tag:blogger.com,1999:blog-19775829.post7396593931172049087..comments2023-12-18T02:14:20.179-08:00Comments on நயனம்: எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-8nayananhttp://www.blogger.com/profile/12331165129048713846noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-19775829.post-4140654005162749022010-03-03T16:12:05.379-08:002010-03-03T16:12:05.379-08:00/வெளிநாட்டில் வளர்கின்ற பிள்ளைகளைகளின் தமிழ் கற்றல.../வெளிநாட்டில் வளர்கின்ற பிள்ளைகளைகளின் தமிழ் கற்றலைப் பற்றி, கொடிவழித் தேற்றம், திகைநிலைத் தேற்றம் ஆகியவற்றின் வழி ஆய்ந்து, அறிவியல், நுட்பியல், வாழுஞ் சூழல் போன்ற வழிகளைச் சார்ந்த கற்பித்தலைக் கண்டு பிடிக்க வேண்டுமேயொழிய, எழுத்து வடிவ மாற்றத்தைச் செய்யப் புகுவது சரியான அணுகு முறையல்ல।//<br /><br />இதனை நானும் வழிமொழிகிறேன்.<br /><br />மலேசிய நாட்டில் தமிழ்ப்பள்ளிகளும் தமிழ்க்கல்வியும் உண்டும். <br /><br />தமிழ்க் கற்றலில் எழுத்து வடிவத்தினால் ஏற்படும் சிக்கல் எதுவும் கிடையாது. எங்கள் மாணவர்கள் இ, ஈ, உ, ஊ வரிசை எழுத்துகளைப் படிப்பதிலும் எழுதுவதிலும் அதன் குறியீடுகளை நினைவுப்படுத்துவதிலும் எவ்வித சிக்கலையும் எதிர்கொண்டது கிடையாது.<br /><br />தமிழ்க் கல்வி இங்குச் சிறப்பாகவே உள்ளது. நல்ல தமிழ்க் கல்விக்கு அடிப்படை கற்றல் கற்பித்தல் அணுகுமுறைகளும் துணைக்கருவிகளும் போதுமான நேரமும்தாம்.<br /><br />இதைவிடுத்து 'நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியது சாக்கு' என தமிழ்க் கற்பதற்கான போதிய ஏந்து(வசதி)களை ஏற்படுத்திக்கொடுத்து தமிழ்க்கல்வியை வளர்க்க வழி சொல்ல வேண்டிய 'கல்வியாளர்கள்' எழுத்தைக் குறைகூறிக்கொண்டு மண்வெட்டி தூக்கி குழிதோண்டுவது ஏன்? எதற்காக?சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.com