூக்கில் சளி வற்றி விட்டது போலும்!
எப்படா எவனாச்சும் சாவான் கவிதை எழுதி அரங்கேற்றிவிடலாம்
என்று திரியும் கவிஞர்களுக்கு, இப்பொழுது உரை கூட
வர மறுக்கின்றது போலும்!
தமிழையும் தமிழர்களையும் எதிர்ப்பவர்களை எதிர்த்துப் பேசி, எழுதி அவர்களைத்
திருத்த முடியாது. அவர்களை அப்படியே விட்டு விட்டு
கோழைத்தனத்தில் மூழ்கிக் கிடக்கும் தமிழ்க் கூட்டம்
அதை விட்டு வெளியே வரவேண்டும்.
இராசீவ் காந்தியை காரணம் காட்டுபவர்கள் வேடதாரிகள்
என்பதை உணரவேண்டும். ஏனெனில், அவர்கள் இராசீவ் காந்தியின் மரணத்திற்கு
முன்னரும் தமிழர்களை எதிர்த்தே வந்தார்கள்.
இந்த முல்லைப் பூக்களின் படுகொலையினை மனசாட்சியுள்ள
ஒவ்வொரு வலைப்பதிவரும் கண்டிக்க முன்வரவேண்டும்.
61 முல்லைகளின் படுகொலைக்குக் காரணமான
ஒட்டு மொத்த சிங்களத்தையும் கண்டிக்கிறேன்.
இவர்கள் நாசமாய்ப் போகும் நாள் என்ன நாளோ?
நயனன் :-(
சிங்களக் காடையன்!
கேள்வி கேட்க நாதியில்லை உலகில்!
ஆறரைக் கோடி வாழும் தமிழகத்தில்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
சில முணுமுணுப்புகள் - அவ்வளவே!
கும்பகோண விபத்தில் கொத்துக் கொத்தாய் மாண்டு போயின
பள்ளிப் பிள்ளைகள். அதற்காகவே காத்துக் கிடந்தது போல
தமிழர்கள் பொங்கி எழுந்தார்கள் தங்களின் மீசைகளை
முறுக்கிக் கொண்டு!
முறுக்கிய மீசைகளைக் காட்டி, அங்கு சமையல் செய்த சமையல்காரம்மா,
பாடம் நடத்தத் தெரியாத அப்பாவி வாத்தியாரம்மாக்கள், சுடுகாட்டில்
பிணம் எரிக்கிற வெட்டியான் போன்ற வீரதீரர்களையெல்லாம்
பயமுறுத்தி துரத்திக் கொண்டு திரிந்து தங்கள் வீரத்தையும்
சோகத்தையும் காட்டிய அந்தக் கணங்களை யாரும் மறந்திருக்க முடியாது.
அந்தக் கோரச் சாவுகள் விபத்து!
ஆனால், இன்று முல்லைத்தீவில் தமிழ் மகளிரை, பள்ளிச் செல்வங்களை,
16 குண்டுகளை வானில் இருந்து எறிந்து கொன்றிருக்கிறது சிங்களம்.
தமிழ்ப் பெருங்குடிகளுக்கு இன்னும் உரைக்கவேயில்லை!
தங்கள் வீரத்தைக் கவட்டிக்குள் பாதியையும், தோட்டங்களில் பாதியையும்
புதைத்துக் கொண்டு பம்மாத்து செய்கிறார்கள்.
இராசீவ் காந்தி செத்து 15 தெவசங்கள் கொடுத்தாயிற்று!
இன்னுமா உங்களுக்கு ஒப்பாரி அடங்கவில்லை? இன்னுமா தீட்டு
கழியவில்லை? என்று கேட்கத்தான் தோன்றுகிறது.
பழங்கதையையேப் பேசிக் கொண்டிருந்தால், இன்னும் எத்தனை ஆயிரம்
தமிழர்களைப் பலி கொடுக்கப் போகிறது தமிழ் இனம்?
இந்தப் பிள்ளைகள் என்ன தீங்கு செய்தன?
கும்பகோத்துக்கு அழுது மூக்கு சிந்திய முத்தமிழர்களுக்கு,
மூக்கில் சளி வற்றி விட்டது போலும்!
எப்படா எவனாச்சும் சாவான் கவிதை எழுதி அரங்கேற்றிவிடலாம்
என்று திரியும் கவிஞர்களுக்கு, இப்பொழுது உரை கூட
வர மறுக்கின்றது போலும்!
தமிழையும் தமிழர்களையும் எதிர்ப்பவர்களை எதிர்த்துப் பேசி, எழுதி அவர்களைத்
திருத்த முடியாது. அவர்களை அப்படியே விட்டு விட்டு
கோழைத்தனத்தில் மூழ்கிக் கிடக்கும் தமிழ்க் கூட்டம்
அதை விட்டு வெளியே வரவேண்டும்.
இராசீவ் காந்தியை காரணம் காட்டுபவர்கள் வேடதாரிகள்
என்பதை உணரவேண்டும். ஏனெனில், அவர்கள் இராசீவ் காந்தியின் மரணத்திற்கு
முன்னரும் தமிழர்களை எதிர்த்தே வந்தார்கள்.
இந்த முல்லைப் பூக்களின் படுகொலையினை மனசாட்சியுள்ள
ஒவ்வொரு வலைப்பதிவரும் கண்டிக்க முன்வரவேண்டும்.
61 முல்லைகளின் படுகொலைக்குக் காரணமான
ஒட்டு மொத்த சிங்களத்தையும் கண்டிக்கிறேன்.
இவர்கள் நாசமாய்ப் போகும் நாள் என்ன நாளோ?
நயனன் :-(
Saturday, July 08, 2006
இரட்டை மரணங்கள்!
மெல்லக் குனிகிறேன்.
என் கரங்கள் அவிழ்ந்து மண்ணை மிதிக்கின்றன.
பத்து விரல்களும் பக்கங்களில் விரிகின்றன.
அங்கை அவ்வளவாக அழுத்தவில்லை.
அதனால்தானோ என்னவோ சிறு மணல்களும் மெல்லியதாய்
குறுகுறுக்கக் கீறிவிடுகின்றன என் அங்கைகளை.
அங்கைக்கு அரணாக விரல் மேடுகள் இருப்பினும்,
இந்தச் சின்னஞ்சிறு மணல்கள் என்னைச் சீண்டித்தான் பார்க்கின்றன.
அங்கையின் அணைப்பிலே வாளையும் வேலையும்,
ஏன் குண்டுகளையும் வீச முடியும்!
கோழியின் குரல்வளையையும்,
போரிலே பகையின் குரல்வளையையும்
என் அங்கையின் அணைப்பிலேயே அற்றுவிடமுடியும்.
ஆனால் அந்தச் சின்னஞ்சிறு மணலை
என் அங்கையால் என்ன செய்து விட முடியும்?
எண்ணிப் பார்க்கையில் துக்கு மணல்
சற்று வெட்கநகைகலந்த சினத்தை அளித்து என்னை அதற்கு
இளையவனாக்கிவிட்டது!
ஒற்றைக் கல்லெடுத்து என்னால்
ஒரு மைலுக்கு வீசமுடியும்!
ஆனால் ஒற்றை மணல் எடுத்து வீச முடியுமா?
சிரிக்கிறேன்.
குண்டுக்கல்லைத் தூக்கி எறிந்து
ஒலிம்பிக் போட்டியில் ஆடுகின்றனர்.
ஒற்றை மணல் வீசும் போட்டி வைத்தால்
அது எப்படி இருக்கும் என்ற சிந்தனை
சில நொடித்துகள்களில் வந்து விட்டு
வணக்கம் சொல்லிச் சென்று விட்டது.
கைகளின் அணைவோடு தற்போது
என் உச்சி மண்ணை உரசுகிறது.
புழுதி என் மயிர்களின் முடிகளிலும்
நடுவுகளிலும் ஒட்டியிருக்கும் இந்நேரம்.
மனிதர் கூட்டத்திற்கு மயிர் என்றால் கோவம் வரும்.
முடியென்றால் உச்சி என்பார்.
தலையென்றாø உச்சி என்பார்.
ஆனால் வளர்ந்து விட்ட மயிரை வெட்டும்போது
முடியை வெட்டுகிறேன் என்பார்!
மயிருக்கும் முடியுண்டு! அடியும் உண்டு!
அதை அசட்டையில் மறந்து விட்டு
மனித முடியையும் மயிரின் முடியையும் ஒன்றென்பார்!
மயிரின் அடியில் மனிதரின் முடி முடிகிறதா?
அல்லது மனித முடியில் மயிரின் முடியும் அடங்குகிறதா?
இந்த மயிரளவு மொழி எனக்கு விளங்கவில்லை.
மனிதர் தற்போது Hair dress பண்ணிக் கொள்வதாகச் சொல்கிறார்கள்.
சிலர் முடி திருத்துவார்களாம்.
மூளைக்குள் கையை விட்டுத் துழாவி கசடையெல்லாம்
வழித்து எறிந்து விட்டு மூடிவிடுகிறார்களா என்ன?
மயிரைச் சுருட்டி மடக்கி அறுத்துப் போடுவதற்கு
முடிதிருத்தம் என்று பெயராம்.
என் அண்டை வீட்டு அனல்மங்கை,
அவளின் அக்காளின் மயிரை அறுப்பேன் என்று
அடிக்கடிச் சண்டை போடுவாள்!
அடுத்த தெருவில் நான் நின்று கொண்டிருந்தாலும் காதில் விழும்
இந்தக் குரலின் போது ஏன் இவள் முடியை அறுப்பேன் என்று
சொல்வதில்லை என்று எண்ணிக் குழம்பிப் போய்விடுவேன்.
குழப்பம்தான் மிச்சம்.
குழப்பத்திலேயே, மேலும் அழுந்த என் மயிரின் அடியில்
சற்று வலிக்கிறது. மயிர்கள் மண்ணில் அழுந்தும்போது
வலிக்கவில்லை. இப்பொழுது வலிக்கிறது.
தற்போது கால்களை மெல்லத் தூக்குகின்றேன்.
அவை மேல் உயருகின்றன;
தலையிலும், கைகளிலும் அழுத்தம் அதிகமாகிறது.
"வலிக்கிறது ஆயினும், அது வலிக்கவில்லை";
பழக்கம் காரணமாக இருக்கக் கூடும்.
சற்றே நடுக்கம்.
கால்கள் கீழே வந்து விடும்படியான சின்னதொரு நடுக்கம்.
சமாளிக்கிறேன்.
மீண்டும் ஒரு சமாளிப்பு;
தற்போது நட்டமாக ஆனால் முடிகீழும், அடிகள் மேலுமாய் நான்.
மிக மெல்லிய சமாளிப்புடன் அமைதியாக!
மெல்லக் கால்களை விரிக்கிறேன், இரண்டு கிளைகளைப் போல!
என் மனதிலே அசைவில்லை.
உடலில் அசைவு மிகக் குறைவு. மெல்லிய நகை என் இதழ்களில்.
ஒரடி ஆழத்தில், மூவடிச் சதுரக்குழி.
இன்னும் சில மணித்துகள்களில் எல்லாம் மாறிவிடும்.
இதழ்களில் தவழும் இகழ்நகை இப்போது!
ஆண் ஆணாக மாறாத உலகத்தில்,
பெண் பெண்ணாக மாறாத உலகத்தில்,
ஆண் பெண்ணாக மாறி விடமுடிகிறது;
பெண் ஆணாக மாறிவிட முடிகிறது.
பெண்ணாகப் பிறந்து பெண்ணாகவே மாறிப்
பெண்ணாகவே பெருமையுடன் வாழ்ந்தால்,
பெரும்பண்பு படைத்திருந்தால்
பெண்ணைப் பிற்போக்கானவள் என்கிறார்கள்.
அவளின் சுவரொட்டியில் சாணம் வீசுகிறார்கள்.
பேனாவில் சாணத்தை ஊற்றிப் பத்திரிக்கையில் மெழுகுகிறார்கள்.
அதற்குப் பெயர் பெண்ணியம் என்கிறார்கள்.
விசாரித்த போதுதான் அறிந்தேன்,
பெருஞானப் பிரபுக்களாம் அவர்கள்.
அவர்களுக்கு சாணம் குதப்பித் தரும் குடுக்கைகள் ஆயிரம்.
பெண்ணாகப் பிறந்து பெண்ணாக மாறாவிடில்,
பெண்ணைத் தேவடியாள் என்று சொல்கிறார்கள்.
தேவர் அடி ஆள்களை, தேவடியாள்களாக ஆக்கிக்
காண்பித்திருக்கும் இந்தக் குமுகத்தில்,
நல்ல தேவடியாள் கெட்டத் தேவடியாள்
என்று இரு வகை வேறு உண்டு.
நாயாய்ப் பிறந்தாலும் தெருநாய் வேறு,
தேரில் போகும் நாய் வேறு அல்லவா! அது போல.
பெண்ணாகப் பிறந்த எனக்கு பெண்ணாய் மாறுவதற்குப் பயம்.
முற்போக்கு பேசும் பிற்போக்குவாதிகளும்,
பிற்போக்குப் புரியாத முற்போக்குவாதிகளுக்கும்
இடையே கிடந்து நான் காணாமல் போய்விடுவேன்.
பெண்ணாகப் பிறந்த எனக்கு பெண்ணாய் மாறாமல் இருப்பதற்கும் பயம்.
தெருநாயாய்ப் போவேனா அல்லது
தேரில் போவேனா என்று முடிவாகத் தெரியவில்லை.
பெண்ணாய்ப் பிறந்த எனக்கு ஆணாய் மாறிவிட பயமில்லை.
ஆனால், அருவெறுப்பு.
ஆணாய்ப் பிறந்தவன் ஆணாய் மாறாமல் கிடக்கையில்,
அவர்களிடையே நானும் ஒருவனாய் அல்லல்பட எனக்கு ஆசையில்லை.
பாரதி என்று ஒருவன் இருந்தான்.
காணி நிலம் வேண்டும் என்று பராசக்தியிடம் கேட்டான்.
பத்துப் பதினைந்து தென்னை மரம் கேட்டான்.
பக்கத்திலே ஒரு பத்தினிப் பெண் வேண்டும் என்றும் கேட்டான்.
அண்மையில் பயணித்த போது,
அவனை ஒரு மிகப் பெரிய படமாக்கி
சாலைச் சந்தி ஓரம் வைத்திருந்தார்கள்.
அற்புதமான படம். மகிழ்ந்து போனேன்.
பக்கத்தில் "காணி நிலம் வேண்டும், பராசக்தி காணி நிலம் வேண்டும்"
என்ற அவன் கவிதை வரியைத் தீட்டி வைத்திருந்தார்கள்.
மேலும் மகிழ்ந்தேன்.
பாலோடு தேன் கலந்தாற்போல மனதில் மகிழ்ச்சி.
மேலும் படித்தேன்.
இடைவெளி விட்டு சற்றுக் கீழே,
"வீடு மனை வாங்க விற்க அணுகவும்" என்று எழுதி முகவரியும்
எழுதியிருந்தார்கள்.
வீடு, மனை வாங்கி விற்கும் விளம்பரத்திற்குô
பாரதியும் பாரதியின் தமிழும் பயன்பட்டிருக்கின்றன
என்று எண்ணியபோது ஏனோ
பாலோடு தேன் கலந்த அதில் சிறிது
சயனைடும் கலந்தாற்போன்ற உணர்வு.
பாரதியின் பத்துப் பதினைந்து மரங்களில் ஒன்றாக மாறலாமா,
அல்லது பத்தினிப் பெண்ணாக மாறலாமா!
ஏதோ ஒன்றாய் மாறிவிட பேதைப் பெண் நான் துடிக்கின்றேன்.
மனிதத்தின் கழுத்து என்றும் அறுபட்டுக் கொண்டே இருக்கும்.
ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும்
மாறிவிட முடிகின்ற உலகத்தில் மரமாய் மாறிவிட்டால்தான் என்ன?
பெண்ணாய்ப் பிறந்த நான் சிந்தித்தபோது,
மரமாய் மாறிவிட எடுத்த அந்த அற்புதமான முடிவு,
எனக்கு வெளிக்குள் வெளிகடப்பதைப் போன்ற உணர்வை,
குழிக்குள் குனிந்தென்னை ஊன்றிக் கொண்டபோது ஏற்படுத்தியது.
மனிதரை விட உயரமாகப் போகிறேன்!
முடிவொன்றை நிகழ்த்தியதில் மகிழ்ச்சிதான் எனக்கு!
முழுமையும் மரமாக மாறிவிட்டேன்.
ஒரு கன்று மரமாகத் தற்போது நிற்கிறேன்.
மரத்தின் அழகில் மகிழ்ந்து யாரோ குடம் தண்ணீர் விட்டது
மட்டும் ஏறத்தாழ நூறு ஆண்டுகளாகியும் என் நினவில் இருக்கிறது.
என்னைப் பல மாக்களின் மண்டைகளுக்கு உவமையாக்கி
என் இனத்திற்கு இழிவு தேடித் தந்தவர்களை
என்னால் இன்று மன்னிக்க முடிகிறது!
என் மயிர்களின் முடிகள் வேர்களாய் ஆழமாய்
அடியைத் தேடித் தேடிச் சென்றகாலங்கள் இனிமையானவை!
என் கால்கள், வளர்ந்து வளர்ந்து
உயரே, உயரே!
கிளைகளாய், கொம்பாய்!
வான் தழுவி நிற்கிறேன்.
ஆம், என்னிடம் கதை பேசிய எறும்புகள்
அப்படித்தான் சொல்லின!
மனிதனும் அப்படித்தான் சொல்கிறான்.
வான் உயர நிற்கிறேன் என்று
மனிதனும் சொல்கிறான்! எறும்பும் சொல்கிறது!
அன்னை பூமியின் அடிவயிற்றில்
அள்ளி அள்ளி உண்டதெல்லாம்
பாலாய்த் தேனாய்ப் பாகாய் இனித்தன.
உண்டு விட்ட மீதத்தை விட்டெறிந்த போது,
அது, காயாகக் கனியாக
இலையாகத் தழையாகப்
பூவாகத் தேனாக,
புவிமாந்தர் நாவிற்கு உணவானது!
செவியற்றப் புவிமாந்தர் பலரின் புகலிடமே நானாக இருந்தேன்.
விட்டெறிந்தது போதாது என்று,
இறைவனுக்கு நான் பெற்றுத் தந்ததையும்
பற்றிச் சென்ற கள்ளர் குழாம் மிகப் பெரியது!
சற்றே வியர்த்த போதெல்லாம்,
நான் கேட்காமலே,
என்னருகே நின்ற மரங்களெல்லாம்
எனக்கு வீசிவிட்ட அந்த உறவு உயர்ந்தது!
பக்கத்து மரத்திற்கு வியர்க்குமோ என்று
என்னையும் அறியாமல் நான் வீசிவிட்ட
அந்தத் தருணங்கள் எனக்கு உயர்ந்தன!
நாய்கள் சில அடிக்கடி என்னருகில் வந்து நீர் பெய்யும்!
மனிதர்களும் சில நேரங்களில் அப்படிச் செய்வார்கள்.
ஒவ்வொரு கனியையும் காயையும்,
மலரையும் இலையையும் மனிதன் கொய்த போது
பேறுகாலப் பெண்ணின் துன்பமாய் என்னை வாட்டியது உண்மை!
அடுத்த நாளிலேயே அவனை மன்னித்து விட்டபோது
நான் மேலும் உயர்ந்தேன் என்பதும் உண்மை.
சுவையான உணவை புவிஅன்னை அளிக்கிறாள்.
எனக்குச் சரவலே இல்லை.
நான் பேசுவதேயில்லை.
உறுதியாக அன்னை நிலத்தைப் பற்றி நிற்கிறேன்.
என் வாய் பேசுவதேயில்லை என்பதால்,
நான் உளறுவதும் இல்லை.
இந்த மனிதர்களின் வாய்கள் பிடிப்பின்றிக் கிடக்கின்றன.
அதற்கொரு பற்றில்லை.
பிடிப்பும் பற்றும் இல்லாததால் வாய்கள் ஊஞ்சலாடுகின்றன.
வேளைக்கொன்று கிளக்கின்றன.
பெரும்பாலும் உளறல்கள்.
இவர்களின் வாய்களில் துர்நாற்றம் வீசுகின்றதாம்.
ஆனால் எனக்கு அதில் நம்பிக்கையில்லை. ஏனெனில்,
இவர்கள் முத்தமிட்டுக் கொள்கிறார்களே எபப்டி?
எனது தலை நிலத்தில், நிலவடியில்;
கால்கள் மேலே! வாய் இருப்பது தலையுள்ள இடத்தில்தானே!
நேரே நிற்கின்றேன் நான்.
இந்த மனிதர்களின் தலைகள் வானத்தில்!
கால்களில் மண்ணில்.
எப்படியிருக்கிறது? தலைகீழாக இவர்கள் வாழவேண்டும் என்று
ஆண்டவன் இவர்களுக்கு சாபமிட்டிருக்கிறான் போல!
இவர்கள் தலைகீழாக நிற்பதால்,
இறைவனையும் தலைகீழாக அமர்த்தி வைத்திருக்கிறார்கள்.
இவர்களிடம் எல்லாமே தலைகீழ்!
ஒருவருக்கொருவர் பொல்லாதவர் என்று சொல்லிக்கொள்ளும்
புரட்சிக்காரர்கள் இந்த மனிதர்கள்! அதற்கு அறிவு என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.
எங்கேயோ,
எனக்கு எட்டாத தூரத்தில்,
பல காதங்களுக்கு அப்பால்,
இருந்த மரங்களை யெல்லாம்
வெட்டி விட்டார்களாம் பல ஆண்டுகளாய்.
யாரோ பேசிக் கொண்டது எனக்கும் கேட்டது.
தேனீக்கள் எனக்கு எழுதரிய இன்பம் அளித்தன!
பறவைகள் என் பாதங்கள் பற்றி வாழ்ந்தன!
அங்கே அவைகள் மாட மாளிகைகள் கட்டி வாழ்ந்தன!
தினம் என்றன் சீரடிகளுக்கும்
திருப்பள்ளி எழுச்சி பாடிய அந்தப் பறவைகள்,
இன்றைக்கு என்னைக் கடந்து போகையில்
திரும்பிப் பார்க்கவும் மறந்து விடுகின்றன.
சிலவற்றின் பார்வையிலே பரிவில்லை!
பலவற்றில் பரிகாசம் நிரம்பியிருக்கின்றது.
போன புயல் சாய்த்த இரு கிளைகள் பேரிடி எனக்கு.
அதற்குப் பின்னும் தழைத்தபோது,
கிளைக்க முடியவில்லை நிறைய!
வயதாகினது எனக்குத் தெரிகிறது.
பூத்தபோது பூக்கள் குறைவே சில வருடங்களாய்.
வடுக்கும் போதே வீழ்ந்த காய்கள் வெம்பிக்கிடக்கின்றன
என்னைச் சுற்றி.
தப்பிக் கனிந்த கனிகள் சிலவே அதனால்
பறவைகள் வருவதும் குறைவே.
பற்பல ஆண்டுகளுக்கு முன்னால்
ஒருவன் தூக்குப் போட்டுக் கொண்டது
என் நினவில் இருக்கிறது.
அவன் உயிரோடு இருந்த போது ஒரு
குட்டி நாய் கூட அவனைக் கண்டு மிரளாது.
அவன் செத்துப் போனதன் பின்னர்
அவனின் ஆவி சுற்றுவதாக
இந்த மனிதர்கள் சுற்றிக் கொண்டு திரிந்தார்கள்.
அந்த ஆவி சுற்றலில் பயந்து போய்த் திரிந்தார்கள்.
என் நிழலுக்கு அவர்கள் அண்டுவதே இல்லை.
"உள்ளூர்க்காரனுக்கு மரத்தைக் கண்டால் பயம்;
அசலூர்க்காரனுக்கு ஆற்றைக் கண்டால் பயம்"
என்ற சொலவடைக்கு ஏற்றாற்போல, அசலூர்க்காரர்கள்
யாராவது எப்பொழுதாவது என்னடியில் சற்று இளைப்பாறுவார்கள்.
சில ஆண்டுகளுக்குப்பின் மேலும் சிலர்
தூக்குப் போட்டுக் கொண்டு செத்துப்போனார்கள் கூட்டமாக.
இவர்களின் ஆவிக்கு மனிதர்கள் பயப்படவில்லை.
பயம் போய்விட்டதோ? அப்படித்தான் எண்ணினேன்!
மெல்லத்தான் புரிந்தது!
அவர்கள் பஞ்சம் பசி பட்டினியால்
தூக்குப்போட்டுக் கொண்ட விவசாயிகள்!
பட்டினியால் சாகும் உழவன்/ஏழையின்
பேய்க்கு யாரும் பயப்படுவதேயில்லை!
என் மர மண்டைக்கு ஏதோ உரைக்கின்றது.
உழவன் என்னைப் போல பல
பயிர்களையும் மரங்களையும் வளர்க்கின்றான்.
அதனால் அவன் மேல் எனக்குப் பாசம் அதிகம்.
ஆனால், மனிதக் குமுகத்தில்
அவன் வாழ்ந்தாலும் சரி மறைந்தாலும் சரி
அது ஒரு விசயமே இல்லை!
மேலும் மேலும் இப்பொழுதெல்லாம்
அடிக்கடி யாராவது வந்து தூக்குப் போட்டுக் கொள்கிறார்கள்.
என் பெயர் கெட்டுப் போனது; போகிறது!
என் நிலைமை எனக்கு மிகுந்த துக்கத்தைத் தருகிறது.
பசுமையான காலங்கள் போய், ஊரும் நானும் மெல்ல
மெல்லக் காய்ந்து, காய்ந்து, சற்றே தீய்ந்தும் போவதாய் உணர்வு.
இப்பொழுதெல்லாம்
எப்பொழுதாவது சில இலைகள் முளைக்கின்றன.
நட்ட மரத்திற்கு
மொட்டை மரம் என்று பெயர் வைக்கிறார்கள்.
என் நெஞ்சு அடைக்கிறது!
குரல் கம்முகிறது!
ஆறுதலுக்காக,
அவ்வப்போது தள்ளித் தள்ளி நிற்கின்ற ஒரு சில மரங்கள்
காற்று வீசிக் களைப்பைக் குறைக்கின்றன.
வேர்கள் முட்டி மோதிப் பார்த்தும்
நீரைக் குடிக்க முடியவில்லை.
நீரிருந்தால் தானே!?
ஒவ்வொரு மதியமும் என் வேர்களைக் கொல்கின்றன.
ஒரே நேரத்தில் என் வேர்களுக்கெல்லாம்
தீ வைத்தாற்போன்ற வேதனை.
ஒவ்வொரு நாளும்! விடாமல்
என்னை யாரோக் கொல்கிறார்கள்!
தினமும் மதியத்தில்!
மீண்டும் மீண்டும் கொல்கிறார்கள்!!
இன்னும் நான் சாகவில்லை!
ஒரே நாளில் என்னைக் கொல்ல முடியவில்லை அவர்களால்!
நான்யார்? என் வரலாறு எத்தனை?
அதனால்தான், தினமும் கொஞ்சம் கொஞ்சமாய்
என்னைக் கொல்கிறார்களோ?
தள்ளாமையில் எனது கர்வம்!
எனக்குப் புரியவில்லை.
பூமியிலும் நீரில்லை!
அண்டை அயலில் மரங்களையும் காணவில்லை.
என் கழுத்து இறுகுகிறது போன்ற வேதனை.
மெல்ல மேலே பார்க்கிறேன்.
சுத்தமாக மொட்டையாகி குட்டையாய்த் தெரிகிறேன்.
மொட்டைக் கிளைஒன்றின் ஒரு பகுதியில் உளுத்துக் கொட்டுகிறது.
பறவைகள் மறந்து விட்டன!
பாம்பு கூட வருவதில்லை.
எல்லோருக்கும் ஏதோ புரிகிறது.
வெப்பம் என்னைக் கொல்கிறது!
அன்னை மடி வற்றி விட்டது!
தற்போது தூக்குப் போட்டுக்கொள்ளக் கூட
யாரும் வருவதில்லை!
மங்கையாக இருந்திருந்தால்
ஒரு நாள் மட்டுமே மஞ்சள் பறிபோயிருக்கும்.
எனக்கு ஒவ்வொரு நாளும் என் பச்சை பறி போகிறது!
பக்கத்து மரங்கள் பலவற்றையும் - "வந்தார்கள் வெட்டினார்கள்
கொன்றார்கள்"!. நான் தினம் தினம் காய்கிறேன்!
எனக்குப் புரியவில்லை.
ஆணி வேரின் அடிப்பகுதி வரை ஏறத்தாழக்
காய்ந்து விட்டது. அதன் முகப்பு
மண்ணோடு மண்ணாகக் கலந்து விட்டது.
இன்னும் எத்தனை நாள் இந்த வேதனை?
இன்று கடுமையான மழை!
காற்றும் கூடவே அடிக்கிறது.
நிலத்துக்கு நிம்மதி! குடிகளுக்கு கும்மாளம்.
இதோ நான் பிழைத்துக் கொள்வேன்
என்று ஒரு நம்பிக்கை பிறக்கிறது.
நிலத்துக்குக் கொஞ்சம் நிம்மதி!
குடிகளுக்குக் கும்மாளம்.
தண்ணீர் ஊறுகிறது; நிறைய நிறைய!
வேர்களுக்கு விழிப்பு வருகிறது. ஆயினும்
குட்டம் வந்த உடலைப் போல அவை குறுகிப்போயிருக்கின்றனவே!
காய்ந்து போன வேர்கள் அழுக ஆரம்பிக்கின்றன. ஓ...!
கொஞ்ச நஞ்சம் பச்சை இருந்த வேர்கள் மட்டும்
சற்றே முக்கி முனகுகின்றன. நம்பிக்கைக்கு மட்டும் குறைவேயில்லை.
வீசும் காற்றுக்கு நான் பிழைத்துக் கொள்வேன் என்று ஆனந்தம்!
மழை நின்றும் அது மட்டும் வீசி வீசி மகிழ்கிறது.
எனது மகிழ்ச்சியை அது அறிந்து கொண்டதால் எனக்கும் மகிழ்ச்சியே!
ஆயினும், என் இதயம் கடுமையாக வலிக்கிறது!
காற்றே கொஞ்சம் நிற்க மாட்டாயா? என் கெஞ்சல்
அதன் காதுகளில் விழவியேயில்லை.
மேலும் மேலும் ஊய் ஊய் என்று!
வலுவிழந்து போயிருந்த இடுப்பெனக்கு இப்போது வலிக்கிறது.
என்பால் கொண்ட அன்பில் காற்றுக் கூத்தாடுகிறது!
நிறுத்தச் சொல்லி என் எஞ்சிய சக்தியெல்லாம் கூட்டி
ஓ என்று ஓசையிடுகிறேன்!
அது இடுப்போடு நான் முறிந்து வீழ்ந்த ஓசையாகிப் போனது!!
காற்று மட்டும் மகிழ்ச்சி குறையாமல் இன்னும் வேகமாக வீசிக்
கொண்டேயிருக்கிறது.
தற்போது எனக்கு எல்லாமே புரியவில்லை!
அன்புடன்
நயனி.
08/யூலை/06
மெல்லக் குனிகிறேன்.
என் கரங்கள் அவிழ்ந்து மண்ணை மிதிக்கின்றன.
பத்து விரல்களும் பக்கங்களில் விரிகின்றன.
அங்கை அவ்வளவாக அழுத்தவில்லை.
அதனால்தானோ என்னவோ சிறு மணல்களும் மெல்லியதாய்
குறுகுறுக்கக் கீறிவிடுகின்றன என் அங்கைகளை.
அங்கைக்கு அரணாக விரல் மேடுகள் இருப்பினும்,
இந்தச் சின்னஞ்சிறு மணல்கள் என்னைச் சீண்டித்தான் பார்க்கின்றன.
அங்கையின் அணைப்பிலே வாளையும் வேலையும்,
ஏன் குண்டுகளையும் வீச முடியும்!
கோழியின் குரல்வளையையும்,
போரிலே பகையின் குரல்வளையையும்
என் அங்கையின் அணைப்பிலேயே அற்றுவிடமுடியும்.
ஆனால் அந்தச் சின்னஞ்சிறு மணலை
என் அங்கையால் என்ன செய்து விட முடியும்?
எண்ணிப் பார்க்கையில் துக்கு மணல்
சற்று வெட்கநகைகலந்த சினத்தை அளித்து என்னை அதற்கு
இளையவனாக்கிவிட்டது!
ஒற்றைக் கல்லெடுத்து என்னால்
ஒரு மைலுக்கு வீசமுடியும்!
ஆனால் ஒற்றை மணல் எடுத்து வீச முடியுமா?
சிரிக்கிறேன்.
குண்டுக்கல்லைத் தூக்கி எறிந்து
ஒலிம்பிக் போட்டியில் ஆடுகின்றனர்.
ஒற்றை மணல் வீசும் போட்டி வைத்தால்
அது எப்படி இருக்கும் என்ற சிந்தனை
சில நொடித்துகள்களில் வந்து விட்டு
வணக்கம் சொல்லிச் சென்று விட்டது.
கைகளின் அணைவோடு தற்போது
என் உச்சி மண்ணை உரசுகிறது.
புழுதி என் மயிர்களின் முடிகளிலும்
நடுவுகளிலும் ஒட்டியிருக்கும் இந்நேரம்.
மனிதர் கூட்டத்திற்கு மயிர் என்றால் கோவம் வரும்.
முடியென்றால் உச்சி என்பார்.
தலையென்றாø உச்சி என்பார்.
ஆனால் வளர்ந்து விட்ட மயிரை வெட்டும்போது
முடியை வெட்டுகிறேன் என்பார்!
மயிருக்கும் முடியுண்டு! அடியும் உண்டு!
அதை அசட்டையில் மறந்து விட்டு
மனித முடியையும் மயிரின் முடியையும் ஒன்றென்பார்!
மயிரின் அடியில் மனிதரின் முடி முடிகிறதா?
அல்லது மனித முடியில் மயிரின் முடியும் அடங்குகிறதா?
இந்த மயிரளவு மொழி எனக்கு விளங்கவில்லை.
மனிதர் தற்போது Hair dress பண்ணிக் கொள்வதாகச் சொல்கிறார்கள்.
சிலர் முடி திருத்துவார்களாம்.
மூளைக்குள் கையை விட்டுத் துழாவி கசடையெல்லாம்
வழித்து எறிந்து விட்டு மூடிவிடுகிறார்களா என்ன?
மயிரைச் சுருட்டி மடக்கி அறுத்துப் போடுவதற்கு
முடிதிருத்தம் என்று பெயராம்.
என் அண்டை வீட்டு அனல்மங்கை,
அவளின் அக்காளின் மயிரை அறுப்பேன் என்று
அடிக்கடிச் சண்டை போடுவாள்!
அடுத்த தெருவில் நான் நின்று கொண்டிருந்தாலும் காதில் விழும்
இந்தக் குரலின் போது ஏன் இவள் முடியை அறுப்பேன் என்று
சொல்வதில்லை என்று எண்ணிக் குழம்பிப் போய்விடுவேன்.
குழப்பம்தான் மிச்சம்.
குழப்பத்திலேயே, மேலும் அழுந்த என் மயிரின் அடியில்
சற்று வலிக்கிறது. மயிர்கள் மண்ணில் அழுந்தும்போது
வலிக்கவில்லை. இப்பொழுது வலிக்கிறது.
தற்போது கால்களை மெல்லத் தூக்குகின்றேன்.
அவை மேல் உயருகின்றன;
தலையிலும், கைகளிலும் அழுத்தம் அதிகமாகிறது.
"வலிக்கிறது ஆயினும், அது வலிக்கவில்லை";
பழக்கம் காரணமாக இருக்கக் கூடும்.
சற்றே நடுக்கம்.
கால்கள் கீழே வந்து விடும்படியான சின்னதொரு நடுக்கம்.
சமாளிக்கிறேன்.
மீண்டும் ஒரு சமாளிப்பு;
தற்போது நட்டமாக ஆனால் முடிகீழும், அடிகள் மேலுமாய் நான்.
மிக மெல்லிய சமாளிப்புடன் அமைதியாக!
மெல்லக் கால்களை விரிக்கிறேன், இரண்டு கிளைகளைப் போல!
என் மனதிலே அசைவில்லை.
உடலில் அசைவு மிகக் குறைவு. மெல்லிய நகை என் இதழ்களில்.
ஒரடி ஆழத்தில், மூவடிச் சதுரக்குழி.
இன்னும் சில மணித்துகள்களில் எல்லாம் மாறிவிடும்.
இதழ்களில் தவழும் இகழ்நகை இப்போது!
ஆண் ஆணாக மாறாத உலகத்தில்,
பெண் பெண்ணாக மாறாத உலகத்தில்,
ஆண் பெண்ணாக மாறி விடமுடிகிறது;
பெண் ஆணாக மாறிவிட முடிகிறது.
பெண்ணாகப் பிறந்து பெண்ணாகவே மாறிப்
பெண்ணாகவே பெருமையுடன் வாழ்ந்தால்,
பெரும்பண்பு படைத்திருந்தால்
பெண்ணைப் பிற்போக்கானவள் என்கிறார்கள்.
அவளின் சுவரொட்டியில் சாணம் வீசுகிறார்கள்.
பேனாவில் சாணத்தை ஊற்றிப் பத்திரிக்கையில் மெழுகுகிறார்கள்.
அதற்குப் பெயர் பெண்ணியம் என்கிறார்கள்.
விசாரித்த போதுதான் அறிந்தேன்,
பெருஞானப் பிரபுக்களாம் அவர்கள்.
அவர்களுக்கு சாணம் குதப்பித் தரும் குடுக்கைகள் ஆயிரம்.
பெண்ணாகப் பிறந்து பெண்ணாக மாறாவிடில்,
பெண்ணைத் தேவடியாள் என்று சொல்கிறார்கள்.
தேவர் அடி ஆள்களை, தேவடியாள்களாக ஆக்கிக்
காண்பித்திருக்கும் இந்தக் குமுகத்தில்,
நல்ல தேவடியாள் கெட்டத் தேவடியாள்
என்று இரு வகை வேறு உண்டு.
நாயாய்ப் பிறந்தாலும் தெருநாய் வேறு,
தேரில் போகும் நாய் வேறு அல்லவா! அது போல.
பெண்ணாகப் பிறந்த எனக்கு பெண்ணாய் மாறுவதற்குப் பயம்.
முற்போக்கு பேசும் பிற்போக்குவாதிகளும்,
பிற்போக்குப் புரியாத முற்போக்குவாதிகளுக்கும்
இடையே கிடந்து நான் காணாமல் போய்விடுவேன்.
பெண்ணாகப் பிறந்த எனக்கு பெண்ணாய் மாறாமல் இருப்பதற்கும் பயம்.
தெருநாயாய்ப் போவேனா அல்லது
தேரில் போவேனா என்று முடிவாகத் தெரியவில்லை.
பெண்ணாய்ப் பிறந்த எனக்கு ஆணாய் மாறிவிட பயமில்லை.
ஆனால், அருவெறுப்பு.
ஆணாய்ப் பிறந்தவன் ஆணாய் மாறாமல் கிடக்கையில்,
அவர்களிடையே நானும் ஒருவனாய் அல்லல்பட எனக்கு ஆசையில்லை.
பாரதி என்று ஒருவன் இருந்தான்.
காணி நிலம் வேண்டும் என்று பராசக்தியிடம் கேட்டான்.
பத்துப் பதினைந்து தென்னை மரம் கேட்டான்.
பக்கத்திலே ஒரு பத்தினிப் பெண் வேண்டும் என்றும் கேட்டான்.
அண்மையில் பயணித்த போது,
அவனை ஒரு மிகப் பெரிய படமாக்கி
சாலைச் சந்தி ஓரம் வைத்திருந்தார்கள்.
அற்புதமான படம். மகிழ்ந்து போனேன்.
பக்கத்தில் "காணி நிலம் வேண்டும், பராசக்தி காணி நிலம் வேண்டும்"
என்ற அவன் கவிதை வரியைத் தீட்டி வைத்திருந்தார்கள்.
மேலும் மகிழ்ந்தேன்.
பாலோடு தேன் கலந்தாற்போல மனதில் மகிழ்ச்சி.
மேலும் படித்தேன்.
இடைவெளி விட்டு சற்றுக் கீழே,
"வீடு மனை வாங்க விற்க அணுகவும்" என்று எழுதி முகவரியும்
எழுதியிருந்தார்கள்.
வீடு, மனை வாங்கி விற்கும் விளம்பரத்திற்குô
பாரதியும் பாரதியின் தமிழும் பயன்பட்டிருக்கின்றன
என்று எண்ணியபோது ஏனோ
பாலோடு தேன் கலந்த அதில் சிறிது
சயனைடும் கலந்தாற்போன்ற உணர்வு.
பாரதியின் பத்துப் பதினைந்து மரங்களில் ஒன்றாக மாறலாமா,
அல்லது பத்தினிப் பெண்ணாக மாறலாமா!
ஏதோ ஒன்றாய் மாறிவிட பேதைப் பெண் நான் துடிக்கின்றேன்.
மனிதத்தின் கழுத்து என்றும் அறுபட்டுக் கொண்டே இருக்கும்.
ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும்
மாறிவிட முடிகின்ற உலகத்தில் மரமாய் மாறிவிட்டால்தான் என்ன?
பெண்ணாய்ப் பிறந்த நான் சிந்தித்தபோது,
மரமாய் மாறிவிட எடுத்த அந்த அற்புதமான முடிவு,
எனக்கு வெளிக்குள் வெளிகடப்பதைப் போன்ற உணர்வை,
குழிக்குள் குனிந்தென்னை ஊன்றிக் கொண்டபோது ஏற்படுத்தியது.
மனிதரை விட உயரமாகப் போகிறேன்!
முடிவொன்றை நிகழ்த்தியதில் மகிழ்ச்சிதான் எனக்கு!
முழுமையும் மரமாக மாறிவிட்டேன்.
ஒரு கன்று மரமாகத் தற்போது நிற்கிறேன்.
மரத்தின் அழகில் மகிழ்ந்து யாரோ குடம் தண்ணீர் விட்டது
மட்டும் ஏறத்தாழ நூறு ஆண்டுகளாகியும் என் நினவில் இருக்கிறது.
என்னைப் பல மாக்களின் மண்டைகளுக்கு உவமையாக்கி
என் இனத்திற்கு இழிவு தேடித் தந்தவர்களை
என்னால் இன்று மன்னிக்க முடிகிறது!
என் மயிர்களின் முடிகள் வேர்களாய் ஆழமாய்
அடியைத் தேடித் தேடிச் சென்றகாலங்கள் இனிமையானவை!
என் கால்கள், வளர்ந்து வளர்ந்து
உயரே, உயரே!
கிளைகளாய், கொம்பாய்!
வான் தழுவி நிற்கிறேன்.
ஆம், என்னிடம் கதை பேசிய எறும்புகள்
அப்படித்தான் சொல்லின!
மனிதனும் அப்படித்தான் சொல்கிறான்.
வான் உயர நிற்கிறேன் என்று
மனிதனும் சொல்கிறான்! எறும்பும் சொல்கிறது!
அன்னை பூமியின் அடிவயிற்றில்
அள்ளி அள்ளி உண்டதெல்லாம்
பாலாய்த் தேனாய்ப் பாகாய் இனித்தன.
உண்டு விட்ட மீதத்தை விட்டெறிந்த போது,
அது, காயாகக் கனியாக
இலையாகத் தழையாகப்
பூவாகத் தேனாக,
புவிமாந்தர் நாவிற்கு உணவானது!
செவியற்றப் புவிமாந்தர் பலரின் புகலிடமே நானாக இருந்தேன்.
விட்டெறிந்தது போதாது என்று,
இறைவனுக்கு நான் பெற்றுத் தந்ததையும்
பற்றிச் சென்ற கள்ளர் குழாம் மிகப் பெரியது!
சற்றே வியர்த்த போதெல்லாம்,
நான் கேட்காமலே,
என்னருகே நின்ற மரங்களெல்லாம்
எனக்கு வீசிவிட்ட அந்த உறவு உயர்ந்தது!
பக்கத்து மரத்திற்கு வியர்க்குமோ என்று
என்னையும் அறியாமல் நான் வீசிவிட்ட
அந்தத் தருணங்கள் எனக்கு உயர்ந்தன!
நாய்கள் சில அடிக்கடி என்னருகில் வந்து நீர் பெய்யும்!
மனிதர்களும் சில நேரங்களில் அப்படிச் செய்வார்கள்.
ஒவ்வொரு கனியையும் காயையும்,
மலரையும் இலையையும் மனிதன் கொய்த போது
பேறுகாலப் பெண்ணின் துன்பமாய் என்னை வாட்டியது உண்மை!
அடுத்த நாளிலேயே அவனை மன்னித்து விட்டபோது
நான் மேலும் உயர்ந்தேன் என்பதும் உண்மை.
சுவையான உணவை புவிஅன்னை அளிக்கிறாள்.
எனக்குச் சரவலே இல்லை.
நான் பேசுவதேயில்லை.
உறுதியாக அன்னை நிலத்தைப் பற்றி நிற்கிறேன்.
என் வாய் பேசுவதேயில்லை என்பதால்,
நான் உளறுவதும் இல்லை.
இந்த மனிதர்களின் வாய்கள் பிடிப்பின்றிக் கிடக்கின்றன.
அதற்கொரு பற்றில்லை.
பிடிப்பும் பற்றும் இல்லாததால் வாய்கள் ஊஞ்சலாடுகின்றன.
வேளைக்கொன்று கிளக்கின்றன.
பெரும்பாலும் உளறல்கள்.
இவர்களின் வாய்களில் துர்நாற்றம் வீசுகின்றதாம்.
ஆனால் எனக்கு அதில் நம்பிக்கையில்லை. ஏனெனில்,
இவர்கள் முத்தமிட்டுக் கொள்கிறார்களே எபப்டி?
எனது தலை நிலத்தில், நிலவடியில்;
கால்கள் மேலே! வாய் இருப்பது தலையுள்ள இடத்தில்தானே!
நேரே நிற்கின்றேன் நான்.
இந்த மனிதர்களின் தலைகள் வானத்தில்!
கால்களில் மண்ணில்.
எப்படியிருக்கிறது? தலைகீழாக இவர்கள் வாழவேண்டும் என்று
ஆண்டவன் இவர்களுக்கு சாபமிட்டிருக்கிறான் போல!
இவர்கள் தலைகீழாக நிற்பதால்,
இறைவனையும் தலைகீழாக அமர்த்தி வைத்திருக்கிறார்கள்.
இவர்களிடம் எல்லாமே தலைகீழ்!
ஒருவருக்கொருவர் பொல்லாதவர் என்று சொல்லிக்கொள்ளும்
புரட்சிக்காரர்கள் இந்த மனிதர்கள்! அதற்கு அறிவு என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.
எங்கேயோ,
எனக்கு எட்டாத தூரத்தில்,
பல காதங்களுக்கு அப்பால்,
இருந்த மரங்களை யெல்லாம்
வெட்டி விட்டார்களாம் பல ஆண்டுகளாய்.
யாரோ பேசிக் கொண்டது எனக்கும் கேட்டது.
தேனீக்கள் எனக்கு எழுதரிய இன்பம் அளித்தன!
பறவைகள் என் பாதங்கள் பற்றி வாழ்ந்தன!
அங்கே அவைகள் மாட மாளிகைகள் கட்டி வாழ்ந்தன!
தினம் என்றன் சீரடிகளுக்கும்
திருப்பள்ளி எழுச்சி பாடிய அந்தப் பறவைகள்,
இன்றைக்கு என்னைக் கடந்து போகையில்
திரும்பிப் பார்க்கவும் மறந்து விடுகின்றன.
சிலவற்றின் பார்வையிலே பரிவில்லை!
பலவற்றில் பரிகாசம் நிரம்பியிருக்கின்றது.
போன புயல் சாய்த்த இரு கிளைகள் பேரிடி எனக்கு.
அதற்குப் பின்னும் தழைத்தபோது,
கிளைக்க முடியவில்லை நிறைய!
வயதாகினது எனக்குத் தெரிகிறது.
பூத்தபோது பூக்கள் குறைவே சில வருடங்களாய்.
வடுக்கும் போதே வீழ்ந்த காய்கள் வெம்பிக்கிடக்கின்றன
என்னைச் சுற்றி.
தப்பிக் கனிந்த கனிகள் சிலவே அதனால்
பறவைகள் வருவதும் குறைவே.
பற்பல ஆண்டுகளுக்கு முன்னால்
ஒருவன் தூக்குப் போட்டுக் கொண்டது
என் நினவில் இருக்கிறது.
அவன் உயிரோடு இருந்த போது ஒரு
குட்டி நாய் கூட அவனைக் கண்டு மிரளாது.
அவன் செத்துப் போனதன் பின்னர்
அவனின் ஆவி சுற்றுவதாக
இந்த மனிதர்கள் சுற்றிக் கொண்டு திரிந்தார்கள்.
அந்த ஆவி சுற்றலில் பயந்து போய்த் திரிந்தார்கள்.
என் நிழலுக்கு அவர்கள் அண்டுவதே இல்லை.
"உள்ளூர்க்காரனுக்கு மரத்தைக் கண்டால் பயம்;
அசலூர்க்காரனுக்கு ஆற்றைக் கண்டால் பயம்"
என்ற சொலவடைக்கு ஏற்றாற்போல, அசலூர்க்காரர்கள்
யாராவது எப்பொழுதாவது என்னடியில் சற்று இளைப்பாறுவார்கள்.
சில ஆண்டுகளுக்குப்பின் மேலும் சிலர்
தூக்குப் போட்டுக் கொண்டு செத்துப்போனார்கள் கூட்டமாக.
இவர்களின் ஆவிக்கு மனிதர்கள் பயப்படவில்லை.
பயம் போய்விட்டதோ? அப்படித்தான் எண்ணினேன்!
மெல்லத்தான் புரிந்தது!
அவர்கள் பஞ்சம் பசி பட்டினியால்
தூக்குப்போட்டுக் கொண்ட விவசாயிகள்!
பட்டினியால் சாகும் உழவன்/ஏழையின்
பேய்க்கு யாரும் பயப்படுவதேயில்லை!
என் மர மண்டைக்கு ஏதோ உரைக்கின்றது.
உழவன் என்னைப் போல பல
பயிர்களையும் மரங்களையும் வளர்க்கின்றான்.
அதனால் அவன் மேல் எனக்குப் பாசம் அதிகம்.
ஆனால், மனிதக் குமுகத்தில்
அவன் வாழ்ந்தாலும் சரி மறைந்தாலும் சரி
அது ஒரு விசயமே இல்லை!
மேலும் மேலும் இப்பொழுதெல்லாம்
அடிக்கடி யாராவது வந்து தூக்குப் போட்டுக் கொள்கிறார்கள்.
என் பெயர் கெட்டுப் போனது; போகிறது!
என் நிலைமை எனக்கு மிகுந்த துக்கத்தைத் தருகிறது.
பசுமையான காலங்கள் போய், ஊரும் நானும் மெல்ல
மெல்லக் காய்ந்து, காய்ந்து, சற்றே தீய்ந்தும் போவதாய் உணர்வு.
இப்பொழுதெல்லாம்
எப்பொழுதாவது சில இலைகள் முளைக்கின்றன.
நட்ட மரத்திற்கு
மொட்டை மரம் என்று பெயர் வைக்கிறார்கள்.
என் நெஞ்சு அடைக்கிறது!
குரல் கம்முகிறது!
ஆறுதலுக்காக,
அவ்வப்போது தள்ளித் தள்ளி நிற்கின்ற ஒரு சில மரங்கள்
காற்று வீசிக் களைப்பைக் குறைக்கின்றன.
வேர்கள் முட்டி மோதிப் பார்த்தும்
நீரைக் குடிக்க முடியவில்லை.
நீரிருந்தால் தானே!?
ஒவ்வொரு மதியமும் என் வேர்களைக் கொல்கின்றன.
ஒரே நேரத்தில் என் வேர்களுக்கெல்லாம்
தீ வைத்தாற்போன்ற வேதனை.
ஒவ்வொரு நாளும்! விடாமல்
என்னை யாரோக் கொல்கிறார்கள்!
தினமும் மதியத்தில்!
மீண்டும் மீண்டும் கொல்கிறார்கள்!!
இன்னும் நான் சாகவில்லை!
ஒரே நாளில் என்னைக் கொல்ல முடியவில்லை அவர்களால்!
நான்யார்? என் வரலாறு எத்தனை?
அதனால்தான், தினமும் கொஞ்சம் கொஞ்சமாய்
என்னைக் கொல்கிறார்களோ?
தள்ளாமையில் எனது கர்வம்!
எனக்குப் புரியவில்லை.
பூமியிலும் நீரில்லை!
அண்டை அயலில் மரங்களையும் காணவில்லை.
என் கழுத்து இறுகுகிறது போன்ற வேதனை.
மெல்ல மேலே பார்க்கிறேன்.
சுத்தமாக மொட்டையாகி குட்டையாய்த் தெரிகிறேன்.
மொட்டைக் கிளைஒன்றின் ஒரு பகுதியில் உளுத்துக் கொட்டுகிறது.
பறவைகள் மறந்து விட்டன!
பாம்பு கூட வருவதில்லை.
எல்லோருக்கும் ஏதோ புரிகிறது.
வெப்பம் என்னைக் கொல்கிறது!
அன்னை மடி வற்றி விட்டது!
தற்போது தூக்குப் போட்டுக்கொள்ளக் கூட
யாரும் வருவதில்லை!
மங்கையாக இருந்திருந்தால்
ஒரு நாள் மட்டுமே மஞ்சள் பறிபோயிருக்கும்.
எனக்கு ஒவ்வொரு நாளும் என் பச்சை பறி போகிறது!
பக்கத்து மரங்கள் பலவற்றையும் - "வந்தார்கள் வெட்டினார்கள்
கொன்றார்கள்"!. நான் தினம் தினம் காய்கிறேன்!
எனக்குப் புரியவில்லை.
ஆணி வேரின் அடிப்பகுதி வரை ஏறத்தாழக்
காய்ந்து விட்டது. அதன் முகப்பு
மண்ணோடு மண்ணாகக் கலந்து விட்டது.
இன்னும் எத்தனை நாள் இந்த வேதனை?
இன்று கடுமையான மழை!
காற்றும் கூடவே அடிக்கிறது.
நிலத்துக்கு நிம்மதி! குடிகளுக்கு கும்மாளம்.
இதோ நான் பிழைத்துக் கொள்வேன்
என்று ஒரு நம்பிக்கை பிறக்கிறது.
நிலத்துக்குக் கொஞ்சம் நிம்மதி!
குடிகளுக்குக் கும்மாளம்.
தண்ணீர் ஊறுகிறது; நிறைய நிறைய!
வேர்களுக்கு விழிப்பு வருகிறது. ஆயினும்
குட்டம் வந்த உடலைப் போல அவை குறுகிப்போயிருக்கின்றனவே!
காய்ந்து போன வேர்கள் அழுக ஆரம்பிக்கின்றன. ஓ...!
கொஞ்ச நஞ்சம் பச்சை இருந்த வேர்கள் மட்டும்
சற்றே முக்கி முனகுகின்றன. நம்பிக்கைக்கு மட்டும் குறைவேயில்லை.
வீசும் காற்றுக்கு நான் பிழைத்துக் கொள்வேன் என்று ஆனந்தம்!
மழை நின்றும் அது மட்டும் வீசி வீசி மகிழ்கிறது.
எனது மகிழ்ச்சியை அது அறிந்து கொண்டதால் எனக்கும் மகிழ்ச்சியே!
ஆயினும், என் இதயம் கடுமையாக வலிக்கிறது!
காற்றே கொஞ்சம் நிற்க மாட்டாயா? என் கெஞ்சல்
அதன் காதுகளில் விழவியேயில்லை.
மேலும் மேலும் ஊய் ஊய் என்று!
வலுவிழந்து போயிருந்த இடுப்பெனக்கு இப்போது வலிக்கிறது.
என்பால் கொண்ட அன்பில் காற்றுக் கூத்தாடுகிறது!
நிறுத்தச் சொல்லி என் எஞ்சிய சக்தியெல்லாம் கூட்டி
ஓ என்று ஓசையிடுகிறேன்!
அது இடுப்போடு நான் முறிந்து வீழ்ந்த ஓசையாகிப் போனது!!
காற்று மட்டும் மகிழ்ச்சி குறையாமல் இன்னும் வேகமாக வீசிக்
கொண்டேயிருக்கிறது.
தற்போது எனக்கு எல்லாமே புரியவில்லை!
அன்புடன்
நயனி.
08/யூலை/06
Friday, June 16, 2006
அர்செண்ட்டைனா - என்ன ஒரு ஆட்டம்!
அர்செண்ட்டைனா இன்று செர்பியா-மோண்ட் அணியை 6 கவல்கள் அடித்து
தூள் தூளாக்கியது ஒரு புறம் என்றால், அந்த அணியின் ஆட்டம் ஒப்பற்ற ஆட்டம்
என்பதில் அய்யமிருக்க முடியாது.
புள்ளி வைத்து கோலம் போட்டார் போல கடவுகள் அற்புதம். இது வரை நான் பார்த்த
கால்பந்தாட்டத்திலே இப்படி ஒரு ஆட்டம் பார்த்ததில்லை. இந்த அணியின்
கடவுகள் (passes)மாரடோனா காலத்தில் கூட இவ்வளவு அற்புதமாக இருந்ததில்லை.
1990 ஆம் ஆண்டு செர்மனியின் ஆட்டம் ஓரளவு இதனை ஒட்டியிருந்தது. இருப்பினும்,
இத்தனை அழகை நான் பார்த்ததேயில்லை.
அந்த இரண்டாவது கவலை (கவல் = Goal :நன்றி முனைவர் இராம.கி) 24 கடவுகளில்,
செர்பிய அணியினர் கால்கள் கட்டிப் போட்ட மாதிரி நின்று கொண்டிருக்க 24ஆவது கடப்பில்
கேம்பியாசு அதனை அடித்த அழகு கண்களை விட்டு அகலாது.
அந்த கவல் கேம்பியாசிற்கு சொந்தமல்ல; மொத்த அணிக்கே சொந்தம்.
அர்செண்ட்டைனாவின் இந்த ஆட்டத்தைப் பார்த்து பிரேசில் உள்பட
பல அணியினர்க்கும் கிலி பிடித்திருக்கும் என்பதி அய்யமில்லை.
மெசி யின் ஆட்டத்தைப் பார்க்க முடியாதோ என்று நினைத்த எனக்கு,
கடைசி 15 நிமிடங்களில் அவரும் வந்து ஒரு கவலுக்கு வழி வகுத்தும்,
ஒரு கவலை அவரே அடித்தும் இன்றைய மாலையை இனிமையாக்கி விட்டார்.
குழந்தை போல மாரடோனா குதித்துக் கூத்தாடியது இன்னும் மனதினை இனிமையாக்கியது.
(எனினும் மாரடோனாவைப் பார்க்கும்போதெல்லாம் என் மனம் வாடி வதங்கவே செய்கிறது.)
அன்புடன்
நாக.இளங்கோவன்
தூள் தூளாக்கியது ஒரு புறம் என்றால், அந்த அணியின் ஆட்டம் ஒப்பற்ற ஆட்டம்
என்பதில் அய்யமிருக்க முடியாது.
புள்ளி வைத்து கோலம் போட்டார் போல கடவுகள் அற்புதம். இது வரை நான் பார்த்த
கால்பந்தாட்டத்திலே இப்படி ஒரு ஆட்டம் பார்த்ததில்லை. இந்த அணியின்
கடவுகள் (passes)மாரடோனா காலத்தில் கூட இவ்வளவு அற்புதமாக இருந்ததில்லை.
1990 ஆம் ஆண்டு செர்மனியின் ஆட்டம் ஓரளவு இதனை ஒட்டியிருந்தது. இருப்பினும்,
இத்தனை அழகை நான் பார்த்ததேயில்லை.
அந்த இரண்டாவது கவலை (கவல் = Goal :நன்றி முனைவர் இராம.கி) 24 கடவுகளில்,
செர்பிய அணியினர் கால்கள் கட்டிப் போட்ட மாதிரி நின்று கொண்டிருக்க 24ஆவது கடப்பில்
கேம்பியாசு அதனை அடித்த அழகு கண்களை விட்டு அகலாது.
அந்த கவல் கேம்பியாசிற்கு சொந்தமல்ல; மொத்த அணிக்கே சொந்தம்.
அர்செண்ட்டைனாவின் இந்த ஆட்டத்தைப் பார்த்து பிரேசில் உள்பட
பல அணியினர்க்கும் கிலி பிடித்திருக்கும் என்பதி அய்யமில்லை.
மெசி யின் ஆட்டத்தைப் பார்க்க முடியாதோ என்று நினைத்த எனக்கு,
கடைசி 15 நிமிடங்களில் அவரும் வந்து ஒரு கவலுக்கு வழி வகுத்தும்,
ஒரு கவலை அவரே அடித்தும் இன்றைய மாலையை இனிமையாக்கி விட்டார்.
குழந்தை போல மாரடோனா குதித்துக் கூத்தாடியது இன்னும் மனதினை இனிமையாக்கியது.
(எனினும் மாரடோனாவைப் பார்க்கும்போதெல்லாம் என் மனம் வாடி வதங்கவே செய்கிறது.)
அன்புடன்
நாக.இளங்கோவன்
Thursday, June 15, 2006
தேரா மன்னா! செப்புவது உடையேன்!
சன்னல் பதிவில் மாலன்:
(http://jannal.blogspot.com/2006/06/blog-post.html )
சிலப்பதிகாரம் பெருமிதம் கொண்ட காவியம் என்கிறார்.
அதில் உள்ள பல கூறுகளைப் பெருமிதம் என்கிறார்.
காவுந்தி அடிகள் முதல், அக்காப்பியத்தில் வரும் புல் பூண்டு வரை எல்லாமே
பெருமிதம் என்கிறார் மாலன். எல்லாவற்றையும் விட அதன் ஆசிரியர்
இளங்கோவடிகளை மிகவும் போற்றுகிறார் மாலன். ஆனால் அக்காப்பியத்தின்
தலைவி கண்ணகி மட்டும் இவருக்கு ஆக மாட்டேன்கிறாள் :-)
முரண்பாடு!
இவரின் பார்வையில் கண்ணகி என்ற பாத்திரம் மோசம்! ஆனால்
அதனை ஆக்கிய படைப்பாளியும், காவுந்தியடிகள் முதல்
வேண்மாள், செங்குட்டுவன், கயவாகு வரையிலான கண்ணகியைப் போற்றும்
அத்தனைப் பாத்திரங்களும் மாலனுக்கு உயர்வு. முரண்பாடு!
>>மாலன் எழுதியது<<<
கவுந்தி அடிகள் குரல் அவரது குரல்தான் என்றால் அதில் காணப்படும்
முதிர்ச்சிக்காகப் பெருமிதம் கொள்ளலாம்.
>>>>>>>>>>>>>>>>>>
காவுந்தி அடிகளாரை அவரின் முதிர்ச்சிக்காகப் பெருமிதம் கொள்ளலாம்
என்று சொல்கிறார் மாலன். உண்மைதான். அவர் ஒரு உயர்ந்த
கதாப்பாத்திரம். "காவுந்தி அடிகள் என்ற அந்த உயர்ந்த பெண்மணிதான்
கண்ணகி அம்மையை மிக உயர்வாகப் போற்றியவர்."
சிலம்பில் காவுந்தியாரின் குரல்தான் இது:
"இன்துணை மகளிர்க்கு இன்றியமையாக்
கற்புக் கடம் பூண்ட இத்தெய்வம் அல்லது
பொற்புடைத் தெய்வம் யாம் கண்டிலமால்;"
கண்ணகிக்கு "கற்புக் கடம் பூண்ட பொற்புடைத் தெய்வம்" என்ற
வடிவத்தைக் கொடுப்பதே காவுந்தியாரின் குரல்தான்!
கண்ணகியின் உயர்ந்த குணநலன்களைக் கொண்டு,
அவளை கற்புக்கரசியாகவும், தெய்வமாகவும்
காப்பியத்தில் வடிவம் கொடுக்கும் இளங்கோவடிகளார்,
அதை முதலில் செய்தது, காவுந்தியடிகள் என்ற பாத்திரத்தின்
மூலம்தான்!
அதேபோல அவளுக்கு காவுந்தி அம்மையாரும், அடிகளாரும்
கற்புக்கரசி வடிவமும் தெய்வ வடிவும் கொடுத்தது, கோவலன்
மறைவுக்கு முன்னாடியே!
அப்பொழுது கண்ணகி நீதி கேட்டிருக்க வில்லை!
நெடுஞ்செழியன் மாண்டிருக்கவில்லை!
மதுரை எரிந்திருக்க வில்லை!
கண்ணகியும் மாண்டிருக்கவில்லை கோவலனும் மாண்டிருக்கவில்லை!
அப்படி கண்ணகியைத் தாங்கிய காவுந்தியார் உயர்ந்தவராம்;
உயர்ந்த காவுந்தியார் தாங்கிய கண்ணகி அப்படியெல்லாம்
இல்லையாம் - மாலன் சொல்கிறார். முரண்பாடு!
உயர்ந்தோர் ஏற்றுவது எப்பொழுதும் உயர்வையேதான்!
காவுந்தியம்மை உயர்ந்த குணம் உடையவர்.
அவரால் கண்ணகியை மிக உயர்வாகப் பார்க்க முடிந்திருக்கிறது.
படைத்தவனை விடவா பாத்திரம் பெரிது? என்று கண்ணகிக்கு பதில்
இளங்கோவடிகளைப் போற்றலாமே என்று பரிந்துரைக்கிறார்.
மணிமேகலைக்கு சிலை வைத்திருக்கலாமே என்றெல்லாம் புலம்புகிறார்.
மணிமேகலைக்கோ, இளங்கோவடிகளாருக்கு சிலைகள் வைத்தால்
போற்றினால் மேலும் மகிழ்ச்சிதான். ஆனால் கண்ணகிக்கு வைத்தது
தவறு என்ற இவரின் வாதம் முரண்பாடுகள் நிறைந்தது - அடிப்படைக்
குறைகள் கொண்டது.
>>>>மாலன் எழுதியது<<<<<<
கணவன், வேறு ஒரு பெண்ணின் பால் ஈர்க்கப்பட்டு அவள் வீடே கதி என்று
பல ஆண்டுகள் கிடந்த போது கண்ணகி வருந்தி அழுதாளே தவிர, அவளை
விட்டு விலகி வாழ்வதைக் குறித்து எண்ணிக்கூடப் பார்க்கவில்லை
>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ஞாநி செய்த அதேத் தவறை மாலனும் செய்திருக்கிறார்.
கண்ணகியை விட்டு, கோவலன் "பல ஆண்டுகள்" பிரிந்திருந்ததாகச்
சொல்கிறார். அது தவறு என்றும் ஓராண்டுக்குக் கீழேதான் பிரிவின் காலம்
என்று திரு.ஞாநிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன்.
முனைவர் இராம.கி ஐயா, பல படிகள் மேலே போய், ஒரு ஒப்பற்ற
சிலப்பதிகார ஆய்வை, பல தளங்களில் நின்று செய்து, மாதவியுடனான
வாழ்வு ஒரு வருடம் அல்லது அதற்கும் கீழே என்று விவரித்திருக்கிறார்.
சிலப்பதிகாரத்தையும் கண்ணகியும் விமர்சிக்கும் முன்னர் ஒவ்வொருவரும்
valavu.blogspot.com டுரைகளை அவசியம் படிக்கவேண்டும்.
மாலனும் ஞாநியும் இவ்வாய்ப்பை நிச்சயம் தவறவிடமாட்டார்கள்
என்று நம்புகிறேன்.
கண்ணகியின் கணவன் கொலை செய்யப்பட்டதற்கு மதுரையில்
ஏன் அத்தனை பேர் சாவதற்குக் காரணம் ஆக வேண்டும் என்று
கவலைப்படுகிறார். அப்படிப் பட்டப் பெண்மணி மூர்க்கத்தனமானவள்
அல்லவா? என்கிறார்.
அசோகவனத்தில் சீதையை, தேடிக் கண்டுபிடித்து விடுகிறார் அனுமன்.
வாம்மா, தங்களைக் கொண்டு போய் இராமனிடம் சேர்த்து விடுகிறேன்
என்று சொல்கிறார் அனுமன்.
மாலன் மற்றும் பலரின் வினாவையும் ஒப்ப நாமும் வினா வைத்தால்,
இப்படித்தான் கேட்கத் தூண்டும்.
"ஏம்மா சீதா!, அனுமன் கூப்பிட்டானே, அவன் கூடப் போய்
இராமனைச் சேர வேண்டியதுதானே... "! என் கணவனின் வில்லுக்கு அது
இழுக்கு" என்று வசனம் பேசி விட்டு நீ பாட்டுக்கு
உட்கார்ந்திருந்ததால்தான் பல வானரங்கள், கரடிகள், மற்றும் இலங்கை
வாழ் அத்தனை பேரும் செத்தார்கள்?! இது ஞாயமா என்று கேள்வி
கேட்கத் தூண்டும். இப்படி யாரும் கேள்வி கேட்டு விட்டால் உடனே
அவர்களுக்குக் கருப்புச் சட்டை போட்டு விட்டு, திராவிடம், தமிழ்,
பெரியார், நாத்திகம், வெறி, என்று வாய்க்கு வந்தபடி கரித்துக்
கொட்டுவார்கள் பல எழுத்தாளார்கள்.
இளைய தலைமுறை கற்றுக் கொள்ள என்ன இருக்கிறது கண்ணகியிடம்
என்று வினா வைக்கிறார் மாலன்!
மாலன், ஞாநி போன்ற முதிய/மூத்த தலைமுறைகள் சிலப்பதிகாரத்தைச்
சரியான தளங்களில் இருந்து பார்க்கத் தவறி,
பாண்டியன் நெடுஞ்ச்செழியனின் காவலர்கள் போல
"இளைய தலைமுறைக்கு ஒன்றுமேயில்லை
கண்ணகியிடம் இருந்து" என்று, சிலப்பதிகாரத்தைத் தீர ஆயாமல்,
தீர்ப்பை எழுதிவிடுவது நிற்குமானால் இளைய தலைமுறைக்கு
நிறைய பயனளிக்கும் என்று நிச்சயமாகச் சொல்லலாம்.
சிலப்பதிகாரத்திற்கும் மாலன்,ஞாநி கட்டுரைகளுக்கும் ஒரு ஒற்றுமை
இதுதான். சிலப்பதிகாரத்தில் பாண்டியன் நெடுஞ்செழியனின் காவலர்கள்
தீர ஆயாமல், விசாரிக்காமல் கோவலனைக் கொன்று விடுகிறார்கள்.
மாலனும் ஞாநியும் சிலப்பதிகாரத்தைத் தீர ஆய்வு செய்யாமல்,
தவறான செய்திகளைத் தங்களின் மதிப்பிற்குரிய வாசகர்களுக்குச்
சொல்லி கண்ணகியைக் கொன்று விடுகிறார்கள்.
காவலர்கள் கோவலனைக் கொன்றது அக்காலம்!
எழுத்தாளர்கள் கண்ணகியைக் கொல்வது இக்காலம்!
அக்காலத்திலும் சரி, இக்காலத்திலும் சரி "தீர ஆய்வு அல்லது தேவையான
ஆய்வு" என்பதனைச் செய்பவர்கள் குறைவாகத்தான் இருக்கிறார்கள்!
மாணவர்கள் முதல், பெரியவர்கள் வரை சிலப்பதிகாரத்தைக் குறித்து
ஏதாவது பேசினால் உடனே வரும் சிலம்பு வரி,
"தேரா மன்னா! செப்புவது உடையேன்!".
அவ்வரியையே மாலன் அவர்களையும் ஞாநி அவர்களையும்
நோக்கிச் சொல்ல வேண்டியிருக்கிறது.
அன்புடன்
நாக.இளங்கோவன்
15/சூன்/06
(http://jannal.blogspot.com/2006/06/blog-post.html )
சிலப்பதிகாரம் பெருமிதம் கொண்ட காவியம் என்கிறார்.
அதில் உள்ள பல கூறுகளைப் பெருமிதம் என்கிறார்.
காவுந்தி அடிகள் முதல், அக்காப்பியத்தில் வரும் புல் பூண்டு வரை எல்லாமே
பெருமிதம் என்கிறார் மாலன். எல்லாவற்றையும் விட அதன் ஆசிரியர்
இளங்கோவடிகளை மிகவும் போற்றுகிறார் மாலன். ஆனால் அக்காப்பியத்தின்
தலைவி கண்ணகி மட்டும் இவருக்கு ஆக மாட்டேன்கிறாள் :-)
முரண்பாடு!
இவரின் பார்வையில் கண்ணகி என்ற பாத்திரம் மோசம்! ஆனால்
அதனை ஆக்கிய படைப்பாளியும், காவுந்தியடிகள் முதல்
வேண்மாள், செங்குட்டுவன், கயவாகு வரையிலான கண்ணகியைப் போற்றும்
அத்தனைப் பாத்திரங்களும் மாலனுக்கு உயர்வு. முரண்பாடு!
>>மாலன் எழுதியது<<<
கவுந்தி அடிகள் குரல் அவரது குரல்தான் என்றால் அதில் காணப்படும்
முதிர்ச்சிக்காகப் பெருமிதம் கொள்ளலாம்.
>>>>>>>>>>>>>>>>>>
காவுந்தி அடிகளாரை அவரின் முதிர்ச்சிக்காகப் பெருமிதம் கொள்ளலாம்
என்று சொல்கிறார் மாலன். உண்மைதான். அவர் ஒரு உயர்ந்த
கதாப்பாத்திரம். "காவுந்தி அடிகள் என்ற அந்த உயர்ந்த பெண்மணிதான்
கண்ணகி அம்மையை மிக உயர்வாகப் போற்றியவர்."
சிலம்பில் காவுந்தியாரின் குரல்தான் இது:
"இன்துணை மகளிர்க்கு இன்றியமையாக்
கற்புக் கடம் பூண்ட இத்தெய்வம் அல்லது
பொற்புடைத் தெய்வம் யாம் கண்டிலமால்;"
கண்ணகிக்கு "கற்புக் கடம் பூண்ட பொற்புடைத் தெய்வம்" என்ற
வடிவத்தைக் கொடுப்பதே காவுந்தியாரின் குரல்தான்!
கண்ணகியின் உயர்ந்த குணநலன்களைக் கொண்டு,
அவளை கற்புக்கரசியாகவும், தெய்வமாகவும்
காப்பியத்தில் வடிவம் கொடுக்கும் இளங்கோவடிகளார்,
அதை முதலில் செய்தது, காவுந்தியடிகள் என்ற பாத்திரத்தின்
மூலம்தான்!
அதேபோல அவளுக்கு காவுந்தி அம்மையாரும், அடிகளாரும்
கற்புக்கரசி வடிவமும் தெய்வ வடிவும் கொடுத்தது, கோவலன்
மறைவுக்கு முன்னாடியே!
அப்பொழுது கண்ணகி நீதி கேட்டிருக்க வில்லை!
நெடுஞ்செழியன் மாண்டிருக்கவில்லை!
மதுரை எரிந்திருக்க வில்லை!
கண்ணகியும் மாண்டிருக்கவில்லை கோவலனும் மாண்டிருக்கவில்லை!
அப்படி கண்ணகியைத் தாங்கிய காவுந்தியார் உயர்ந்தவராம்;
உயர்ந்த காவுந்தியார் தாங்கிய கண்ணகி அப்படியெல்லாம்
இல்லையாம் - மாலன் சொல்கிறார். முரண்பாடு!
உயர்ந்தோர் ஏற்றுவது எப்பொழுதும் உயர்வையேதான்!
காவுந்தியம்மை உயர்ந்த குணம் உடையவர்.
அவரால் கண்ணகியை மிக உயர்வாகப் பார்க்க முடிந்திருக்கிறது.
படைத்தவனை விடவா பாத்திரம் பெரிது? என்று கண்ணகிக்கு பதில்
இளங்கோவடிகளைப் போற்றலாமே என்று பரிந்துரைக்கிறார்.
மணிமேகலைக்கு சிலை வைத்திருக்கலாமே என்றெல்லாம் புலம்புகிறார்.
மணிமேகலைக்கோ, இளங்கோவடிகளாருக்கு சிலைகள் வைத்தால்
போற்றினால் மேலும் மகிழ்ச்சிதான். ஆனால் கண்ணகிக்கு வைத்தது
தவறு என்ற இவரின் வாதம் முரண்பாடுகள் நிறைந்தது - அடிப்படைக்
குறைகள் கொண்டது.
>>>>மாலன் எழுதியது<<<<<<
கணவன், வேறு ஒரு பெண்ணின் பால் ஈர்க்கப்பட்டு அவள் வீடே கதி என்று
பல ஆண்டுகள் கிடந்த போது கண்ணகி வருந்தி அழுதாளே தவிர, அவளை
விட்டு விலகி வாழ்வதைக் குறித்து எண்ணிக்கூடப் பார்க்கவில்லை
>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ஞாநி செய்த அதேத் தவறை மாலனும் செய்திருக்கிறார்.
கண்ணகியை விட்டு, கோவலன் "பல ஆண்டுகள்" பிரிந்திருந்ததாகச்
சொல்கிறார். அது தவறு என்றும் ஓராண்டுக்குக் கீழேதான் பிரிவின் காலம்
என்று திரு.ஞாநிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன்.
முனைவர் இராம.கி ஐயா, பல படிகள் மேலே போய், ஒரு ஒப்பற்ற
சிலப்பதிகார ஆய்வை, பல தளங்களில் நின்று செய்து, மாதவியுடனான
வாழ்வு ஒரு வருடம் அல்லது அதற்கும் கீழே என்று விவரித்திருக்கிறார்.
சிலப்பதிகாரத்தையும் கண்ணகியும் விமர்சிக்கும் முன்னர் ஒவ்வொருவரும்
valavu.blogspot.com டுரைகளை அவசியம் படிக்கவேண்டும்.
மாலனும் ஞாநியும் இவ்வாய்ப்பை நிச்சயம் தவறவிடமாட்டார்கள்
என்று நம்புகிறேன்.
கண்ணகியின் கணவன் கொலை செய்யப்பட்டதற்கு மதுரையில்
ஏன் அத்தனை பேர் சாவதற்குக் காரணம் ஆக வேண்டும் என்று
கவலைப்படுகிறார். அப்படிப் பட்டப் பெண்மணி மூர்க்கத்தனமானவள்
அல்லவா? என்கிறார்.
அசோகவனத்தில் சீதையை, தேடிக் கண்டுபிடித்து விடுகிறார் அனுமன்.
வாம்மா, தங்களைக் கொண்டு போய் இராமனிடம் சேர்த்து விடுகிறேன்
என்று சொல்கிறார் அனுமன்.
மாலன் மற்றும் பலரின் வினாவையும் ஒப்ப நாமும் வினா வைத்தால்,
இப்படித்தான் கேட்கத் தூண்டும்.
"ஏம்மா சீதா!, அனுமன் கூப்பிட்டானே, அவன் கூடப் போய்
இராமனைச் சேர வேண்டியதுதானே... "! என் கணவனின் வில்லுக்கு அது
இழுக்கு" என்று வசனம் பேசி விட்டு நீ பாட்டுக்கு
உட்கார்ந்திருந்ததால்தான் பல வானரங்கள், கரடிகள், மற்றும் இலங்கை
வாழ் அத்தனை பேரும் செத்தார்கள்?! இது ஞாயமா என்று கேள்வி
கேட்கத் தூண்டும். இப்படி யாரும் கேள்வி கேட்டு விட்டால் உடனே
அவர்களுக்குக் கருப்புச் சட்டை போட்டு விட்டு, திராவிடம், தமிழ்,
பெரியார், நாத்திகம், வெறி, என்று வாய்க்கு வந்தபடி கரித்துக்
கொட்டுவார்கள் பல எழுத்தாளார்கள்.
இளைய தலைமுறை கற்றுக் கொள்ள என்ன இருக்கிறது கண்ணகியிடம்
என்று வினா வைக்கிறார் மாலன்!
மாலன், ஞாநி போன்ற முதிய/மூத்த தலைமுறைகள் சிலப்பதிகாரத்தைச்
சரியான தளங்களில் இருந்து பார்க்கத் தவறி,
பாண்டியன் நெடுஞ்ச்செழியனின் காவலர்கள் போல
"இளைய தலைமுறைக்கு ஒன்றுமேயில்லை
கண்ணகியிடம் இருந்து" என்று, சிலப்பதிகாரத்தைத் தீர ஆயாமல்,
தீர்ப்பை எழுதிவிடுவது நிற்குமானால் இளைய தலைமுறைக்கு
நிறைய பயனளிக்கும் என்று நிச்சயமாகச் சொல்லலாம்.
சிலப்பதிகாரத்திற்கும் மாலன்,ஞாநி கட்டுரைகளுக்கும் ஒரு ஒற்றுமை
இதுதான். சிலப்பதிகாரத்தில் பாண்டியன் நெடுஞ்செழியனின் காவலர்கள்
தீர ஆயாமல், விசாரிக்காமல் கோவலனைக் கொன்று விடுகிறார்கள்.
மாலனும் ஞாநியும் சிலப்பதிகாரத்தைத் தீர ஆய்வு செய்யாமல்,
தவறான செய்திகளைத் தங்களின் மதிப்பிற்குரிய வாசகர்களுக்குச்
சொல்லி கண்ணகியைக் கொன்று விடுகிறார்கள்.
காவலர்கள் கோவலனைக் கொன்றது அக்காலம்!
எழுத்தாளர்கள் கண்ணகியைக் கொல்வது இக்காலம்!
அக்காலத்திலும் சரி, இக்காலத்திலும் சரி "தீர ஆய்வு அல்லது தேவையான
ஆய்வு" என்பதனைச் செய்பவர்கள் குறைவாகத்தான் இருக்கிறார்கள்!
மாணவர்கள் முதல், பெரியவர்கள் வரை சிலப்பதிகாரத்தைக் குறித்து
ஏதாவது பேசினால் உடனே வரும் சிலம்பு வரி,
"தேரா மன்னா! செப்புவது உடையேன்!".
அவ்வரியையே மாலன் அவர்களையும் ஞாநி அவர்களையும்
நோக்கிச் சொல்ல வேண்டியிருக்கிறது.
அன்புடன்
நாக.இளங்கோவன்
15/சூன்/06
Thursday, June 08, 2006
் ஞானியின் "கரடி"!! - An open letter to Mr.Gnani
அன்பின் திரு.ஞாநி,
தங்களின் கண்ணகி சிலை குறித்த கட்டுரையை, கீற்றின் இந்த
http://www.keetru.com/dheemtharikida/jun06/jnani_3.html
சுட்டியில் படிக்க முடிந்தது. ஆனந்தவிகடனில் பரபரப்பாக
வந்ததாகவும் அறிகிறேன்.
ஒரு எழுத்தாளர் அல்லது சிந்தனையாளரின் எல்லாக் கருத்துக்களுமே
ஏற்கக் கூடியவை அல்லது ஏற்கப் படவேண்டியவை என்ற கருத்து
ஒரு சிந்தனையாளர் மற்றும் எழுத்தாளராகிய உங்களுக்கு இருக்காது
என்று நான் நம்புகிறேன்.
உங்களின் பலகட்டுரைகளில் ஒரு தரமான பார்வைத்தளம்
இருப்பதை நான் கண்டிருக்கிறேன். எல்லாக் கட்டுரைகள்
அல்லது கருத்துக்களும் சிறந்தன என்று சொல்ல முடியாவிட்டாலும்
ஒரு நல்ல தளத்தில் இருந்து உங்கள் பார்வைகள் பல
கட்டுரைகளில் வந்திருக்கின்றன.
ஆயினும் கண்ணகி சிலை வைப்பு தொடர்பானக் கட்டுரையில்
உங்களின் கருத்துக்கள் ஒரு தரமான தளத்தில் இருந்து
வந்ததாகத் தெரியவில்லை.
கண்ணகி சிலையை மீண்டும் வைத்தது தவறு என்பதை
வாதத்துக்கு ஒப்புக் கொண்டாலும், அதனை ஒரு தரமான
தளத்தில் இருந்து பார்க்கத் தவறி விட்டிருக்கிறீர்கள்.
கருணாநிதியின் மஞ்சள் துண்டு என்பது அவரின் தோளை மட்டும்
சுற்றியது. ஆனால் கண்ணகி சிலை என்பது அவரின் தோளில்
வைக்கப் பட்டிருந்த சிலை அல்ல. அதை அவரே முதலில்
நிறுவியிருந்தாலும் அது அவருக்கு மட்டும் சொந்தமானதும்
பிடித்தமானதும் அல்ல. எனினும், மஞ்சள் துண்டை ஒட்டிய
உங்களின் வாசகத்தில் இருந்த எழுத்துச் சுவை நன்றாகவே
இருந்தது; அதில் ஒன்றும் எனக்குப் பிணக்கு இல்லை.
கற்புக்கரசி, மற்றும் நீதி கேட்டுப் போராடியது என்ற
இரண்டிலும் பசை இல்லை என்று கூறிவிட்டிருக்கிறீர்கள்.
சரி அப்படியே இருக்கட்டும்! அது பற்றியதல்ல என் கவலை.
கண்ணகியை விட்டு பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கோவலன்
பிரிந்திருந்தான் என்று சொல்லியிருக்கிறீர்கள். அது தவறு!.
கதைப்படி கண்ணகியைப் பிரிந்து, மாதவியைச் சேர்கிறான்
கோவலன்; மாதவியோடு வாழ்கிறான்; பின்னர் மாதவியையும்
பிரிந்து, கண்ணகியைச் சேர்கிறான். இருவரும் மதுரை
சென்றடைகின்றனர். அப்போது மாதவிக்கு மணிமேகலை
என்ற பெண் குழந்தை பிறந்ததாக கோவலனுக்கு சேதி வருகிறது.
ஒரு கரு வளர்ந்து முழுமையடைய எவ்வளவு காலம் ஆகுமோ
அவ்வளவு காலம்தான் கோவலன் மாதவியோடு இருந்திருக்க
முடியும். பத்தாண்டுகள் அவளோடு இருந்தான் என்று என்
சிற்றறிவுக் கெட்டியவரை சிலப்பதிகாரத்தில் எங்கும்
செய்திகள் இல்லை. தாங்கள் அறிந்திருந்தால் அன்பு கூர்ந்து
சொல்லவும்.
மிஞ்சிப்போனால், ஒரு ஏழெட்டு மாதங்கள் அல்லது அதிக பக்கமாக
ஒரு வருடம் கோவலன் கண்ணகியைப் பிரிந்து மாதவியுடன்
வாழ்ந்திருக்க வேண்டும். அவ்வளவுதான்.
இங்குதான் உங்கள் கட்டுரையின் மேலான என் வருத்தம்!
>>>>>>.ஞாநி எழுதியது >>>>>>>>>>>>>
தன்னை பத்தாண்டுகளுக்கு மேலாகப் பிரிந்து வாழ்ந்த கோவலனை
சகித்துக் கொன்டு, அவன் திரும்ப வந்ததும் ஏற்றுக் கொண்டதும்,
அதுவரை தான் இன்னொரு ஆனை நாடாமல் இருந்ததும்தான் கற்பு
என்றால் அப்படிப்பட்ட கற்பு நம் பெண்களுக்குத் தேவையில்லை
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
பல சாதாரணப் பிஞ்சு எழுத்தாளர்களைப் போல, நல்ல தளத்தில்
நில்லாது நீங்களும் கற்பு என்பதனைக் கால் கவட்டியில்
தேடியிருக்கிறீர்கள்.
ஒருவருடத்திற்கும் கீழாக தலைவனும் தலைவியும் பிரிந்து
வாழ்வது ஒன்றும் பெரிய விதயமே இல்லை. சங்க காலம்
முதல் இன்றைய கணிக்காலம் வரை நாம் கண் கூடாகக்
கண்டு கொண்டிருக்கிறோம்.
இன்றைக்கும் திரவியம் தேட திரை கடல் ஓடி,
அதிக பக்கம் ஆண்டுக்கு ஒரு முறை மனைவியைத்
தேடி தாயகம் வரும் ஆடவர் இந்தத் தமிழகத்தில்
ஏன் இந்திய நாடு முழுவதிலும் ஆயிரக்கணக்கில்,
இலக்கக் கணக்கில் இருக்கிறார்கள் என்பதை நீங்களும்
இக்கட்டுரை படிப்பவர்களும் நிச்சயம் ஒப்புக் கொள்வீர்கள்
என்று நம்புகிறேன்.
கண்ணகி, கோவலனைப் பிரிந்திருந்தது மிகச் சாதாரண
ஒரு வருடத்திற்கும் குறைவான காலம். இதில்
கண்ணகி பிற ஆடவரை நாடாதது பெரிய விதயமும் இல்லை;
ஒரு வருட காலம் உடல் உறவை வைத்துக் கொள்ளாமல்
இருந்து விடுவது ஒன்றும் வியக்கத் தக்கச் சங்கதியும் இல்லை.
இது ஆணுக்கும் பொருந்தும் பெண்ணுக்கும் பொருந்தும்.
இன்றைக்கும் இலக்கக் கணக்கான தம்பதியினர் ஆடவன்
பொருள் தேடும் பொருட்டு பிரிந்து வாழ்ந்து கொண்டுதானுளர்.
துபாயைச் சேர்ந்த ஒருவர் தன் கவிதையில்,
பொருள் தேடி திரைகடல் ஓடி, "தாம்பத்தியத்தையும் தவணை முறையில்
பெறுகிறோம் நாங்கள்" என்று சொன்னதில் பெரும் சோகம் கப்பித்தான்
கிடந்தது.
கணவன் ஒரு குறைந்த காலம் பிரிந்திருக்கும் போது, மற்றொரு
ஆடவனை நாடாதது மட்டுமே கற்பு என்று நீங்கள் சொல்வீராயின்,
அந்தக் கற்பு ஆடவனுக்கும் உண்டு, பெண்டிருக்கும் உண்டு;
கண்கூடாகக் காண ஏராளமான சான்றுகளும் உண்டு. இதற்குக்
கண்ணகியைத் தேடிப் போகவேண்டிய அவசியம் இல்லை.
ஆனால், அப்படிப்பட்டக் கற்பு நம் பெண்களுக்குத் தேவையில்லை
என்று நீங்கள் கூறுவது வியப்பை அளிக்கிறது! ஏற்கத்தக்கதாயில்லை.
வெளிநாடுகளில் வேலை செய்யும் திருமணமான ஒவ்வொரு
ஆடவனின் உயிர் நாடியே இந்த நம்பிக்கைதான்!
கண்ணகியின் கணவன் அவளை விட்டு விட்டுப் போய் ஊர் மேய்ந்தால்,
கண்ணகியும் ஊர் மேய வேண்டும் என்றும், அப்படிச் செய்யாததால்
அவள் ஒரு முட்டாள் மற்றும் பிற்போக்கானவள் என்றும் கருதும்
மனப்போக்கு மனித நாகரிகம் அற்றது என்று ஒப்புக்கொள்வீர்
என்று நம்புகிறேன்.
அதேபோல, உள்ளூரிலேயே சம்பாதிக்கலாம்; ஆனால் வெளிநாடு போய்
ஆண்டு தாண்டி வந்தால் நான் இப்படித்தான் செய்வேன் என்று
பெண்டிர் சொன்னால் அது ஏற்புடையதா?
(((சேர்ந்திருந்தால் கூட ஆடவரிலும் பெண்டிரிலும் இருக்கும் சில
கழிசடைகளை நாம் பொருட் படுத்த வேண்டாம்)))
எனது காமத்திணவை தீர்த்து விட வேண்டியது உன் கடமை!
அதற்காகவும்தான் நான் உன்னை மணந்தேன்! ஆனால், நீ பிரிந்திருக்கும்
காலத்தில் எனக்குத் திணவெடுத்தால் அதைப் பிறரிடம் தேடிக்
கொள்வது என் உரிமை என்று ஒரு ஆடவனோ பெண்ணோ சொன்னால்
அது குமுகத்திற்கு ஏற்புடையதா?
அது குமுகத்திற்கு ஏற்புடையது என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்
ஸொள்வோம்!
அப்பொழுதும் கூட அவ்வாறு ஒழுகாத ஆடவனையும் பெண்டிரையும்
தங்களின் கற்பு இலக்கணப்படி என்ன சொல்வீர்கள்?
முட்டாள் என்றா? பிற்போக்குத்தனம் என்றா?
கோவலன் கண்ணகியைப் பிரிந்ததுவும், திட்டமிட்டு மாதவி என்பாளை
எண்ணி, தேடி, கோவலன் சென்ற கதையல்ல சிலம்பு. ஆடவன்
இல்லத்தை எதற்கெல்லாம் விட்டு வெளியே செல்வானோ
அந்தக் காரணத்திற்காகத்தான் அவனும் சென்றிருக்கிறான்.
அவன் பொருள் தேடும் விசயமாகக் கூடப் போயிருக்கலாம்.
அப்படிப் போனவன் தவறிப்போனான் என்றவுடன் கண்ணகியும்
அப்படிச் செய்து விட வேண்டும் என்றோ, அல்லது அவனை
மீண்டும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றோ ஒரு பெரிய
புரட்சித் தீர்ப்பைப் பேசி விடமுடியாது!
கண்ணகியைப் பிரிந்திருந்ததே ஒரு வருடத்திற்கும் கீழாக
என்று சொல்லும்போது ஏழாண்டு தம்பதிப் பிரிவுச் சட்டத்தை
எண்ண வேண்டிய அவசியம் எழவேயில்லை.
அப்படியே அதை எண்ணினாலும், ஏன் ஒரு சட்டம்,
ஏழாண்டுகள் வரைப் பொறுத்திருக்க வேண்டும் என்று
சொல்கிறது என்பதனையும் நீங்கள் தாழ்மையுடன்
சிந்திக்க வேண்டும்!
ஆறாண்டு போதாதா? ஐந்தாண்டு? நான்கு? ஏன் ஏழு?
என்ற சிந்தனை எழத்தான் செய்கிறது.
>>>>>>. ஞாநி எழுதியது >>>>>>>>>>>>>
அரசனுக்கெதிராக கண்ணகி பேதராடியது எந்த சமூகப்
பிரச்சினைக்காகவும் அல்ல. தனக்கு அநீதி செய்த கணவனுக்கு நீதி
கேட்டுப் பேதராடிய முட்டாள்தனம்தான் அது
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
மன்னிக்கவும். கண்ணகி போராடியது அவளின் இழப்பிற்காகத்தான்!
இல்லை என்று சொல்ல முடியாது.
ஆனால், ஏன் அவள் போராடி
இருக்கக் கூடாது என்று நீங்கள் கருதுகிறீர்கள்? போராடினால்
ஒரு குமுகாயத்திற்காக மட்டுமே போராட வேண்டும் என்று
ஏன் கருத வேண்டும்?
தனிப்பட்ட இழப்பிற்கான போராட்டம் முடங்கிப்போகுமானால் குமுகப்
போராட்டம் என்பது இருக்கவே இருக்காது!
தனக்கு அநீதி செய்த தன் கணவனுக்காகப் போராடினாள்
என்பது முட்டாள்தனம் என்றால், உலகில் பல மென்மைகளும்
உயரிய பண்புகளும் கேலிக்குரியனவாக ஆகிவிடுகின்றன.
இதே போன்ற கேள்வியை, கோவலனே கண்ணகியைப்
பார்த்துக் கேட்பான் இறப்பதற்கு முன்னர். நான் இவ்வளவு
அநீதிகள் செய்திருந்தும் என்னை ஏற்றுக் கொண்டாயே; ஏன்?
என்று வினவுவான் கோவலன். அதற்கு கண்ணகி சொல்லும் பதில்
மிக உயர்ந்தது; ஒப்பற்றது. அவள் ஒன்றும் "கல்லானாலும் கணவன்
புல்லானாலும்
புருசன்" என்று எண்ணி உன் கூட வந்தேன் என்று சொல்லவில்லை.
அவளின் ஒப்பற்ற பதில் படித்து எண்ணத்தக்கது.
எனினும் நீளம் கருதி அதன் உள் தற்போது நான் செல்ல
விரும்பவில்லை.
அதனால் தங்களின் இந்தக் கேள்வி முழுமையானது அல்ல என்பதை
என்னால் உறுதியாகக் கூறமுடியும்.
அதேபோல, நல்ல சிந்தனையாளரான நீங்கள் கண்ணகி ஏதோ
தீப்பந்தத்தைச் சுமந்து வீடு வீடாகச் சென்று தீ வைத்துக்
கொளுத்தினாற் போல எழுதியிருப்பது வியக்க வைக்கிறது.
அப்படியெல்லாம் அந்த அம்மையார் செய்யவும் இல்லை. அப்படிச்
செய்திருந்தாலும் ஊரில் இருப்பவர்கள் விட்டிருக்க மாட்டார்கள்!
இதில் சற்று நீங்கள் ஆழத்தான் சிந்திக்க இருக்கிறது.
கம்பராமாயணத்தில் அனுமார் வாலில் தீப்பந்தம் ஏற்றி
இலங்காபுரியை இரசினிகாந்த சொல்வது போல "பறந்து பறந்து
கொளுத்துவார்"! அப்போ, அனுமாரை Terrorist என்று சொல்கிறீர்களா?
கண்ணகி கையில் தீப்பந்தம் ஏற்றவும் இல்லை. கூரைகளின்
மேல் பறந்து பறந்து தீ வைக்கவுமில்லை.
பறந்து பறந்து இலங்காபுரியைக் கொளுத்திய அனுமாரைக்
கோயில்களில் வைத்துக் கும்பிட்டால் குற்றமில்லை; ஆனால்,
கண்ணகிக்கு சிலை வைப்பதே பாவம் போல எழுதும்
ஆனந்தவிகடனையும், அதைப்போலவே அரைகுறையாக
சிந்திக்கும் பல வலைப்பதிவர்களையும் நினைத்தால்
சற்று நகைப்புதான் வருகிறது.
கட்டுரையின் ஆரம்பத்தில் மஞ்சள் துண்டு மர்மம் பற்றி
எழுதி தங்களின் எழுத்துச் சுவையைக் காட்டித்தான் இருந்தீர்கள்.
அதே போல இறுதியிலும், கரடி ஒப்புமை சொல்லி என்னை
மிகவும் இரசிக்க வைத்திருக்கிறீர்கள். கரடி பொம்மையோடு
உறங்கும் குழந்தையின் உவமை அற்புதம். அந்தக் குழந்தைக்கு,
கரடி பொம்மையின் மேல் இருக்கும் அன்பும் பற்றும் மென்மையானதும்,
மிக உண்மையானதும் ஆகும். அதே குழந்தை உள்ளத்தோடு,
மென்மையாகவும், உண்மையாகவும் கண்ணகியை நேசிப்பவர்,
கற்பு போன்ற விசயங்களைக் கடந்து, அவளின் குண நலன்களை
நேசிப்பவர் பல ஆயிரம் பேர் உண்டு.
தொடைக்கிடுக்குக் கற்பு நிலையைக் கடந்து எண்ணற்ற
பண்புகளைக் கண்ணகியிடம் காண பலரால் முடிகிறது.
ஆகவே, நீங்கள் காட்டிய அந்தக் கரடி பொம்மை ஒப்புமை
அற்புதம். அது சிறந்த எடுத்துக் காட்டு.
கருணாநிதியும் பிறரும் இதற்காக உங்களையும் விகடனையும்
ஏசியிருந்தாலும் எனக்கு இந்தக் கரடி சங்கதி மகிழ்வான விசயம்.
தங்களின் கரடி ஒப்புமையை நான் இரசிக்கும் அதே வேளையில்
தங்கள் கட்டுரையின் இடையில் நீங்கள் சொல்லியிருக்கும்
கருத்துக்களுக்கும், குறிப்பாக அந்தப் பத்தாண்டுப் பிரிவிற்கான
விளக்கத்தையும் சான்றையும் நீங்கள் அளிக்க வேண்டும்!
இல்லாவிடில், தங்களின் கட்டுரையும் கருத்தும் கண்ணகி பற்றி நீங்கள்
விட்ட கரடியாகத்தான் எல்லாருக்கும் தெரியும்.
அன்புடன்
நாக.இளங்கோவன்
8-சூன்-06
தங்களின் கண்ணகி சிலை குறித்த கட்டுரையை, கீற்றின் இந்த
http://www.keetru.com/dheemtharikida/jun06/jnani_3.html
சுட்டியில் படிக்க முடிந்தது. ஆனந்தவிகடனில் பரபரப்பாக
வந்ததாகவும் அறிகிறேன்.
ஒரு எழுத்தாளர் அல்லது சிந்தனையாளரின் எல்லாக் கருத்துக்களுமே
ஏற்கக் கூடியவை அல்லது ஏற்கப் படவேண்டியவை என்ற கருத்து
ஒரு சிந்தனையாளர் மற்றும் எழுத்தாளராகிய உங்களுக்கு இருக்காது
என்று நான் நம்புகிறேன்.
உங்களின் பலகட்டுரைகளில் ஒரு தரமான பார்வைத்தளம்
இருப்பதை நான் கண்டிருக்கிறேன். எல்லாக் கட்டுரைகள்
அல்லது கருத்துக்களும் சிறந்தன என்று சொல்ல முடியாவிட்டாலும்
ஒரு நல்ல தளத்தில் இருந்து உங்கள் பார்வைகள் பல
கட்டுரைகளில் வந்திருக்கின்றன.
ஆயினும் கண்ணகி சிலை வைப்பு தொடர்பானக் கட்டுரையில்
உங்களின் கருத்துக்கள் ஒரு தரமான தளத்தில் இருந்து
வந்ததாகத் தெரியவில்லை.
கண்ணகி சிலையை மீண்டும் வைத்தது தவறு என்பதை
வாதத்துக்கு ஒப்புக் கொண்டாலும், அதனை ஒரு தரமான
தளத்தில் இருந்து பார்க்கத் தவறி விட்டிருக்கிறீர்கள்.
கருணாநிதியின் மஞ்சள் துண்டு என்பது அவரின் தோளை மட்டும்
சுற்றியது. ஆனால் கண்ணகி சிலை என்பது அவரின் தோளில்
வைக்கப் பட்டிருந்த சிலை அல்ல. அதை அவரே முதலில்
நிறுவியிருந்தாலும் அது அவருக்கு மட்டும் சொந்தமானதும்
பிடித்தமானதும் அல்ல. எனினும், மஞ்சள் துண்டை ஒட்டிய
உங்களின் வாசகத்தில் இருந்த எழுத்துச் சுவை நன்றாகவே
இருந்தது; அதில் ஒன்றும் எனக்குப் பிணக்கு இல்லை.
கற்புக்கரசி, மற்றும் நீதி கேட்டுப் போராடியது என்ற
இரண்டிலும் பசை இல்லை என்று கூறிவிட்டிருக்கிறீர்கள்.
சரி அப்படியே இருக்கட்டும்! அது பற்றியதல்ல என் கவலை.
கண்ணகியை விட்டு பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கோவலன்
பிரிந்திருந்தான் என்று சொல்லியிருக்கிறீர்கள். அது தவறு!.
கதைப்படி கண்ணகியைப் பிரிந்து, மாதவியைச் சேர்கிறான்
கோவலன்; மாதவியோடு வாழ்கிறான்; பின்னர் மாதவியையும்
பிரிந்து, கண்ணகியைச் சேர்கிறான். இருவரும் மதுரை
சென்றடைகின்றனர். அப்போது மாதவிக்கு மணிமேகலை
என்ற பெண் குழந்தை பிறந்ததாக கோவலனுக்கு சேதி வருகிறது.
ஒரு கரு வளர்ந்து முழுமையடைய எவ்வளவு காலம் ஆகுமோ
அவ்வளவு காலம்தான் கோவலன் மாதவியோடு இருந்திருக்க
முடியும். பத்தாண்டுகள் அவளோடு இருந்தான் என்று என்
சிற்றறிவுக் கெட்டியவரை சிலப்பதிகாரத்தில் எங்கும்
செய்திகள் இல்லை. தாங்கள் அறிந்திருந்தால் அன்பு கூர்ந்து
சொல்லவும்.
மிஞ்சிப்போனால், ஒரு ஏழெட்டு மாதங்கள் அல்லது அதிக பக்கமாக
ஒரு வருடம் கோவலன் கண்ணகியைப் பிரிந்து மாதவியுடன்
வாழ்ந்திருக்க வேண்டும். அவ்வளவுதான்.
இங்குதான் உங்கள் கட்டுரையின் மேலான என் வருத்தம்!
>>>>>>.ஞாநி எழுதியது >>>>>>>>>>>>>
தன்னை பத்தாண்டுகளுக்கு மேலாகப் பிரிந்து வாழ்ந்த கோவலனை
சகித்துக் கொன்டு, அவன் திரும்ப வந்ததும் ஏற்றுக் கொண்டதும்,
அதுவரை தான் இன்னொரு ஆனை நாடாமல் இருந்ததும்தான் கற்பு
என்றால் அப்படிப்பட்ட கற்பு நம் பெண்களுக்குத் தேவையில்லை
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
பல சாதாரணப் பிஞ்சு எழுத்தாளர்களைப் போல, நல்ல தளத்தில்
நில்லாது நீங்களும் கற்பு என்பதனைக் கால் கவட்டியில்
தேடியிருக்கிறீர்கள்.
ஒருவருடத்திற்கும் கீழாக தலைவனும் தலைவியும் பிரிந்து
வாழ்வது ஒன்றும் பெரிய விதயமே இல்லை. சங்க காலம்
முதல் இன்றைய கணிக்காலம் வரை நாம் கண் கூடாகக்
கண்டு கொண்டிருக்கிறோம்.
இன்றைக்கும் திரவியம் தேட திரை கடல் ஓடி,
அதிக பக்கம் ஆண்டுக்கு ஒரு முறை மனைவியைத்
தேடி தாயகம் வரும் ஆடவர் இந்தத் தமிழகத்தில்
ஏன் இந்திய நாடு முழுவதிலும் ஆயிரக்கணக்கில்,
இலக்கக் கணக்கில் இருக்கிறார்கள் என்பதை நீங்களும்
இக்கட்டுரை படிப்பவர்களும் நிச்சயம் ஒப்புக் கொள்வீர்கள்
என்று நம்புகிறேன்.
கண்ணகி, கோவலனைப் பிரிந்திருந்தது மிகச் சாதாரண
ஒரு வருடத்திற்கும் குறைவான காலம். இதில்
கண்ணகி பிற ஆடவரை நாடாதது பெரிய விதயமும் இல்லை;
ஒரு வருட காலம் உடல் உறவை வைத்துக் கொள்ளாமல்
இருந்து விடுவது ஒன்றும் வியக்கத் தக்கச் சங்கதியும் இல்லை.
இது ஆணுக்கும் பொருந்தும் பெண்ணுக்கும் பொருந்தும்.
இன்றைக்கும் இலக்கக் கணக்கான தம்பதியினர் ஆடவன்
பொருள் தேடும் பொருட்டு பிரிந்து வாழ்ந்து கொண்டுதானுளர்.
துபாயைச் சேர்ந்த ஒருவர் தன் கவிதையில்,
பொருள் தேடி திரைகடல் ஓடி, "தாம்பத்தியத்தையும் தவணை முறையில்
பெறுகிறோம் நாங்கள்" என்று சொன்னதில் பெரும் சோகம் கப்பித்தான்
கிடந்தது.
கணவன் ஒரு குறைந்த காலம் பிரிந்திருக்கும் போது, மற்றொரு
ஆடவனை நாடாதது மட்டுமே கற்பு என்று நீங்கள் சொல்வீராயின்,
அந்தக் கற்பு ஆடவனுக்கும் உண்டு, பெண்டிருக்கும் உண்டு;
கண்கூடாகக் காண ஏராளமான சான்றுகளும் உண்டு. இதற்குக்
கண்ணகியைத் தேடிப் போகவேண்டிய அவசியம் இல்லை.
ஆனால், அப்படிப்பட்டக் கற்பு நம் பெண்களுக்குத் தேவையில்லை
என்று நீங்கள் கூறுவது வியப்பை அளிக்கிறது! ஏற்கத்தக்கதாயில்லை.
வெளிநாடுகளில் வேலை செய்யும் திருமணமான ஒவ்வொரு
ஆடவனின் உயிர் நாடியே இந்த நம்பிக்கைதான்!
கண்ணகியின் கணவன் அவளை விட்டு விட்டுப் போய் ஊர் மேய்ந்தால்,
கண்ணகியும் ஊர் மேய வேண்டும் என்றும், அப்படிச் செய்யாததால்
அவள் ஒரு முட்டாள் மற்றும் பிற்போக்கானவள் என்றும் கருதும்
மனப்போக்கு மனித நாகரிகம் அற்றது என்று ஒப்புக்கொள்வீர்
என்று நம்புகிறேன்.
அதேபோல, உள்ளூரிலேயே சம்பாதிக்கலாம்; ஆனால் வெளிநாடு போய்
ஆண்டு தாண்டி வந்தால் நான் இப்படித்தான் செய்வேன் என்று
பெண்டிர் சொன்னால் அது ஏற்புடையதா?
(((சேர்ந்திருந்தால் கூட ஆடவரிலும் பெண்டிரிலும் இருக்கும் சில
கழிசடைகளை நாம் பொருட் படுத்த வேண்டாம்)))
எனது காமத்திணவை தீர்த்து விட வேண்டியது உன் கடமை!
அதற்காகவும்தான் நான் உன்னை மணந்தேன்! ஆனால், நீ பிரிந்திருக்கும்
காலத்தில் எனக்குத் திணவெடுத்தால் அதைப் பிறரிடம் தேடிக்
கொள்வது என் உரிமை என்று ஒரு ஆடவனோ பெண்ணோ சொன்னால்
அது குமுகத்திற்கு ஏற்புடையதா?
அது குமுகத்திற்கு ஏற்புடையது என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்
ஸொள்வோம்!
அப்பொழுதும் கூட அவ்வாறு ஒழுகாத ஆடவனையும் பெண்டிரையும்
தங்களின் கற்பு இலக்கணப்படி என்ன சொல்வீர்கள்?
முட்டாள் என்றா? பிற்போக்குத்தனம் என்றா?
கோவலன் கண்ணகியைப் பிரிந்ததுவும், திட்டமிட்டு மாதவி என்பாளை
எண்ணி, தேடி, கோவலன் சென்ற கதையல்ல சிலம்பு. ஆடவன்
இல்லத்தை எதற்கெல்லாம் விட்டு வெளியே செல்வானோ
அந்தக் காரணத்திற்காகத்தான் அவனும் சென்றிருக்கிறான்.
அவன் பொருள் தேடும் விசயமாகக் கூடப் போயிருக்கலாம்.
அப்படிப் போனவன் தவறிப்போனான் என்றவுடன் கண்ணகியும்
அப்படிச் செய்து விட வேண்டும் என்றோ, அல்லது அவனை
மீண்டும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றோ ஒரு பெரிய
புரட்சித் தீர்ப்பைப் பேசி விடமுடியாது!
கண்ணகியைப் பிரிந்திருந்ததே ஒரு வருடத்திற்கும் கீழாக
என்று சொல்லும்போது ஏழாண்டு தம்பதிப் பிரிவுச் சட்டத்தை
எண்ண வேண்டிய அவசியம் எழவேயில்லை.
அப்படியே அதை எண்ணினாலும், ஏன் ஒரு சட்டம்,
ஏழாண்டுகள் வரைப் பொறுத்திருக்க வேண்டும் என்று
சொல்கிறது என்பதனையும் நீங்கள் தாழ்மையுடன்
சிந்திக்க வேண்டும்!
ஆறாண்டு போதாதா? ஐந்தாண்டு? நான்கு? ஏன் ஏழு?
என்ற சிந்தனை எழத்தான் செய்கிறது.
>>>>>>. ஞாநி எழுதியது >>>>>>>>>>>>>
அரசனுக்கெதிராக கண்ணகி பேதராடியது எந்த சமூகப்
பிரச்சினைக்காகவும் அல்ல. தனக்கு அநீதி செய்த கணவனுக்கு நீதி
கேட்டுப் பேதராடிய முட்டாள்தனம்தான் அது
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
மன்னிக்கவும். கண்ணகி போராடியது அவளின் இழப்பிற்காகத்தான்!
இல்லை என்று சொல்ல முடியாது.
ஆனால், ஏன் அவள் போராடி
இருக்கக் கூடாது என்று நீங்கள் கருதுகிறீர்கள்? போராடினால்
ஒரு குமுகாயத்திற்காக மட்டுமே போராட வேண்டும் என்று
ஏன் கருத வேண்டும்?
தனிப்பட்ட இழப்பிற்கான போராட்டம் முடங்கிப்போகுமானால் குமுகப்
போராட்டம் என்பது இருக்கவே இருக்காது!
தனக்கு அநீதி செய்த தன் கணவனுக்காகப் போராடினாள்
என்பது முட்டாள்தனம் என்றால், உலகில் பல மென்மைகளும்
உயரிய பண்புகளும் கேலிக்குரியனவாக ஆகிவிடுகின்றன.
இதே போன்ற கேள்வியை, கோவலனே கண்ணகியைப்
பார்த்துக் கேட்பான் இறப்பதற்கு முன்னர். நான் இவ்வளவு
அநீதிகள் செய்திருந்தும் என்னை ஏற்றுக் கொண்டாயே; ஏன்?
என்று வினவுவான் கோவலன். அதற்கு கண்ணகி சொல்லும் பதில்
மிக உயர்ந்தது; ஒப்பற்றது. அவள் ஒன்றும் "கல்லானாலும் கணவன்
புல்லானாலும்
புருசன்" என்று எண்ணி உன் கூட வந்தேன் என்று சொல்லவில்லை.
அவளின் ஒப்பற்ற பதில் படித்து எண்ணத்தக்கது.
எனினும் நீளம் கருதி அதன் உள் தற்போது நான் செல்ல
விரும்பவில்லை.
அதனால் தங்களின் இந்தக் கேள்வி முழுமையானது அல்ல என்பதை
என்னால் உறுதியாகக் கூறமுடியும்.
அதேபோல, நல்ல சிந்தனையாளரான நீங்கள் கண்ணகி ஏதோ
தீப்பந்தத்தைச் சுமந்து வீடு வீடாகச் சென்று தீ வைத்துக்
கொளுத்தினாற் போல எழுதியிருப்பது வியக்க வைக்கிறது.
அப்படியெல்லாம் அந்த அம்மையார் செய்யவும் இல்லை. அப்படிச்
செய்திருந்தாலும் ஊரில் இருப்பவர்கள் விட்டிருக்க மாட்டார்கள்!
இதில் சற்று நீங்கள் ஆழத்தான் சிந்திக்க இருக்கிறது.
கம்பராமாயணத்தில் அனுமார் வாலில் தீப்பந்தம் ஏற்றி
இலங்காபுரியை இரசினிகாந்த சொல்வது போல "பறந்து பறந்து
கொளுத்துவார்"! அப்போ, அனுமாரை Terrorist என்று சொல்கிறீர்களா?
கண்ணகி கையில் தீப்பந்தம் ஏற்றவும் இல்லை. கூரைகளின்
மேல் பறந்து பறந்து தீ வைக்கவுமில்லை.
பறந்து பறந்து இலங்காபுரியைக் கொளுத்திய அனுமாரைக்
கோயில்களில் வைத்துக் கும்பிட்டால் குற்றமில்லை; ஆனால்,
கண்ணகிக்கு சிலை வைப்பதே பாவம் போல எழுதும்
ஆனந்தவிகடனையும், அதைப்போலவே அரைகுறையாக
சிந்திக்கும் பல வலைப்பதிவர்களையும் நினைத்தால்
சற்று நகைப்புதான் வருகிறது.
கட்டுரையின் ஆரம்பத்தில் மஞ்சள் துண்டு மர்மம் பற்றி
எழுதி தங்களின் எழுத்துச் சுவையைக் காட்டித்தான் இருந்தீர்கள்.
அதே போல இறுதியிலும், கரடி ஒப்புமை சொல்லி என்னை
மிகவும் இரசிக்க வைத்திருக்கிறீர்கள். கரடி பொம்மையோடு
உறங்கும் குழந்தையின் உவமை அற்புதம். அந்தக் குழந்தைக்கு,
கரடி பொம்மையின் மேல் இருக்கும் அன்பும் பற்றும் மென்மையானதும்,
மிக உண்மையானதும் ஆகும். அதே குழந்தை உள்ளத்தோடு,
மென்மையாகவும், உண்மையாகவும் கண்ணகியை நேசிப்பவர்,
கற்பு போன்ற விசயங்களைக் கடந்து, அவளின் குண நலன்களை
நேசிப்பவர் பல ஆயிரம் பேர் உண்டு.
தொடைக்கிடுக்குக் கற்பு நிலையைக் கடந்து எண்ணற்ற
பண்புகளைக் கண்ணகியிடம் காண பலரால் முடிகிறது.
ஆகவே, நீங்கள் காட்டிய அந்தக் கரடி பொம்மை ஒப்புமை
அற்புதம். அது சிறந்த எடுத்துக் காட்டு.
கருணாநிதியும் பிறரும் இதற்காக உங்களையும் விகடனையும்
ஏசியிருந்தாலும் எனக்கு இந்தக் கரடி சங்கதி மகிழ்வான விசயம்.
தங்களின் கரடி ஒப்புமையை நான் இரசிக்கும் அதே வேளையில்
தங்கள் கட்டுரையின் இடையில் நீங்கள் சொல்லியிருக்கும்
கருத்துக்களுக்கும், குறிப்பாக அந்தப் பத்தாண்டுப் பிரிவிற்கான
விளக்கத்தையும் சான்றையும் நீங்கள் அளிக்க வேண்டும்!
இல்லாவிடில், தங்களின் கட்டுரையும் கருத்தும் கண்ணகி பற்றி நீங்கள்
விட்ட கரடியாகத்தான் எல்லாருக்கும் தெரியும்.
அன்புடன்
நாக.இளங்கோவன்
8-சூன்-06
Subscribe to:
Posts (Atom)