சிலம்பு மடல் - 27 மதுரை அழிதல்! மானமும் கற்பும்!!
மதுரை:
வஞ்சின மாலை, அழற்படு காதை, கட்டுரை காதை:
"பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்" என்ற வள்ளுவத்தைக் கண்ணகியாள் கற்றிருந்தாள் போலும்!
அரண்மனை நீங்கும்போது, பாண்டியன் மேல் பிணமாய்ப் பதிந்து கிடந்த அவன் தேவியிடம் கண்ணகி பேசினாள்!
'யான் உலகம் அறியாதவள்! ஆயினும் முற்பகலில் ஒருவர்க்கு செய்த கேடு பிற்பகலில் தமக்கே வரும் என்பதை மட்டும் அறிந்தவள்! அதுவே உங்கள் முடிவுக்கு காரணமும்!
"கோவேந்தன் தேவி! கொடுவினை யாட்டியேன்
யாவும் தெரியா இயல்பினேன் ஆயினும்,
முற்பகல் செய்தான் பிறன்கேடு தன்கேடு
பிற்பகல் காண்குறூஉம் பெற்றியகாண்:"
புகழுடைத்த புகார் நகர் பல கற்புடை மகளிரால் சிறப்புற்றிருக்க யானும் அங்கு தோன்றியவள்தான்!
யானும் ஒரு கற்புடைப் பெண் என்பது உண்மையானால் என் கணவனோடு சேர்ந்து இப்போதே இறக்க மாட்டேன்! மன்னனொடு மதுரையையும் அழிப்பேன். என் ஆற்றலை நீ காண்பாய்!
"பட்டாங்கு யானும்ஓர் பத்தினியே ஆமாகில்
ஒட்டேன் அரசோடு ஒழிப்பேன் மதுரையும்!என்
பட்டிமையும் காண்குறுவாய் நீ....... "
சிறிதும் குறையா சீற்றத்துடன் சொன்னாள் கண்ணகி!'
சிலம்பிடம் தோற்ற மதுரை மன்னன் மாண்டது கேட்டு மதுரை மக்கள் நிலைகுலைந்தனர்.
நீதியை நாட்டிவிட்டு மதுரை வீதிகளில் வலம் வந்தாள் கண்ணகி!
சிலம்பால் வென்றவளைப் பார்த்தவர் பாதி! அவளைப் பற்றிக் கேட்டவர் மீதி!
வீதியெங்கும் அழுது புலம்பினாள் கண்ணகி வஞ்சினம் சிறிதும் மாறாமலே!
மதுரைநகர்ப் பெண்டிரே, ஆடவரே, வானத்து தேவரே, தவம் செய் முனிவரே!
'என் அன்புக்கினிய கணவனின் அநீதியான மரணம் அறிவீர்! மன்னன் மதியிழந்து எனக்கிட்ட அநீதியைக் காண்பீர்! குற்றமிழைக்கா என் கணவனைக் கொடுங்கோல் கொன்று போட கொடுஞ்சினம் கொண்டேன் யான்!'
கொடுஞ்சினம் கொண்டேன் யான்,
கொதிக்கும் நெஞ்சத்தின் குமுறல்களாலே!
மன்னன் மாண்டும், மன்னவன் தேவி மாண்டும் குறையாக் குமுறலால் மதிபோன மன்னவன் வளர்த்த மாநகர் மீதும் சினமுற்றேன்!
மதிமயங்கிய இம்மண்தானே என் கணவனைக் கொன்றது!? இம்மண்மேல் கொள்ளும் கோபம் குற்றம் ஆகாது!
கோவலனுடன் வாழ்ந்த காதலும் கற்பும் நட்பும், அவளின் இதயத்தை அனலாக்கிக் கொண்டேயிருக்க அனலின் வெம்மை தாங்கமாட்டாது அணைத்தாள் தன் இதயத்தை வலக்கரத்தால்!
காதலன் மாதவியுடன் ஓடிப்போனபோது துடித்த தன் இதயத்தைத் தடவிக் கொடுத்து அமைதிப்படுத்திய மென்கரத்தால் அவன் மாண்டபோது அமைதிப்படுத்த இயலவில்லை!
மாறாக மென்கரம் வன்கரமாகியது!
பொறுத்துக் கொள்ள இயலா இதயத்தின் அனலைப் போக்க நினைத்தது!
இதயத்தை மூடி அதன் மேல் ஏறி அமர்ந்திருந்த இடமுலையின் பாதியை அவளின் வலக்கரம் பற்றித் திருகிக் கிள்ளி எடுத்தது!
கிள்ளி எடுத்த பாதி முலையொடு மதுரையை மூன்று முறை சுற்றி விட்டாள்! கொல்லன் உலைக்களத்துத் துருத்தி போலச் சுடு மூச்சுவிட்டாள்: சுழன்று திரிந்தாள் வீதிகளில்!
அவளின் நெஞ்சத்து அனல், மீதி முலையில் இருந்து குருதியாய் வடிந்து கொண்டேயிருந்தது!
"நான்மாடக் கூடல் மகளிரும் மைந்தரும்
வானக் கடவுளரும் மாதவரும் கேட்டீமின்:
யான்அமர் காதலன் தன்னைத் தவறுஇழைத்த
கோநகர் சீறினேன் குற்றம்இலேன் யான்என்று
இடமுலை கையால் திருகி மதுரை
வலமுறை மும்முறை வாரா அலமந்து
மட்டார் மறுகின் மணிமுலையை வட்டித்து
விட்டாள் எறிந்தாள் விளங்கு இழையாள்!"
பார்த்தவர் விழிகள் பார்த்தபடி பயந்திருக்க, பிய்த்த முலையும் தன் வலக்கையை சுட்டதோ என்னவோ தூக்கி எறிந்தாள் அதனை!
கண்ணகிக்கு நேர்ந்த கொடுமையையும், அவளின் சீற்றத்தையும் கண்ட மதுரை மக்களின் கண்களில் மாநகர் வானில் மெல்ல மெல்லத் தோன்றிய கரும்புகையும் சில நாழி தெரியவில்லை!
கரும்புகையின் மேலேறி செந்நா திறந்தபோது கண்டனர் மாந்தர், மதுரை மாநகர் சூழ்ந்த பெருந்தீயினை!
தீயின் வெம்மை தாங்காமல் மதுரை வாழ்ந்த தெய்வங்களும் பூதங்களும் கூட திகைத்து மதுரையை விட்டு வெளியேற மக்களில் பலர் மாண்டனர்! பலர் வெளிப்போய் மீண்டனர்!
மதுரையைக் காத்து நிற்கும் மதுராபதி தெய்வமும் வெம்மை தாங்க முடியாமல் கண்ணகி என்ற வீரபத்தினியின் முன் வர அஞ்சி
அவளின் பின்னாள் சென்று நின்றது!
"ஆர்அஞர் உற்ற வீரபத்தி னிமுன்
கொந்துஅழல் வெம்மைக் கூர்எரி பொறாஅள்
வந்து தோன்றினள் மதுரா பதிஎன்.
ஒருமுலை குறைந்த திருமா பத்தினி
அலமரு திருமுகத்து ஆயிழை நங்கைதன்
முன்னிலை ஈயாள், பின்னிலைத் தோன்றிக்
கேட்டிசின் வாழி நங்கை! என் குறைஎன...."
வீணரபத்தினியின் முதுகில் மறைந்து அவளைத் தொடர்ந்த மதுராபதி தெய்வம், 'மாபத்தினியே, ஆடித்திங்கள் கிருட்டிண பக்கத்து அட்டமியும், கார்த்திகையின் குறையும் சேர்ந்த வெள்ளிக்கிழமையன்று, மதுரை எரியும் மன்னனும் மாள்வான் என்று யாம் அறிவோம்! என்று காரணங்கள் பல கூறி கண்ணகியை அமைதிப் படுத்தமுயன்றது!'.
"ஆடித் திங்கள் பேர்இருள் பக்கத்து
அழல்சேர் குட்டத்து அட்டமி ஞான்று
வெள்ளி வாரத்து ஒள்எரி உண்ண
உரைசால் மதுரையோடு அரைசுகெடு உறும்எனும்
உரையும் உண்டே நிறைதொடி யோயே!..."
மதுரையை மெல்ல மெல்ல விழுங்கிவிட்டு பெருநாசம் செய்த தீயும் அவியத் தொடங்கியது!
இம்மதுரை மாநகருக்கு கணவனுடன் கீழ்த்திசையில் நுழைந்த கண்ணகி, கணவனை இழந்து, கொற்றவை கோயில் வாயிலில் தன் கைவளையல்களை உடைத்தெறிந்துவிட்டு மதுரையின் மேல்திசை வழியே வெளியேறினாள்!
கோவலன் மாண்டபின்னர், கோவலனையும் அநீதியையும் மட்டும்தான் நினைத்தாள் அன்றி, புகாரில் தன் சுற்றத்தை, நல்லோர், பெரியோர் யாரையும் நினைக்கவில்லை!
வாழ்வு வெறுமையாகிவிட பார்வையும் வெறித்ததாகி, காதலிலும் நேர்மையிலும் தான் கொண்ட கற்பென்ற மனவுறுதியால் தனியொருத்தியாக ஒரு மன்னனையே வென்றுவிட்டு, மடைமை பூத்துக் குலுங்கிய மாநகரை வென்றுவிட்டு, கல் எது முள் எது மேடு எது பள்ளம் எது என்று எதையும் அறியாதவளாய் கோவலனை மட்டுமே நினைத்து அழுதவளாய் பதினான்கு நாட்களாய் நடந்து கொண்டிருந்தவள் கோவலன் பால் கொண்ட நட்பாலும் காதலாலும் பிடித்து வைத்திருந்த தன் கடைசி மூச்சை விட்டாள், திருச்செங்குன்றம் என்ற மலைக்குன்றில்!
"எழுநாள் இரட்டி எல்லை சென்றபின்
தொழுநாள் இதுஎனத் தோன்ற வாழ்த்திப்
பீடுகெழு நங்கை பெரும்பெயர் ஏத்தி
வாடா மாமலர் மாரி பெய்துஆங்கு
அமரர்க்கு அரசன் தமர்வந்து ஏத்தக்
கோநகர் பிழைத்த கோவலன் தன்னொடு
வானஊர்தி ஏறினாள் மாதோ
கான்அமர் புரிகுழல் கண்ணகி தான்என்."
சிறிய காலடிகளை மண்மகளும் கண்டிராத செல்வ மகள், புகார் பிறந்த செல்வச்சீமான் மாநாய்கன் மகள், வாழ்க்கை தேடி வறியோளாய் மதுரை போன மகள், கணவனை ஆங்கு தொலைத்துவிட்டு, தொலைத்தவர்களை சீறிக் குறைத்துவிட்டு, காடு கழனி எங்கும் அலைந்து அழுது புலம்பி மதுரை நீங்கி சேரநாடு சேர்ந்து, திருச்செங்குன்றின் மீதேறி பூத்திருந்த புங்கை மர நிழலில் தேம்பி விட்டு அமைதியடைந்தாள்!
கற்பின் உறுதியால் பெண்டிர் "பெய்யெனப் பெய்யும் மழை" என்று வள்ளுவர் உரைத்தது பெண்டிர் கற்பென்ற மன உறுதியால் "செல்லெனச் செல்லும் உயிர்" என்பதைச் சுட்டுவதற்குத்தானோ?
உடல் என்பது வானம்! உயிர் என்பது மேகம்!
மேகம் ஓடும் வானம் போல், இயக்கத்தில் மனிதர் வாழ்வும்!
மழை பொழிந்ததும் வானம் மேகமற்று உயிரில்லா உடலாகிப் போகிறது!
மனவுறுதி கொண்ட மகளிர் பெய்யெனச் சொன்னால் தம் உடலென்ற வானத்திலிருந்து உயிரென்ற மேகம் மழையாய் உதிர்ந்துவிடுகிறது!
கோப்பெருந்தேவியின் மரணமும் அப்படியே! மன்னவன் மாண்டதும் தான் வாழ விரும்பாள்!
செல் எனச் சொன்னதும் சென்றது அவள் உயிர்! காதல் தீய்ந்த போது இதயத்தின் இயக்கத்தை தம் சொல்லால் நிறுத்தி விடுகிற இந்த மனவுறுதி என்ற கற்பு தமிழ் நிலத்தின் சிறப்பு.
கோப்பெருந்தேவி பாண்டியன் மேல் கொண்ட காதல் உயர்ந்தது; மாதவி கோவலன் மேல் கொண்ட காதலும் உயர்ந்தது! அந்த காதலும் தமிழ் நிலத்தின் சிறப்பு!
மடைமையில் மூழ்கிய காரணத்தால் நீதி வழுவியதுணர்ந்து, "கெடுக என் ஆயுள்" என்றதும் உயிர் பிரிந்த பாண்டிய மாமன்னனின் நேர்மையும் தூய்மையும் தமிழ் நிலத்தின் சிறப்பு!
கோவலனுடன் காதல் தொழுகை! அவன் மேல் அநீதியான பழி! காதற்கணவன் கொல்லப்பட்டபோது காதலாலும் நட்பாலும் அலைமோதுகிறாள்! ஆயினும் தன் உயிரைச் 'செல்லனச் சொல்லவில்லை'!
காதலன் மேல் வீழ்ந்த பழிதுடைக்க கடமை ஏற்கிறாள்! அக்கடமையை நிறைவேற்ற வீரம் கொள்கிறாள்! வீரமும் நேர்மையும் நிறைந்த சொல்லால் அடிக்கிறாள் அரசை! மன்னவன் மண்டபத்தில் நீதியைக் காக்கிறாள்! வெல்கிறாள்!
நீதி வழுவியதன் காரணத்தால் வெட்கிப் போகிறான் பாண்டியன்! தன் உயிரையும் விடுகிறான்!
நெஞ்சின் அனல் அடங்காத நிலையிலே மதுரையையே, தன் கணவன் மாண்டு கிடந்த மண்ணையே சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தாள்! மடமை நிறைந்த அந்த மண் மீது சீற்றத்துடன்!
மன்னனை இழந்த அரசு உடனே பதட்டத்துக்கும் கலகத்துக்கும் உள்ளாகும் என்பது இந்நாளும் நாம் காணும் தமிழ் நில நிலையாகும்!
மக்களிடையே ஏற்பட்ட பதட்டத்தினாலோ, அப்பதட்டத்தினால் ஏற்பட்ட கவனக்குறைவினாலோ எங்கோ ஏற்பட்ட தீ, ஆடி மாதக் (முதுவேனில் காலம்) காற்றினால் மதுரைக்குப் பேரழிவைச் செய்திருக்க வேண்டும். அல்லது கலகக்காரர்கள் நாட்டிற்கு தீவைத்திருக்க வேண்டும். மக்களின் கவனம் எங்கோ இருக்க, இரண்டில் ஒன்று நடந்திருக்க வேண்டும்.
கோவலன் மாண்ட மண்ணும் தீக்கு இரையானதை அறிந்ததும், அதில் தன் கணவனின் உடலும் கரைந்து போயிருக்கும் என்று அறிந்ததும், தன் கை வளையல்களை உடைத்து எறிந்து விட்டு மதுரையை விட்டு வெளிப்போகிறாள் கண்ணகி!
மென்மை, பெண்மை, பொறுமை, நேர்மை, காதல், வீரம், அறிவு, கடமை, சீற்றம், ஈகை, அன்பு, பண்பு, மானம் என்ற அனைத்துக் குணங்களையும் ஒருங்கே கொண்ட வீரபத்தினி கண்ணகியார் தமிழ் மகளிர் திலகமாய் ஆகிறார்! அம்மையை வழிகாட்டியாய்க் கொள்ள தெய்வமாகவும் ஆக்கினர் மக்கள்!
கண்ணகி மனஉறுதி கொண்ட கற்புடைய பெண் மட்டுமல்ல! கற்புக்கு அரசியாகிறாள்! இதுவும் தமிழ் நிலத்தின் சிறப்பு!
போருக்குச் சென்ற மகன் புறங்காட்டி வந்தானோ என்று அய்யம் கொண்டு, அவனுக்குப் பாலூட்டிய மாரை அறுத்தெறிய முனைந்தாள் வீரத்தமிழத்தி!
மகவுக்கு தானூட்டும் பாலமுதில் வீரத்தை ஊட்டி வளர்த்தனர் தமிழ்ப் பெண்கள். அந்த வீரமும் தமிழ் நிலத்தின் சிறப்பு!.
தமிழின் சிறப்பு நெஞ்சில் வாழ்கிறது! ஏற்பட்ட இன்னல்கள் நெஞ்சின் கனலாக மாறும்போது மாரடித்து அழுகின்றது! கனல் மாரையும் பிய்த்து வெளிவருகிறது!
அந்நாளிலே,நீதிவழுவியதுணர்ந்து, தொடர்ந்து மானம் இழந்து வாழ ஒருப்படா பாண்டியனின் மனவுறுதியால் 'செல்லெனச் சென்றது அவனுயிர்'.
பகையின் கையில் சிக்கி மானமிழந்து சாவதற்கு ஒருப்படா தமிழர் "கெடுக என் ஆயுள்" என்று நஞ்சை விருந்தாய் உண்ண 'செல்லெனச் செல்லுதுயிர்'. அந்த மானமும் தமிழ் நிலத்தின் சிறப்பு!
அந்நாளிலே, நீதி வழுவிய போது சினந்து எழுந்ததனால் சிறப்புற்றாள் கண்ணகி! நீதிவழுவிய அரசன் தமிழனாக, மானமறவனாக, நெறியுடையவனாக இருந்ததால் ஓர்நொடியில் அவனை வென்றாள்!
நீதிவழுவிய நெறியற்ற அரசிடம் இருந்து மானம் காக்க, தம்மினம் காக்க, நிலம் காக்க, நீதிகாக்க, கல்வியை மறந்து, காதலை மறந்து காடுகளிலும் மலைகளிலும், கற்பென்ற மனவுறுதி கொண்டு தொடர்ந்து போராடி இண்ணுயிர் துறக்கும் அத்துனை மகளிரும் கண்ணகிகளே!
ஈராயிரம் ஆண்டுகளாய் அணையா விளக்காய் தமிழர் சிந்தையில் வாழும் கண்ணகியே உன்னை வணங்குகிறேன்!
உன்னை மட்டுமல்ல உன்னைப் போல உறுதி கொண்டு தமிழ் நிலம் காக்கும் கண்ணகியர் யாவரையும் வணங்குகிறேன்!
காதலும், வீரமும், பண்பும், மானமும் கொண்ட கண்ணகியர் வாழும்வரை தமிழ்நிலங்கள் வாழும்! தமிழ்நிலங்கள் வாழும்வரை கண்ணகியர் வாழ்வர்!
"வடஆரியர் படைகடந்து
தென்தமிழ்நாடு ஒருங்குகாணப்
புரைதீர் கற்பின் தேவி தன்னுடன்
அரைசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன்
நெடுஞ்செழியனொடு ஒரு பரிசா
நோக்கிக் கிடந்த
மதுரைக் காண்டம் முற்றிற்று."
அன்புடன்
நாக.இளங்கோவன்
01-சூன்-2000
Thursday, June 01, 2000
Sunday, March 26, 2000
சிலம்பு மடல் 26
சிலம்பு மடல் - 26 வழக்காடலும்! வஞ்சினமும்!!
மதுரை:
ஊர்சூழ் வரி, வழக்குரை காதை:
கணவனைக் கட்டித்தழுவி கையில் சிலம்பைக் கொடுத்தனுப்பி கண் நிறைய பார்த்தனுப்பிய கண்ணகியின் கண்கள், கணவனின் வெட்டுண்டு கிடந்த உடலில் உறைந்து போனது!
கணவனின் பூமாலையில் ஓர் பூவை உருவி தன் தலையின் கருமயிரில் சூடிக் கொண்டு கைகூப்பி அனுப்பி வைத்தவள், அதன்பின் குருதிச் சேற்றில் தலையில்லா உடலாய்க் குளிர்ந்து போய்க் கிடந்த கோவலனின் மார்பை தன் மார்பில் தேக்கி வைத்து கண்ணீர் சிந்தினாள்!
'கட்டிய கணவனின் துன்பம் பொறுத்துக் கொள்ள பெண்னால் இயலுமா? கடவுளே உனக்கு கண்ணில்லையா?' என்று, இயலா நிலையின் கண்ணீர் கொப்பளிக்க, புலம்புகிறாள்!
"பெண்டிரும் உண்டுகொல்? பெண்டிரும் உண்டுகொல்?
கொண்ட கொழுநர் உறுகுறை தாங்குறூஉம்
பெண்டிரும் உண்டுகொல்? பெண்டிரும் உண்டுகொல்?
தெய்வம் உண்டுகொல்? தெய்வம் உண்டுகொல்?
வைவாளில் தப்பிய மன்னவன் கூடலில்
தெய்வம் உண்டுகொல்? தெய்வம் உண்டுகொல்?
என்ற இவை சொல்லி அழுவாள் கணவன்தன்
பொன்துஞ்சு மார்பம் பொருந்தத் தழீஇக் கொள்ள..."
இணைந்திருந்த நெஞ்சங்கள் இரண்டும் பிரிவின் துயரத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கவேண்டும்.
உலகமே எனைக் கள்வனென்று கூறினும் உனக்குத் தெரியும் கண்ணகி, நான் கள்வனல்ல என்று! என்று கோவலன் நெஞ்சம் அவளின் நெஞ்சத்திடம் நீதி கேட்டிருக்க வேண்டும்!
உனைச் சேர்ந்து, வாழாத வாழ்வையெல்லாம் வாழ வந்தபோது என் கழுத்தை அறுத்து விட்டார்களேஎ......!, என் செய்வேன் என்று அவன் நெஞ்சம் அழுதிருக்க வேண்டும்!
காதலன் தவறு செய்யவில்லை! வாழத்துடித்த காதலனின் தலையைக் கொய்தவன் அரசன்! தலையைக் கொய்தவன் சிலம்பையும் பறித்துக் கொண்டான்! அவன் கழுத்தரிந்த களிமகனையும், கொல்லக் கயவனையும் கண்ணகி அறியாள்!
இறந்த கணவனைக் கடைசியாக மெய்தழுவிக் கொண்டிருந்தவளின் சோகம் சினமாக வலுவெடுக்க, கண்ணகியின் நெஞ்சத்து நீதிமன்றம், காதலனுடன் தானும் சாவதைத் தள்ளிப்போட்டது!
அப்படிச் செத்தால் கோவலன் கள்வனென்றே ஆகிப் போவானே என்று நினைக்கையில் சினம் கடுஞ்சினமாக மாறியது!
காதலன் பிரிந்த பின்னர் வாழ நினைக்கவில்லை! அப்படி சாக நினைத்த போதும் பழி நீக்கிட வேண்டிய கடமை சுமையாய் சேர்ந்து கொள்ள கடுஞ்சினம் செஞ்சினமாய் மாற
"காய்சினம் தணிந்துஅன்றிக் கணவனைக் கைகூடேன்"
என்றாள்; எழுந்தாள்! சூளுரைத்தாள்!
நின்றாள்; நினைந்தாள்!
நெடுங்கயல் கண் நீர் துடையாச் சென்றாள்;
பாண்டியன் அரன்மனை வாயில் முன்!
கொடுஞ்சினம் கொண்டு பாண்டியனைக் காண கண்ணகி செல்ல, தான் கண்ட தீக்கனாவைப் பாண்டியனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் கோப்பெருந்தேவி கலக்கத்துடன்.
கண்ணகி:
வாயிற்காப்போனே! வாயிற்காப்போனே........!
வாயிற்காப்போன் திரும்பிப் பார்க்கிறான்; கூப்பிட்ட குரலின் அதிர்வைக் கண்டு சற்று திகைக்கிறான்!
அறிவு முற்றுமாய் அகன்று போய், அறம் என்ற உள்ளம் அற்றுப் போன அரச நீதி தவறிய மன்னனின் வாயிற்காப்போனே......!
எடுத்த எடுப்பில் நாடாளும் மன்னனை எறும்பின் கீழாய் ஆக்கி சொல்லால் அடிக்கும் சினம் சுமந்த கண்ணகியைக் கண்டு நடுக்குற்றான் வாயிலோன்!
செம்பொன் சிலம்பொன்றை ஏந்தியவளாய், கணவனை இழந்த ஒருத்தி வாயிலில் நிற்கிறாள்...! என்று மன்னனிடம் சென்று சொல்வாய்! சொல்வாய்!
"வாயி லோயே! வாயி லோயே!
அறிவு அறை போகிய பொறிஅறு நெஞ்சத்து
இறைமுறை பிழைத்தோன் வாயி லோயே!
இணைஅரிச் சிலம்பு ஒன்று ஏந்திய கையள்
கணவனை இழந்தாள் கடையகத் தாள்என்று
அறிவிப்பாயே அறிவிப்பாயே!
ஆணையிட்டுச் சொன்னவளின் அகங்கண்டு திகைத்து அரசன்முன் ஓடிச் சென்றான் வாயிற்காப்போன்!
"வாழி எம் கொற்கை வேந்தே வாழி
தென்னம் பொருப்பின் தலைவ வாழி!
செழிய வாழி! தென்னவ வாழி!
பழியொடு படராப் பஞ்சவ வாழி......"
வணங்கிவிட்டுச் சொன்னான் வாயிலோன்;
மன்னவா!,
கொற்றவை போல் நிற்கிறாள்! ஆனால் கொற்றவை அல்ல! கோலமோ காளி! ஆனால் காளியும் அல்ல!
பெரும்பகையோடு வந்திருக்கிறாள் வாயில்முன்னொருத்தி! கையில் ஒரு சிலம்பேந்தி நிற்கிறாள்!
கலக்கம் தரும் கடுஞ்சினம் கொண்டாள்!
கணவனை இழந்தவளாம்!
அழைத்து வா என்றான் அரசன்! அழைத்து வந்தான் வாயிலோன் கண்ணகியைக் காவலன் முன்!
"வருக மற்றுஅவள் தருக ஈங்குஎன,
வாயில் வந்து கோயில் காட்டக்
கோயில் மன்னனைக் குறுகினள் சென்றுழி-
கண்ணீர் பெருக வந்து நிற்கும் இளங்கொடியே, "நீ யார் ?"; கேட்டவன் மன்னன்!
"நீர்வார் கண்ணை எம்முன் வந்தோய்
யாரை யோநீ மடக்கொடி யோய்என; "
அகன்று உயர்ந்த அரச மண்டபம்; பொன்னும் மணியும் பதித்த தூண்கள். உயர்ந்த மேடை; அரியாசனம் ஆங்கு!
கவரி வீசும் காற்றின் சுகத்திலே அரசியோடு அரசனும் ஆங்கு!
அவர்க்குக் கீழே அமைச்சர்கள் வரிசை!
சுற்றி நிற்கும் பட்டுக் கட்டிய பணிவிடைக் கூட்டம்!
கண்ணகியின்
கலைந்து கிடக்கும் நீண்ட நெடுமயிர்கள்!
விரிந்து வெறித்த பார்வை!
ஆறு பொங்கும் கண்கள்!
புழுதி படிந்த உடைகள்!
உயிரற்ற கூடாய்த் தெரியும் உடல்!
சுற்றியிருந்த அத்தனைக் கண்களும் அவளின் மேல்! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை!
ஆனால் சிறுதுரும்பாய்த் தெரிந்தனர் அத்தனை பேரும் அவளுக்கு!
நிமிர்ந்து பார்த்தாள்! நெஞ்சத்து உறுதி அகலாமல்; கண்ணகியின் வெறித்த கண்கள் வெறித்தபடியே நிலைத்து நின்றன மன்னனின் கண்களில்!
நிலைத்த பார்வையின் திண்மை கண்டு மண்டபம் முழுவதும் அமைதியானது!
'அறிவிலா மன்னா!' - விளித்தாள் மன்னனை!
நாடாளும் மன்னவன் இடத்திலே அவன் முன் நின்று அவனை விளித்த அந்த வார்த்தைகள் பாண்டியனை மருளச் செய்தது!
கூடல் வேந்தன் கூடு போன்றவன் ஆயினன்! சுற்றியிருந்தோரையும் கலங்கச் செய்தது!
உன்னிடம் கூற வேண்டியது உளது; அதற்கு முன் யாரெனக் கேட்டாய்; கூறுவேன் கேள்!
பறக்கும் புறாவிற்கு இட்ட துன்பத்திற்காக புறாவிற்கும் நீதி வழங்கினான் சிபி என்ற அரசன்!
கண்ணீருடன் பசு ஒன்று ஆராய்ச்சி மணி ஒலிக்க, அதன் குறை அறிந்தான் மனுநீதிச் சோழன்!
அதன் கன்றைக் கொன்ற அவன் மகனை அதேத் தேர்க்காலில் இட்டுக் கொன்றான் அச்சோழன்.
மனித இனமற்ற பறவைக்கும், பசுவுக்கும் அரசநெறி கொண்டு நீதி வழங்கிய நெறிதவறா அரசர்கள் ஆண்ட புகார் நகரம் என் ஊர்....!
பழியில்லாப் பெருஞ்செல்வ வணிகக் குடியிலே பிறந்த மாசாத்துவான் மகனான கோவலனை மணந்து,
அவனுடன் செல்வம் தேடி உன் நாடு வந்து,
என் காற்சிலம்பை விற்க வந்தபோது,
உன்னால் கொலை செய்யப்பட்டானேஎ கோவலன்ன்...
அவன் மனைவி நான்! கண்ணகி என் பெயர்!
சொல்லி முடித்த அவளின் கண்களில் நீர் மட்டும் இன்னும் வற்றவில்லை!
"தேரா மன்னா! செப்புவது உடையேன்
எள்அறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்உறு புன்கண் தீர்த்தோன்; அன்றியும்
வாயில் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்
அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்;
பெரும்பெயர்ப் புகார் என்பதியே; -
அவ்வூர்
ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி
மாசாத்து வாணிகன் மகனை ஆகி
வாழ்தல் வேண்டி ஊழ்வினைதுரப்பச்
சூழ்கழல் மன்னாநின்நகர்ப் புகுந்துஈங்கு
என்கால் சிலம்புபகர்தல் வேண்டி நின்பால்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி
கண்ணகி என்பதுஎன் பெயரே........"
கள்வனைக் கொன்றேன்; குறை கூறி நிற்கிறாளே இவள்! சிந்தித்தான் பாண்டியன்;
கள்வனைக் கொல்வது தானே அரச நீதி! எடுத்துரைத்தான் வேந்தன்.
"கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்று
வெள்வேல் கொற்றம் காண்என..."
எடுத்துரைத்த வேந்தனை சொல்லால் அறைந்தாள் அணங்கு! 'நல்திறம் கொண்டு ஆராயாக் கொற்கை வேந்தேஎ...!' என் கால் சிலம்பு, மாணிக்கப் பரல்களைக் கொண்டது!
சினத்துடன் சற்று இகழ்ச்சி அவள் உதடுகளில்!
"நல்திறம் படராக் கொற்கை வேந்தே!
என்கால் பொன்சிலம்பு மணிஉடை அரியே..."
இப்பொழுது ஆராய்கிறான் மன்னன்!
அம்மை சொன்னது அறிந்தோம்! எம் அரசியின் சிலம்பது முத்துப் பரல்கள் உடைத்தது.
கொண்டுவா என்றான் அரசியின் சிலம்புகளை! அவையில் வைத்தான்;
"தேமொழி! உரைத்தது செவ்வை நன்மொழி
யாம் உடைச் சிலம்பு முத்துஉடை அரியே;
'தருக' எனத் தந்து, தான் முன் வைப்ப!
முத்தென்று சொன்னான்! முத்தைக் காட்டினான்!
பிரிதொன்றைப் பார்த்தான் மாணிக்கம் கண்டான்!
மாணிக்கத்தைக் காட்டென்று சொன்னான் கண்ணகியிடம்!
ஒற்றைச் சிலம்பை பெருவாழ்வு வாழ கணவனிடம் கொடுத்து மற்றைச் சிலம்பை தன் செல்வக் குடி சிறப்பின் நினைவாய் வைத்திருந்த கண்ணகி, காதலன் கள்வனல்ல என்ற சான்று பகர புறப்படும்போது கழற்றிக் கையில் பிடித்த அச் சிலம்பை அடித்தாள் மண்மேல்! உடைந்து தெறித்தன மாணிக்கப் பரல்கள்;
அவை முழுதும்!
மன்னனின் சிந்தனையை செயலாக்கிய உதட்டிலும் ஒன்று!
நீதி தவறிய அரசனே! பார் இந்த மாணிக்கப் பரல்களை! என்றாள் வெறுப்புடன்;
உடைத்த மாத்திரம் உண்மையை ஓங்கச் செய்துவிட்ட நேர்மையின் ஆணவம் அவள் குரலில்!
ஒரு சிலம்பால் ஒப்பற்ற காதலன் உயிரை சாவுக்கு அனுப்பிவிட்ட ஏமாற்றப் பார்வை!
ஆறுதல் கொள்ளாத இதயத்தின் குமுறல் நெஞ்சை ஏற்றி இறக்கிக் கொண்டிருந்தது.
மருண்டான் பாண்டியன் மாணிக்கம் கண்டு; உணர்ந்தான் உண்மை இணை அதுவென்று!
நடந்து முடிந்த செயல்கள் ஓர் நொடியில் சிந்தையில் தோன்றி மறைய நடுங்கிப் போனான். சிந்தித்தான்!
பிழைசெய்தேனே நான்! என் காவல் பிழை போனதே!
மதியின் வாழும் மனித வாழ்க்கையில்
மந்திரம் மயங்கி மதி இழந்தேனே!
மந்திரப் பித்தத்தால் என் மதி மயங்குங்கால்
என் மக்களின் மதி என்னவோ ?
அறிவால் ஆராயாமல் மந்திரம் கேட்டு
கோழையாகிப் போனேனே யான்!
வடிவேல் எறிந்த வான் பகை பொறாது
பகறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்து
குமரிக்கோடும் கொடுங்கோள் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்திசை ஆண்ட தென்னவன் வழி வந்தவன் நான்!
மலையையும் கடலையும் பகையையும் ஆண்ட
கல்வியும் செல்வமும் வீரமும்,
மந்திரம் என்ற சிறு நரிமுன் தோற்றுப் போனதே!
பாண்டியநாடு மடமையில் மூழ்க விட்டேனே!
பாண்டியநாட்டில் மடமை வளர விட்டேனே!
என் வெண்கொற்றக் குடை தாழ்ந்து போனதே!
என் செங்கோல் கொடுங்கோல் ஆனதே!
அறமும் நெறியும் அகன்று போனதே!
என் வாழ்வு முடியட்டும்!
மனிதருள் ஒருவர் தனியொருவராக வந்து
இன்னமும் நீதிகேட்க முடியும் பாண்டியநாட்டில்!
ஆதலின் பாண்டிய நாட்டில் மடமை அழிந்து
நல்அறமும் திறமும் வளரட்டும்!
உயிர்வாழேன் நான்; கெடுக என் ஆயுள்!
என்றனன் மன்னன்; மயங்கி வீழ்ந்தான் மண்மேல்! பாண்டியன் உயிர் பிரிந்தது!
உலகின் இயற்கை (ஊழ்) மதியின் மாறுபட்டு பித்தம் கொண்டபோது, நீதி தோற்ற முதற்காலை வாழ்வைப் பிரிந்து வழிவிட்டான் வளத்துக்கு பாண்டிய நெடுஞ்செழிய மன்னன்!
"தாழ்ந்த குடையன் தளர்ந்தசெங் கோலன்
பொன்செய் கொல்லன் தன்சொல் கேட்ட
யானோ அரசன் ? யானே கள்வன்
மன்பதை காக்கும் தென்புலம் காவல்
என்முதல் பிழைத்தது; கெடுக என் ஆயுள்!என
மன்னவன் மயங்கி வீழ்ந் தனனே...."
காதல் வாழ்க்கை கண்ணகிக்கு மட்டுமா சொந்தம் ? அன்பு அவளுக்கு மட்டுமா சொந்தம்? காதலனுடன் அருமந்த நட்பு அவளுக்கு மட்டுமா வாய்த்தது?
குலைந்தனள்! நடுங்கினள்!; கோப்பெருந்தேவி.
என் இதயத்தின் மன்னவன் போன பின் யான் வாழ்வேனா? யான் வாழ்ந்துதான் என்ன? எங்கே கணவனைக் காண்பேன் நான்? தேம்பினாள் பாண்டிமாதேவி!
தவறை உணர்ந்த உடன் உயிர் விட்ட என் காதலனுக்குத் துணை செல்வேன் யான்! கோவலக் கொலைப்பழியை ஏற்று உயிர் விட்ட என் மன்னவனின் இதயத்தில் இடம் பெற்ற நானும் வாழேன்!
என் சிலம்பை எவரோ பறிக்க,
உயிர்விட்டான் கண்ணகியின் கணவன்!
கண்ணகி சிலம்பை காவலன் பறிக்க
உயிர்விட்டான் என் கணவன்!
அறம் பிழைக்கப் பழியை
ஏற்றுக் கொண்டான் என் கணவன்!
என் சிலம்பால் நேர்ந்த பிரிவிற்கு
ஆறுதல் சொல்ல அவனொடு சேர்வேன்!
என்று கோப்பெருந்தேவி நினைத்திருக்க வேண்டும்!
வீழ்ந்தனள் பாண்டியன் மேலே! மாண்டனள் தேவி!
உயிர்..!
யார் சொன்னார் கைகளில் இல்லை என்று ?
வாழ வேண்டியபோது வாழ்ந்தும், வீழ நினைத்த போது காற்றைப் பிடுங்கி விட்டாற்போல் உயிரைத் தூக்கி எறிந்த இந்த மனித சக்தி ஒழுக்கம் நிறைந்தது! நேரிட்ட வாழ்வையும் மனஉறுதியையும் கொண்டது!
கற்பென்ற இந்த மனத்தின் உறுதி கோப்பெருந்தேவிக்கு மட்டுமல்ல வழுவிய போது உயிர் விலகிய பாண்டியனுக்கும் தான்!
மென்மையாள் கண்ணகி, கணவன் துயர் அறிந்து
வன்மையாள் ஆகி தன் மனத்
திண்மையால் வென்றாள் மன்னனை!
சில வினாடிகளுக்குள் அரசனை வென்றாள்! அரச மன்றத்தை வென்றாள்! நீதியை வென்றாள்!
இறந்து கிடந்த பாண்டியனையும் பாண்டிமாதேவியையும் நின்று நிலைத்துப் பார்த்தாள் கண்ணகி!
பாண்டியன் மேல் பிணமாய் பாண்டிமாதேவி!
சாவிலே ஒன்று சேர்ந்து விட்ட அவர்களின் காதல் வாழ்க்கை கண்ணகியையும் ஆட்கொண்டிருக்க வேண்டும்.
'மாசுஅறு பொன்னே! வலம்புரி முத்தே!
பொன்னே கொடியே புனைபூங் கோதாய்!....
கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வி!....'
என்று, அவளில் இதயத்தில், கோவலன் தன்னைப் போற்றியதெல்லாம் அன்பு மழையாய்ப் பொழிந்து கொண்டேயிருந்தது!
இனி அவளின் காதோடு காதாக அவன் பேசுவானா? காதலில்லா வாழ்க்கை உயிரில்லா உடலல்லவா ? மனிதவாழ்வின் மையமே அதுதானே! மையம் இல்லாது எது வாழும் மண்ணில்!
அதுதானே உணர்வின் உந்து சக்தி! உறவின் பாலம்!
அந்த பாலம் அறுந்துபோனதை சிறிதும் பொறுத்தாள் இல்லை!
பாண்டியன் உயிர் விலகியும்
அவன் தேவி உயிர் விலக்கியும்
அவள் சினம் எள்ளளவும் குறையவில்லை!
மாறாக, திடமாகச் சொன்னாள்!
தீங்கு செய்த பாண்டியனின் மனைவியே, 'கடுமையான தீங்கிற்கு ஆளாகியிருக்கும் நான் இனிச் செய்யப் போவதையும் காண்பாய்!'
என்று மேலும் கடிந்து, அனைவரும் நடுநடுங்க, வஞ்சினச் சீற்றத்துடன் அரசவையில் களிநடம் புரிந்த கண்ணகி அரன்மனை நீங்கினாள்!
"அல்லவை செய்தார்க்கு அறம்கூற்றம் ஆம்என்னும்
பல்லவையோர் சொல்லும் பழுதுஅன்றே-பொல்லா
வடுவினையே செய்த வயவேந்தன் தேவி!
கடுவினையேன் செய்வதூஉம் காண்."
அன்புடன்
நாக.இளங்கோவன்
26-மார்ச்-2000
மதுரை:
ஊர்சூழ் வரி, வழக்குரை காதை:
கணவனைக் கட்டித்தழுவி கையில் சிலம்பைக் கொடுத்தனுப்பி கண் நிறைய பார்த்தனுப்பிய கண்ணகியின் கண்கள், கணவனின் வெட்டுண்டு கிடந்த உடலில் உறைந்து போனது!
கணவனின் பூமாலையில் ஓர் பூவை உருவி தன் தலையின் கருமயிரில் சூடிக் கொண்டு கைகூப்பி அனுப்பி வைத்தவள், அதன்பின் குருதிச் சேற்றில் தலையில்லா உடலாய்க் குளிர்ந்து போய்க் கிடந்த கோவலனின் மார்பை தன் மார்பில் தேக்கி வைத்து கண்ணீர் சிந்தினாள்!
'கட்டிய கணவனின் துன்பம் பொறுத்துக் கொள்ள பெண்னால் இயலுமா? கடவுளே உனக்கு கண்ணில்லையா?' என்று, இயலா நிலையின் கண்ணீர் கொப்பளிக்க, புலம்புகிறாள்!
"பெண்டிரும் உண்டுகொல்? பெண்டிரும் உண்டுகொல்?
கொண்ட கொழுநர் உறுகுறை தாங்குறூஉம்
பெண்டிரும் உண்டுகொல்? பெண்டிரும் உண்டுகொல்?
தெய்வம் உண்டுகொல்? தெய்வம் உண்டுகொல்?
வைவாளில் தப்பிய மன்னவன் கூடலில்
தெய்வம் உண்டுகொல்? தெய்வம் உண்டுகொல்?
என்ற இவை சொல்லி அழுவாள் கணவன்தன்
பொன்துஞ்சு மார்பம் பொருந்தத் தழீஇக் கொள்ள..."
இணைந்திருந்த நெஞ்சங்கள் இரண்டும் பிரிவின் துயரத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கவேண்டும்.
உலகமே எனைக் கள்வனென்று கூறினும் உனக்குத் தெரியும் கண்ணகி, நான் கள்வனல்ல என்று! என்று கோவலன் நெஞ்சம் அவளின் நெஞ்சத்திடம் நீதி கேட்டிருக்க வேண்டும்!
உனைச் சேர்ந்து, வாழாத வாழ்வையெல்லாம் வாழ வந்தபோது என் கழுத்தை அறுத்து விட்டார்களேஎ......!, என் செய்வேன் என்று அவன் நெஞ்சம் அழுதிருக்க வேண்டும்!
காதலன் தவறு செய்யவில்லை! வாழத்துடித்த காதலனின் தலையைக் கொய்தவன் அரசன்! தலையைக் கொய்தவன் சிலம்பையும் பறித்துக் கொண்டான்! அவன் கழுத்தரிந்த களிமகனையும், கொல்லக் கயவனையும் கண்ணகி அறியாள்!
இறந்த கணவனைக் கடைசியாக மெய்தழுவிக் கொண்டிருந்தவளின் சோகம் சினமாக வலுவெடுக்க, கண்ணகியின் நெஞ்சத்து நீதிமன்றம், காதலனுடன் தானும் சாவதைத் தள்ளிப்போட்டது!
அப்படிச் செத்தால் கோவலன் கள்வனென்றே ஆகிப் போவானே என்று நினைக்கையில் சினம் கடுஞ்சினமாக மாறியது!
காதலன் பிரிந்த பின்னர் வாழ நினைக்கவில்லை! அப்படி சாக நினைத்த போதும் பழி நீக்கிட வேண்டிய கடமை சுமையாய் சேர்ந்து கொள்ள கடுஞ்சினம் செஞ்சினமாய் மாற
"காய்சினம் தணிந்துஅன்றிக் கணவனைக் கைகூடேன்"
என்றாள்; எழுந்தாள்! சூளுரைத்தாள்!
நின்றாள்; நினைந்தாள்!
நெடுங்கயல் கண் நீர் துடையாச் சென்றாள்;
பாண்டியன் அரன்மனை வாயில் முன்!
கொடுஞ்சினம் கொண்டு பாண்டியனைக் காண கண்ணகி செல்ல, தான் கண்ட தீக்கனாவைப் பாண்டியனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் கோப்பெருந்தேவி கலக்கத்துடன்.
கண்ணகி:
வாயிற்காப்போனே! வாயிற்காப்போனே........!
வாயிற்காப்போன் திரும்பிப் பார்க்கிறான்; கூப்பிட்ட குரலின் அதிர்வைக் கண்டு சற்று திகைக்கிறான்!
அறிவு முற்றுமாய் அகன்று போய், அறம் என்ற உள்ளம் அற்றுப் போன அரச நீதி தவறிய மன்னனின் வாயிற்காப்போனே......!
எடுத்த எடுப்பில் நாடாளும் மன்னனை எறும்பின் கீழாய் ஆக்கி சொல்லால் அடிக்கும் சினம் சுமந்த கண்ணகியைக் கண்டு நடுக்குற்றான் வாயிலோன்!
செம்பொன் சிலம்பொன்றை ஏந்தியவளாய், கணவனை இழந்த ஒருத்தி வாயிலில் நிற்கிறாள்...! என்று மன்னனிடம் சென்று சொல்வாய்! சொல்வாய்!
"வாயி லோயே! வாயி லோயே!
அறிவு அறை போகிய பொறிஅறு நெஞ்சத்து
இறைமுறை பிழைத்தோன் வாயி லோயே!
இணைஅரிச் சிலம்பு ஒன்று ஏந்திய கையள்
கணவனை இழந்தாள் கடையகத் தாள்என்று
அறிவிப்பாயே அறிவிப்பாயே!
ஆணையிட்டுச் சொன்னவளின் அகங்கண்டு திகைத்து அரசன்முன் ஓடிச் சென்றான் வாயிற்காப்போன்!
"வாழி எம் கொற்கை வேந்தே வாழி
தென்னம் பொருப்பின் தலைவ வாழி!
செழிய வாழி! தென்னவ வாழி!
பழியொடு படராப் பஞ்சவ வாழி......"
வணங்கிவிட்டுச் சொன்னான் வாயிலோன்;
மன்னவா!,
கொற்றவை போல் நிற்கிறாள்! ஆனால் கொற்றவை அல்ல! கோலமோ காளி! ஆனால் காளியும் அல்ல!
பெரும்பகையோடு வந்திருக்கிறாள் வாயில்முன்னொருத்தி! கையில் ஒரு சிலம்பேந்தி நிற்கிறாள்!
கலக்கம் தரும் கடுஞ்சினம் கொண்டாள்!
கணவனை இழந்தவளாம்!
அழைத்து வா என்றான் அரசன்! அழைத்து வந்தான் வாயிலோன் கண்ணகியைக் காவலன் முன்!
"வருக மற்றுஅவள் தருக ஈங்குஎன,
வாயில் வந்து கோயில் காட்டக்
கோயில் மன்னனைக் குறுகினள் சென்றுழி-
கண்ணீர் பெருக வந்து நிற்கும் இளங்கொடியே, "நீ யார் ?"; கேட்டவன் மன்னன்!
"நீர்வார் கண்ணை எம்முன் வந்தோய்
யாரை யோநீ மடக்கொடி யோய்என; "
அகன்று உயர்ந்த அரச மண்டபம்; பொன்னும் மணியும் பதித்த தூண்கள். உயர்ந்த மேடை; அரியாசனம் ஆங்கு!
கவரி வீசும் காற்றின் சுகத்திலே அரசியோடு அரசனும் ஆங்கு!
அவர்க்குக் கீழே அமைச்சர்கள் வரிசை!
சுற்றி நிற்கும் பட்டுக் கட்டிய பணிவிடைக் கூட்டம்!
கண்ணகியின்
கலைந்து கிடக்கும் நீண்ட நெடுமயிர்கள்!
விரிந்து வெறித்த பார்வை!
ஆறு பொங்கும் கண்கள்!
புழுதி படிந்த உடைகள்!
உயிரற்ற கூடாய்த் தெரியும் உடல்!
சுற்றியிருந்த அத்தனைக் கண்களும் அவளின் மேல்! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை!
ஆனால் சிறுதுரும்பாய்த் தெரிந்தனர் அத்தனை பேரும் அவளுக்கு!
நிமிர்ந்து பார்த்தாள்! நெஞ்சத்து உறுதி அகலாமல்; கண்ணகியின் வெறித்த கண்கள் வெறித்தபடியே நிலைத்து நின்றன மன்னனின் கண்களில்!
நிலைத்த பார்வையின் திண்மை கண்டு மண்டபம் முழுவதும் அமைதியானது!
'அறிவிலா மன்னா!' - விளித்தாள் மன்னனை!
நாடாளும் மன்னவன் இடத்திலே அவன் முன் நின்று அவனை விளித்த அந்த வார்த்தைகள் பாண்டியனை மருளச் செய்தது!
கூடல் வேந்தன் கூடு போன்றவன் ஆயினன்! சுற்றியிருந்தோரையும் கலங்கச் செய்தது!
உன்னிடம் கூற வேண்டியது உளது; அதற்கு முன் யாரெனக் கேட்டாய்; கூறுவேன் கேள்!
பறக்கும் புறாவிற்கு இட்ட துன்பத்திற்காக புறாவிற்கும் நீதி வழங்கினான் சிபி என்ற அரசன்!
கண்ணீருடன் பசு ஒன்று ஆராய்ச்சி மணி ஒலிக்க, அதன் குறை அறிந்தான் மனுநீதிச் சோழன்!
அதன் கன்றைக் கொன்ற அவன் மகனை அதேத் தேர்க்காலில் இட்டுக் கொன்றான் அச்சோழன்.
மனித இனமற்ற பறவைக்கும், பசுவுக்கும் அரசநெறி கொண்டு நீதி வழங்கிய நெறிதவறா அரசர்கள் ஆண்ட புகார் நகரம் என் ஊர்....!
பழியில்லாப் பெருஞ்செல்வ வணிகக் குடியிலே பிறந்த மாசாத்துவான் மகனான கோவலனை மணந்து,
அவனுடன் செல்வம் தேடி உன் நாடு வந்து,
என் காற்சிலம்பை விற்க வந்தபோது,
உன்னால் கொலை செய்யப்பட்டானேஎ கோவலன்ன்...
அவன் மனைவி நான்! கண்ணகி என் பெயர்!
சொல்லி முடித்த அவளின் கண்களில் நீர் மட்டும் இன்னும் வற்றவில்லை!
"தேரா மன்னா! செப்புவது உடையேன்
எள்அறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்உறு புன்கண் தீர்த்தோன்; அன்றியும்
வாயில் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்
அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்;
பெரும்பெயர்ப் புகார் என்பதியே; -
அவ்வூர்
ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி
மாசாத்து வாணிகன் மகனை ஆகி
வாழ்தல் வேண்டி ஊழ்வினைதுரப்பச்
சூழ்கழல் மன்னாநின்நகர்ப் புகுந்துஈங்கு
என்கால் சிலம்புபகர்தல் வேண்டி நின்பால்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி
கண்ணகி என்பதுஎன் பெயரே........"
கள்வனைக் கொன்றேன்; குறை கூறி நிற்கிறாளே இவள்! சிந்தித்தான் பாண்டியன்;
கள்வனைக் கொல்வது தானே அரச நீதி! எடுத்துரைத்தான் வேந்தன்.
"கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்று
வெள்வேல் கொற்றம் காண்என..."
எடுத்துரைத்த வேந்தனை சொல்லால் அறைந்தாள் அணங்கு! 'நல்திறம் கொண்டு ஆராயாக் கொற்கை வேந்தேஎ...!' என் கால் சிலம்பு, மாணிக்கப் பரல்களைக் கொண்டது!
சினத்துடன் சற்று இகழ்ச்சி அவள் உதடுகளில்!
"நல்திறம் படராக் கொற்கை வேந்தே!
என்கால் பொன்சிலம்பு மணிஉடை அரியே..."
இப்பொழுது ஆராய்கிறான் மன்னன்!
அம்மை சொன்னது அறிந்தோம்! எம் அரசியின் சிலம்பது முத்துப் பரல்கள் உடைத்தது.
கொண்டுவா என்றான் அரசியின் சிலம்புகளை! அவையில் வைத்தான்;
"தேமொழி! உரைத்தது செவ்வை நன்மொழி
யாம் உடைச் சிலம்பு முத்துஉடை அரியே;
'தருக' எனத் தந்து, தான் முன் வைப்ப!
முத்தென்று சொன்னான்! முத்தைக் காட்டினான்!
பிரிதொன்றைப் பார்த்தான் மாணிக்கம் கண்டான்!
மாணிக்கத்தைக் காட்டென்று சொன்னான் கண்ணகியிடம்!
ஒற்றைச் சிலம்பை பெருவாழ்வு வாழ கணவனிடம் கொடுத்து மற்றைச் சிலம்பை தன் செல்வக் குடி சிறப்பின் நினைவாய் வைத்திருந்த கண்ணகி, காதலன் கள்வனல்ல என்ற சான்று பகர புறப்படும்போது கழற்றிக் கையில் பிடித்த அச் சிலம்பை அடித்தாள் மண்மேல்! உடைந்து தெறித்தன மாணிக்கப் பரல்கள்;
அவை முழுதும்!
மன்னனின் சிந்தனையை செயலாக்கிய உதட்டிலும் ஒன்று!
நீதி தவறிய அரசனே! பார் இந்த மாணிக்கப் பரல்களை! என்றாள் வெறுப்புடன்;
உடைத்த மாத்திரம் உண்மையை ஓங்கச் செய்துவிட்ட நேர்மையின் ஆணவம் அவள் குரலில்!
ஒரு சிலம்பால் ஒப்பற்ற காதலன் உயிரை சாவுக்கு அனுப்பிவிட்ட ஏமாற்றப் பார்வை!
ஆறுதல் கொள்ளாத இதயத்தின் குமுறல் நெஞ்சை ஏற்றி இறக்கிக் கொண்டிருந்தது.
மருண்டான் பாண்டியன் மாணிக்கம் கண்டு; உணர்ந்தான் உண்மை இணை அதுவென்று!
நடந்து முடிந்த செயல்கள் ஓர் நொடியில் சிந்தையில் தோன்றி மறைய நடுங்கிப் போனான். சிந்தித்தான்!
பிழைசெய்தேனே நான்! என் காவல் பிழை போனதே!
மதியின் வாழும் மனித வாழ்க்கையில்
மந்திரம் மயங்கி மதி இழந்தேனே!
மந்திரப் பித்தத்தால் என் மதி மயங்குங்கால்
என் மக்களின் மதி என்னவோ ?
அறிவால் ஆராயாமல் மந்திரம் கேட்டு
கோழையாகிப் போனேனே யான்!
வடிவேல் எறிந்த வான் பகை பொறாது
பகறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்து
குமரிக்கோடும் கொடுங்கோள் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்திசை ஆண்ட தென்னவன் வழி வந்தவன் நான்!
மலையையும் கடலையும் பகையையும் ஆண்ட
கல்வியும் செல்வமும் வீரமும்,
மந்திரம் என்ற சிறு நரிமுன் தோற்றுப் போனதே!
பாண்டியநாடு மடமையில் மூழ்க விட்டேனே!
பாண்டியநாட்டில் மடமை வளர விட்டேனே!
என் வெண்கொற்றக் குடை தாழ்ந்து போனதே!
என் செங்கோல் கொடுங்கோல் ஆனதே!
அறமும் நெறியும் அகன்று போனதே!
என் வாழ்வு முடியட்டும்!
மனிதருள் ஒருவர் தனியொருவராக வந்து
இன்னமும் நீதிகேட்க முடியும் பாண்டியநாட்டில்!
ஆதலின் பாண்டிய நாட்டில் மடமை அழிந்து
நல்அறமும் திறமும் வளரட்டும்!
உயிர்வாழேன் நான்; கெடுக என் ஆயுள்!
என்றனன் மன்னன்; மயங்கி வீழ்ந்தான் மண்மேல்! பாண்டியன் உயிர் பிரிந்தது!
உலகின் இயற்கை (ஊழ்) மதியின் மாறுபட்டு பித்தம் கொண்டபோது, நீதி தோற்ற முதற்காலை வாழ்வைப் பிரிந்து வழிவிட்டான் வளத்துக்கு பாண்டிய நெடுஞ்செழிய மன்னன்!
"தாழ்ந்த குடையன் தளர்ந்தசெங் கோலன்
பொன்செய் கொல்லன் தன்சொல் கேட்ட
யானோ அரசன் ? யானே கள்வன்
மன்பதை காக்கும் தென்புலம் காவல்
என்முதல் பிழைத்தது; கெடுக என் ஆயுள்!என
மன்னவன் மயங்கி வீழ்ந் தனனே...."
காதல் வாழ்க்கை கண்ணகிக்கு மட்டுமா சொந்தம் ? அன்பு அவளுக்கு மட்டுமா சொந்தம்? காதலனுடன் அருமந்த நட்பு அவளுக்கு மட்டுமா வாய்த்தது?
குலைந்தனள்! நடுங்கினள்!; கோப்பெருந்தேவி.
என் இதயத்தின் மன்னவன் போன பின் யான் வாழ்வேனா? யான் வாழ்ந்துதான் என்ன? எங்கே கணவனைக் காண்பேன் நான்? தேம்பினாள் பாண்டிமாதேவி!
தவறை உணர்ந்த உடன் உயிர் விட்ட என் காதலனுக்குத் துணை செல்வேன் யான்! கோவலக் கொலைப்பழியை ஏற்று உயிர் விட்ட என் மன்னவனின் இதயத்தில் இடம் பெற்ற நானும் வாழேன்!
என் சிலம்பை எவரோ பறிக்க,
உயிர்விட்டான் கண்ணகியின் கணவன்!
கண்ணகி சிலம்பை காவலன் பறிக்க
உயிர்விட்டான் என் கணவன்!
அறம் பிழைக்கப் பழியை
ஏற்றுக் கொண்டான் என் கணவன்!
என் சிலம்பால் நேர்ந்த பிரிவிற்கு
ஆறுதல் சொல்ல அவனொடு சேர்வேன்!
என்று கோப்பெருந்தேவி நினைத்திருக்க வேண்டும்!
வீழ்ந்தனள் பாண்டியன் மேலே! மாண்டனள் தேவி!
உயிர்..!
யார் சொன்னார் கைகளில் இல்லை என்று ?
வாழ வேண்டியபோது வாழ்ந்தும், வீழ நினைத்த போது காற்றைப் பிடுங்கி விட்டாற்போல் உயிரைத் தூக்கி எறிந்த இந்த மனித சக்தி ஒழுக்கம் நிறைந்தது! நேரிட்ட வாழ்வையும் மனஉறுதியையும் கொண்டது!
கற்பென்ற இந்த மனத்தின் உறுதி கோப்பெருந்தேவிக்கு மட்டுமல்ல வழுவிய போது உயிர் விலகிய பாண்டியனுக்கும் தான்!
மென்மையாள் கண்ணகி, கணவன் துயர் அறிந்து
வன்மையாள் ஆகி தன் மனத்
திண்மையால் வென்றாள் மன்னனை!
சில வினாடிகளுக்குள் அரசனை வென்றாள்! அரச மன்றத்தை வென்றாள்! நீதியை வென்றாள்!
இறந்து கிடந்த பாண்டியனையும் பாண்டிமாதேவியையும் நின்று நிலைத்துப் பார்த்தாள் கண்ணகி!
பாண்டியன் மேல் பிணமாய் பாண்டிமாதேவி!
சாவிலே ஒன்று சேர்ந்து விட்ட அவர்களின் காதல் வாழ்க்கை கண்ணகியையும் ஆட்கொண்டிருக்க வேண்டும்.
'மாசுஅறு பொன்னே! வலம்புரி முத்தே!
பொன்னே கொடியே புனைபூங் கோதாய்!....
கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வி!....'
என்று, அவளில் இதயத்தில், கோவலன் தன்னைப் போற்றியதெல்லாம் அன்பு மழையாய்ப் பொழிந்து கொண்டேயிருந்தது!
இனி அவளின் காதோடு காதாக அவன் பேசுவானா? காதலில்லா வாழ்க்கை உயிரில்லா உடலல்லவா ? மனிதவாழ்வின் மையமே அதுதானே! மையம் இல்லாது எது வாழும் மண்ணில்!
அதுதானே உணர்வின் உந்து சக்தி! உறவின் பாலம்!
அந்த பாலம் அறுந்துபோனதை சிறிதும் பொறுத்தாள் இல்லை!
பாண்டியன் உயிர் விலகியும்
அவன் தேவி உயிர் விலக்கியும்
அவள் சினம் எள்ளளவும் குறையவில்லை!
மாறாக, திடமாகச் சொன்னாள்!
தீங்கு செய்த பாண்டியனின் மனைவியே, 'கடுமையான தீங்கிற்கு ஆளாகியிருக்கும் நான் இனிச் செய்யப் போவதையும் காண்பாய்!'
என்று மேலும் கடிந்து, அனைவரும் நடுநடுங்க, வஞ்சினச் சீற்றத்துடன் அரசவையில் களிநடம் புரிந்த கண்ணகி அரன்மனை நீங்கினாள்!
"அல்லவை செய்தார்க்கு அறம்கூற்றம் ஆம்என்னும்
பல்லவையோர் சொல்லும் பழுதுஅன்றே-பொல்லா
வடுவினையே செய்த வயவேந்தன் தேவி!
கடுவினையேன் செய்வதூஉம் காண்."
அன்புடன்
நாக.இளங்கோவன்
26-மார்ச்-2000
Monday, February 28, 2000
சிலம்பு மடல் 25
சிலம்பு மடல் - 25 பூவின் புலம்பல்! புயலாய் எழுதல்!
மதுரை:
ஆய்ச்சியர் குரவை, துன்பமாலை, ஊர்சூழ்வரி:
இடைச்சி மாதரி வீட்டில், உறையிட்ட பால் உறையவில்லை; உருகவைத்த வெண்ணெய் உருகவில்லை; ஆடுகள் சோர்ந்து கிடக்கின்றன; எருதுகளின் கண்களில் கண்ணீர்! பசுக்கள் நடுக்கத்துடன் கதறுகின்றன! அவைகளின் கழுத்து மணிகள் அறுந்து வீழ்கின்றன!
துயற்குறிகளாய் தெரிந்தது மாதரிக்கு; பதறுகிறாள்! என்னவென்று புரியவில்லை!
"குடப்பால் உறையா; குவிஇமில் ஏற்றின்
மடக்கண்நீர் சோரும்; வருவதுஒன்று. உண்டு
உறிநிறு வெண்ணெய் உருகா உருகும்
மறி,தெறித்து ஆடா; வருவதுஒன்று உண்டு
நான்முலை ஆயம் நடுங்குபு நின்றுஇரங்கும்
மான்மணி வீழும்; வருவதுஒன்று உண்டு;"
தன் ஆடுமாடுகளுக்கு என்ன துயரமோ ? அவை அறிந்தவை என்னவோ? என்று கலங்குகிறாள் மாதரி; அவளின் மக்களும்தான்! அவைகளை மகிழ்விக்கும் கூத்தை ஆடிப்பாட மகளையும் மற்ற மகளிரையும் அழைக்கிறாள்!
"மனம் மயங்காதே, மண்ணின் மாதர்க்கு
அணியாகிய கண்ணகியும் தான்காண
ஆயர்பாடியில் எருமன்றத்து மாயவனுடன்
தம்முன் ஆடிய வாலசரிதை நாடகங்களில்
வேல்நெடுங்கண் பிஞ்ஞையோடு ஆடிய குரவை ஆடுதும் யாம்,
என்றாள், கறவை கன்றுதுயர் நீங்குக எனவே!"
இடையர் குலத்துக் கடவுளாக சொல்லப்படுபவன் கண்ணன்;துயற்குறிகளாகக் கருதப்பட்ட மாடு கன்றுகளின் துயர் நீங்க, உற்சாகம் பெற, கண்ணன் தன் இளம்பருவத்தில் நப்பின்னையோடு ஆடிய குரவைக் கூத்தை ஆடுகின்றனர் மாதரி சார்ந்த மகளிர் ஏழ்வர்;
சில ஆண்டுகளுக்கு முன்னர், திரைப்படத்தின் பாடல்களைக் கேட்டால் பசு அதிகம் பால் கறக்கிறது என்று ஒரு செய்தி வெளியானது; அது சோதிக்கப்பட்டது என்றும் ஒரு செய்தி சொன்னது; ஒரு வேளை அது உண்மை என்றால் மாடு கன்றுகளுக்கு இடையர் குல மகளிர் குரைவையாடி மகிழ்வூட்டும் நிகழ்ச்சி, மாட்டுப் பொங்கலின் போது ஏற்படுத்தப்படும் ஒலிகள் மற்றும் மாடு கன்றுகளைப் போற்றுதல் போன்றவை அக்கால்நடைகளின் உணர்ச்சிகளில் தாக்கம் ஏற்படுத்து பவையாக இருக்கக் கூடும்!
"நாராயணா என்னா நா என்ன நாவே?"
என்ற கேள்வியோடு குரவைக் கூத்து நிறைவு பெற, துயர்களை நாராயணனிடம் விட்டுவிட்டு மாதரி நீராடப் போகிறாள்!
ஓடி வருகிறாள் ஒரு மங்கை! கோவலத்துயர் அறிந்தவள் அவள்!
கண்ணகியைக் கண்டு துயரைச் சொல்ல முடியாமல் தடுமாறுகிறாள்!
"....ஓர் ஊர்அரவம் கேட்டு
விரைவொடு வந்தாள் உளள்;
அவள்தான்,
சொல்ஆடாள் சொல்ஆடாள் நின்றாள்!
தன்னைப்பார்த்து ஒரு நங்கை நாஅசைக்கா துயர முகம் தாங்கி நிற்கிறாள் என்றால், வெளிப் போன தன் கணவனுக்கு தீங்கு நேர்ந்திருக்குமோ என்று பதறுகிறாள் கண்ணகி! அந்நங்கையாலும் உடன் சொல்லஇயலவில்லை!
"எல்லாவோ!
காதலன் காண்கிலேன் கலங்கிநோய் கைம்மிகும்...
நண்பகல் போதே நடுக்குநோய் கைம்மிகும்...
தஞ்சமோ தோழீ! தலைவன் வரக்காணேன்
வஞ்சமோ உண்டு மயங்கும் என்நெஞ்சன்றே
வஞ்சமோ உண்டு மயங்கும் என்நெஞ்சாயின்
எஞ்சலார் சொன்னது எவன்வாழி யோதோழீ!"
கண்ணகி:
தோழீ! கணவன் வரக் காண்கிலேன் நடுக்குற்றேன்; அயலார் கூறியது உளவோ? உரைப்பாய்!
தோழி:
'அரசியின் அழகு மிக்க சிலம்பொன்றைக் கவர்ந்த கள்வன் கோவலன் என்று.....'
கண்ணகி:
என்று......?
தோழி:
'ஊர்க்காவலர் கோவலனைக் கொலை செய்யக் கருதினர்.....!'
"அரைசுஉறை கோயில் அணிஆர் ஞெகிழம்
கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே-
கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே-
குரைகழல் மாக்கள் கொலை குறித்தனரே!
எனக்கேட்டு, அதிர்ந்தாள், அழுதாள், விழுந்தாள் கண்ணகி."
துயர்ச்செய்தியை முடிவாய்ச் சொல்லாமல் சற்று இழுத்தே சொன்னாள் தோழி! இருப்பினும் "சாகவில்லை" என்று, தோழி கூறவில்லை!
அவளின் முகக்குறிகள் கோவலன் மாண்டுவிட்டதை, கண்ணகிக்குப் புரியவைத்துவிட்டது! கண்கள் குளமானது!
கண்ணனைய கணவரே! நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் ? என்று குமுறினாள் கண்ணகி!
"பொங்கி எழுந்தாள், விழுந்தாள்..
செங்கண் சிவப்ப அழுதாள்;தன் கேள்வனை
'எங்கணாஅ' என்னா இனைந்துஏங்கி மாழ்குவாள்;
தான் தந்த சிலம்பைக் கொண்டு சென்ற கோவலன் கள்வனென்று கொலையுறுவதா? அதிர்கிறாள்!
அவளுக்கும் அந்தப் பொற்கொல்லனுக்கும் மட்டுமே தெரியும் அச்சிலம்பு அரசியுடையது அல்ல என்று!
அவளின் நெஞ்சத்து மன்றம் பாண்டியனைப் பழித்தது.
சமுதாயத்தில் ஏற்படக்கூடிய தவறுகளுக்கு நாட்டின் அரசன்தான் முதலில் பதில் சொல்லவேண்டும்!
பாண்டியன் செய்த தவறினால் பறிகொடுத்தேன் என்கணவனை; 'அறக்கடவுள் என்ற அறிவற்றோய்!' நீயும் இருக்கிறாயா? நான் அவலம் கொண்டு அழிந்துபோவேன் என்று நினைத்தாயா ? மாட்டேன்! என்று பாண்டியனையும் அறக்கடவுளையும் பழித்தாள்; சூளுரைத்தாள்!
காப்பியத்தில் தென்றலாய்க் குளிர்ந்தவள் ஈங்கு தீமை கண்டு தீயாய்க் கொதிக்கிறாள்!
முற்பிறப்பின் பாவம் என்று யார் வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும்!
முன்வினை என்று எண்ணி கண்ணீர் மட்டும் சிந்தி மாரடித்து ஒப்பாரி அழுது அடங்கிப் போகவில்லை!
கணவனே போய்விட்டான்; இனி என்ன என்று பின்னால் நின்றாள் இல்லை!
அறக்கடவுளையும் 'அறிவற்றோய்' என்று அதட்டி தீமையை எதிர்த்து சூளுரைத்ததால் அவள் பெண்குலத்தின் திலகம் ஆகிறாள்!
"மன்னவன் தவறுஇழைப்ப
அன்பனை இழந்தேன்யான்; அவலம் கொண்டு அழிவலோ?
மன்னவன் தவறுஇழைப்ப
அறன்என்னும் மடவோய்! யான் அவலம் கொண்டு அழிவலோ?
தென்னவன் தவறுஇழைப்ப
இம்மையும் இசைஒரீஇ இனைந்துஏங்கி அழிவலோ?"
போற்றா ஒழுக்கம் புரிந்தவன் கோவலன் ஆயினும் மாற்றா உள்ளம் படைத்த மனவுறுதி மங்கை நல்லாள் கண்ணகிக்கு!
காதலெனும் நட்பால் நடந்துவந்தவள்! அன்பால் அவனைக் கரைத்தவள்!
நெஞ்சத்தின் நேர்மை பொங்கி, வஞ்சத்தை வீழ்த்திட உறுதி பூண்டது!
அருகில் உள்ள அனைவரும் அவளின் நிலை கண்டு வருந்த, அறத்தினையும், பாண்டியனையும் பழித்த கண்ணகி, கதிரவனையும் கேள்வி கேட்டாள்!
"காய்கதிர்ச் செல்வனே! கள்வனோ என் கணவன்?"
எங்கிருந்து வந்ததென்று தெரியவில்லை! இவள் நிலை கண்டு வருந்தி, சுற்றி நின்ற மக்கட் கூட்டத்திலிருந்து இருக்கவேண்டும்! அந்தக்குரல் கூறிய செய்தி "உன் கணவன் கள்வனல்ல; கள்வன் என்று கூறிய இவ்வூர் நெருப்பிற்கு உணவாகும் என்று!"
அநியாயங்களைப் பார்த்து 'நாசமாகப் போகட்டும் இந்த ஊர்' என்று சொல்வதைப் போல!
ஒரு ஊரினையே அழிந்து போகச் சொல்லவேண்டுமானால் அந்த ஊரில் பேதமையும் குறைகளும் நிறைந்து இருக்கவேண்டும்!
"கள்வனோ அல்லன் கருங்கயல்கண் மாதராய்!
ஒள்எரி உண்ணும்இவ் வூர் என்றது ஒருகுரல்"
அதற்குமேலும் அங்கு நின்றாள் இல்லை! மற்றொரு சிலம்பைக் கையில் எடுத்தாள்; நடந்தாள் மதுரை மாநகருக்குள்;
அச்சிலம்பை அனைவரிடமும் காட்டி, நகருள் மகளிர் நோக்கி விளக்கம் சொல்லி நியாயம் கேட்டாள்;
'விலைமிக்க என் கால் சிலம்பை விலை கொடுக்காமல் கைப்பற்றிக் கொண்டு என் கணவனையும் கொலை செய்தான் பாண்டியன்' என்றாள்!
பாண்டியன் நீதி தவறினான் என்று மட்டும் கண்ணகி முதலில் பொங்கி எழவில்லை! பாண்டியன் தன் சிலம்பை திருடிவிட்டான் என்றும் அய்யப்படுகிறாள்! குற்றஞ்சொல்கிறாள்!!
ஏனெனில் அவளுக்கும் அந்தப் பொற்கொல்லனுக்கும் மட்டுமே தெரியும் அச்சிலம்பு அரசியுடையது அல்ல என்று!
"பட்டேன் படாத துயரம், படுகாலை
உற்றேன் உறாதது உறுவனே ஈதுஒன்று;
கள்வனோ அல்லன் கணவன் என் கால்சிலம்பு
கொள்ளும் விலைபொருட்டால் கொன்றாரே ஈதுஒன்று!..."
ஆணுக்காகட்டும் பெண்ணுக்காகட்டும் அன்பர் செத்து விடும்போது வாழ்க்கையும் முடிந்துதான் போகிறது;
நேர்மையான நெஞ்சம், மாறா உள்ளம் படைத்த உறுதியான நெஞ்சம்;
காதலன் பால் அன்பு மழை பொழிந்து அவன்மேல் பூங்கொடியாய்ப் படர்ந்தவள்;
மதுரையம்பதியென்ற அறியா நாட்டில்
அநீதியால் விழைந்த அன்பின் சாவால்,
துக்கம் பெருகி,
உள்ளம் உலர்ந்து,
வண்ணச் சீறடி வன்மை கொள்ள,
அரற்றிப் புலம்பிப் புயலாய் மாறி,
தெருவெங்கும் தன்கதை கூறி,
இனியாள் விழியோ இமையாதாகி,
இமையா விழிகள் ஆறாய் பெய்ய,
அறவோன் அவனையும் அதட்டி,
அரசன் தனையும் பழித்து,
செம்பொன் சிலம்பொன்றைக் கையில் ஏந்தி,
சூளுரைத்து,
போர் தொடுக்க, சீறிச் சினந்து நடந்து வரும்
பெண்ணரசி கண்ணகியைக்
கண்ட மதுரை மக்கள் மயங்கினர்;
உணர்ந்தனர் உள்ளத்தால் உயர்ந்தவள் என்று!
கணவன் இறந்தமைக்காகப் புலம்பியும், அவன் அநீதியால் இறந்தமைக்காகச் சீறிச் சினந்து வந்தவள் கண்டு தெய்வமோ என்று அஞ்சினர்!
பெருமை மிக்க பாண்டியநாடு நீதி தவறிவிட்டதோ? இது ஏனோ என்று வருந்தினர்.
சிலர் கோவலன் இறந்து கிடந்த இடத்தைக் காட்டினர் கண்ணகிக்கு!;
"களையாத துன்பம் காரிகைக்குக் காட்டி
வளையாத செங்கோல் வளைந்தது; இது என் கொல்?
..தென்னவன் கொற்றம் சிதைந்தது; இது என்கொல்?
..தண்குடை வெம்மை விளைத்தது; இது என்கொல்?
செம்பொன் சிலம்புஒன்று கைஏந்தி நம்பொருட்டால்
வம்பப் பெருந்தெய்வம் வந்தது; இது என்கொல்?
ஐஅரி உண்கண் அழுதுஏங்கி அரற்றுவாள்
தெய்வம் உற்றாள் போலும் தகையள்; இது என்கொல்?
என்பன சொல்லி இனைந்துஏங்கி அரற்றவும்
மன்பழி தூற்றும் குடியதே மாமதுரைக்
கம்பலை மாக்கள் கணவனைத் தாம்காட்ட........"
அன்புடன்
நாக.இளங்கோவன்
மதுரை:
ஆய்ச்சியர் குரவை, துன்பமாலை, ஊர்சூழ்வரி:
இடைச்சி மாதரி வீட்டில், உறையிட்ட பால் உறையவில்லை; உருகவைத்த வெண்ணெய் உருகவில்லை; ஆடுகள் சோர்ந்து கிடக்கின்றன; எருதுகளின் கண்களில் கண்ணீர்! பசுக்கள் நடுக்கத்துடன் கதறுகின்றன! அவைகளின் கழுத்து மணிகள் அறுந்து வீழ்கின்றன!
துயற்குறிகளாய் தெரிந்தது மாதரிக்கு; பதறுகிறாள்! என்னவென்று புரியவில்லை!
"குடப்பால் உறையா; குவிஇமில் ஏற்றின்
மடக்கண்நீர் சோரும்; வருவதுஒன்று. உண்டு
உறிநிறு வெண்ணெய் உருகா உருகும்
மறி,தெறித்து ஆடா; வருவதுஒன்று உண்டு
நான்முலை ஆயம் நடுங்குபு நின்றுஇரங்கும்
மான்மணி வீழும்; வருவதுஒன்று உண்டு;"
தன் ஆடுமாடுகளுக்கு என்ன துயரமோ ? அவை அறிந்தவை என்னவோ? என்று கலங்குகிறாள் மாதரி; அவளின் மக்களும்தான்! அவைகளை மகிழ்விக்கும் கூத்தை ஆடிப்பாட மகளையும் மற்ற மகளிரையும் அழைக்கிறாள்!
"மனம் மயங்காதே, மண்ணின் மாதர்க்கு
அணியாகிய கண்ணகியும் தான்காண
ஆயர்பாடியில் எருமன்றத்து மாயவனுடன்
தம்முன் ஆடிய வாலசரிதை நாடகங்களில்
வேல்நெடுங்கண் பிஞ்ஞையோடு ஆடிய குரவை ஆடுதும் யாம்,
என்றாள், கறவை கன்றுதுயர் நீங்குக எனவே!"
இடையர் குலத்துக் கடவுளாக சொல்லப்படுபவன் கண்ணன்;துயற்குறிகளாகக் கருதப்பட்ட மாடு கன்றுகளின் துயர் நீங்க, உற்சாகம் பெற, கண்ணன் தன் இளம்பருவத்தில் நப்பின்னையோடு ஆடிய குரவைக் கூத்தை ஆடுகின்றனர் மாதரி சார்ந்த மகளிர் ஏழ்வர்;
சில ஆண்டுகளுக்கு முன்னர், திரைப்படத்தின் பாடல்களைக் கேட்டால் பசு அதிகம் பால் கறக்கிறது என்று ஒரு செய்தி வெளியானது; அது சோதிக்கப்பட்டது என்றும் ஒரு செய்தி சொன்னது; ஒரு வேளை அது உண்மை என்றால் மாடு கன்றுகளுக்கு இடையர் குல மகளிர் குரைவையாடி மகிழ்வூட்டும் நிகழ்ச்சி, மாட்டுப் பொங்கலின் போது ஏற்படுத்தப்படும் ஒலிகள் மற்றும் மாடு கன்றுகளைப் போற்றுதல் போன்றவை அக்கால்நடைகளின் உணர்ச்சிகளில் தாக்கம் ஏற்படுத்து பவையாக இருக்கக் கூடும்!
"நாராயணா என்னா நா என்ன நாவே?"
என்ற கேள்வியோடு குரவைக் கூத்து நிறைவு பெற, துயர்களை நாராயணனிடம் விட்டுவிட்டு மாதரி நீராடப் போகிறாள்!
ஓடி வருகிறாள் ஒரு மங்கை! கோவலத்துயர் அறிந்தவள் அவள்!
கண்ணகியைக் கண்டு துயரைச் சொல்ல முடியாமல் தடுமாறுகிறாள்!
"....ஓர் ஊர்அரவம் கேட்டு
விரைவொடு வந்தாள் உளள்;
அவள்தான்,
சொல்ஆடாள் சொல்ஆடாள் நின்றாள்!
தன்னைப்பார்த்து ஒரு நங்கை நாஅசைக்கா துயர முகம் தாங்கி நிற்கிறாள் என்றால், வெளிப் போன தன் கணவனுக்கு தீங்கு நேர்ந்திருக்குமோ என்று பதறுகிறாள் கண்ணகி! அந்நங்கையாலும் உடன் சொல்லஇயலவில்லை!
"எல்லாவோ!
காதலன் காண்கிலேன் கலங்கிநோய் கைம்மிகும்...
நண்பகல் போதே நடுக்குநோய் கைம்மிகும்...
தஞ்சமோ தோழீ! தலைவன் வரக்காணேன்
வஞ்சமோ உண்டு மயங்கும் என்நெஞ்சன்றே
வஞ்சமோ உண்டு மயங்கும் என்நெஞ்சாயின்
எஞ்சலார் சொன்னது எவன்வாழி யோதோழீ!"
கண்ணகி:
தோழீ! கணவன் வரக் காண்கிலேன் நடுக்குற்றேன்; அயலார் கூறியது உளவோ? உரைப்பாய்!
தோழி:
'அரசியின் அழகு மிக்க சிலம்பொன்றைக் கவர்ந்த கள்வன் கோவலன் என்று.....'
கண்ணகி:
என்று......?
தோழி:
'ஊர்க்காவலர் கோவலனைக் கொலை செய்யக் கருதினர்.....!'
"அரைசுஉறை கோயில் அணிஆர் ஞெகிழம்
கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே-
கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே-
குரைகழல் மாக்கள் கொலை குறித்தனரே!
எனக்கேட்டு, அதிர்ந்தாள், அழுதாள், விழுந்தாள் கண்ணகி."
துயர்ச்செய்தியை முடிவாய்ச் சொல்லாமல் சற்று இழுத்தே சொன்னாள் தோழி! இருப்பினும் "சாகவில்லை" என்று, தோழி கூறவில்லை!
அவளின் முகக்குறிகள் கோவலன் மாண்டுவிட்டதை, கண்ணகிக்குப் புரியவைத்துவிட்டது! கண்கள் குளமானது!
கண்ணனைய கணவரே! நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் ? என்று குமுறினாள் கண்ணகி!
"பொங்கி எழுந்தாள், விழுந்தாள்..
செங்கண் சிவப்ப அழுதாள்;தன் கேள்வனை
'எங்கணாஅ' என்னா இனைந்துஏங்கி மாழ்குவாள்;
தான் தந்த சிலம்பைக் கொண்டு சென்ற கோவலன் கள்வனென்று கொலையுறுவதா? அதிர்கிறாள்!
அவளுக்கும் அந்தப் பொற்கொல்லனுக்கும் மட்டுமே தெரியும் அச்சிலம்பு அரசியுடையது அல்ல என்று!
அவளின் நெஞ்சத்து மன்றம் பாண்டியனைப் பழித்தது.
சமுதாயத்தில் ஏற்படக்கூடிய தவறுகளுக்கு நாட்டின் அரசன்தான் முதலில் பதில் சொல்லவேண்டும்!
பாண்டியன் செய்த தவறினால் பறிகொடுத்தேன் என்கணவனை; 'அறக்கடவுள் என்ற அறிவற்றோய்!' நீயும் இருக்கிறாயா? நான் அவலம் கொண்டு அழிந்துபோவேன் என்று நினைத்தாயா ? மாட்டேன்! என்று பாண்டியனையும் அறக்கடவுளையும் பழித்தாள்; சூளுரைத்தாள்!
காப்பியத்தில் தென்றலாய்க் குளிர்ந்தவள் ஈங்கு தீமை கண்டு தீயாய்க் கொதிக்கிறாள்!
முற்பிறப்பின் பாவம் என்று யார் வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும்!
முன்வினை என்று எண்ணி கண்ணீர் மட்டும் சிந்தி மாரடித்து ஒப்பாரி அழுது அடங்கிப் போகவில்லை!
கணவனே போய்விட்டான்; இனி என்ன என்று பின்னால் நின்றாள் இல்லை!
அறக்கடவுளையும் 'அறிவற்றோய்' என்று அதட்டி தீமையை எதிர்த்து சூளுரைத்ததால் அவள் பெண்குலத்தின் திலகம் ஆகிறாள்!
"மன்னவன் தவறுஇழைப்ப
அன்பனை இழந்தேன்யான்; அவலம் கொண்டு அழிவலோ?
மன்னவன் தவறுஇழைப்ப
அறன்என்னும் மடவோய்! யான் அவலம் கொண்டு அழிவலோ?
தென்னவன் தவறுஇழைப்ப
இம்மையும் இசைஒரீஇ இனைந்துஏங்கி அழிவலோ?"
போற்றா ஒழுக்கம் புரிந்தவன் கோவலன் ஆயினும் மாற்றா உள்ளம் படைத்த மனவுறுதி மங்கை நல்லாள் கண்ணகிக்கு!
காதலெனும் நட்பால் நடந்துவந்தவள்! அன்பால் அவனைக் கரைத்தவள்!
நெஞ்சத்தின் நேர்மை பொங்கி, வஞ்சத்தை வீழ்த்திட உறுதி பூண்டது!
அருகில் உள்ள அனைவரும் அவளின் நிலை கண்டு வருந்த, அறத்தினையும், பாண்டியனையும் பழித்த கண்ணகி, கதிரவனையும் கேள்வி கேட்டாள்!
"காய்கதிர்ச் செல்வனே! கள்வனோ என் கணவன்?"
எங்கிருந்து வந்ததென்று தெரியவில்லை! இவள் நிலை கண்டு வருந்தி, சுற்றி நின்ற மக்கட் கூட்டத்திலிருந்து இருக்கவேண்டும்! அந்தக்குரல் கூறிய செய்தி "உன் கணவன் கள்வனல்ல; கள்வன் என்று கூறிய இவ்வூர் நெருப்பிற்கு உணவாகும் என்று!"
அநியாயங்களைப் பார்த்து 'நாசமாகப் போகட்டும் இந்த ஊர்' என்று சொல்வதைப் போல!
ஒரு ஊரினையே அழிந்து போகச் சொல்லவேண்டுமானால் அந்த ஊரில் பேதமையும் குறைகளும் நிறைந்து இருக்கவேண்டும்!
"கள்வனோ அல்லன் கருங்கயல்கண் மாதராய்!
ஒள்எரி உண்ணும்இவ் வூர் என்றது ஒருகுரல்"
அதற்குமேலும் அங்கு நின்றாள் இல்லை! மற்றொரு சிலம்பைக் கையில் எடுத்தாள்; நடந்தாள் மதுரை மாநகருக்குள்;
அச்சிலம்பை அனைவரிடமும் காட்டி, நகருள் மகளிர் நோக்கி விளக்கம் சொல்லி நியாயம் கேட்டாள்;
'விலைமிக்க என் கால் சிலம்பை விலை கொடுக்காமல் கைப்பற்றிக் கொண்டு என் கணவனையும் கொலை செய்தான் பாண்டியன்' என்றாள்!
பாண்டியன் நீதி தவறினான் என்று மட்டும் கண்ணகி முதலில் பொங்கி எழவில்லை! பாண்டியன் தன் சிலம்பை திருடிவிட்டான் என்றும் அய்யப்படுகிறாள்! குற்றஞ்சொல்கிறாள்!!
ஏனெனில் அவளுக்கும் அந்தப் பொற்கொல்லனுக்கும் மட்டுமே தெரியும் அச்சிலம்பு அரசியுடையது அல்ல என்று!
"பட்டேன் படாத துயரம், படுகாலை
உற்றேன் உறாதது உறுவனே ஈதுஒன்று;
கள்வனோ அல்லன் கணவன் என் கால்சிலம்பு
கொள்ளும் விலைபொருட்டால் கொன்றாரே ஈதுஒன்று!..."
ஆணுக்காகட்டும் பெண்ணுக்காகட்டும் அன்பர் செத்து விடும்போது வாழ்க்கையும் முடிந்துதான் போகிறது;
நேர்மையான நெஞ்சம், மாறா உள்ளம் படைத்த உறுதியான நெஞ்சம்;
காதலன் பால் அன்பு மழை பொழிந்து அவன்மேல் பூங்கொடியாய்ப் படர்ந்தவள்;
மதுரையம்பதியென்ற அறியா நாட்டில்
அநீதியால் விழைந்த அன்பின் சாவால்,
துக்கம் பெருகி,
உள்ளம் உலர்ந்து,
வண்ணச் சீறடி வன்மை கொள்ள,
அரற்றிப் புலம்பிப் புயலாய் மாறி,
தெருவெங்கும் தன்கதை கூறி,
இனியாள் விழியோ இமையாதாகி,
இமையா விழிகள் ஆறாய் பெய்ய,
அறவோன் அவனையும் அதட்டி,
அரசன் தனையும் பழித்து,
செம்பொன் சிலம்பொன்றைக் கையில் ஏந்தி,
சூளுரைத்து,
போர் தொடுக்க, சீறிச் சினந்து நடந்து வரும்
பெண்ணரசி கண்ணகியைக்
கண்ட மதுரை மக்கள் மயங்கினர்;
உணர்ந்தனர் உள்ளத்தால் உயர்ந்தவள் என்று!
கணவன் இறந்தமைக்காகப் புலம்பியும், அவன் அநீதியால் இறந்தமைக்காகச் சீறிச் சினந்து வந்தவள் கண்டு தெய்வமோ என்று அஞ்சினர்!
பெருமை மிக்க பாண்டியநாடு நீதி தவறிவிட்டதோ? இது ஏனோ என்று வருந்தினர்.
சிலர் கோவலன் இறந்து கிடந்த இடத்தைக் காட்டினர் கண்ணகிக்கு!;
"களையாத துன்பம் காரிகைக்குக் காட்டி
வளையாத செங்கோல் வளைந்தது; இது என் கொல்?
..தென்னவன் கொற்றம் சிதைந்தது; இது என்கொல்?
..தண்குடை வெம்மை விளைத்தது; இது என்கொல்?
செம்பொன் சிலம்புஒன்று கைஏந்தி நம்பொருட்டால்
வம்பப் பெருந்தெய்வம் வந்தது; இது என்கொல்?
ஐஅரி உண்கண் அழுதுஏங்கி அரற்றுவாள்
தெய்வம் உற்றாள் போலும் தகையள்; இது என்கொல்?
என்பன சொல்லி இனைந்துஏங்கி அரற்றவும்
மன்பழி தூற்றும் குடியதே மாமதுரைக்
கம்பலை மாக்கள் கணவனைத் தாம்காட்ட........"
அன்புடன்
நாக.இளங்கோவன்
Sunday, February 20, 2000
சிலம்பு மடல் 24
சிலம்பு மடல் - 24 கோவலனைக் கொன்றது யாது?
மதுரை:
கொலைக்களக் காதை:
வெள்ளை மலரொன்றைக் கிள்ளிச் சேற்றில் போட்டு, சற்றே மிதித்து காலெடுத்ததும் அம்மலரின் இதழ்கள் ஒன்றிரண்டு, நைந்து போயினும், மெல்ல அசையும். அப்படியே சில சிறு அசைவுகளோடு அமைதியானான் கோவலன்! இல்லை இல்லை!! அமைதியானது கோவலனின் உடலும் தலையும்.
உயிர் இருக்கும் வரை உடலும் மனமும் போட்டி போட்டு அலையும். உயிர் பறந்தபின்னே இரண்டும் ஒரே நேரத்தில் ஓய்ந்து விடுகின்றன!
"சினைஅலர் வேம்பன் தேரான் ஆகி..."
பாண்டியனைத் தீராப் பழிக்கு ஆளாக்கி விட்டது கோவலனின் உயிரா ?
பாண்டியன் அரச கடமையைச் சரியாய் செய்தான்; காவற்துறைக்கு கட்டளையிட்டான்.
காவற்துறையும் கடமையைச் செய்தனர்: ஆயினும் அவர்களுள் ஒரு களிமகன்.
"கற்கக் கசடற!"
"நிற்க அதற்குத் தக!"
கல்லாமை அல்லது கற்றதன் பின் நில்லாமை என்ற இரண்டில் ஏதோ ஒன்று பிசகினாலும் விளைவது தீங்கே!
அதைத்தான் "கல்லாக் களிமகன்" என்ற இரண்டே சீர்களில் ஆசிரியர் விளம்பியுள்ளார்!
அவன் கல்லாதது யாது? அரச காவலனாயிருப்பவன் சிறிது கல்வி கற்றேயிருப்பான்.
ஆனால் அந்தக் கல்வி மந்திரத்திடம் மண்டியிட்டுவிட்டது!
அரசனும் கல்வி கேள்விகளில் சிறந்தவனே! அக்கல்வியும் கேள்வியும் மந்திரத்து முன்னே கேள்விக் குறியாகிப் போனது!
அரசனாலும் மந்திரத்தை ஆழ்ந்து பார்க்க முடியவில்லை! அவன் ஆளாலும் மந்திரத்தை ஆழ்ந்து பார்க்க முடியவில்லை!
அரசன் முதல் கடைநிலை ஊழியன் வரை மூடத்தனம் என்ற முக்காட்டுக்குள் பதிந்து போனவர்கள்!
சில ஆயிரம் அல்லது பல நூறாண்டுகட்கு முன்னர் மட்டும்தான் என்றில்லை!
இன்றும்தான்!
இலிங்க, விபூதி வித்தை மடத்தில் சிலர் கொல்லப்படுகின்றனர்; யாரும் காரணம் அறியார்! மந்திரத்துக்கு முன்னே காவற்துறை கைகட்டி வாய்பொத்தி நிற்கிறது.
நூறு கோடி மாந்தருக்கு முதன்மையானவர்; அவர் கல்வி கேள்விகளில் சிறந்தவர்!
ஆயினும் அந்த மந்திர தந்திர வித்தைகளில் மயங்கி, ஆங்கு சென்று மந்திரவாதி முன் மண்டியிட்டு நிற்பதை நாம் வாழும் இந்தக் காலத்திலும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்!
பலகோடி மக்களுக்கு முதல்வர்! ஆட்சிப் போட்டியில் வெற்றிபெற வேள்வி நடத்துகிறார்.
ஊர் ஊராய்ப் போய் யாகவேள்வி செய்கிறார். வெற்றி பெற்றால் மீண்டும் வேள்வி! தோல்வி அடைந்தால் அதற்கும் வேள்வி!
மந்திரத்துக் கென்றே ஒரு மொழி; அம்மொழியின் சிறப்பே அதன் ஒலியாம்! சொல்கிறார் மனிதர், சோவென்று மழை பொழிந்தாற்போல்! மொட்டைப்பேச்சுக்கு மண்டையாட்டவே பெருங்கூட்டம்!
வேள்விக்கு வெண்சாமரம்; கேள்விக்கு கொடுவாள்!
குளத்தில் குளித்தெழுந்தால் ஒருவருக்கு புண்ணியமாம்! குளித்தெழுந்ததும், எழாதவர் எத்தனை பேர் என்ற கணக்கெடுப்பு!
மந்திரம் மந்திரம் மந்திரம்; சமுதாயம் சீரழிய தந்திரம்!
இன்றல்ல நேற்றல்ல! சில ஆயிரம் ஆண்டுகளாக!
கல்வி என்பது அறியாமை என்ற இருளகற்றும் அறம்! அக்கல்வியைக் கற்றாலும், அதற்தகு இந்த தமிழ்க் குலம் நிற்றல் இல்லை பன்னூறாண்டுகளாக.
ஆதலின்தான் அன்றும் இன்றும் சமுதாயத்திற்கு கற்ற கல்வி பயன்படாமல் செப்படி வித்தைகளை நம்பி சீரழிந்து வருகிறது. செப்படி வித்தைகளே ஆன்மீகமாய் காட்டப்பட்டிருக்கிறது.
சிலையொன்று பால் குடிக்கிறது என்று செப்படி வித்தைக்காரன் ஒருவன் சொல்ல, இதையும் மதவியாபாரிகள் ஏற்றம் செய்ய இழிந்த மக்கள் கூட்டம், அலை அலையாய் சாரி சாரியாய், இரவு பகலாய், ஒரு நாடல்ல, உலக வாழ் அத்தனை நாடுகளிலும் மெத்தப் படித்தவர்கள் அனைவரும் அச்சிலைக்குப் பால் ஊட்டினார்கள்.
பால் ஊட்டி விட்டு ஒவ்வொருவரும் கோழி திருடியவர்போல் "சிலை பால் குடித்ததா இல்லையா" என்பதைத் தெளிவாய் சொல்ல இயலாமல் தலை சொறிந்த நின்ற காட்சி மிகப் பரிதாபம்!
அறிவு நிரம்ப பெற்றவர்கள் இந்திய விஞ்ஞானிகள்! ஆராய்ந்து சொன்னார்கள் அறிவியல் காரணங்களை. ஆனால் மத விவகாரங்களில் விஞ்ஞானிகள் தலையிடக் கூடாது என்று கொதித்து எழுந்தது செப்படிக் கூட்டம்! தேம்பி நின்றது விஞ்ஞானம்! இக் கூட்டத்திற்கு முகப்பாய் நின்றவர் தேர்தல் புரட்சி செய்த மெத்தப் படித்த அறிவாளி!
எங்கே போகிறது இந்த சமுதாயம்? கல்வியின் பயனை செப்படி வித்தைகள் மறைக்கின்றன, கால காலமாய்! இதை ஆராய்ந்து பார் என்று சொன்னவர்கள் பழிக்கப் படுகிறார்கள் நாட்டில்!
கல்வி கற்றும் பயனில்லா இந்த நிலைமையைத்தான் தெளிந்து நாலடிகளார் சொல்கிறார்:
"பொன் கலத்திலே அமுதை வைத்தாலும், நாய் அதை உண்டு விட்டு தெருவோர எச்சில் இலையை நக்கிப்பார்த்து மகிழ்வுறும்" அப்படிப்பட்டதுதான் இந்த கீழான மனிதர் பெறும் கல்வியும். இக்கல்வி கற்றோரால் சமுதாயத்துக்கு விளையும் பயனும் கீழானதே!
"பொற்கலத்து ஊட்டிப் புறந்தரினும் நாய்பிறர்
எச்சிற்கு இமையாது பார்த்திருக்கும்-அச்சீர்
பெருமை யுடைத்தாக் கொளினுங்கீழ் செய்யும்
கருமங்கள் வேறு படும்."
-- நாலடியார்
கல்வி என்ற பொன்கல அமுதை வயிறு நிரம்ப உண்டு விட்டு மெல்ல நழுவிப் போய், தெருவில் கிடக்கும் நரகல்களான மந்திரம் மாயம் செப்படி வித்தைகளில் மனம் தோய்ந்து நாலடி சொன்ன நாய் போல வாழ்வதே இந்த சமுதாயத்தின் கற்ற மிகப் பெரும்பாலானோர் நிலை! இவர்களால் விளையும் தீங்குதான் அன்று கோவலனைக் கொலை செய்தது!
வள்ளுவப் பெருந்தகையும் அதைத்தான், 'ஒருவன் நுண்ணிய நூல்கள் எத்தனை கற்றாலும் அவனிடம் வழிவழி பிறப்பொடு வந்த உண்மை அறிவே மேம்பட்டு நிற்கும்' என்கிறார். இச்சமுதாயம் ஆழக்கற்றது அறிவுக்கு ஒவ்வாததைத்தான்!
அதனால்தான், கற்ற சமுதாயமும் மந்திரத்தில் தொங்கிக் கொண்டு நிற்கிறது.
"நுண்ணிய நூற்பல கற்பினும், மற்றுந்தன்
உண்மை அறிவே மிகும்"
-- குறள்
அதுவே இன்றும், வேள்வி, ஊழல், காட்டுமிராண்டித்தனம், அசுத்தம், கொளுத்தல்கள், சண்டைகள் அனைவற்றிலும் பொன்னான காலங்கள் வீணாகப் போவதற்குக் காரணம்!
சிலம்பிலே பாண்டியன் உள்ளிட்ட சமுதாயத்தை எந்த மந்திர மாயங்கள் மயக்கி வைத்திருந்தனவோ, அதே நிலைதான் இன்றைய சமுதாயத்துள்ளும்!
கடுகளவும் மாற்றமில்லை!
தமிழகத்திலே, யாரும் யாரையும் கொளுத்தச் சொல்லவில்லை! சொல்லியிருக்க மாட்டார்கள்! ஆனால் கொளுத்தப்பட்டனர் சில கல்லூரிப் பெண்மணிகள்!
அன்றந்தக் காவலக் கல்லாக் களிமகன், பாண்டியனுக்கு சினம் தீர்த்து நற்பெயர் பெற கோவலன் குறுக்கே கொடுவாள் எறிந்தான்! ஆராயா அறிவிலி!
இன்றும் அரசாண்டு அதை இழந்தவர்க்கு ஆபத்தோ என்று அஞ்சி அவர்தம் நற்பெயர் பெற கொளுத்திவிட்டனர் சிலரை!
அதே கோழையிலக்கணம்!
அச்சம், கொந்தளிக்கும் குறு மதி! சுயநலச் சூத்திரம்!
இந்த நிலையிலேயே பல நூறாண்டுகளை கழித்துவிட்டு புலம்பி நிற்கும் சமுதாயம் தமிழ்ச்சமுதாயம்!
சில நூறே ஆண்டுகள்தான் நிலம் கண்டுபிடிக்கப் பட்டு! ஆயினும் அடிப்படை மனித வாழ்வு நிரம்பி நிற்கும் அமெரிக்கப் பெரு நாடு!
சில பத்தே ஆண்டுமுன்தான்! தீக்குண்டால் சீரழிந்தது சிறுநாடு யப்பான்! ஆனால் இன்று ?
ஆனால் பல நூறு/ஆயிரம் ஆண்டுகளைப் பார்த்துவிட்டும் பாழ்பட்டு கிடப்பது இத்தமிழ்நாடு!
மந்திரமருந்து, செப்படி வித்தை, மத/சாதி மாயங்கள் பால் பற்றும் பயமும்; அதைத் தாண்ட நெஞ்சுறுதி இல்லா கோழை நாடாக, தமிழ்த்திருநாடு!
பிறந்த குழந்தை இறந்து பிறந்தால் அதன் நெஞ்சில் வாளால் கீறிவிட்டு புதைத்த வீர சமுதாயம், மூடத்தனத்தின் அடிநக்கி வாழ்வது இழுக்கல்லவா?
சுத்த கையாலாகாத கோழைச் சமுதாயமாய் ஆகிப்போனது தமிழ்ச்சமுதாயம்!
இதைத்தான் வெகு தெளிவாக சிலம்பாசிரியர் இளங்கோவடிகள் கூறுகிறார்!
அவர் வெறுமே, "பாண்டியன் தேரான் ஆகி" என்று சொல்லி விடவில்லை!
"வினைவிளை காலம் ஆதலின் யாவதும்
சினைஅலர் வேம்பன் தேரான் ஆகி..."
இவ்விடத்து இதன் உட்கருத்து "ஊழ் வினை" அதாவது முற்பிறப்பில் செய்த பாவம் என்று கொள்வது பொருந்தாது!
இப்பிறப்பின் அவனின் பாவம் என்றால் கோவலன் கண்ணகியை விட்டு பிரிந்து வேறொரு பெண்ணை நாடியதுதான்!
வேறொரு பெண்ணையும் நாடுவோர்க் கெல்லாம் கொலைபடுதல்தான் வினை விளைவிக்கும் பயன் என்றால் பெரும்பாலான ஆடவர் அதற்காகவே வாழ்விழந்திருக்கவேண்டும்! பரத்தமை இலக்கணமும் வாழ்ந்திருக்காது!
ஆனால் வள்ளுவ வழி ஊழைப் பார்த்தால் இளங்கோவடிகள் பாண்டியனைத் தேரான் என்றது தெளிவாகும்!
ஊழ் என்றால் உலகியற்கை! அதற்கொரு அதிகாரம் குறளிலே!
ஒன்றை இழக்கச் செய்தற்குரிய உலக இயற்கை உண்டாகும்போது அது அறியாமையில் ஆழ்த்தும்! பெருகச் செய்யும் உலக இயற்கை உண்டாகும் போது அறிவைப் அகலமாக்கும்!
"பேதைப் படுத்தும் இழவூழ்; அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை"
--குறள்
இழக்கச் செய்யும் ஊழ் (உலக இயற்கை) சமுதாயத்தில் பெருகியதால் அறியாமை பெருகியது! அதாவது மந்திரம் மற்றும் மூடநம்பிக்கைகள் பெருகின. அதனால் கோவலன் கொலையுண்டான்!
ஆகவே, பாண்டியன் நீதி தவறவில்லை! ஆனால் நீதி தேவன் மயக்கமுற்றான் மந்திரம் என்ற வார்த்தௌ முன்பு! அந்த மயக்கம் அவனுக்கு மட்டுமல்ல!
அவன் காலத்து அத்தனை நிலைகளிலும் மந்திர மாய மயக்கம்! இந்நாளைப் போலவே!!
அன்புடன்
நாக.இளங்கோவன்
20-பிப்ரவரி-2000
மதுரை:
கொலைக்களக் காதை:
வெள்ளை மலரொன்றைக் கிள்ளிச் சேற்றில் போட்டு, சற்றே மிதித்து காலெடுத்ததும் அம்மலரின் இதழ்கள் ஒன்றிரண்டு, நைந்து போயினும், மெல்ல அசையும். அப்படியே சில சிறு அசைவுகளோடு அமைதியானான் கோவலன்! இல்லை இல்லை!! அமைதியானது கோவலனின் உடலும் தலையும்.
உயிர் இருக்கும் வரை உடலும் மனமும் போட்டி போட்டு அலையும். உயிர் பறந்தபின்னே இரண்டும் ஒரே நேரத்தில் ஓய்ந்து விடுகின்றன!
"சினைஅலர் வேம்பன் தேரான் ஆகி..."
பாண்டியனைத் தீராப் பழிக்கு ஆளாக்கி விட்டது கோவலனின் உயிரா ?
பாண்டியன் அரச கடமையைச் சரியாய் செய்தான்; காவற்துறைக்கு கட்டளையிட்டான்.
காவற்துறையும் கடமையைச் செய்தனர்: ஆயினும் அவர்களுள் ஒரு களிமகன்.
"கற்கக் கசடற!"
"நிற்க அதற்குத் தக!"
கல்லாமை அல்லது கற்றதன் பின் நில்லாமை என்ற இரண்டில் ஏதோ ஒன்று பிசகினாலும் விளைவது தீங்கே!
அதைத்தான் "கல்லாக் களிமகன்" என்ற இரண்டே சீர்களில் ஆசிரியர் விளம்பியுள்ளார்!
அவன் கல்லாதது யாது? அரச காவலனாயிருப்பவன் சிறிது கல்வி கற்றேயிருப்பான்.
ஆனால் அந்தக் கல்வி மந்திரத்திடம் மண்டியிட்டுவிட்டது!
அரசனும் கல்வி கேள்விகளில் சிறந்தவனே! அக்கல்வியும் கேள்வியும் மந்திரத்து முன்னே கேள்விக் குறியாகிப் போனது!
அரசனாலும் மந்திரத்தை ஆழ்ந்து பார்க்க முடியவில்லை! அவன் ஆளாலும் மந்திரத்தை ஆழ்ந்து பார்க்க முடியவில்லை!
அரசன் முதல் கடைநிலை ஊழியன் வரை மூடத்தனம் என்ற முக்காட்டுக்குள் பதிந்து போனவர்கள்!
சில ஆயிரம் அல்லது பல நூறாண்டுகட்கு முன்னர் மட்டும்தான் என்றில்லை!
இன்றும்தான்!
இலிங்க, விபூதி வித்தை மடத்தில் சிலர் கொல்லப்படுகின்றனர்; யாரும் காரணம் அறியார்! மந்திரத்துக்கு முன்னே காவற்துறை கைகட்டி வாய்பொத்தி நிற்கிறது.
நூறு கோடி மாந்தருக்கு முதன்மையானவர்; அவர் கல்வி கேள்விகளில் சிறந்தவர்!
ஆயினும் அந்த மந்திர தந்திர வித்தைகளில் மயங்கி, ஆங்கு சென்று மந்திரவாதி முன் மண்டியிட்டு நிற்பதை நாம் வாழும் இந்தக் காலத்திலும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்!
பலகோடி மக்களுக்கு முதல்வர்! ஆட்சிப் போட்டியில் வெற்றிபெற வேள்வி நடத்துகிறார்.
ஊர் ஊராய்ப் போய் யாகவேள்வி செய்கிறார். வெற்றி பெற்றால் மீண்டும் வேள்வி! தோல்வி அடைந்தால் அதற்கும் வேள்வி!
மந்திரத்துக் கென்றே ஒரு மொழி; அம்மொழியின் சிறப்பே அதன் ஒலியாம்! சொல்கிறார் மனிதர், சோவென்று மழை பொழிந்தாற்போல்! மொட்டைப்பேச்சுக்கு மண்டையாட்டவே பெருங்கூட்டம்!
வேள்விக்கு வெண்சாமரம்; கேள்விக்கு கொடுவாள்!
குளத்தில் குளித்தெழுந்தால் ஒருவருக்கு புண்ணியமாம்! குளித்தெழுந்ததும், எழாதவர் எத்தனை பேர் என்ற கணக்கெடுப்பு!
மந்திரம் மந்திரம் மந்திரம்; சமுதாயம் சீரழிய தந்திரம்!
இன்றல்ல நேற்றல்ல! சில ஆயிரம் ஆண்டுகளாக!
கல்வி என்பது அறியாமை என்ற இருளகற்றும் அறம்! அக்கல்வியைக் கற்றாலும், அதற்தகு இந்த தமிழ்க் குலம் நிற்றல் இல்லை பன்னூறாண்டுகளாக.
ஆதலின்தான் அன்றும் இன்றும் சமுதாயத்திற்கு கற்ற கல்வி பயன்படாமல் செப்படி வித்தைகளை நம்பி சீரழிந்து வருகிறது. செப்படி வித்தைகளே ஆன்மீகமாய் காட்டப்பட்டிருக்கிறது.
சிலையொன்று பால் குடிக்கிறது என்று செப்படி வித்தைக்காரன் ஒருவன் சொல்ல, இதையும் மதவியாபாரிகள் ஏற்றம் செய்ய இழிந்த மக்கள் கூட்டம், அலை அலையாய் சாரி சாரியாய், இரவு பகலாய், ஒரு நாடல்ல, உலக வாழ் அத்தனை நாடுகளிலும் மெத்தப் படித்தவர்கள் அனைவரும் அச்சிலைக்குப் பால் ஊட்டினார்கள்.
பால் ஊட்டி விட்டு ஒவ்வொருவரும் கோழி திருடியவர்போல் "சிலை பால் குடித்ததா இல்லையா" என்பதைத் தெளிவாய் சொல்ல இயலாமல் தலை சொறிந்த நின்ற காட்சி மிகப் பரிதாபம்!
அறிவு நிரம்ப பெற்றவர்கள் இந்திய விஞ்ஞானிகள்! ஆராய்ந்து சொன்னார்கள் அறிவியல் காரணங்களை. ஆனால் மத விவகாரங்களில் விஞ்ஞானிகள் தலையிடக் கூடாது என்று கொதித்து எழுந்தது செப்படிக் கூட்டம்! தேம்பி நின்றது விஞ்ஞானம்! இக் கூட்டத்திற்கு முகப்பாய் நின்றவர் தேர்தல் புரட்சி செய்த மெத்தப் படித்த அறிவாளி!
எங்கே போகிறது இந்த சமுதாயம்? கல்வியின் பயனை செப்படி வித்தைகள் மறைக்கின்றன, கால காலமாய்! இதை ஆராய்ந்து பார் என்று சொன்னவர்கள் பழிக்கப் படுகிறார்கள் நாட்டில்!
கல்வி கற்றும் பயனில்லா இந்த நிலைமையைத்தான் தெளிந்து நாலடிகளார் சொல்கிறார்:
"பொன் கலத்திலே அமுதை வைத்தாலும், நாய் அதை உண்டு விட்டு தெருவோர எச்சில் இலையை நக்கிப்பார்த்து மகிழ்வுறும்" அப்படிப்பட்டதுதான் இந்த கீழான மனிதர் பெறும் கல்வியும். இக்கல்வி கற்றோரால் சமுதாயத்துக்கு விளையும் பயனும் கீழானதே!
"பொற்கலத்து ஊட்டிப் புறந்தரினும் நாய்பிறர்
எச்சிற்கு இமையாது பார்த்திருக்கும்-அச்சீர்
பெருமை யுடைத்தாக் கொளினுங்கீழ் செய்யும்
கருமங்கள் வேறு படும்."
-- நாலடியார்
கல்வி என்ற பொன்கல அமுதை வயிறு நிரம்ப உண்டு விட்டு மெல்ல நழுவிப் போய், தெருவில் கிடக்கும் நரகல்களான மந்திரம் மாயம் செப்படி வித்தைகளில் மனம் தோய்ந்து நாலடி சொன்ன நாய் போல வாழ்வதே இந்த சமுதாயத்தின் கற்ற மிகப் பெரும்பாலானோர் நிலை! இவர்களால் விளையும் தீங்குதான் அன்று கோவலனைக் கொலை செய்தது!
வள்ளுவப் பெருந்தகையும் அதைத்தான், 'ஒருவன் நுண்ணிய நூல்கள் எத்தனை கற்றாலும் அவனிடம் வழிவழி பிறப்பொடு வந்த உண்மை அறிவே மேம்பட்டு நிற்கும்' என்கிறார். இச்சமுதாயம் ஆழக்கற்றது அறிவுக்கு ஒவ்வாததைத்தான்!
அதனால்தான், கற்ற சமுதாயமும் மந்திரத்தில் தொங்கிக் கொண்டு நிற்கிறது.
"நுண்ணிய நூற்பல கற்பினும், மற்றுந்தன்
உண்மை அறிவே மிகும்"
-- குறள்
அதுவே இன்றும், வேள்வி, ஊழல், காட்டுமிராண்டித்தனம், அசுத்தம், கொளுத்தல்கள், சண்டைகள் அனைவற்றிலும் பொன்னான காலங்கள் வீணாகப் போவதற்குக் காரணம்!
சிலம்பிலே பாண்டியன் உள்ளிட்ட சமுதாயத்தை எந்த மந்திர மாயங்கள் மயக்கி வைத்திருந்தனவோ, அதே நிலைதான் இன்றைய சமுதாயத்துள்ளும்!
கடுகளவும் மாற்றமில்லை!
தமிழகத்திலே, யாரும் யாரையும் கொளுத்தச் சொல்லவில்லை! சொல்லியிருக்க மாட்டார்கள்! ஆனால் கொளுத்தப்பட்டனர் சில கல்லூரிப் பெண்மணிகள்!
அன்றந்தக் காவலக் கல்லாக் களிமகன், பாண்டியனுக்கு சினம் தீர்த்து நற்பெயர் பெற கோவலன் குறுக்கே கொடுவாள் எறிந்தான்! ஆராயா அறிவிலி!
இன்றும் அரசாண்டு அதை இழந்தவர்க்கு ஆபத்தோ என்று அஞ்சி அவர்தம் நற்பெயர் பெற கொளுத்திவிட்டனர் சிலரை!
அதே கோழையிலக்கணம்!
அச்சம், கொந்தளிக்கும் குறு மதி! சுயநலச் சூத்திரம்!
இந்த நிலையிலேயே பல நூறாண்டுகளை கழித்துவிட்டு புலம்பி நிற்கும் சமுதாயம் தமிழ்ச்சமுதாயம்!
சில நூறே ஆண்டுகள்தான் நிலம் கண்டுபிடிக்கப் பட்டு! ஆயினும் அடிப்படை மனித வாழ்வு நிரம்பி நிற்கும் அமெரிக்கப் பெரு நாடு!
சில பத்தே ஆண்டுமுன்தான்! தீக்குண்டால் சீரழிந்தது சிறுநாடு யப்பான்! ஆனால் இன்று ?
ஆனால் பல நூறு/ஆயிரம் ஆண்டுகளைப் பார்த்துவிட்டும் பாழ்பட்டு கிடப்பது இத்தமிழ்நாடு!
மந்திரமருந்து, செப்படி வித்தை, மத/சாதி மாயங்கள் பால் பற்றும் பயமும்; அதைத் தாண்ட நெஞ்சுறுதி இல்லா கோழை நாடாக, தமிழ்த்திருநாடு!
பிறந்த குழந்தை இறந்து பிறந்தால் அதன் நெஞ்சில் வாளால் கீறிவிட்டு புதைத்த வீர சமுதாயம், மூடத்தனத்தின் அடிநக்கி வாழ்வது இழுக்கல்லவா?
சுத்த கையாலாகாத கோழைச் சமுதாயமாய் ஆகிப்போனது தமிழ்ச்சமுதாயம்!
இதைத்தான் வெகு தெளிவாக சிலம்பாசிரியர் இளங்கோவடிகள் கூறுகிறார்!
அவர் வெறுமே, "பாண்டியன் தேரான் ஆகி" என்று சொல்லி விடவில்லை!
"வினைவிளை காலம் ஆதலின் யாவதும்
சினைஅலர் வேம்பன் தேரான் ஆகி..."
இவ்விடத்து இதன் உட்கருத்து "ஊழ் வினை" அதாவது முற்பிறப்பில் செய்த பாவம் என்று கொள்வது பொருந்தாது!
இப்பிறப்பின் அவனின் பாவம் என்றால் கோவலன் கண்ணகியை விட்டு பிரிந்து வேறொரு பெண்ணை நாடியதுதான்!
வேறொரு பெண்ணையும் நாடுவோர்க் கெல்லாம் கொலைபடுதல்தான் வினை விளைவிக்கும் பயன் என்றால் பெரும்பாலான ஆடவர் அதற்காகவே வாழ்விழந்திருக்கவேண்டும்! பரத்தமை இலக்கணமும் வாழ்ந்திருக்காது!
ஆனால் வள்ளுவ வழி ஊழைப் பார்த்தால் இளங்கோவடிகள் பாண்டியனைத் தேரான் என்றது தெளிவாகும்!
ஊழ் என்றால் உலகியற்கை! அதற்கொரு அதிகாரம் குறளிலே!
ஒன்றை இழக்கச் செய்தற்குரிய உலக இயற்கை உண்டாகும்போது அது அறியாமையில் ஆழ்த்தும்! பெருகச் செய்யும் உலக இயற்கை உண்டாகும் போது அறிவைப் அகலமாக்கும்!
"பேதைப் படுத்தும் இழவூழ்; அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை"
--குறள்
இழக்கச் செய்யும் ஊழ் (உலக இயற்கை) சமுதாயத்தில் பெருகியதால் அறியாமை பெருகியது! அதாவது மந்திரம் மற்றும் மூடநம்பிக்கைகள் பெருகின. அதனால் கோவலன் கொலையுண்டான்!
ஆகவே, பாண்டியன் நீதி தவறவில்லை! ஆனால் நீதி தேவன் மயக்கமுற்றான் மந்திரம் என்ற வார்த்தௌ முன்பு! அந்த மயக்கம் அவனுக்கு மட்டுமல்ல!
அவன் காலத்து அத்தனை நிலைகளிலும் மந்திர மாய மயக்கம்! இந்நாளைப் போலவே!!
அன்புடன்
நாக.இளங்கோவன்
20-பிப்ரவரி-2000
Sunday, February 13, 2000
சிலம்பு மடல் 23
சிலம்பு மடல் - 23 கொல்லன் சதியும்! பாண்டியன் மதியும்!
மதுரை:
கொலைக்களக் காதை:
காசு வரும் கண்ணகியின் காற்சிலம்பால் என்று சாவு வரும் திசை நோக்கி, சிந்தித்துக் காத்திருந்தான் கோவலன்;
அந்தப்புரம்:
அழகுப் பெண்டிர் அணிவகுக்கும்
அரசனின் ஆசைக் குடில்!
வகைவகையாய்ப் பெண்கள்!
அரசனின் ஆசையை அவ்வப்போது தீர்த்துவிட
எப்போதும் காத்திருக்கும் பெண்மந்தை!
அரச மண்டபம்:
அந்த ஆசையை அரசனுக்கு உருவாக்கும்
ஆடல்மேடை! அமைச்சரவையும் அங்கே!!
அந்த மேடையிலே பாண்டியன் நெடுஞ்செழியன்!
ஆடல் அரசிகளின் முட்டியவைகளின் வெட்டுதல்களைக் களித்துக் கொண்டே முட்டாதவைகளில் முயங்க மோகித் திருந்தானோ? என்று முகங்கோணுகிறாள் கோப்பெருந்தேவி!
பெண் பல ஆடவரை நினைத்தால் அருவருக்கும் சமுதாயத்தில், ஆடவன் எத்தனைப் பெண்டிருடன் சுற்றி விட்டு வந்தாலும் அவனைச் சிறு முனகலுடன் ஏற்றுக் கொண்டு விட்டு, கற்பென்ற காரணம் சொல்லும், முதுகெலும்பில்லா மூடப் பெண்களில் கோப்பெருந்தேவியும் ஒருத்தி!
ஒருவேளை பாண்டியன் மோகித்திருந்தானானால் அவனை அருவருத்து விட்டா இருக்கப் போகிறாள் ?
ஆடவனின் அளவுக்கும் அதிகமான ஆசையை அனுமதித்து விட்ட சமுதாயத்தில் கண்ணகி போன்ற பலருள் அவளும் ஒருத்திதான்!
தொலைக்காட்சியோ திரைப்படமோ இல்லாத காலத்தில் நேரடியாகவே கலைக்காட்சிகளைப் பார்க்க வேண்டிய நிலை;
ஆடிய பெண்மணிகளின் அழகின் மேல் தேவி பொறாமைப் பட்டிருக்கவேண்டும்! தலை நோவென்று உள்கோபம் மறைத்து பாதியில் எழுந்து சென்று விட்டாள்.
பொய்க்கோபம் காட்டியிருந்தாள்!
பாண்டியன் ஏதும் தவறு செய்திருக்க மாட்டான் என்றுதான் கருதமுடிகிறது. அரசியின் மனம் வருந்துதலை அறிந்த உடனே அச்சமடைந்த பாண்டியன், தேவியோடு அன்பால் மலர்ந்த காதல் வாழ்க்கை வாழ்ந்திருக்கவேண்டும்!
தேவியின் மனமுணர்ந்து சிறு அச்சமும் வருத்தமும் அவனுக்கேற்பட சற்றே குழப்பத்துடன் அவளிடம் தேடி நடக்கிறான்; அமைச்சரவை நீங்கி!
சிறு குழப்பம்தான்; தேவியிடம் அன்பைச் சொல்ல விரைகிறான்!
மன்னனின் விரைந்த கால்களின் வேகம் குறைத்தது கொல்லக்கயவன் வீழ்ந்து வணங்கி அவனைப் போற்றியது!
"ஊடல் உள்ளம் உள்கரந்து ஒளித்துத்
தலைநோய் வருத்தம் தன்மேல் இட்டுக்
குலமுதல் தேவி கூடாது ஏக,
சிந்துஅரி நெடுங்கண் சிலதியர் தம்மொடு
கோப்பெருந் தேவி கோயில் நோக்கிக்
காப்புஉடைவாயில் கடைகாண் அகவையின்
வீழ்ந்தனன் கிடந்து தாழ்ந்துபல ஏத்தி!......."
மன்னா!
"அரசியாரின் சிலம்பொன்றைத் திருடியவன் யார் என்று கண்டுபிடித்தேன்!
கன்னக்கோலில்லை; குத்தும் கோலுமில்லை! மந்திரம் போட்டு காவலரை மயக்கி அரசியாரின் காற்சிலம்பை கவர்ந்தான் அக்கள்வன்!
இப்பொழுது அவனை என் இல்லத்தில் இருத்தியிருக்கிறேன்" என்றான் அந்தக் கொல்லக்கயவன்.
முதல் தகவல் அறிக்கையை அரசனிடம் சமர்ப்பிக்கிறான் கொல்லன்.
"கன்னகம் இன்றியும் கவைக்கோல் இன்றியும்
துன்னிய மந்திரம் துணைஎனக் கொண்டு
வாயி லாளரை மயக்குதுயில் உறுத்துக்
கோயில் சிலம்பு கொண்ட கள்வன்
கல்என் பேர்ஊர்க் காவலர்க் கரந்துஎன்
சில்லைக் குடில் அகத்துஇருந் தோன்என...."
என்னடா உலகம் இது ?
மந்திரம் ஒன்றால் ,அரண்மனை வாயில்தோறும், வாசல்தோறும், வீதிதோறும் நிற்கும் காவலரை மயக்கி, அரசமாதேவியைச் சுற்றி இருக்கும் பெண்டிர் கூட்டத்தையும் மயக்கி, அரசியையும் மயக்கி, ஆங்கொரு சிலம்பைத் திருட முடியுமா? என்று
அரசன் நினைத்தானில்லை!
"மந்திரத்தால் இவ்வளவு முடியும் என்றால், அரசன் எதற்கு?
மந்திரவாதி போதுமே!
நாட்டைக் காக்க காவல் எதற்கு? எலுமிச்சையைக் கட்டி மந்திரம் போட்டு ஊரெல்லையில் வைத்துவிட்டால் பகைவர் வராமல் போய்விடுவரே!
நாடுபிடிக்க படைகள் எதற்கு? நான்கு மந்திரவாதிகள் போதுமே!"
அரசன் இதையெல்லாம் சிந்தித்தான் இல்லை!
கோழைகளின் பிழைப்பு மந்திரம்! அதையும் உணர்ந்தான் இல்லை.
ஆனால், பாண்டியன் கடமையிலிருந்து சிறிதும் தவறினான் இல்லை! இல்லவே இல்லை!!
மன்னவன் இல்லத் திருட்டாயினும், குடிகளிடம் களவு நடந்தாலும்
அதை ஆராய அதற்கென்ற காவலர் துறை இருக்கிறது!
இன்று பிரதமர் அல்லது அமைச்சர்களின் இல்லத்தில் களவு போனால், அதையும் காவல்துறையும் நீதித்துறையும்தான் ஆராய்கின்றன! ஆராயவேண்டும்; ஆராயமுடியும்.
பிரதமரோ அமைச்சரோ அந்த முதல் தகவல் அறிக்கையின் பால் ஆராயச் சென்றால் அது நகைப்புக்குரியது! அவ்வாறு அவர்கள் செய்தால் எத்தனைக் குற்றங்களுக்கு முறையான தீர்ப்பளிக்க முடியும்?
இதனை இதனால் இவன் செய்யும் என்றாய்ந்து அதனை அவன் கண் விடுதலே அரசனின் அல்லது தலைவனின் வேலை!
அதன்படியே பாண்டியனும் காவலரை அழைத்து விசாரிக்கச் சொல்கிறான்; விசாரனையில் தவறு கோவலனுடையது என்றால் அவனைக் கொல்லச் சொல்கிறான்!
இதில் யாதொரு பிழையும் பாண்டியனிடம் இல்லை! அவன் கடமையைத்தான் அவன் செய்தான்,
"ஊர்காப் பாளரைக் கூவி ஈங்குஎன்
தாழ்பூங் கோதை தன்கால் சிலம்பு
கன்றிய கள்வன் கையது ஆகில்
கொன்றுஅச் சிலம்பு கொணர்க ஈங்குஎன..."
கொல்லன் தன் வேலை எளிதில் முடிந்தது என்று அகமகிழ்ந்தான்;
காவலர்களை அழைத்துக் கொண்டு இல்லம் வந்து, சாவு வலை இறுகி வருவதை உணராத கோவலனைக் காட்டினான்;
கோவலனிடம் இருந்த சிலம்பைக் காவலரிடம் காட்டி இதுவே அரசியின் சிலம்பு என்று நம்பவைக்க முயன்றான், காவலர்களை தனியே அழைத்துச் சென்று!
வெட்டுதற்குக் கட்டப்பட்டிருக்கும் ஆட்டின் நிலையிலேயே கண்முன் நடப்பவைகளை அறியாதவனாய் கோவலன் சலனமில்லாமல் இருந்தான் அப்பொழுது!
காவலர் தலைவன் அவன் வேலையை முறைப்படியேதான் செய்தான்! கொல்லன் சொன்னதை உடனே நம்பி விடவில்லை;
இவனைப் பார்த்தால் களவு செய்பவன் போல் தெரியவில்லை என்றான் காவலர் தலைவன்!
காவல் பல கடந்து கடுங் களவு செய்பவர்களுக்குரிய தோற்றம் இல்லை என்று உணர்கிறான் காவலன்!
மேலும் ஆராய முற்படுகிறான்; ஆராய்கிறான்;
அவன் அனுபவம் சரியே!
செல்வச் சீமானாக வணிக குலத்தில் பிறந்தவன் வாழ்ந்த சூழலே வேறு. இடையர் தெருவில் நடந்த போது காளை ஒன்று சீறி எதிர் வருதல் துற்குறி என்று அவன் அறிந்திருக்க வில்லை;
காரணம் அச்சூழலே, அதாவது ஆடுமாடுகள் அலையும் இடையர் தெருக்களே அவன் அறியாதது என்று ஆசிரியர் இளங்கோவடிகள் கூறுகிறார். அவனுக்குக் கள்ளத் தோற்றம் இல்லாமல் இருந்ததில் ஆச்சரியமில்லை! ஆயினும் நல்ல தோற்றம் கொண்டவர் எல்லாம் கள்ளர்கள் இல்லை என்று கொள்ள முடியாது.
"இலக்கண முறைமையின் இருந்தோன் ஈங்கு இவன்
கொலைப்படு மகன்அலன் என்று கூறும்........"
ஆராய்ந்து தெளிதல் என்ற நிலைக்கு மனிதன் தள்ளப்படுவான் ஆனால் கோழைகள் வாழ்வு கொடியேற வாய்ப்பே இல்லை! அதையும் கோழைகளும் நயவஞ்சகரும் நன்கு அறிந்தே இருப்பர்!
அடுத்தவர் வாழ்வை கெடுத்து வாழ்பவர்க்கும், மதம் என்ற பெயரால் மூடநம்பிக்கைகளை வளர்த்து வாழ்வு செய்பவர்க்கும் இது பொருந்தும்.
எங்கே தீர ஆராயந்து விடுவரோ என்று அஞ்சினான் அந்தக் கொல்லக் கயவன்; ஆங்கு குழப்பினான் காவலர்களை;
காவலர்களை எள்ளி நகையாடினான்;
மந்திரத்தின் மகிமை அறியாதாராய் இருக்கிறீரே! இப்படிப்பட்ட கள்வர்கள் மந்திரத்தால் மருந்து வைத்துத் தாங்கள் நினைத்ததை சாதித்துக் கொள்வார்கள் என்பதை அறியாத நீங்கள் காவலரா என்று இகழ் நகை செய்தான் கொல்லன், காவலரைப் பார்த்து!
இத்தகு மந்திரக் கள்வர்கள் இந்திரனின் மார்பில் அணியும் ஆரத்தினையும் கவர்ந்துவிடும் வல்லவர்கள் என்று வஞ்சக மொழி பகன்றான்!
ஆதாரமாக, கண்டறியப்படா களவுகள் சிலவற்றை எடுத்துக் கூறினான்; மந்திரத்தால் தந்திரமாக நடந்ததென்று அடித்துக் கூறினான்.
மனிதனின் அறிவுக்கெட்டாத அனைத்தும் மந்திரமாகவும் மாயமாகவும் தெரிகிறதல்லவா! அம்மந்திரங்களும் மாயங்களும் அறிவிலார்க்குப் பிழைப்புக் கருவிகளாகி விடுகின்றன.
அறிவு வளர்ந்த சமுதாயமே ஆக்கங்களை உலகில் ஏற்படுத்தக் காண்கிறோம். அறிவு கெட்ட சமுதாயம் மந்திரத்திலும் மாயங்களிலும் மனதைப் பறி கொடுத்து தேம்பி நிற்பதை இன்றளவும் நாம் கண்டு கொண்டே இருக்கிறோம்!
இளைய காவலருள் ஒருவனும் மந்திரக் களவொன்று குறித்து கதை ஒன்று சொன்னான்; அவன் தன்னால் பிடிக்க இயலாத கள்வன் ஒருவனை மந்திர மருந்துக் கள்வன் என்று சொல்லிக் கொண்டு தன் இயலாமையை தனக்குள் தேக்கிக் கொண்டவன்:
மந்திரம் என்ற சொல்லிடம் பயந்த அவன், அரசனிடமும் பயந்தான்; இவனைக் கொல்வதே அரசனின் சினத்தில் இருந்து காக்கும் என்று கருத்துக் கூறினான்.
அறிவற்ற கோழைகள் அனைத்திற்கும் பயந்தவர்கள் அல்லவா ?
காவலர் தலைவனின் மனம் மாறவில்லை!
அனைவரின் கூற்றையும் ஆராய்ந்து கொண்டே இருந்தான்!
இதுகாறும் கோவலனிடம் குற்றம் பற்றி ஒரு வார்த்தையும் யாரும் கேட்கவில்லை!
நடக்கும் கருத்துப் பறிமாற்றங்கள் சற்று தூரத்திலேயே நடக்கின்றன. காற்சிலம்பை மதிப்பிடுகிறார்கள் என்றே கோவலன் கருதியிருக்க வேண்டும்.
ஆனால், மந்திரத்தின்பால் இருந்த மயக்கத்தால், நம்பிக்கையால்,
ஆராயும் அறிவற்றவர்களிடம் இருக்கும் உணர்வு உந்தலினால், காவலர்களுள் "கல்லாக் களிமகன்" ஒருவன், மூடநம்பிக்கைப் பற்றினால் ஏற்பட்ட ஆத்திரத்தால் அவசரப்பட்டான்;
மூடநம்பிக்கையால் ஆத்திரம் வந்ததும் அடுத்தவன் குடலை உருவ நினைத்த காட்டு மிராண்டி அந்தக் "கல்லாக் களிமகன்".
காவலர் தலைவனின் ஆணைக்கும் காத்திருக்கவில்லை! உருவிய வாளுடன் ஓடிப் பாய்ந்தான் கோவலன் மேல்!
கோவலனின் குறுக்கே கொடுவாள் எறிந்தான்!
சற்றே வளர்ந்து விட்ட பூஞ்செடி தன் உச்சியில் மலர்ந்த ஒற்றை வெண் பூவோடு காற்றடிக்கும் திசையெல்லாம் ஆடிக்கொண்டிருப்பதைப் போல, கோவலன் சலனமுற்று வாழ்ந்தவன்.
தற்போது மனமும் குற்றமற்று விடியல் நோக்கி அமைதியாக சிந்தித்துக் காத்திருந்தது, காற்சிலம்பிற்கு காசு வரும் என்று!
ஆனால் வந்தது வாள் அவன் உடலின் குறுக்கே! கோவலனின் தலை சற்றுத் தள்ளி வீழ்ந்தது!
"அரிதுஇவர் செய்தி அலைக்கு வேந்தனும்
உரியதுஒன்று உரைமின் உறுபடை யீர்எனக்
கல்லாக் களிமகன் ஒருவன் கையில்
வெள்வாள் எறிந்தனன்; விலங்குஊடு அறுத்தது."
வெள்ளை ரோசா மலருக்கு, தன்னைக் கொய்யப் போவது எப்படி தெரியாதோ அப்படியே கோவலன் நிலை.
கொய்யப்பட்டதும் கோவலனின் தலை சேற்றில் விழுந்த மலராய் குருதிச் சேற்றில் நனைந்தது.
"புண்உமிழ் குருதி பொழிந்துஉடன் பரப்ப
மண்ணக மடந்தை வான்துயர் கூரக்
காவலன் செங்கோல் வளைஇய வீழ்ந்தனன்
கோவலன் பண்டை ஊழ்வினை உருத்துஎன்."
கொல்லன் கயவன்; பொய்சொன்னான்!
பாண்டியன் ஆராய்ந்து கொல்ல காவலரை ஏவி கடமை செய்தான்!
காவலர் தலைவன் ஆராய்ந்தான்!
கல்லாக் காவலக் களிமகன் ஒருவன் தலைவனின் ஆணையும் இன்றி உணர்வுகளின் உந்துதலில், அவசரத்தில் கொலை செய்தான்!
இப்படியிருக்க இளங்கோவடிகள்
"சினைஅலர் வேம்பன் தேரான் ஆகி...."
என்று, பாண்டியன் தீர ஆராயாததை தெளிவிக்கிறார். பாண்டியனின் பிழை எங்கே? எங்ஙனம்?
ஆராய்வதில் தவறா? இல்லை யென்றால் வேறுயாது? விடை காண்போம்!
காரணமறியாமலேயே உடல் வேறு தலை வேறாகி சில துள்ளல்களோடு குருதிச் சேற்றில் குளிர்ந்து போனான் கோவலன்.
கழுத்து அறுபடும் போது அவன் அறத்தை நினைத்தானா? அல்லது வஞ்சக மறத்தை வெறுத்தானா?
கண்களில் நின்றவள் கண்ணகியா? மாதவியா? இருவருமா? தந்தை தாய் சுற்றம் நினைத்தானா ?
சோழ நாட்டிலே பிறந்து பாண்டிய நாட்டில் மறைந்த கோவலனின் நேர்மைக்கு சாட்சி சொல்ல இருக்கும் இரண்டே மகளிர், என்றும் வாழும் காவிரியும் வையையும் ஆவர்!
அன்புடன்
நாக.இளங்கோவன்
13-பிப்ரவரி-2000
மதுரை:
கொலைக்களக் காதை:
காசு வரும் கண்ணகியின் காற்சிலம்பால் என்று சாவு வரும் திசை நோக்கி, சிந்தித்துக் காத்திருந்தான் கோவலன்;
அந்தப்புரம்:
அழகுப் பெண்டிர் அணிவகுக்கும்
அரசனின் ஆசைக் குடில்!
வகைவகையாய்ப் பெண்கள்!
அரசனின் ஆசையை அவ்வப்போது தீர்த்துவிட
எப்போதும் காத்திருக்கும் பெண்மந்தை!
அரச மண்டபம்:
அந்த ஆசையை அரசனுக்கு உருவாக்கும்
ஆடல்மேடை! அமைச்சரவையும் அங்கே!!
அந்த மேடையிலே பாண்டியன் நெடுஞ்செழியன்!
ஆடல் அரசிகளின் முட்டியவைகளின் வெட்டுதல்களைக் களித்துக் கொண்டே முட்டாதவைகளில் முயங்க மோகித் திருந்தானோ? என்று முகங்கோணுகிறாள் கோப்பெருந்தேவி!
பெண் பல ஆடவரை நினைத்தால் அருவருக்கும் சமுதாயத்தில், ஆடவன் எத்தனைப் பெண்டிருடன் சுற்றி விட்டு வந்தாலும் அவனைச் சிறு முனகலுடன் ஏற்றுக் கொண்டு விட்டு, கற்பென்ற காரணம் சொல்லும், முதுகெலும்பில்லா மூடப் பெண்களில் கோப்பெருந்தேவியும் ஒருத்தி!
ஒருவேளை பாண்டியன் மோகித்திருந்தானானால் அவனை அருவருத்து விட்டா இருக்கப் போகிறாள் ?
ஆடவனின் அளவுக்கும் அதிகமான ஆசையை அனுமதித்து விட்ட சமுதாயத்தில் கண்ணகி போன்ற பலருள் அவளும் ஒருத்திதான்!
தொலைக்காட்சியோ திரைப்படமோ இல்லாத காலத்தில் நேரடியாகவே கலைக்காட்சிகளைப் பார்க்க வேண்டிய நிலை;
ஆடிய பெண்மணிகளின் அழகின் மேல் தேவி பொறாமைப் பட்டிருக்கவேண்டும்! தலை நோவென்று உள்கோபம் மறைத்து பாதியில் எழுந்து சென்று விட்டாள்.
பொய்க்கோபம் காட்டியிருந்தாள்!
பாண்டியன் ஏதும் தவறு செய்திருக்க மாட்டான் என்றுதான் கருதமுடிகிறது. அரசியின் மனம் வருந்துதலை அறிந்த உடனே அச்சமடைந்த பாண்டியன், தேவியோடு அன்பால் மலர்ந்த காதல் வாழ்க்கை வாழ்ந்திருக்கவேண்டும்!
தேவியின் மனமுணர்ந்து சிறு அச்சமும் வருத்தமும் அவனுக்கேற்பட சற்றே குழப்பத்துடன் அவளிடம் தேடி நடக்கிறான்; அமைச்சரவை நீங்கி!
சிறு குழப்பம்தான்; தேவியிடம் அன்பைச் சொல்ல விரைகிறான்!
மன்னனின் விரைந்த கால்களின் வேகம் குறைத்தது கொல்லக்கயவன் வீழ்ந்து வணங்கி அவனைப் போற்றியது!
"ஊடல் உள்ளம் உள்கரந்து ஒளித்துத்
தலைநோய் வருத்தம் தன்மேல் இட்டுக்
குலமுதல் தேவி கூடாது ஏக,
சிந்துஅரி நெடுங்கண் சிலதியர் தம்மொடு
கோப்பெருந் தேவி கோயில் நோக்கிக்
காப்புஉடைவாயில் கடைகாண் அகவையின்
வீழ்ந்தனன் கிடந்து தாழ்ந்துபல ஏத்தி!......."
மன்னா!
"அரசியாரின் சிலம்பொன்றைத் திருடியவன் யார் என்று கண்டுபிடித்தேன்!
கன்னக்கோலில்லை; குத்தும் கோலுமில்லை! மந்திரம் போட்டு காவலரை மயக்கி அரசியாரின் காற்சிலம்பை கவர்ந்தான் அக்கள்வன்!
இப்பொழுது அவனை என் இல்லத்தில் இருத்தியிருக்கிறேன்" என்றான் அந்தக் கொல்லக்கயவன்.
முதல் தகவல் அறிக்கையை அரசனிடம் சமர்ப்பிக்கிறான் கொல்லன்.
"கன்னகம் இன்றியும் கவைக்கோல் இன்றியும்
துன்னிய மந்திரம் துணைஎனக் கொண்டு
வாயி லாளரை மயக்குதுயில் உறுத்துக்
கோயில் சிலம்பு கொண்ட கள்வன்
கல்என் பேர்ஊர்க் காவலர்க் கரந்துஎன்
சில்லைக் குடில் அகத்துஇருந் தோன்என...."
என்னடா உலகம் இது ?
மந்திரம் ஒன்றால் ,அரண்மனை வாயில்தோறும், வாசல்தோறும், வீதிதோறும் நிற்கும் காவலரை மயக்கி, அரசமாதேவியைச் சுற்றி இருக்கும் பெண்டிர் கூட்டத்தையும் மயக்கி, அரசியையும் மயக்கி, ஆங்கொரு சிலம்பைத் திருட முடியுமா? என்று
அரசன் நினைத்தானில்லை!
"மந்திரத்தால் இவ்வளவு முடியும் என்றால், அரசன் எதற்கு?
மந்திரவாதி போதுமே!
நாட்டைக் காக்க காவல் எதற்கு? எலுமிச்சையைக் கட்டி மந்திரம் போட்டு ஊரெல்லையில் வைத்துவிட்டால் பகைவர் வராமல் போய்விடுவரே!
நாடுபிடிக்க படைகள் எதற்கு? நான்கு மந்திரவாதிகள் போதுமே!"
அரசன் இதையெல்லாம் சிந்தித்தான் இல்லை!
கோழைகளின் பிழைப்பு மந்திரம்! அதையும் உணர்ந்தான் இல்லை.
ஆனால், பாண்டியன் கடமையிலிருந்து சிறிதும் தவறினான் இல்லை! இல்லவே இல்லை!!
மன்னவன் இல்லத் திருட்டாயினும், குடிகளிடம் களவு நடந்தாலும்
அதை ஆராய அதற்கென்ற காவலர் துறை இருக்கிறது!
இன்று பிரதமர் அல்லது அமைச்சர்களின் இல்லத்தில் களவு போனால், அதையும் காவல்துறையும் நீதித்துறையும்தான் ஆராய்கின்றன! ஆராயவேண்டும்; ஆராயமுடியும்.
பிரதமரோ அமைச்சரோ அந்த முதல் தகவல் அறிக்கையின் பால் ஆராயச் சென்றால் அது நகைப்புக்குரியது! அவ்வாறு அவர்கள் செய்தால் எத்தனைக் குற்றங்களுக்கு முறையான தீர்ப்பளிக்க முடியும்?
இதனை இதனால் இவன் செய்யும் என்றாய்ந்து அதனை அவன் கண் விடுதலே அரசனின் அல்லது தலைவனின் வேலை!
அதன்படியே பாண்டியனும் காவலரை அழைத்து விசாரிக்கச் சொல்கிறான்; விசாரனையில் தவறு கோவலனுடையது என்றால் அவனைக் கொல்லச் சொல்கிறான்!
இதில் யாதொரு பிழையும் பாண்டியனிடம் இல்லை! அவன் கடமையைத்தான் அவன் செய்தான்,
"ஊர்காப் பாளரைக் கூவி ஈங்குஎன்
தாழ்பூங் கோதை தன்கால் சிலம்பு
கன்றிய கள்வன் கையது ஆகில்
கொன்றுஅச் சிலம்பு கொணர்க ஈங்குஎன..."
கொல்லன் தன் வேலை எளிதில் முடிந்தது என்று அகமகிழ்ந்தான்;
காவலர்களை அழைத்துக் கொண்டு இல்லம் வந்து, சாவு வலை இறுகி வருவதை உணராத கோவலனைக் காட்டினான்;
கோவலனிடம் இருந்த சிலம்பைக் காவலரிடம் காட்டி இதுவே அரசியின் சிலம்பு என்று நம்பவைக்க முயன்றான், காவலர்களை தனியே அழைத்துச் சென்று!
வெட்டுதற்குக் கட்டப்பட்டிருக்கும் ஆட்டின் நிலையிலேயே கண்முன் நடப்பவைகளை அறியாதவனாய் கோவலன் சலனமில்லாமல் இருந்தான் அப்பொழுது!
காவலர் தலைவன் அவன் வேலையை முறைப்படியேதான் செய்தான்! கொல்லன் சொன்னதை உடனே நம்பி விடவில்லை;
இவனைப் பார்த்தால் களவு செய்பவன் போல் தெரியவில்லை என்றான் காவலர் தலைவன்!
காவல் பல கடந்து கடுங் களவு செய்பவர்களுக்குரிய தோற்றம் இல்லை என்று உணர்கிறான் காவலன்!
மேலும் ஆராய முற்படுகிறான்; ஆராய்கிறான்;
அவன் அனுபவம் சரியே!
செல்வச் சீமானாக வணிக குலத்தில் பிறந்தவன் வாழ்ந்த சூழலே வேறு. இடையர் தெருவில் நடந்த போது காளை ஒன்று சீறி எதிர் வருதல் துற்குறி என்று அவன் அறிந்திருக்க வில்லை;
காரணம் அச்சூழலே, அதாவது ஆடுமாடுகள் அலையும் இடையர் தெருக்களே அவன் அறியாதது என்று ஆசிரியர் இளங்கோவடிகள் கூறுகிறார். அவனுக்குக் கள்ளத் தோற்றம் இல்லாமல் இருந்ததில் ஆச்சரியமில்லை! ஆயினும் நல்ல தோற்றம் கொண்டவர் எல்லாம் கள்ளர்கள் இல்லை என்று கொள்ள முடியாது.
"இலக்கண முறைமையின் இருந்தோன் ஈங்கு இவன்
கொலைப்படு மகன்அலன் என்று கூறும்........"
ஆராய்ந்து தெளிதல் என்ற நிலைக்கு மனிதன் தள்ளப்படுவான் ஆனால் கோழைகள் வாழ்வு கொடியேற வாய்ப்பே இல்லை! அதையும் கோழைகளும் நயவஞ்சகரும் நன்கு அறிந்தே இருப்பர்!
அடுத்தவர் வாழ்வை கெடுத்து வாழ்பவர்க்கும், மதம் என்ற பெயரால் மூடநம்பிக்கைகளை வளர்த்து வாழ்வு செய்பவர்க்கும் இது பொருந்தும்.
எங்கே தீர ஆராயந்து விடுவரோ என்று அஞ்சினான் அந்தக் கொல்லக் கயவன்; ஆங்கு குழப்பினான் காவலர்களை;
காவலர்களை எள்ளி நகையாடினான்;
மந்திரத்தின் மகிமை அறியாதாராய் இருக்கிறீரே! இப்படிப்பட்ட கள்வர்கள் மந்திரத்தால் மருந்து வைத்துத் தாங்கள் நினைத்ததை சாதித்துக் கொள்வார்கள் என்பதை அறியாத நீங்கள் காவலரா என்று இகழ் நகை செய்தான் கொல்லன், காவலரைப் பார்த்து!
இத்தகு மந்திரக் கள்வர்கள் இந்திரனின் மார்பில் அணியும் ஆரத்தினையும் கவர்ந்துவிடும் வல்லவர்கள் என்று வஞ்சக மொழி பகன்றான்!
ஆதாரமாக, கண்டறியப்படா களவுகள் சிலவற்றை எடுத்துக் கூறினான்; மந்திரத்தால் தந்திரமாக நடந்ததென்று அடித்துக் கூறினான்.
மனிதனின் அறிவுக்கெட்டாத அனைத்தும் மந்திரமாகவும் மாயமாகவும் தெரிகிறதல்லவா! அம்மந்திரங்களும் மாயங்களும் அறிவிலார்க்குப் பிழைப்புக் கருவிகளாகி விடுகின்றன.
அறிவு வளர்ந்த சமுதாயமே ஆக்கங்களை உலகில் ஏற்படுத்தக் காண்கிறோம். அறிவு கெட்ட சமுதாயம் மந்திரத்திலும் மாயங்களிலும் மனதைப் பறி கொடுத்து தேம்பி நிற்பதை இன்றளவும் நாம் கண்டு கொண்டே இருக்கிறோம்!
இளைய காவலருள் ஒருவனும் மந்திரக் களவொன்று குறித்து கதை ஒன்று சொன்னான்; அவன் தன்னால் பிடிக்க இயலாத கள்வன் ஒருவனை மந்திர மருந்துக் கள்வன் என்று சொல்லிக் கொண்டு தன் இயலாமையை தனக்குள் தேக்கிக் கொண்டவன்:
மந்திரம் என்ற சொல்லிடம் பயந்த அவன், அரசனிடமும் பயந்தான்; இவனைக் கொல்வதே அரசனின் சினத்தில் இருந்து காக்கும் என்று கருத்துக் கூறினான்.
அறிவற்ற கோழைகள் அனைத்திற்கும் பயந்தவர்கள் அல்லவா ?
காவலர் தலைவனின் மனம் மாறவில்லை!
அனைவரின் கூற்றையும் ஆராய்ந்து கொண்டே இருந்தான்!
இதுகாறும் கோவலனிடம் குற்றம் பற்றி ஒரு வார்த்தையும் யாரும் கேட்கவில்லை!
நடக்கும் கருத்துப் பறிமாற்றங்கள் சற்று தூரத்திலேயே நடக்கின்றன. காற்சிலம்பை மதிப்பிடுகிறார்கள் என்றே கோவலன் கருதியிருக்க வேண்டும்.
ஆனால், மந்திரத்தின்பால் இருந்த மயக்கத்தால், நம்பிக்கையால்,
ஆராயும் அறிவற்றவர்களிடம் இருக்கும் உணர்வு உந்தலினால், காவலர்களுள் "கல்லாக் களிமகன்" ஒருவன், மூடநம்பிக்கைப் பற்றினால் ஏற்பட்ட ஆத்திரத்தால் அவசரப்பட்டான்;
மூடநம்பிக்கையால் ஆத்திரம் வந்ததும் அடுத்தவன் குடலை உருவ நினைத்த காட்டு மிராண்டி அந்தக் "கல்லாக் களிமகன்".
காவலர் தலைவனின் ஆணைக்கும் காத்திருக்கவில்லை! உருவிய வாளுடன் ஓடிப் பாய்ந்தான் கோவலன் மேல்!
கோவலனின் குறுக்கே கொடுவாள் எறிந்தான்!
சற்றே வளர்ந்து விட்ட பூஞ்செடி தன் உச்சியில் மலர்ந்த ஒற்றை வெண் பூவோடு காற்றடிக்கும் திசையெல்லாம் ஆடிக்கொண்டிருப்பதைப் போல, கோவலன் சலனமுற்று வாழ்ந்தவன்.
தற்போது மனமும் குற்றமற்று விடியல் நோக்கி அமைதியாக சிந்தித்துக் காத்திருந்தது, காற்சிலம்பிற்கு காசு வரும் என்று!
ஆனால் வந்தது வாள் அவன் உடலின் குறுக்கே! கோவலனின் தலை சற்றுத் தள்ளி வீழ்ந்தது!
"அரிதுஇவர் செய்தி அலைக்கு வேந்தனும்
உரியதுஒன்று உரைமின் உறுபடை யீர்எனக்
கல்லாக் களிமகன் ஒருவன் கையில்
வெள்வாள் எறிந்தனன்; விலங்குஊடு அறுத்தது."
வெள்ளை ரோசா மலருக்கு, தன்னைக் கொய்யப் போவது எப்படி தெரியாதோ அப்படியே கோவலன் நிலை.
கொய்யப்பட்டதும் கோவலனின் தலை சேற்றில் விழுந்த மலராய் குருதிச் சேற்றில் நனைந்தது.
"புண்உமிழ் குருதி பொழிந்துஉடன் பரப்ப
மண்ணக மடந்தை வான்துயர் கூரக்
காவலன் செங்கோல் வளைஇய வீழ்ந்தனன்
கோவலன் பண்டை ஊழ்வினை உருத்துஎன்."
கொல்லன் கயவன்; பொய்சொன்னான்!
பாண்டியன் ஆராய்ந்து கொல்ல காவலரை ஏவி கடமை செய்தான்!
காவலர் தலைவன் ஆராய்ந்தான்!
கல்லாக் காவலக் களிமகன் ஒருவன் தலைவனின் ஆணையும் இன்றி உணர்வுகளின் உந்துதலில், அவசரத்தில் கொலை செய்தான்!
இப்படியிருக்க இளங்கோவடிகள்
"சினைஅலர் வேம்பன் தேரான் ஆகி...."
என்று, பாண்டியன் தீர ஆராயாததை தெளிவிக்கிறார். பாண்டியனின் பிழை எங்கே? எங்ஙனம்?
ஆராய்வதில் தவறா? இல்லை யென்றால் வேறுயாது? விடை காண்போம்!
காரணமறியாமலேயே உடல் வேறு தலை வேறாகி சில துள்ளல்களோடு குருதிச் சேற்றில் குளிர்ந்து போனான் கோவலன்.
கழுத்து அறுபடும் போது அவன் அறத்தை நினைத்தானா? அல்லது வஞ்சக மறத்தை வெறுத்தானா?
கண்களில் நின்றவள் கண்ணகியா? மாதவியா? இருவருமா? தந்தை தாய் சுற்றம் நினைத்தானா ?
சோழ நாட்டிலே பிறந்து பாண்டிய நாட்டில் மறைந்த கோவலனின் நேர்மைக்கு சாட்சி சொல்ல இருக்கும் இரண்டே மகளிர், என்றும் வாழும் காவிரியும் வையையும் ஆவர்!
அன்புடன்
நாக.இளங்கோவன்
13-பிப்ரவரி-2000
சிலம்பு மடல் 22
சிலம்பு மடல் - 22 கண்ணகியின் கடைசி மனையறம்!
மதுரை:
கொலைக்களக் காதை:
அடைக்கலம் தந்த இடைச்சியின் சிறு வீட்டில், அவள் அளித்த காய்கறிகளைக் கொண்டு, வியர்க்க விறு விறுக்க தன் கண்ணாளனுக்கு உணவு செய்கிறாள் கண்ணகி, பல காலங்களுக்குப் பின்னர்!
மாதவியிடம் இருந்து மீண்டு வந்தும், கடமை கருதி உடன் நாடு நீங்கினரே அல்லாமல் வீடு வாழ்ந்தார் அல்ல!
அவளின் கடைசிச் சமையலை உண்ணத்தான் உயிர் வாழ்ந்தானோ கோவலன்? கடைசிச் சோறைக் காலம் தாழ்த்தி உண்ணத்தான் காதங்கள் பல கடந்து மதுரையம்பதி சேர்ந்தானோ?
செல்வச் சீமான் தன் கடைசி நாட்களை நாடோ டிக் கழித்திருக்கிறான் காதல் மனைவியுடன்! கடைசி நாளில் மனைவியின் கையால் தன் வாய்க்கு விருந்தளிக்கிறான்!
சிறு வெள்ளைப் பனம் பாயொன்றை சாணம் மெழுகிய தரையில் போட்டு அமரச்செய்தாள் அவனை! தூய நீரில் அவன் கால் அடிகளை துடைத்து விட்டு சற்றே தரைக்கு தண்ணீர் தெளிக்கிறாள்!; நடக்கப் போகும் கோவல-கண்ணகியின் மரணத்தை எண்ணி அஞ்சி மயக்கமுற்றுக் கிடந்த நிலமகளின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்புதல் போல!
ஈனா வாழையின் குருத்தொன்றை விரித்துப் போட்டு அன்னமிட்டாள்! அமுதென்று உண்டான்!
அவன் உணவுண்ணும் அழகில் ஆயர்பாடிக் கண்ணணைக் கண்டனர் இடைச்சி மாதரியும் அவள் மகள் ஐயையும்;
கோவலன் மனதிலே ஒரு அமைதி!
இழக்கப்போகும் தலைக்கு, இழந்த வாழ்க்கை திரும்பிய நிம்மதி!
"சுடுமண் மண்டையில் தொழுதனள் மாற்றி
மண்ணக மடந்தையை மயக்குஒழிப் பனள்போல்
தண் ணீர் தெளித்துத் தன்கையால் தடவிக்
குமரி வாழையின் குருத்தகம் விரித்து,
அமுதம் உண்க அடிகள் ஈங்கு'என......"
உண்ட இடத்தை சுத்தம் செய்து, வெற்றிலை நீட்டிய கண்ணகியின் கரத்தைப் பற்றி மெல்ல இழுத்து அணைத்துக் கொள்கிறான்!
பல காலம் முன்னர் படுத்துப் புரண்டிருந்தாலும், அப்பொழுது அணைத்துக் கொண்டபோது அரைவினாடி புதுமை நினைவு!
அடுத்த அரை வினாடியில் பல ஆண்டுகளை வாழ்ந்துவிட்ட உணர்வு!
அதற்கு மேல் பொறுக்கவில்லை கோவலனுக்குத் தான் செய்த குற்றங்கள்!
பருக்கைக் கற்கள் குத்திய வண்ணச் சீறடியின் வண்ண மாற்றத்தைக் கண்டு இரங்குகிறான்!
சாகப்போகுமுன் பாவக்கணக்கு சொன்னான் கண்ணகியிடம்; கண்கள் பனிக்க!
என் பெற்றோருக்கு, துயர் தந்தேன்! பரத்தமை சேர்ந்தேன்! பயனில் பேசுவர் சேர்ந்தேன்! ஏளனப்பட்டேன்! இகழ நடந்தேன்! பெரியோர் சொல் மறந்தேன்! சிறு வயதேயாயினும் அறிவிற் சிறந்த உனைத் தவிக்கவிட்டேன்! தத்தளித்தாய்! அதைத் தாங்கமுடியவில்லை இப்போது எனக்கு! புறப்படு என்றதும் புறப்பட்டாயே என் உயிரே, உனையாப் பிரிந்தேன்!?
குற்ற உணர்வினால் குறுகிப் போனான்! நாளைய கதி அறியாது,
நற்கதி வேண்டி ஏங்கினான்!
நிரந்தரமாய்ப் பிரிகையிலே, இடையிலே பிரிந்ததை எண்ணி வருந்தினான்!
அனைவருக்கும் துன்பம் தந்த போற்றா ஒழுக்கம் செய்தீராயினும் (உங்கள் சொல்) மாறா உள்ளம் படைத்த வாழ்க்கையை உடையவள் நான் ஆதலால் உங்களுடன் உடன் புறப்பட்டேன் என்றாள் செல்வக் கொழுந்து!
"போற்றா ஒழுக்கம் புரிந்தீர்! யாவதும்
மாற்றா உள்ள வாழ்க்கையேன் ஆதலின்
ஏற்றுஎழுந் தனன்யான் என்றுஅவள் கூற..."
மாசுஅறு பொன்னே! வலம்புரி முத்தே!
காசுஅறு விரையே! கரும்பே! தேனே!
அரும்பெறல் பாவாய்! ஆருயிர் மருந்தே!
என்று, அன்று மனையறம் புகுந்த போது அவளைப் போற்றிய கோவலன் இன்று மரணம் புகும்போதும் போற்றுகிறான் அவளை!
"பொன்னே கொடியே புனைபூங் கோதாய்!
நாணின் பாவாய் நீள்நில விளக்கே!
கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வி!...."
பெண்ணின்பத்திற்காகப் பேரலைச்சல் அலைந்தவன் கண்ணின் மணியாளின் காதலிலும் கற்பிலும் காலம் கடந்து கரைந்து கடைசி முறையாக அவள் மெய் முழுவதையும் தழுவிக் கொண்டு கண்ணகியின் காற்சிலம்பொன்றைக் கடன் பெறுகிறான்; காலமுழு காதல் வாழ்க்கைக்குப் பொருள் ஈட்ட!
"என்னோடு போந்துஈங்கு என்துயர் களைந்த
பொன்னே! கொடியே! புனைபூங் கோதாய்!
நாணின் பாவாய்! நீள்நில விளக்கே!
கற்பின் கொழுந்தே! பொற்பின் செல்வி!
சீறடிச் சிலம்பின் ஒன்றுகொண்டு யான்போய்
மாறி வருவன் மயங்காது ஒழிகஎனக்
கருங்கயல் நெடுங்கண் காதலி தன்னை
ஒருங்குடன் தழீஇ......."
இல்லம் தாண்டி தெருவில் நடக்க ஆரம்பிக்கிறான்! காளையொன்று பாய்ந்து வந்தது தீயகுறி என்பதை அறிந்திருக்காதவனாய் நடையைத் தொடர்கிறான்! கண்ணகிக்கும் அவனுக்கும் இடைவெளி தூரமாக ஆகிக்கொண்டேயிருக்க, அது நிரந்தர இடைவெளி என்று அறியாது, இருவரின் கண்களில் இருந்து இருவரும் மறைய, பல வீதிகளைக் கடந்து பொற்கொல்லர் வீதியில் நுழைந்தான்!
பல நுட்பங்கள் சமைக்கும் பொற்கொல்லர்கள் ஆங்காங்கிருக்க பலர் முன்னும் பின்னும் வர இவனோ 'சட்டை' அணிந்து துலாம் தூக்கி நடந்த கொல்லனைப் பார்த்து, அவனை அனுகுகிறான்!
மேலங்கி அணிந்திருந்ததாலேயே அவனை அரசனால் சிறப்புப் பெற்றவன் என்று எண்ணுகிறான்! ஏமாளி ஆகிறான்!
அயலூராரை அறியாத அப்பாவி!
'சட்டை' அல்லது மேலங்கி போட்டு நடந்தாலே அரசனால் மதிக்கத் தக்கவன் என்று இருந்த காலம் போலும்! ஏனைய கொல்லர்கள் மேலங்கி இல்லாதிருந்திருக்க வேண்டும்!
"நுண்வினைக் கொல்லர் நூற்றுவர் பின்வர
மெய்ப்பை புக்கு விலங்குநடைச் செலவின்
கைக்கோல் கொல்லனைக் கண்டனன் ஆகித்
தென்னவன் பெயரொடு சிறப்புப் பெற்ற
பொன்வினைக் கொல்லன் இவன்எனப் பொருந்திக்...."
பார்வையில் தோற்றான் கோவலன்!
நல் மக்களைப் போன்றே இருப்பர் கயவர்! அவர்களைப் போல நல் மக்கள் தோற்றத்தில் இருப்பவரை யாம் கண்டதில்லை என்று
திருவள்ளுவரே அஞ்சி ஒதுங்கிப் போகிறார்!
கயவரைப் பார்த்த மாத்திரத்தில் கண்டுபிடித்துவிடும் திறன் சொல்லவில்லை குறள்!
ஆனால்
"மக்களே போல்வர் கயவர்; அவரன்ன
ஒப்பாரி யாம்கண்ட தில்"
என்று கூறிவிட்டு வள்ளுவம் வாய்மூடிக் கொள்கிறது!
கோவலன் என்ன செய்வான் பாவம்!
ஒரு காற்சிலம்பை மட்டும் விற்று தொழில் செய்து பொருளீட்டலாம் என்று ஒரு பெருந்தனக்காரன் நினைக்கிறான் என்றால் அச்சிலம்பு பொருள் மதிப்பு மிக்கதாக இருக்கவேண்டும்!
ஆடைப்பகட்டைப் பார்த்தவுடன் தன் மனையாளின் விலைமதிப்பு மிக்க சிலம்பை விற்க சரியான ஆள் என்று நினைத்தான்! ஏமாந்து விட்டான்;
தனக்கு ஒரு குறை உண்டானால் அதனைப் போக்கிட, தன்னை விற்று விடுவர் கயவர் என்று எழுத வள்ளுவர் எத்தனைக் கயவரிடம் ஏமாந்தாரோ தெரியவில்லை! அதனால்தான்
"எற்றிற் குரியவர் கயவர் ? ஒன்றுற்றக்கால்
விற்றற் குரியர் விரைந்து"
என்று எழுதிவைத்துவிட்டுப் போயிருக்க வேண்டும்! இக்கொல்லக் கயவனும் அங்ஙனமே! தான் பாண்டியன் மனையில் சிலம்பு திருடிய சேதி வெளியாகாமல் இருக்க (அல்லது வெளியாகும் முன்), அதற்கொப்பாக இருந்த கண்ணகி சிலம்பைக் காட்டி, காட்டிக் கொடுக்கத் திட்டமிட்டான்!
பாண்டியன் பட்டத்தரசிக்கல்லது வேறு யாருக்கும் பொருத்தமுடையதல்ல இச்சிலம்பு; ஆதலில் என் இல்லத்தில் காத்திருப்பீர்! காட்டி வருவேன் வேந்தனிடம், என்று கூறி கோவலனை தன் இல்லத்தருகே இருக்கச் செய்கிறான்!
இவனும் அவன் குடிலருகே இருந்த தேவகோட்ட மதிலுக்குள்
சென்று தங்கினான்!
பொருள் தேடவந்தவன் அமைதியாகக் காத்திருந்தான்; சாவு வந்து கொண்டிருப்பதை எப்படி அறிவான் ?
அன்புடன்
நாக.இளங்கோவன்
13-பிப்ரவரி-2000
மதுரை:
கொலைக்களக் காதை:
அடைக்கலம் தந்த இடைச்சியின் சிறு வீட்டில், அவள் அளித்த காய்கறிகளைக் கொண்டு, வியர்க்க விறு விறுக்க தன் கண்ணாளனுக்கு உணவு செய்கிறாள் கண்ணகி, பல காலங்களுக்குப் பின்னர்!
மாதவியிடம் இருந்து மீண்டு வந்தும், கடமை கருதி உடன் நாடு நீங்கினரே அல்லாமல் வீடு வாழ்ந்தார் அல்ல!
அவளின் கடைசிச் சமையலை உண்ணத்தான் உயிர் வாழ்ந்தானோ கோவலன்? கடைசிச் சோறைக் காலம் தாழ்த்தி உண்ணத்தான் காதங்கள் பல கடந்து மதுரையம்பதி சேர்ந்தானோ?
செல்வச் சீமான் தன் கடைசி நாட்களை நாடோ டிக் கழித்திருக்கிறான் காதல் மனைவியுடன்! கடைசி நாளில் மனைவியின் கையால் தன் வாய்க்கு விருந்தளிக்கிறான்!
சிறு வெள்ளைப் பனம் பாயொன்றை சாணம் மெழுகிய தரையில் போட்டு அமரச்செய்தாள் அவனை! தூய நீரில் அவன் கால் அடிகளை துடைத்து விட்டு சற்றே தரைக்கு தண்ணீர் தெளிக்கிறாள்!; நடக்கப் போகும் கோவல-கண்ணகியின் மரணத்தை எண்ணி அஞ்சி மயக்கமுற்றுக் கிடந்த நிலமகளின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்புதல் போல!
ஈனா வாழையின் குருத்தொன்றை விரித்துப் போட்டு அன்னமிட்டாள்! அமுதென்று உண்டான்!
அவன் உணவுண்ணும் அழகில் ஆயர்பாடிக் கண்ணணைக் கண்டனர் இடைச்சி மாதரியும் அவள் மகள் ஐயையும்;
கோவலன் மனதிலே ஒரு அமைதி!
இழக்கப்போகும் தலைக்கு, இழந்த வாழ்க்கை திரும்பிய நிம்மதி!
"சுடுமண் மண்டையில் தொழுதனள் மாற்றி
மண்ணக மடந்தையை மயக்குஒழிப் பனள்போல்
தண் ணீர் தெளித்துத் தன்கையால் தடவிக்
குமரி வாழையின் குருத்தகம் விரித்து,
அமுதம் உண்க அடிகள் ஈங்கு'என......"
உண்ட இடத்தை சுத்தம் செய்து, வெற்றிலை நீட்டிய கண்ணகியின் கரத்தைப் பற்றி மெல்ல இழுத்து அணைத்துக் கொள்கிறான்!
பல காலம் முன்னர் படுத்துப் புரண்டிருந்தாலும், அப்பொழுது அணைத்துக் கொண்டபோது அரைவினாடி புதுமை நினைவு!
அடுத்த அரை வினாடியில் பல ஆண்டுகளை வாழ்ந்துவிட்ட உணர்வு!
அதற்கு மேல் பொறுக்கவில்லை கோவலனுக்குத் தான் செய்த குற்றங்கள்!
பருக்கைக் கற்கள் குத்திய வண்ணச் சீறடியின் வண்ண மாற்றத்தைக் கண்டு இரங்குகிறான்!
சாகப்போகுமுன் பாவக்கணக்கு சொன்னான் கண்ணகியிடம்; கண்கள் பனிக்க!
என் பெற்றோருக்கு, துயர் தந்தேன்! பரத்தமை சேர்ந்தேன்! பயனில் பேசுவர் சேர்ந்தேன்! ஏளனப்பட்டேன்! இகழ நடந்தேன்! பெரியோர் சொல் மறந்தேன்! சிறு வயதேயாயினும் அறிவிற் சிறந்த உனைத் தவிக்கவிட்டேன்! தத்தளித்தாய்! அதைத் தாங்கமுடியவில்லை இப்போது எனக்கு! புறப்படு என்றதும் புறப்பட்டாயே என் உயிரே, உனையாப் பிரிந்தேன்!?
குற்ற உணர்வினால் குறுகிப் போனான்! நாளைய கதி அறியாது,
நற்கதி வேண்டி ஏங்கினான்!
நிரந்தரமாய்ப் பிரிகையிலே, இடையிலே பிரிந்ததை எண்ணி வருந்தினான்!
அனைவருக்கும் துன்பம் தந்த போற்றா ஒழுக்கம் செய்தீராயினும் (உங்கள் சொல்) மாறா உள்ளம் படைத்த வாழ்க்கையை உடையவள் நான் ஆதலால் உங்களுடன் உடன் புறப்பட்டேன் என்றாள் செல்வக் கொழுந்து!
"போற்றா ஒழுக்கம் புரிந்தீர்! யாவதும்
மாற்றா உள்ள வாழ்க்கையேன் ஆதலின்
ஏற்றுஎழுந் தனன்யான் என்றுஅவள் கூற..."
மாசுஅறு பொன்னே! வலம்புரி முத்தே!
காசுஅறு விரையே! கரும்பே! தேனே!
அரும்பெறல் பாவாய்! ஆருயிர் மருந்தே!
என்று, அன்று மனையறம் புகுந்த போது அவளைப் போற்றிய கோவலன் இன்று மரணம் புகும்போதும் போற்றுகிறான் அவளை!
"பொன்னே கொடியே புனைபூங் கோதாய்!
நாணின் பாவாய் நீள்நில விளக்கே!
கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வி!...."
பெண்ணின்பத்திற்காகப் பேரலைச்சல் அலைந்தவன் கண்ணின் மணியாளின் காதலிலும் கற்பிலும் காலம் கடந்து கரைந்து கடைசி முறையாக அவள் மெய் முழுவதையும் தழுவிக் கொண்டு கண்ணகியின் காற்சிலம்பொன்றைக் கடன் பெறுகிறான்; காலமுழு காதல் வாழ்க்கைக்குப் பொருள் ஈட்ட!
"என்னோடு போந்துஈங்கு என்துயர் களைந்த
பொன்னே! கொடியே! புனைபூங் கோதாய்!
நாணின் பாவாய்! நீள்நில விளக்கே!
கற்பின் கொழுந்தே! பொற்பின் செல்வி!
சீறடிச் சிலம்பின் ஒன்றுகொண்டு யான்போய்
மாறி வருவன் மயங்காது ஒழிகஎனக்
கருங்கயல் நெடுங்கண் காதலி தன்னை
ஒருங்குடன் தழீஇ......."
இல்லம் தாண்டி தெருவில் நடக்க ஆரம்பிக்கிறான்! காளையொன்று பாய்ந்து வந்தது தீயகுறி என்பதை அறிந்திருக்காதவனாய் நடையைத் தொடர்கிறான்! கண்ணகிக்கும் அவனுக்கும் இடைவெளி தூரமாக ஆகிக்கொண்டேயிருக்க, அது நிரந்தர இடைவெளி என்று அறியாது, இருவரின் கண்களில் இருந்து இருவரும் மறைய, பல வீதிகளைக் கடந்து பொற்கொல்லர் வீதியில் நுழைந்தான்!
பல நுட்பங்கள் சமைக்கும் பொற்கொல்லர்கள் ஆங்காங்கிருக்க பலர் முன்னும் பின்னும் வர இவனோ 'சட்டை' அணிந்து துலாம் தூக்கி நடந்த கொல்லனைப் பார்த்து, அவனை அனுகுகிறான்!
மேலங்கி அணிந்திருந்ததாலேயே அவனை அரசனால் சிறப்புப் பெற்றவன் என்று எண்ணுகிறான்! ஏமாளி ஆகிறான்!
அயலூராரை அறியாத அப்பாவி!
'சட்டை' அல்லது மேலங்கி போட்டு நடந்தாலே அரசனால் மதிக்கத் தக்கவன் என்று இருந்த காலம் போலும்! ஏனைய கொல்லர்கள் மேலங்கி இல்லாதிருந்திருக்க வேண்டும்!
"நுண்வினைக் கொல்லர் நூற்றுவர் பின்வர
மெய்ப்பை புக்கு விலங்குநடைச் செலவின்
கைக்கோல் கொல்லனைக் கண்டனன் ஆகித்
தென்னவன் பெயரொடு சிறப்புப் பெற்ற
பொன்வினைக் கொல்லன் இவன்எனப் பொருந்திக்...."
பார்வையில் தோற்றான் கோவலன்!
நல் மக்களைப் போன்றே இருப்பர் கயவர்! அவர்களைப் போல நல் மக்கள் தோற்றத்தில் இருப்பவரை யாம் கண்டதில்லை என்று
திருவள்ளுவரே அஞ்சி ஒதுங்கிப் போகிறார்!
கயவரைப் பார்த்த மாத்திரத்தில் கண்டுபிடித்துவிடும் திறன் சொல்லவில்லை குறள்!
ஆனால்
"மக்களே போல்வர் கயவர்; அவரன்ன
ஒப்பாரி யாம்கண்ட தில்"
என்று கூறிவிட்டு வள்ளுவம் வாய்மூடிக் கொள்கிறது!
கோவலன் என்ன செய்வான் பாவம்!
ஒரு காற்சிலம்பை மட்டும் விற்று தொழில் செய்து பொருளீட்டலாம் என்று ஒரு பெருந்தனக்காரன் நினைக்கிறான் என்றால் அச்சிலம்பு பொருள் மதிப்பு மிக்கதாக இருக்கவேண்டும்!
ஆடைப்பகட்டைப் பார்த்தவுடன் தன் மனையாளின் விலைமதிப்பு மிக்க சிலம்பை விற்க சரியான ஆள் என்று நினைத்தான்! ஏமாந்து விட்டான்;
தனக்கு ஒரு குறை உண்டானால் அதனைப் போக்கிட, தன்னை விற்று விடுவர் கயவர் என்று எழுத வள்ளுவர் எத்தனைக் கயவரிடம் ஏமாந்தாரோ தெரியவில்லை! அதனால்தான்
"எற்றிற் குரியவர் கயவர் ? ஒன்றுற்றக்கால்
விற்றற் குரியர் விரைந்து"
என்று எழுதிவைத்துவிட்டுப் போயிருக்க வேண்டும்! இக்கொல்லக் கயவனும் அங்ஙனமே! தான் பாண்டியன் மனையில் சிலம்பு திருடிய சேதி வெளியாகாமல் இருக்க (அல்லது வெளியாகும் முன்), அதற்கொப்பாக இருந்த கண்ணகி சிலம்பைக் காட்டி, காட்டிக் கொடுக்கத் திட்டமிட்டான்!
பாண்டியன் பட்டத்தரசிக்கல்லது வேறு யாருக்கும் பொருத்தமுடையதல்ல இச்சிலம்பு; ஆதலில் என் இல்லத்தில் காத்திருப்பீர்! காட்டி வருவேன் வேந்தனிடம், என்று கூறி கோவலனை தன் இல்லத்தருகே இருக்கச் செய்கிறான்!
இவனும் அவன் குடிலருகே இருந்த தேவகோட்ட மதிலுக்குள்
சென்று தங்கினான்!
பொருள் தேடவந்தவன் அமைதியாகக் காத்திருந்தான்; சாவு வந்து கொண்டிருப்பதை எப்படி அறிவான் ?
அன்புடன்
நாக.இளங்கோவன்
13-பிப்ரவரி-2000
Monday, January 17, 2000
சிலம்பு மடல் 21
சிலம்பு மடல் - 21 அடைக்கலமாய்த் தந்த கொடை!
மதுரை:
அடைக்கலக்காதை:
பொதிகை வலம் வந்து, குமரியில் நீராடி ஊர் திரும்பும் வழியில் மாடலன் கோவலனைக் காண்கிறான். கோவலன் அவனை வணங்குகிறான்; இருவரும் உரையாடுகின்றனர், மாதவியின் மகப்பேறு குறித்து; மாடலன் சொல்வான்;
தலைக்கோலி என்ற பட்டம் பெற்ற மாந்தளிர் மேனியாள் மாதவி, பால்வாய்க் குழந்தையைப் பெற்றெடுத்தாள்! வாலாமை நாள்கள் (தூய்மையின்மை நாட்கள் அல்லது தீட்டு நாட்கள்) நீங்கிய பின்னர் உன் எண்ணப்படியே, மணிமேகலா என்ற உன் குல தெய்வத்தின் பெயரையே உன் மகளுக்கு ஆயிரம் கணிகையர் வாழ்த்துக் கூற வைத்தனள் மாதவி!
"வேந்துஉறு சிறப்பின் விழுச்சீர் எய்திய
மாந்தளிர் மேனி மாதவி மடந்தை
பால்வாய்க் குழவி பயந்தனள் எடுத்து.
வாலா மைந்நாள் நீங்கிய பின்னர்
மாமுது கணிகையர் மாதவி மகட்கு
நாம நல்லுரை நாட்டுதும் என்று....
எம்குல தெய்வப் பெயர்ஈங்கு இடுகஎன
அணிமே கலையார் ஆயிரம் கணிகையர்
மணிமே கலையென வாழ்த்திய ஞான்று....."
கோவலனோ, கனவொன்று கண்டேன் மாடல, நள்ளிருள் யாமத்தில்!. கருத்துற்றேன்! தீங்கொன்று தேடி வருகுது போல் தெரிகிறது! கவலை கொண்டேன்; உரைப்பேன் கேள்!
"மதுரை மண்ணில் கீழ்மகன் ஒருவனால் கண்ணகி நடுக்குற்றாள்! என் ஆடையைப் பிறர் பறித்துக் கொள்ள எருமையின்மேல் ஏறிப் பயணித்தேன்! கண்ணகியோடு சேர்ந்து நானும் பெரியோர் பெறும் பேறுற்றேன்!
காமன் தன் மலரம்புகளை எறிந்து விட்டு வருந்துமாறு, போதிமரத்தடி புத்ததேவன் முன் மணிமேகலையைத் துறவி ஆக்கினாள் மாதவி! " என்றான்;
"கோவலன் கூறும்:'ஓர் குறுமகன் தன்னால்
காவல் வேந்தன் கடிநகர் தன்னில்
நாறுஐங் கூந்தல் நடுங்குதுயர் எய்தக்
கூறைகோள் பட்டுக் கோட்டுமா ஊரவும்,
அணித்தகு புரிகுழல் ஆயிழை தன்னொடும்
பிணிப்புஅறுத் தோர்தம் பெற்றி எய்தவும்
மாமலர் வாளி வறுநிலத்து எறிந்து
காமக் கடவுள் கையற்று ஏங்க
அணிதிகழ் போதி அறவோன் தன்முன்
மணிமே கலையை மாதவி அளிப்பவும்,
நனவு போல நள்இருள் யாமத்துக்
கனவு கண்டேன் கடிதுஈங்கு உறும்'என,...... "
புறஞ்சேரி என்பது அறவோர் வாழும் எளிமையான இடம்; அது இல்லறத்தார் தங்க ஏற்ற இடம் அன்று! "மாசாத்துவான்மகன்" என்று உரைத்தால் போதும் அரசர்க்கு அடுத்தநிலையில் உள்ள வணிகர் யாவரும் உன்னைப் பெருமையுடன் ஏற்றுக் கொள்வர்; அப்படியான ஒருவரின் இடத்தில் நீயும் கண்ணகியும் தங்குக என்று காவுந்தியாரும் மாடலனும் கோவலனிடம் உரைத்தனர்;
"....இங்கு ஒழிகநின் இருப்பு
காதலி தன்னொடு கதிர்செல் வதன்முன்
மாட மதுரை மாநகர் புகுக'என
மாதவத்து ஆட்டியும் மாமறை முதல்வனும்
கோவலன் தனக்குக் கூறுங் காலை.."
அவ்வேளை, இயக்கி (இசக்கி?)எனும் தெய்வத்துக்குப் பால்சோறு படைத்துத்திரும்பின மாதரி என்ற இடையர் குல மூதாட்டி காவுந்தி ஐயையைக் கண்டதும் அடி தொழுதனள்;
மாதரியின் முதுமையையும் , நேர்மைச் சிறப்பையும் அறிந்திருந்த அடிகள் மாதரியிடம் கண்ணகியைத் தங்க வைப்பதில் தவறிருக்காது என்று கருதி,
மாதரி கேள்!
"ஊருக்கும் நாட்டிற்கும் புதியவர்களான இப் பெருஞ்செல்வ மடந்தைதன் கணவனின் தந்தையின் பெயரைக் கூறினால் போதும், இந்நகர்ப் பெருஞ்செல்வர் இவர்களைத் தன் விருந்தினராக ஏற்றுக் கொண்டுப் பெருமை கொள்வர்; அப்படி அவள் செல்லும் வரை இக்கண்ணகி நல்லாளை உன்னிடம் அடைக்கலமாகத் தருகிறேன்! காத்திருப்பாய்! மேன்மைச் சிறப்பு பெற்ற அவளுக்குத் தாயும் நீயேயாகி தாங்கிடுக! என்றார் மாதரியிடம்;"
பெரும் பேறாய் ஏற்றுக் கொண்டனள் மாதரி!
"புறஞ்சிறை மூதூர்ப் பூங்கண் இயக்கிக்குப்
பால்மடை கொடுத்துப் பண்பிற் பெயர்வோள்
ஆயர் முதுமகள் மாதரி என்போள்
காவுந்தி ஐயையைக் கண்டுஅடி தொழுது....
"மாதரி தன்னுடன் மடந்தையை இருத்துதற்கு
ஏதம் இன்றுஎன எண்ணினள் ஆகி
மாதரி கேள்! .. ..
உடைப்பெருஞ் செல்வர் மனைப்புகும் அளவும்
இடைக்குல மடந்தைக்கு அடைக்கலம் தந்தேன்;.. ..
ஆயமும் காவலும் ஆயிழை தனக்குத்
தாயும் நீயே ஆகித் தாங்கு;"
ஊரறிந்த நாடறிந்த பெருஞ்செல்வன் மாநாய்கன்தன் மகள் கண்ணகி நல்லாள், நல்லுலகம் எல்லாம் அறிந்த அருஞ்செல்வ மாசத்துவான் மகனின் மனைவியானாள்!
செல்வச் சிறப்பில் சீருடன் வாழ்ந்து வந்த மெல்லியலாள்!
'அவளின் மென்மைக்கும் அவள் பாதங்களின் மென்மைக்கும் இலக்கணமாய்த்தான், இன்பம் பாடிய அய்யன் வள்ளுவ நாயனார்
"அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்"
என்று கூறிப்போனாரோ?' என்று எண்ணக்கூடிய அளவிற்கு மென்மையானவள் கண்ணகி!
ஆதலின், காவுந்தியார் கண்ணகியை அடைக்கலம் கொடுத்து, மாதரியிடம், "காலடிகளை நிலமகளும் அறிந்திரா அளவிற்கு செல்வச் செழிப்பால் மேன்மையானவள் கண்ணகி" என்று உரைக்கிறார்!
".......ஈங்கு
என்னொடு போந்த இளங்கொடி நங்கைதன்
வண்ணச்சீறடி மண்மகள் அறிந்திலள்!"
பெண்மையின் அடிகளை அளந்து ஈரடியில் பெருங்கோ சொன்னதை, ஓரடியில் இளங்கோ செய்தான் "வண்ணச்சீறடி மண்மகள் அறிந்திலள்" என்று, கண்ணகிக்காக!
அத்தகைய மென்மையாள், தாம் நடந்து வருகையில் கணவனுக்குக் கதிர்வெம்மையால் ஏற்பட்ட துன்பம் கண்டு வருந்தினாளன்றி தம் துயரம் வெளிப்படுத்தாத் தகுதியினள்! இப்படிப்பட்ட ஒரு பெண்ணரசியை நான் கண்டதில்லை! என்று அய்யை கூறினார்;
"தன்துயர் காணாத் தகைசால் பூங்கொடி
இன்துணை மகளிர்க்கு இன்றி யமையாக்
கற்புக்கடம் பூண்ட இத்தெய்வம் அல்லது
பொற்புடைத் தெய்வம் யாம்கண் டிலமால்;.."
பிறரின் துன்பத்திற்காக வருந்துபவர்களை, ஆணாக இருப்பினும், பெண்ணாக இருப்பினும், குடும்ப வாழ்விலாயினும் சரி, பொது வாழ்விலாயினும் சரி, அறவாழ்விலாயினும் சரி உயர்ந்த நோக்கமுடையவராகத்தான் சமுதாயம் போற்றி வருகிறது;
அந்த உயர்நோக்கோடு, ஒழுக்கமும் ஒருவரிடம் இருக்குமானால் சமுதாயத்திற்கு நேர்மையான வழிகாட்டியாக அவர்கள் ஆகிவிடுகிறார்கள்!
இங்கே, கண்ணகியின் துயரங்களுக்காக கோவலனும் கோவலனின் துயரங்களுக்காக கண்ணகியும் வருந்துகின்ற நட்பின் பாங்கு ஒரு சராசரி நிகழ்ச்சிதான்;
'இணைந்துவிட்ட இதயங்களின் துடிப்புகள் ஒன்றுக்கொன்று ஒத்தடம் கொடுக்கும் உயிர் வாழ்க்கை அது!'
ஆயினும் கண்ணகியின் பல்வேறு சிறப்புக்களும் ஒருங்கே பார்க்கப்படும் போது அவள் மிக உயர்ந்து தெரிகிறாள்! அதைத்தான் "பொற்புடைத்தெய்வம் யாம் கண்டிலமால்" என்று காவுந்தியார் கூறுகிறார்;
மெல்ல மெல்ல கதிரவன் மறையத் தொடங்குகிறான்; அவன் ஒளியையும் வெப்பத்தையும் கொண்டு ஆக்கம் செய்துவிட்டு அந்திப் பொழுதில் இல்லம் கூட ஓடிவருகின்றன ஆடுகளும் மாடுகளும்; ஆய்ச்சியரும் இடையர்களும்! உழவரும் இருந்திருக்க வேண்டும்?
அதே நேரத்தில் பெண்மைச் சிறப்புகள் அனைத்தையும் ஒருங்கே பெற்ற கண்ணகி நல்லாள், தாயும் ஆகித் தாங்கும் மாதரியின் மனைக்கு அடைக்கலம் செல்கிறாள்;
அதிவிரைவில் கோவலன் கொலைக்களம் போகப்போவதை அறவே அறியாதவளாய்!.
அன்புடன்
நாக.இளங்கோவன்
17-சனவரி-2000
மதுரை:
அடைக்கலக்காதை:
பொதிகை வலம் வந்து, குமரியில் நீராடி ஊர் திரும்பும் வழியில் மாடலன் கோவலனைக் காண்கிறான். கோவலன் அவனை வணங்குகிறான்; இருவரும் உரையாடுகின்றனர், மாதவியின் மகப்பேறு குறித்து; மாடலன் சொல்வான்;
தலைக்கோலி என்ற பட்டம் பெற்ற மாந்தளிர் மேனியாள் மாதவி, பால்வாய்க் குழந்தையைப் பெற்றெடுத்தாள்! வாலாமை நாள்கள் (தூய்மையின்மை நாட்கள் அல்லது தீட்டு நாட்கள்) நீங்கிய பின்னர் உன் எண்ணப்படியே, மணிமேகலா என்ற உன் குல தெய்வத்தின் பெயரையே உன் மகளுக்கு ஆயிரம் கணிகையர் வாழ்த்துக் கூற வைத்தனள் மாதவி!
"வேந்துஉறு சிறப்பின் விழுச்சீர் எய்திய
மாந்தளிர் மேனி மாதவி மடந்தை
பால்வாய்க் குழவி பயந்தனள் எடுத்து.
வாலா மைந்நாள் நீங்கிய பின்னர்
மாமுது கணிகையர் மாதவி மகட்கு
நாம நல்லுரை நாட்டுதும் என்று....
எம்குல தெய்வப் பெயர்ஈங்கு இடுகஎன
அணிமே கலையார் ஆயிரம் கணிகையர்
மணிமே கலையென வாழ்த்திய ஞான்று....."
கோவலனோ, கனவொன்று கண்டேன் மாடல, நள்ளிருள் யாமத்தில்!. கருத்துற்றேன்! தீங்கொன்று தேடி வருகுது போல் தெரிகிறது! கவலை கொண்டேன்; உரைப்பேன் கேள்!
"மதுரை மண்ணில் கீழ்மகன் ஒருவனால் கண்ணகி நடுக்குற்றாள்! என் ஆடையைப் பிறர் பறித்துக் கொள்ள எருமையின்மேல் ஏறிப் பயணித்தேன்! கண்ணகியோடு சேர்ந்து நானும் பெரியோர் பெறும் பேறுற்றேன்!
காமன் தன் மலரம்புகளை எறிந்து விட்டு வருந்துமாறு, போதிமரத்தடி புத்ததேவன் முன் மணிமேகலையைத் துறவி ஆக்கினாள் மாதவி! " என்றான்;
"கோவலன் கூறும்:'ஓர் குறுமகன் தன்னால்
காவல் வேந்தன் கடிநகர் தன்னில்
நாறுஐங் கூந்தல் நடுங்குதுயர் எய்தக்
கூறைகோள் பட்டுக் கோட்டுமா ஊரவும்,
அணித்தகு புரிகுழல் ஆயிழை தன்னொடும்
பிணிப்புஅறுத் தோர்தம் பெற்றி எய்தவும்
மாமலர் வாளி வறுநிலத்து எறிந்து
காமக் கடவுள் கையற்று ஏங்க
அணிதிகழ் போதி அறவோன் தன்முன்
மணிமே கலையை மாதவி அளிப்பவும்,
நனவு போல நள்இருள் யாமத்துக்
கனவு கண்டேன் கடிதுஈங்கு உறும்'என,...... "
புறஞ்சேரி என்பது அறவோர் வாழும் எளிமையான இடம்; அது இல்லறத்தார் தங்க ஏற்ற இடம் அன்று! "மாசாத்துவான்மகன்" என்று உரைத்தால் போதும் அரசர்க்கு அடுத்தநிலையில் உள்ள வணிகர் யாவரும் உன்னைப் பெருமையுடன் ஏற்றுக் கொள்வர்; அப்படியான ஒருவரின் இடத்தில் நீயும் கண்ணகியும் தங்குக என்று காவுந்தியாரும் மாடலனும் கோவலனிடம் உரைத்தனர்;
"....இங்கு ஒழிகநின் இருப்பு
காதலி தன்னொடு கதிர்செல் வதன்முன்
மாட மதுரை மாநகர் புகுக'என
மாதவத்து ஆட்டியும் மாமறை முதல்வனும்
கோவலன் தனக்குக் கூறுங் காலை.."
அவ்வேளை, இயக்கி (இசக்கி?)எனும் தெய்வத்துக்குப் பால்சோறு படைத்துத்திரும்பின மாதரி என்ற இடையர் குல மூதாட்டி காவுந்தி ஐயையைக் கண்டதும் அடி தொழுதனள்;
மாதரியின் முதுமையையும் , நேர்மைச் சிறப்பையும் அறிந்திருந்த அடிகள் மாதரியிடம் கண்ணகியைத் தங்க வைப்பதில் தவறிருக்காது என்று கருதி,
மாதரி கேள்!
"ஊருக்கும் நாட்டிற்கும் புதியவர்களான இப் பெருஞ்செல்வ மடந்தைதன் கணவனின் தந்தையின் பெயரைக் கூறினால் போதும், இந்நகர்ப் பெருஞ்செல்வர் இவர்களைத் தன் விருந்தினராக ஏற்றுக் கொண்டுப் பெருமை கொள்வர்; அப்படி அவள் செல்லும் வரை இக்கண்ணகி நல்லாளை உன்னிடம் அடைக்கலமாகத் தருகிறேன்! காத்திருப்பாய்! மேன்மைச் சிறப்பு பெற்ற அவளுக்குத் தாயும் நீயேயாகி தாங்கிடுக! என்றார் மாதரியிடம்;"
பெரும் பேறாய் ஏற்றுக் கொண்டனள் மாதரி!
"புறஞ்சிறை மூதூர்ப் பூங்கண் இயக்கிக்குப்
பால்மடை கொடுத்துப் பண்பிற் பெயர்வோள்
ஆயர் முதுமகள் மாதரி என்போள்
காவுந்தி ஐயையைக் கண்டுஅடி தொழுது....
"மாதரி தன்னுடன் மடந்தையை இருத்துதற்கு
ஏதம் இன்றுஎன எண்ணினள் ஆகி
மாதரி கேள்! .. ..
உடைப்பெருஞ் செல்வர் மனைப்புகும் அளவும்
இடைக்குல மடந்தைக்கு அடைக்கலம் தந்தேன்;.. ..
ஆயமும் காவலும் ஆயிழை தனக்குத்
தாயும் நீயே ஆகித் தாங்கு;"
ஊரறிந்த நாடறிந்த பெருஞ்செல்வன் மாநாய்கன்தன் மகள் கண்ணகி நல்லாள், நல்லுலகம் எல்லாம் அறிந்த அருஞ்செல்வ மாசத்துவான் மகனின் மனைவியானாள்!
செல்வச் சிறப்பில் சீருடன் வாழ்ந்து வந்த மெல்லியலாள்!
'அவளின் மென்மைக்கும் அவள் பாதங்களின் மென்மைக்கும் இலக்கணமாய்த்தான், இன்பம் பாடிய அய்யன் வள்ளுவ நாயனார்
"அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்"
என்று கூறிப்போனாரோ?' என்று எண்ணக்கூடிய அளவிற்கு மென்மையானவள் கண்ணகி!
ஆதலின், காவுந்தியார் கண்ணகியை அடைக்கலம் கொடுத்து, மாதரியிடம், "காலடிகளை நிலமகளும் அறிந்திரா அளவிற்கு செல்வச் செழிப்பால் மேன்மையானவள் கண்ணகி" என்று உரைக்கிறார்!
".......ஈங்கு
என்னொடு போந்த இளங்கொடி நங்கைதன்
வண்ணச்சீறடி மண்மகள் அறிந்திலள்!"
பெண்மையின் அடிகளை அளந்து ஈரடியில் பெருங்கோ சொன்னதை, ஓரடியில் இளங்கோ செய்தான் "வண்ணச்சீறடி மண்மகள் அறிந்திலள்" என்று, கண்ணகிக்காக!
அத்தகைய மென்மையாள், தாம் நடந்து வருகையில் கணவனுக்குக் கதிர்வெம்மையால் ஏற்பட்ட துன்பம் கண்டு வருந்தினாளன்றி தம் துயரம் வெளிப்படுத்தாத் தகுதியினள்! இப்படிப்பட்ட ஒரு பெண்ணரசியை நான் கண்டதில்லை! என்று அய்யை கூறினார்;
"தன்துயர் காணாத் தகைசால் பூங்கொடி
இன்துணை மகளிர்க்கு இன்றி யமையாக்
கற்புக்கடம் பூண்ட இத்தெய்வம் அல்லது
பொற்புடைத் தெய்வம் யாம்கண் டிலமால்;.."
பிறரின் துன்பத்திற்காக வருந்துபவர்களை, ஆணாக இருப்பினும், பெண்ணாக இருப்பினும், குடும்ப வாழ்விலாயினும் சரி, பொது வாழ்விலாயினும் சரி, அறவாழ்விலாயினும் சரி உயர்ந்த நோக்கமுடையவராகத்தான் சமுதாயம் போற்றி வருகிறது;
அந்த உயர்நோக்கோடு, ஒழுக்கமும் ஒருவரிடம் இருக்குமானால் சமுதாயத்திற்கு நேர்மையான வழிகாட்டியாக அவர்கள் ஆகிவிடுகிறார்கள்!
இங்கே, கண்ணகியின் துயரங்களுக்காக கோவலனும் கோவலனின் துயரங்களுக்காக கண்ணகியும் வருந்துகின்ற நட்பின் பாங்கு ஒரு சராசரி நிகழ்ச்சிதான்;
'இணைந்துவிட்ட இதயங்களின் துடிப்புகள் ஒன்றுக்கொன்று ஒத்தடம் கொடுக்கும் உயிர் வாழ்க்கை அது!'
ஆயினும் கண்ணகியின் பல்வேறு சிறப்புக்களும் ஒருங்கே பார்க்கப்படும் போது அவள் மிக உயர்ந்து தெரிகிறாள்! அதைத்தான் "பொற்புடைத்தெய்வம் யாம் கண்டிலமால்" என்று காவுந்தியார் கூறுகிறார்;
மெல்ல மெல்ல கதிரவன் மறையத் தொடங்குகிறான்; அவன் ஒளியையும் வெப்பத்தையும் கொண்டு ஆக்கம் செய்துவிட்டு அந்திப் பொழுதில் இல்லம் கூட ஓடிவருகின்றன ஆடுகளும் மாடுகளும்; ஆய்ச்சியரும் இடையர்களும்! உழவரும் இருந்திருக்க வேண்டும்?
அதே நேரத்தில் பெண்மைச் சிறப்புகள் அனைத்தையும் ஒருங்கே பெற்ற கண்ணகி நல்லாள், தாயும் ஆகித் தாங்கும் மாதரியின் மனைக்கு அடைக்கலம் செல்கிறாள்;
அதிவிரைவில் கோவலன் கொலைக்களம் போகப்போவதை அறவே அறியாதவளாய்!.
அன்புடன்
நாக.இளங்கோவன்
17-சனவரி-2000
Subscribe to:
Posts (Atom)