tag:blogger.com,1999:blog-19775829.post7681472819889989571..comments2023-12-18T02:14:20.179-08:00Comments on நயனம்: தமிழ்-யுனிக்கோடு: கிரந்த வியாபாரிகளிடம் தொடர்ந்து ஏமாறும் தமிழக அரசு - பகுதி-1/3nayananhttp://www.blogger.com/profile/12331165129048713846noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-19775829.post-47146322414681883012011-01-26T03:33:03.780-08:002011-01-26T03:33:03.780-08:00அநாநி அவர்களே:
வெகு காலமாக தமிழைக் குலைக்க நடக்கு...அநாநி அவர்களே:<br /><br />வெகு காலமாக தமிழைக் குலைக்க நடக்கும் சதிகளையும், குறிப்பாகக் கடந்த செபுதெம்பெர் மாதம் முதல் இன்றுவரை இவ்விதயத்தை மட்டுமே தொடர்ந்து பார்த்தும் எழுதியும் வருகின்றவன் என்ற வகையில்,<br />கிரந்தக் கலவைச் சதி எப்படி நடக்கிறது, இது எதை நோக்கிப் போகிறது, வீரமணியின் பங்கு என்ன,<br />தமிழக அரசு என்ன செய்தது, தமிழக அரசை திசைதிருப்புபவர்கள் யார், அவர்களின் பின்னணி என்ன? போன்றவற்றை முழுதும் இல்லாவிடிலும் மிகப் பெருமளவில் அடியேன் அறிவேன்.<br /><br />அதுமட்டுமல்ல, நுட்பச்சிக்கலையும் அறிவேன். கிரந்தச் சிக்கலுக்கு யார் காரணம் என்று தெளிவாக அறிவேன். அதோடு கிரந்தத்தை எதிர்ப்பவர்களாகக் காட்டிக் கொள்பவர்களுக்கும் கிரந்தத்தைத் திணிப்பவர்களுக்கும் இருக்கும் பல கள்ளத்தொடர்புகளையும் அறிந்திருக்கிறேன்.<br /><br />கருணாநிதி என்ன செய்தார், செய்வார் என்பது எனக்குப் பொருட்டல்ல. ஆனால் தமிழக அரசு செயல்பட்டதை நான் சொல்லித்தான் ஆகவேண்டும்.<br />அதேபோல ஆசிரியர் வீரமணி மேல் பல்வேறு விதயங்களில் எனக்கு மாற்றுக் கருத்து உண்டு. எனது 23/10/10 தேதியிட்ட பதிவு, அஞ்சல் கையில் கிடைத்தவுடன் அவரின் இயக்கத்தினர் அதனை எப்படி வீரமணியிடம் எடுத்துச் சென்றார்கள், என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் யார் என்ற எல்லா விவரமும் என்னிடம் உள்ளது. அதன்பின்னர் வீரமணி அவர்களை சந்தித்தத் தமிழறிஞர்கள் யார் யார், வீரமணியார் <br />எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பதெல்லாம் எனக்கு நன்கு தெரியும்.<br /><br />அது வரையில் வீரமணி அவர்களின் செயற்பாடுகள் நன்றா. அதைச் சொல்வதில் எனக்கு ஏதும் தடை இருக்க முடியாது.<br /><br />நீங்கள் "ஒரு தமிழறிஞர் தடுத்து நிறுத்தியது" என்று கூறுகிறீர்கள்.<br />அதே நேரத்தில் உங்கள் பெயரையும்<br />வெளியிடவில்லை. <br /><br />உண்மையில் ஒரு தமிழறிஞர் தடுத்த நிறுத்தினார் என்றால் அவ்வறிஞரின் பெயரை நீங்கள் வெளியிடலாமே! ஏன் செய்யவில்லை என்று தெரியவில்லை.<br /><br />இப்பணியில் முனைப்பாக ஈடுபட்ட எல்லா அறிஞர்களையும் நான் அறிவேன். அதோடு எனது 23/10 தேதியிட்ட அஞ்சல் வெளியாவதற்கு முன்னர் எந்த ஒரு அறிஞரும் அரசிடம் எதுவும் செய்யவில்லை என்பதையும் நானறிவேன். பலரறிவார். இதனை எழுதுவது பீற்றிக்கொள்ளவோ மார்தட்டவோ இல்லவே இல்லை. <br />இன்று பலபேர் இவ்விதயத்தில் அரசியல் நடத்துகிறார்கள். அவ்வரசியலையும் பெருமளவு நான் அறிவேன். <br /><br />அரசியல்வாதிகளைப் பற்றி, குறிப்பாக தமிழக அரசியல்வாதிகளைப் பற்றிப் பெருமிதமாகச் சொல்ல ஏதும் இருப்பதாக நான் கருதுவதில்லை.<br /><br />என் வலைப்பதிவில் கடந்த 3/4 மாதக் கட்டுரைகளும் மடல்களும் உள்ளன. இதுவன்றி மடற்குழுக்களிலும் பல எழுதியுள்ளேன். ஒரு கட்டுரையைப் பார்த்து விட்டு முடிவு செய்து கொள்ளாதீர்கள். <br /><br />அன்புடன்<br />நாக.இளங்கோவன்nayananhttps://www.blogger.com/profile/12331165129048713846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19775829.post-46628166034742390542011-01-25T07:09:00.610-08:002011-01-25T07:09:00.610-08:00யாரோ பெற்ற புள்ளைக்கு இன்னொருவன் தகப்பன் ஆனானாம். ...யாரோ பெற்ற புள்ளைக்கு இன்னொருவன் தகப்பன் ஆனானாம். அது போல் ஒரு தமிழறிஞர் தடுத்து நிறுத்தியதை கலைஞரும், வீரமணியும் தடுத்ததாக கூறுகிறீரே ஞாயமா? <br /><br />தமிழக அரசுக்கு தெரியாமல் நடக்கும் என்பது எவ்வளவு பெரிய பொய். செம்மொழி மாநாடு அப்போதுதான் நடத்தப்பட்டது. இந்த ஒருங்குறியை கூட ஆய்வு செய்யாமல் அந்த மாநாடை நடத்தியிருப்பார் என்று எண்ணுகிறீர்களா? 400 கோடி கொட்டி அழுது செம்மொழி மாநாடு நடத்த தெரிந்த அரசுக்கு வெறும் 4,500 ரூபாய் கொடுத்து அதில் உறுப்பினராக சேரத் தயாரில்லை. இதிலிருந்தே தெரிந்துகொள்ளல்லாம். இது தமிழக அரசின் முயற்சியல்ல. இது தமிழறிஞர்களின் முயற்சி. அவர்களுடைய அழுத்தத்தினால் தற்காலிகமாக தடுத்து மட்டுமே நிறுத்தியுள்ளனர். வேறு எந்த முன்னேற்றத்தையும் தமிழக அரசு இதுவரையில் மேலும் செய்யவில்லை. அதுவும் தனி நபர்களின் தமிழ் அறிஞர்களின் அரும்பணியால் தான் முடியும். நிச்சயம் இந்த அரசியல் வாதிகளால் முடியாது. <br /><br />தமிழால் வாழ்ந்தவர்கள் தமிழை வாழவைக்க மாட்டார்கள். ஆகையால் யாரொருவர் ஒரு மொழிக் கொள்கையை பேசுகிறார்களோ அவர்கள் மட்டுமே உண்மையாக சாதிப்பார்கள். அந்தபுரமாக யார் ஆங்கிலத்துக்கு ஏங்குகிறார்களோ அவர்கள் உறுதியாக காலை வாரியே விடுவார்கள். தமிழர்கள் அனைவரும் எச்சரிக்கை!Anonymousnoreply@blogger.com