Pages

Tuesday, November 11, 2014

ஒருங்குறிக் கேடுகள் - 1


ஒருங்குறிக் கேடுகள் ஒன்றல்ல - இரண்டல்ல. பல.
அவற்றிலொன்று இந்த வரிசைச் சிக்கல்.


அன்றைய ஒருங்குறிப் புலவர்களின் ஒழுக்கமற்ற, நெறிமுறையற்ற
செயற்பாடுகளால் விளைந்த பல கேடுகளில் இது முக்கியமான ஒன்று.

கதை, கவிதை, மொக்கை போன்றவற்றை இணையத்தில் எழுதுவதற்கு
இது எந்தவிதத்திலும் தடையாக இருக்காது. ஆனால், கணிநிரல்கள்
உருவாக்கும் ஒவ்வொருவரும் இந்தக் குறைபாட்டைக் கடந்துதான்
புதுக்குகள் செய்ய முடியும். அங்கங்கு சில சுற்றுவழிகளைப் போட்டுத்தான்
அவர்கள் செய்வார்கள். அதிலும், தமிழ் நிரலியர் பலபேர் எங்கே இந்தக் குறைபாட்டைச் சொன்னால், இதற்குச் சுற்றுவழி எழுதத் தெரியவில்லை
என்று யாரும் நினைத்துவிடுவார்களோ என்று எண்ணி வெளியே சொல்லுவதுகூடக் கிடையாது :-) அவ்வளவு தொழிலியச் சுத்தம் :-))

இதனால், விளையும் கேடுகளைப் பார்க்கவேண்டுமானால் விக்கிப்பீடியா போன்ற பெருஞ்செயலிகளிலேயே காணலாம். விக்கிப்பீடியாவின் பகுப்பு வரிசையை அதன் செயலி எப்படிப் போடுகிறது என்று காண்பது தகும்.
https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%3A%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_ta&pagefrom=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D#mw-pages

(இதுபோன்ற குறைபாடுகளை நிரல்மாற்றம் செய்யமுடியுமெனில் செய்து வெளியிட நண்பர் இரவிசங்கர் போன்றவர்கள் முயற்சி செய்யவேண்டும், இல்லாவிடில், இதுவே தமிழ் எழுத்து வரிசையாக நிலைத்துவிடக்கூடும்.
அல்லது, இச்சிக்கலை விக்கியின் மேலகத்திற்கு வலுவாக எடுத்துச் சொல்லி,
மாற்றச் சொல்லவேண்டும். அது ஒருங்குறிக் குற்றங்களை பன்னாட்டு மன்றங்களில் எடுத்துரைக்க உதவியாக இருக்கும்.)

பத்தாண்டுகளின் முன்பு ஒருங்குறிப் புலவர்கள், குறியேற்றச் சிக்கல்களின்போது கட்டுப்பாடுகளை, நெறிமுறைகளை வகுத்துக் கொள்ளாமல் தன்னிச்சையாகச் செயற்பட்டதன் வெளிப்பாடு இன்று நன்கு
தெரிகிறது. இன்றைய ஒருங்குறிப் புலவர்களும் அதே வழியைப் பின்பற்றுகிறார்கள். இன்றைய பின்ன சின்ன விதயத்திலும் அடிப்படை மீள்பார்வை கூடச் செய்யாமல், அதற்கான அரசு வழிமுறைகளைச் செய்யாமல், எதிர்காலச் சூழல்களைக் கருத்தில் கொள்ளாமல், தன்னிச்சையாகச் செயல்படுகிறார்கள். தமிழக அரசின் தமிழ் இணையக் கல்விக் கழகமும்  ஒருங்குறியைப் பேணுதற்கு எந்த நெறிகளையும், மீள்பார்வை முறைகளையும், தகுதியான குழுக்களையும் உருவாக்கவில்லை. 55 குறியீடுகளை குறியேற்றம் செய்யும் முயற்சியை வெறும் 4 மணி நேர ஆரவாரத்தோடு முடித்துக் கொண்டது த,இ.க.

அன்புடன்
நாக.இளங்கோவன்


2 comments:

  1. தமிழில் ஒருங்குறி பிரச்சனை பற்றி பேச ஆள் இருக்கிறார்கள் என்பதை இன்றுதான் அறிந்தேன்!

    ReplyDelete
  2. ஆள்கள் மிகக் குறைவுதான். இதைப் படிக்கவும்
    புரிந்துகொள்ளவும் உங்களைப் போன்றோர்
    இருக்கிறார்கள் என்பதே ஊக்கமளிக்கிறது.

    ReplyDelete